Blogger Widgets

Total Page visits

Monday, August 19, 2013

தலைவா பிரச்னை - முதல்வருக்கு விஜய் நன்றி!!

10நாள் தாமதத்திற்கு பிறகு தலைவா படம் ஒருவழியாக நாளை(ஆகஸ்ட் 20ம் தேதி) தமிழகத்தில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் படத்தை ரிலீஸ் செய்ய உதவிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் நடிகர் விஜய். இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தலைவா படத்திற்கு வந்த அச்சுறுத்தல் காரணமாக கடந்த 9ம் தேதி படத்தை வெளியிட முடியவில்லை. இதனால் கடந்த 10 நாட்களாக நான், தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானோம். இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், பல வேலைகளுக்கு நடுவிலும் தலைவா பட பிரச்னையில் தலையிட்டு படத்தை சுமூகமாக வெளிவர நடவடிக்கை எடுத்துள்ளார். அவருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

மேலும் என்னோடு பொறுமையை கடைப்பிடித்த ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றியை தெரிவிப்பதோடு, தலைவா படத்தை தியேட்டரில் குடும்பத்தோடு சென்று ரசிக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு விஜய் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments: