Blogger Widgets

Total Page visits

Saturday, August 31, 2013

Walk-in interview for Assistant Professors / Lecturers The Kavery Engineering/Polytechnic Colleges

Name of the Colleges :
  • The Kavery Engineering Colleges
  • The Kavery Polytechnic Colleges
About College :
The Kavery Engineering Colleges is to emerge into a frontline institution of professional learning by inculcating quality standards in Technical Education, high pattern of discipline blended with managerial skills and leadership qualities, to become future challengers and to meet the global world, by enhancing the students with sound knowledge, thereby materializing them to obtain their inherent talents.
Job Title : Assistant Professors / Lecturers
Departments

For Engineering College (Assistant Professors)
  • Mechanical Engineering
  • Civil Engineering
  • Maths
  • English
For Polytechnic College (Lecturers)
  • Mechanical Engineering
  • English
  • Physics
  • Physical Director
Qualification: M.A/M.sc/M.Phil/B.E/M.E/M.Tech/M.P.Ed with First Class
Walk-in Date and Time : 31-08-2013 (Saturday) & 9:30 A.M
 Candidate Profile
  • Candidate should completed  their PG in relevant discipline 
  • Candidate should have Good Communication Skill
  • Commitment towards work
  • Have a good Publication record
Interview Process 
  • All the Candidate must Perform 5-10 Minutes Board Presentation
  • Personal Interview
Job Location: Salem
Apply Mode: Walk-in
Website : Clickhere
Bring your Resume along  with original certificates and passport size photo to following  
Venue Address

Venue address
The Kavery Engineering College
M.Kalipatti,
Mecheri,Mettur
Salem – 636 453,
Tamil Nadu.

கரப்பான் பூச்சி நகைக்குமோ?

துர்கா சக்தி என்ற பெயர் இப்போது பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி சொல்லப்படும் பெயர். அவர் மணல் கொள்ளைக் கூட்டத்தை ஒடுக்க முற்பட்டதால்தான் அவருக்கு சங்கடம் வந்தது என்கிறார்கள். மணல் கொள்ளை, நச்சுப் பொருள் கழிவு, வரைமுறையில்லாத கட்டடங்கள், இயற்கையின் தன்மையைக் குலைக்கும் நடவடிக்கைகள், பிளாஸ்டிக் உபயோகம், தொலைநோக்குப் பார்வை இல்லாத கொள்கைகள், கனிம வளச் சுரண்டல் என்று சொல்லிக்கொண்டே போகலாம் இயற்கை வதை நிகழ்வுகளை. ஒருகால் இயற்கையன்னை என்று சொல்லாமல் இயற்கை அப்பா என்று சொல்லியிருந்தால் ஒரு அத்து இருந்து இருக்குமோ?

மதுரையில் கம்பீரமாக நிற்கும் யானை மலையைக் குடைய வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன் ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அது நெய்ஸ் என்ற கல் அமைப்பு என்கிறார்கள். உலகில் இருக்கும் மிகப்பழமையான ஒற்றை கல் வடிவங்களில் ஒன்றாம். ஆஸ்திரேலியாவின் ஏயர்ஸ் ராக் என்பதற்கு இணையானதாம். ஏயர்ஸ் ராக்கை தேசிய பரம்பரை மரபுரிமைச் சொத்தாக அறிவித்து விட்டார்கள். நாம்? மேற்சொன்ன அரசாணை வந்தவுடன் ஒற்றைக்கடை மக்கள் சாலைகளில் படுத்துவிட்டார்கள். உண்ணாவிரதம் இருந்தார்கள். உயர்நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. திட்டம் கைவிடப்பட்டது. மக்கள் ஒன்றாக எழுந்து சுற்றுப்புறச் சூழலை காப்பாற்றுவோம் என்று உறுதிபூண்டால்தான் இயற்கை வதை நிற்கும்.

நம் மக்கள் மலைகளையும், நதிகளையும், மரங்களையும், விலங்குகளையும் ஏன் இறையுணர்வோடு பார்த்தார்கள்? அவர்கள் முட்டாள்கள் அல்ல. "இது புனிதம் கும்பிடு' என்று சொன்னால்தான் இயற்கையைச் சின்னாபின்னம் செய்ய மாட்டார்கள் என்று பழங்கால மக்களுக்கு தெரிந்திருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையும் இயற்கையை அறங்காவலராகத்தான் பேண வேண்டும். நாமே சொத்து முழுவதையும் கபளீகரம் செய்வது நியாயமல்ல. நம் முன்னோர்கள் இந்த அறத்தைக் காத்தார்கள். நாமோ இந்த கஜானாவைக் காலி செய்தே தீருவது என்று கங்கணம் கட்டி செயல்படுகிறோம்.

தர்மபுரி மாவட்டத்தில் மாரண்டஹள்ளி பஞ்சாயத்தில் சின்னாறு என்று ஒரு நீர்நிலை, அதுதான் அவர்களுக்கு குடிநீர் வழங்குமூலம். சின்னாறு அணையிலிருந்து மாரண்டஹள்ளிக்கிடையே இருக்கும் ஆற்று மணலைத் திருடுகிறார்கள் என்று ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், பரமகல்யாணி சுற்றுப்புற சூழல் அறிவியல் மையத்தைச் சேர்ந்த அருணாசலம் என்பவரை, மணல் தோண்டலினால் நீர்நிலைகள் எப்படி பாதிக்கப்படும் என்று ஒரு ஆய்வறிக்கைத் தாக்கல் செய்யச் சொன்னார்கள். அந்த ஆய்வறிக்கை பல விஷயங்களை விளக்கியது. இன்று ஆற்று மணலை சுரண்டியெடுத்தால் மேலும் சுரண்டாமல், தோண்டாமல், மாற்றாமல் இருந்தால் ஐந்து வருடங்களாகுமாம் நேற்றைய இயற்கை நிலை வருவதற்கு. அதாவது இயற்கை அன்னையை மணல் கொள்ளை என்ற கத்தியால் இன்று குத்தினோமானால், அந்தக் காயம் ஆறுவதற்கு ஐந்து வருடங்களாகும். இந்த ஆற்று மணல் சுரண்டல், மீன் வளத்தை பாதிக்கும்; ஆற்றைச் சுற்றி பல ஹெக்டேர் பசுமை நிலங்கள் பாழாகும்; வன வளம் அழியும்; நிலத்தின் ஸ்திரத்தன்மைக்கு கேடு வரும்; நீரோட்டம் சலசலவென்று போகாமல் குழம்பி வண்டலாக மெதுவாகப் போகும்; போதுமா?

சென்னைவாசிகளுக்கு பக்கிங்ஹாம் கால்வாய் தெரியும், பெயரைக் கேட்டவுடனே மூக்கைச் சுளிப்பார்கள். எண்பது வருடங்களுக்கு முன் சிறு படகுகள் போக முடியுமாம். பௌர்ணமி நிலா வெளிச்சத்தில், சாப்பாட்டை படகில் ஏற்றி மாமல்லபுரத்திலிருந்து சென்னைக்கு உல்லாசமாக பயணம் செய்த ஒரு குடும்பத்தை எனக்குத் தெரியும். நம்ப முடிகிறதா? கழிவுப் பொருள்கள் சேர்ந்து சேர்ந்து இன்று துர்நாற்றத்தின் பிறப்பிடமாக ஆகிவிட்டது. இது மனிதர்கள் செய்த வன்முறை என்பதைவிட வேறு எப்படி வர்ணிப்பது? உச்சநீதி மன்றம் பல தீர்ப்புகளில் ""ஆறுகள், காடுகள், கனிமங்கள் எல்லாம் நாட்டின் இயற்கைப் பொக்கிஷங்கள். இவைகளை அழிக்கக்கூடாது. அடுத்த தலைமுறைக்கு இந்த வளங்களை காத்து, வளப்படுத்தி, மேன்மைப்படுத்துவது முன் தலைமுறையின் கடமை. மணல் ஆயிரக்கணக்கான வருடங்களில் தானாக உண்டாகிறது. அது மனித வளத்திற்கு ஆதாரம். ஆனால் கட்டுப்பாடில்லாமல் ஆற்றைச் சுரண்டி சுரண்டி சொல்லொணாப் பேரழிவுக்கு மனிதன் காரணமாகிவிட்டான்''.

உயர்ந்த சதுப்பு நிலக்காடுகள் நம் நாட்டில் ஸýந்தர்பண்ஸிலும் (மேற்கு வங்காளம்) பிச்சாவரத்திலும், யானத்திலும் இருக்கிறது. இது தொடர்பாக ஒரு பொது நல மனு சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஒரு வர்த்தக ஸ்தாபனம் அனுமதி பெறாமலே கட்டுமான நடவடிக்கையைத் தொடங்கியிருந்தது. அந்த தீர்ப்பில் ùஸரெஸ் நியமங்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. ùஸரெஸ் வர்த்தகத் தலைவர்களை ஒரு கட்டமைப்புக்குள் உட்படுத்தி, சுற்றுப்புற சூழலைப் பேணும் வகையில் அவர்கள் தங்கள் வியாபார நியமங்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. இதன் குறிக்கோள் என்னவென்றால் வர்த்தக ஸ்தாபனங்கள் சுற்றுப்புற சுகாதாரத்திற்கு நேரடியாகப் பொறுப்பேற்று இயற்கை வளத்தை நல்ல வகையில் பயன்படுத்தி, ஆபத்தைக் குறைத்து அழிவைத் தடுத்து, நம் சொத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். ஆனால் நாம் எதையும் கண்டுகொள்வதில்லை.

உத்தரகண்டத்தில் நிகழ்ந்த பேரிடருக்குக் காரணம் என்ன? இதுபோல பேரிடர்களை சட்ட அகராதியில், "இறைவன் செயல்' என்பார்கள். வெள்ளம் இயற்கையாக ஏற்பட்டிருக்கலாம். ஆனால் வெள்ளத்தில் நடந்த பெரும் சோகங்களுக்கு இறைவன் பொறுப்பல்ல. நான் இறைவனுக்காக வக்காலத்துத் தாக்கல் செய்கிறேன்.

சுற்றுப்புற சூழல் அறிஞர்கள் இந்தப் பேரிடர் மனிதனால் உண்டான விபத்து என்கிறார்கள். இதுபோன்ற விபத்துகள் ஏற்படக் காரணங்கள் மலைச்சரிவுகளை திட்டமற்ற முறையில் வெட்டுதல், பாறைக் கூட்டங்களை கண்மூடித்தனமாக வெடிக்க வைப்பது, மரங்களை மனம் போனபடி வெட்டுதல் முதலிய நடவடிக்கைகள், ஹோட்டல்கள், மின்திட்ட கட்டுமானங்கள் இவைகளுக்கெல்லாம் வரைமுறையில்லாமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னேற்றமும் இயற்கை பாதுகாப்பும் ஒருங்கே இணைய வேண்டும். மென்மையான சுற்றுப்புற சூழல் என்கிறார்கள். அங்கு மனித நடமாட்டம் இவ்வளவுதான் இருக்கலாம் என்றும் ஒரு வரம்பு வைக்க வேண்டும். முன்பெல்லாம் வாழ்க்கையில் ஒரு முறை காசி, பத்ரிநாத் போன்ற இடங்களுக்குச் செல்வார்கள். இப்பொழுது? ""ரொம்ப ஈஸி மேடம் ஹெலிகாப்டர் நேரே இறங்கி விடும்'' சிரமப்பட்டு ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் ஆயுளில் ஒரு முறைதான் செல்வோம். இதுவே எளிதாகப் போய்விட்டது என்றால்? ஒருவேளை ஒவ்வொரு வருடமும் போய் பாவங்களைக் கழுவ வேண்டும் என்று தோன்றுகிறதோ என்னவோ. அந்த இயற்கை சூழலே கோயில்தான் என்ற பயம், பணிவு, பக்தியுடன் அணுக வேண்டும். தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள்கூட இயற்கையின் புனிதத்தை மதிக்க வேண்டும். வேறு வழியில்லை. தெய்வம் தூணை வெடித்துக் கொண்டு இன்று வராது. ஆனால் இயற்கை அன்னை சுனாமியாகவும், நிலநடுக்கமாகவும் பல அவதாரங்களில் வருவாள், வெடிப்பாள், கொதிப்பாள், அழிப்பாள்.

அமெரிக்க ஜனாதிபதி வாஷிங்டன் சிவப்பிந்திய தலைவரிடம் அவர்கள் நிலத்தை வாங்க வேண்டும் என்று கூறியபொழுது அந்த சிவப்பிந்தியத் தலைவரால் சொல்லப்பட்டது இது. ""ஆகாயத்தை வாங்கவோ விற்கவோ முடியுமா? இந்த நிலத்தின் இளஞ்சூட்டை? இது எங்களுக்குப் புரியவில்லை.... இந்த பூமியின் ஒவ்வொரு பகுதியும் எங்களுக்குப் புனிதமானது... வாஷிங்டனிலிருந்து பெருந்தலைவர் எங்கள் நிலத்தை வாங்குவேன் என்கிறார்... நதிகளில் பாய்கிற மின்னும் நீர் எங்கள் முன்னோர்களின் ரத்தம், இந்த நிலத்தை விற்றால் அந்த புனித ரத்தத்தை விற்க வேண்டும். வெள்ளையர்களுக்கு எங்கள் பாதை புரியாது. நிலம் அவன் சகோதரனல்ல, அவனுக்கு அது அடக்கி ஆள வேண்டிய எதிரி. அவன் இந்த நில அன்னையை ஆட்டு மந்தையை விற்பது போல விற்கிறான். வெள்ளையர்கள் நகரங்களில் அமைதி இல்லை. வசந்தத்தில் இலைகள் பிரியும் ஓசையை அங்கு கேட்க முடியாது. பூச்சி இறகுகளின் சரசரப்பும் கேட்காது. நான் காட்டு மிராண்டி. எங்களுக்கு காற்று புனிதமானது. ஏனென்றால், விலங்கு, மனிதன், மரம் எல்லாவற்றிற்கும் இந்த காற்றுதான் மூச்சு. இந்த நாட்டையும் என் மக்களையும் நீங்கள் ஆளுவது என்ற விதி எனக்குப் புதிர். ""அடர்த்தியான புதர் எங்கே போயிற்று? கம்பீர கழுகு எங்கே போயிற்று?'' இயற்கையை நாம் சூறையாடுதலைப் பற்றி இதைவிட கடுமையாகவும், கம்பீரமாகவும், கவிதையாகவும் சொல்ல வார்த்தைகள் இல்லை. அவர் வெள்ளையர்கள் என்று சொன்னார். இன்று நம்மெல்லோருக்கும் விழுகிறது இந்த சாட்டையடி சொற்கள்.

நம் முன்னோர்கள் தண்ணீர் தட்டுப்பாடு வரும் என்றுதான் எங்கெங்கு குடியிருப்புகள் இருந்ததோ, அங்கெல்லாம் ஒரு குளமோ ஏரியோ வெட்டினார்கள். அது இயற்கையாகவே தண்ணீர் சேமிக்கும். இதன் குறிக்கோள் நாம் தண்ணீர் தண்ணீர் என்று ஆலாய் பறக்கக்கூடாது என்பதுதான். ஆனால் நம் முன்னோர்கள் விட்டுப்போன மூலதனத்தை அழித்தோம். பேராசையும் பணத்தாசையும் நம்மை உந்த ஏரி, குளம் எல்லாவற்றையும் தூர்த்து கட்டடம் கட்டிவிட்டோம். தண்ணீர் போயிற்று, எங்கே?

பேரிடர் வரும்பொழுது அது ஏழை பணக்காரர் பார்க்காது. எல்லோரும் அதன் சீற்றத்தின் உள்ளடங்குவார்கள். மனிதனுக்கு வேறு இனத்தால் அழிவில்லை. அவன் கையாலேயேதான். அவனேதான் இந்த அழிவைத் தடுக்க வேண்டும். கரப்பான் பூச்சிக்கு தாக்குப்பிடிக்கும் தன்மை அதிகம் உள்ளது என்கிறார்கள். டைனோஸர்களுக்கு முன் தோன்றிய உயிர்வகை என்கிறார்கள். கதிர்வீச்சின் விளைவுகூட கரப்பான் பூச்சிமேல் குறைவாகத்தானிருக்குமாம். இயற்கையை அழித்து அதன் விளைவினால் மனித இனம் போன பின் நிசப்தமான அந்த கல்லறை உலகில் ""நன்றாக வேண்டும் உனக்கு, என் கொள்ளுத்தாத்தாவைக் கொல்ல மருந்து அடித்தாயில்லையா?'' என்று கரப்பான் பூச்சி நகைக்குமோ?

Source Dinamani

Bannari Ammam Institute of Technology Wanted Teaching Faculty

About College: Nestled on the banks of the river Bhavani, BIT's campus provides the right environment for natural learning in harmony with nature, away from the odds of city life. The spacious and the earth hugging buildings punctuated with landscaped courtyards and pathways are designed to emphasize the business ethics and character of an excellent center for learning. The campus hosts well planned academic blocks, computer centers, lecture halls libraries, laboratories, conference halls, staff quarters, hostel and students' centres. The campus also comprises a co-operative store, a bank with ATM and a clinic to attend to the general health of the students and staff. Adequate transport facilities are provided in the campus. BIT has the feel of a friendly hamlet while offering all the benefits of a citadel of learning.
Job Position: Professors/Associate Professors/HOD
  
Departments:
  • Civil Engineering
  • Financial Accounting
  • Project Management
  • Economics
Qualification: M.E/M.tech/MBA/M.Com/Ph.d and As Per AICTE norms
Candidate Profile :
  • Candidate should completed their PG/Ph.D in relevant discipline
  • Ph.D/M.E/M.Tech from IIT and NIt will be Considered for the higher emoluments
  • Candidate should have Good Communication Skill
  • Commitment towards work
  • Candidate should have good soft skills
Job Location: Erode
Last Date: With in 13 Days
Scale Of Pay: As per 6th pay commission
Apply Mode: On-line (E-mail)
Website : Click here
Send your resume along with relevant documents and photographs  to the following Mail-id 
Email-idbitsathy@bannai.com

Ref: The Hind 28th August 2013,Trichy Edition

N.S.N College of Engineering and Technology Invites Application for the Post of Assistant Professor

About College: N.S.N College of Engineering is established with an objective to instill the spirit of innovation among the students by imparting world class technical education. Our idea is to produce engineers with global competence and emotional stability who proactively respond to evolving social needs. N.S.N College of Engineering and Technology is formed by N.S.N Educational Trust in order to meet the world demand for qualified man power in the field of Engineering and Technology. The Trust members include well known industrialists, businessmen, professionals, and educationalists.
Job Position: Assistant Professor
  
Departments:
  • Mathematics 
  • English
Qualification: M.Sc/M.A/Ph.d and As Per AICTE norms
Candidate Profile :
  • Candidate should completed their PG/Ph.D in relevant discipline
  • Candidate should have Good Communication Skill
  • Commitment towards work
  • Candidate should have good soft skills
Job Location: Karur
Interview Date: 31st August 2013
Scale Of Pay: As per AICTE Norms
Apply Mode: Online/Walk-in
Website : Click here
Send your resume along with relevant documents and photographs  to the following Mail-id 
Email-idprincipal2327@gmail.com

Venue Address:
N.S.N College of Engineering and Technology,
N.S.N Kalvinagar,
National Highways 7,
Mananmedu,
Karur 3

For More details: 
Mobile: 9843430055
Phone: 04324 293888
Fax: 04324 239333

நேரம் ஒதுக்குங்கள்

அண்மையில் நான் நண்பர் ஒருவரை சந்தித்தேன். அவர் என்னிடம் கூறிய ஒரு தகவல் என்னை அதிர்ச்சி அடையச் செய்தது. அவருடைய மகனுடன் அவர் பேசி இரண்டு மாதமாகிவிட்டது என்று கூறினார்.

அந்த நண்பர் நன்கு படித்தவர். ஒரு பள்ளியை நிர்வகித்து வருகிறார். அவருடைய மனைவி அவர்களுடைய பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பள்ளியில் பிள்ளைகளுடன் எவ்வாறு நடந்துகொள்வது, பழகுவது என்பதை உளவியல் ரீதியாக அறிந்திருக்க வேண்டியவர்கள் அவர்கள்.

நண்பரின் மகன் தன்னுடைய தந்தையிடத்தில் சரியாக பழகவில்லையென்பது ஒருபுறம் இருந்தாலும், பள்ளியை நிர்வகிப்பவர், பிள்ளைகளின் மனதை அறிந்திருக்க வேண்டியவர் தன்னுடைய மகனின் மனநிலையை அறியாமல் போய்விட்டாரோ என்ற சந்தேகம் என் மனதில் எழுந்தது.

ஒரு தந்தை தன் மகனுடன் ஒரு நாள், இரண்டு நாள் பேசாமல் இருக்கலாம். அதிகபட்சமாக ஒரு வாரம் பேசாமல் இருக்கலாம். இரண்டு மாதமாக பேசவில்லையென அந்த நண்பர் கூறியது வேதனையான விஷயமாகும். இதற்கு காரணம் அவர்கள் உறவுகளில் சிக்கல் என்பது உள்நோக்கி பார்த்தால் தெரிகிறது.

முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்கள் தான் நம்முடைய சமுதாயத்தில் அதிகமாக இருந்தது. பகல் பொழுதில் இல்லாவிட்டாலும், இரவு நேரத்தில் ஒரு பொழுதாவது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் பழக்கம் இருந்தது. அதனால் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே சாப்பிடுவார்கள். அப்பொழுது ஒவ்வொருவரின் பிரச்னை குறித்தும் அலசப்படும். அப்பொழுதே தீர்வும் காணப்படும். வீட்டில் உள்ள வயதான தாத்தா, பாட்டியிடத்தில் பேரப்பிள்ளைகள் தங்களுக்கு வேண்டியதை கேட்பார்கள். அவர்கள் பிள்ளைகளின் பெற்றோர்களிடத்தில் அதுகுறித்து கூறி பரிந்துரை செய்து பெற்றுத் தருவார்கள். அதனால் உறவுமுறையில் எந்த சிக்கலும் இல்லாமல் ஒருவருக்கொருவர் பிரச்னையில்லாமல் குடும்ப வாழ்க்கை இருந்தது.

கூட்டுக் குடும்பம் என்ற ஒரு பந்தமே தற்போது அற்றுப்போய் வருகிறது. அதனால் பெற்றோர் - பிள்ளைகளுக்கு பாலம் போன்று செயல்பட வயதானவர்கள் இருப்பதில்லை. பெற்றோர்களிடம் நேரடியாக கேட்டு பெறும் தைரியம் பிள்ளைகளிடத்தில் இருந்தாலும் அதற்கு ஏன், எதற்கு, இது அவசியமா என பெற்றோர்கள் கேட்கும் கேள்விகளால் இன்றைய தலைமுறையினர் எரிச்சலடைகின்றனர். கேட்டதை கொடுக்காமல் கேள்வி கேட்கிறார்களே என்று கோபப்படுகின்றனர். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு, அதனால் உறவுகளில் விரிசல் என பிரச்னை தலைதூக்குகிறது. வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை.

இத்தகைய சூழ்நிலைகளால்தான் சமுதாய பிரச்னைகள் உருவாகின்றன. பெற்றோர் - பிள்ளைகளின் உறவுகளில் சிக்கல் எழும்பொழுது, பிள்ளைகள், பெற்றோர்களின் கண்காணிப்பிலிருந்து விலகிச் செல்கின்றனர். அவ்வாறு அவர்கள் விலகிச் செல்லும் பொழுது அவர்களுடைய மனது அலைபாய்கிறது. அதனால் அவர்கள் தவறானவர்களின் நட்பாலும், அவர்களுடைய தவறான வழிகாட்டுதல்களாலும் தவறான பாதைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இத்தகைய சூழ்நிலை, சமுதாய சீர்கேடுகளுக்கு வழிவகுக்கிறது.

இதற்கெல்லாம் தீர்வு - பெற்றோர் - பிள்ளைகளின் உறவு மேம்படுத்தப்பட வேண்டும். பெற்றோர்கள் உளவியல் ரீதியாக தங்களுடைய பிள்ளைகளை அணுக வேண்டும். அவர்களுக்கு சாதகமாக பேசுவது போல பேசி அவர்களின் மன நிலையை அறிந்து பேச வேண்டும். அவர்கள் எதைக் கேட்டாலும் உடனடியாக அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், ஏன், எதற்கு என்று கேள்வி கேட்காமல் அவர்களின் மனநிலையை அறிந்து அவர்களிடம் பக்குவமாக பேச வேண்டும். பிள்ளைகள் தேவையென கேட்கும் பொருள் அத்தியாவசியமானதா, அதனை வாங்க பொருளாதார சூழ்நிலை இடம் கொடுக்கிறதா என்பதை பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். தங்களால் வாங்கிக் கொடுக்க முடியும் என்ற நிலைமை இருந்தாலும், அந்தப் பணத்தை சம்பாதிக்க எவ்வளவு உழைக்க வேண்டியுள்ளது என்பதையும், எவ்வளவு கஷ்டப்பட வேண்டியுள்ளது என்பதையும் தெரியப்படுத்த வேண்டும்.

தினந்தோறும் தங்களுடைய பிள்ளைகளுடன் பேச பெற்றோர்கள் சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டும். அன்று பிள்ளைகள் வெளியில் எதிர்கொண்ட விஷயங்களைப்பற்றி பேச வேண்டும். ஏதேனும் பிரச்னை இருந்தால் அதற்கு தீர்வு கூற வேண்டும். படிப்பு குறித்து கேட்டறிய வேண்டும். அவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறைவாக இருந்தால் ஏன் ஆர்வம் குறைந்துள்ளது என்பதை தெரிந்து கொண்டு அவர்களுக்கு பிடித்த வகையில் செயல்பட்டு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அவர்களுடைய அவசியமான தேவைகளை நிறைவேற்றி அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும். தாங்கள் பட்ட கஷ்டம் பிள்ளைகள் படக்கூடாது என்று குடும்ப பிரச்னைகளை அவர்களுக்கு எடுத்துக்கூறாமல் விட்டுவிடக் கூடாது.

குடும்ப பிரச்னைகளையும் அவர்களிடம் எடுத்துக்கூறி விவாதிக்க வேண்டும். தங்களுடைய குடும்ப நிலைமையை அறிந்தால்தான் அவர்களும் பொறுப்பாக செயல்படுவார்கள். என்னதான் பிள்ளைகள் மீது அதிக பாசத்தை பொழிந்தாலும், பிள்ளைகளின் போக்கிலேயே அவர்களை தனியாக விட்டுவிடாமல், அவர்கள் போக்கில் பெற்றோர்களும் சென்று பிள்ளைகளை தங்கள் கண்காணிப்பிலேயே வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுடனான உறவை மேம்படுத்தும் வழிமுறைகளைப் பின்பற்றி குடும்பத்தையும், குடும்ப உறுப்பினர்களையும் மகிழ்ச்சியடைச்செய்யவேண்டும். இதன் மூலம் தனிக்குடும்ப மனநிலை மாறி கூட்டுக் குடும்பம் போன்ற மகிழ்வு உருவாகவும் வழி ஏற்படும்.

Source Dinamani

புன்னகை எனும் தொற்றுநோய்

எந்த உயிரினத்திற்கும் இல்லாத அழகான முக வடிவமைப்பை இறைவன் மனித இனத்திற்கு அளித்துள்ளான். அந்த முகத்திற்கு மேலும் மெருகூட்டி பொலிவாக்க புன்னகை என்னும் நகையை அணிந்து கொள்ள வழி செய்துள்ளான். ஆனால், மனிதர்களிடையே காணப்படும் போட்டி, பொறாமை, உறவுகளிடையே காணப்படும் வெறுப்புணர்வு ஆகியவை அந்தப் புன்னகையை மனிதர்களிடமிருந்து காணாமல் போகச் செய்கிறது. ஓவியர் லியொனார்டோ டாவின்சியால் வரையப்பட்ட "மோனாலிசா' ஓவியம் புன்னகையின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த ஓவியம்.

எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் பெண்ணை "புன்னகை அரசி' என்றும், ஆணை "புன்னகை மன்னன்' என்றும் கூறி நாம் புன்னகைக்கு மகுடம் சூட்டி மகிழ்கிறோம்.

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் காட்டும் புன்னகை அவர்களின் எதிர்காலத்திற்கு அஸ்திவாரமாகிறது. பிள்ளைகள் பெற்றோர்களிடம் காட்டும் புன்னகை, வாழ்க்கையை அர்த்தமாக்குகிறது. மருத்துவர் நோயாளிகளிடம் காட்டும் புன்னகை நம்பிக்கைக் கீற்றாக அமைகிறது. வாடிக்கையாளர்களிடம் கடைக்காரர்கள் காட்டும் புன்னகை வியாபாரத்தை அதிகரிக்கிறது. அதிகாரிகள் அலுவலர்களிடம் காட்டும் புன்னகை ஒற்றுமையை அளிக்கிறது. அரசியல் தலைவர்கள் மக்களிடம் காட்டும் புன்னகை ஜனநாயகத்திற்கு அடித்தளமாகிறது.

"புன்னகை எந்தப் பிரச்னையையும் நேராக்கும் வளைவுக் கோடு' என்பார்கள். ஒரு நொடிப் பொழுதில் உள்ளத்தில் எழும் மகிழ் உணர்வு புன்னகையாக வெளிப்படுகிறது. நமது மகிழ்ச்சியை இயற்கையாக பிரதிபலிக்கும் ஒரு சக்தியாக புன்னகை விளங்குகிறது. புன்னகை நமது உடலையும் உள்ளத்தையும் இணைத்து மூளைக்குத் தகவல்களை அனுப்பி நம்மை சஞ்சலமற்ற மனதுடன் சந்தோஷத்துடன் இருக்க உதவுகிறது. நமது மூளையின் புறப்பகுதியின் இடது பாகம் நமது சந்தோஷங்களைப் பதிவு செய்வதற்காகவே உள்ளது. தலைப் பகுதியிலுள்ள தசைகள் மூளையிலிருந்து வரும் சைகையை தாங்கி முகத்தில் உள்ள தசைகளை இயங்கச் செய்து உதட்டில் புன்னகையை தவழச் செய்து உடலை பரவசமாக்குகிறது. நாம் சோகமாக இருக்கும்போது, நாம் முன்பு செய்த நல்ல விஷயங்களை எண்ணிப் பார்த்து புன்னகைத்தால் அது நமது உடம்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தி மீண்டும் சந்தோஷத்தை ஏற்படுத்தும்.

நாம் சந்தோஷமாக இருக்கும்போது நமது உடம்பு நல்ல எண்ண அலைகளை வெளிப்படுத்தி மனதை தூய்மையாக்குகிறது. நாம் வீசும் ஒரு புன்முறுவல் மற்றவர்களையும் புன்னகைக்கச் செய்யும். அதாவது, நாம் சிரித்தால், நம்மைப் பார்த்து உலகம் சிரிக்கும் என்பார்கள். புன்னகை ஒரு தொற்று நோய். நம்மைச் சுற்றி வினோதமான, கோமாளித்தனமான நிகழ்வுகள் நடக்கும் போது நம்மால் புன்னகைக்காமல் இருக்க முடியாது. நமது நண்பர்களையோ உறவினர்களையோ சந்திக்கும்போது அவர்கள் வீசும் புன்னகையால் நம்மை அறியாமைலே நாம் புத்துணர்வு பெறுவோம். அதற்கு மாறாக முகத்தைச் சுளித்து, கடுமையான பார்வையைக் காட்டினாலோ அதனால் எதிர்வினைகள்தான் ஏற்படும்.

நமது மனம் உற்சாகத்திலிருக்கும்போது, உதடு புன்னகைக்கிறது. புன்னகை மனத்தளர்ச்சியை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைக்கிறது. நாம் புன்னகைக்கும்போது நமது உடம்பிலிருந்து எண்டார்பின், செரோடினின் போன்ற இயற்கையான வலி நிவாரணிகள் சுரக்கின்றன.

உடல்வலியைக் கட்டுபடுத்த இறைவன் நமக்கு அளித்த அருமருந்து புன்னகை. அது மன உளைச்சலையும் சோர்வையும் உடல்வலியையும் போக்கும். சிறு புன்னகைதான் பெரும் சிரிப்பை வரவழைக்கும். புன்னகை இல்லாமல் சிரிப்பில்லை. சந்தோஷ சிரிப்பு நம் உடல் நலனை சீராக்குவதுடன், ரத்த ஓட்டத்தையும் சீராக்கி, சீரான தூக்கத்தையும் அளிக்கும்.
எப்போதும் புன்முறுவல் பூத்தவாறு பிறருடன் அன்பாக பழகுபவருக்கு உடல்நலப் பாதிப்பு எப்போதும் ஏற்படுவதில்லை, அதிக அளவில் புன்முறுவல் பூத்து உற்சாகத்துடன் உழைப்பவர்கள் மற்றவர்களை விட ஏழு ஆண்டுகள் இளமையுடன் இருப்பார்கள் என தெரிவிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

நமது குறுநகை பிறருடைய கவனத்தை இழுக்கும் திறனுள்ளதாக அமையும். அதனால்தான் புகைப்படக் கலைஞர்கள் புகைப்படம் எடுக்கும்போது நம்மைப் புன்னகைக்கச் சொல்கிறார்கள்?

வேலைப் பளு காரணமாகவோ மன வருத்தம் ஏற்படும்போதோ, அல்லது பிறர் நம்மை வருந்துமாறு பேசினாலோ ஒரு சிறுநகை உதிர்த்தால் மனம் லேசாகி விடும். ஏதேனும் ஒன்றை எதிர்நோக்கியிருக்கும் பேராவல் ஏற்பட்டு அது கிடைக்காமல் போனால் மனம் விசாரம் கொள்ளாமல் இருக்கவும் புன்னகை உதவுகிறது. ஆபத்து வருமோ என்ற கவலையும் மனதிலிருந்து மறைகிறது. பிறரைக் கவர வேண்டுமானால் நமக்கு உயர்ரக ஆடைகளும், அலங்காரங்களும் தேவையில்லை. உதட்டில் புன்னகையை அணிந்தாலோ, அது முன்பின் தெரியாதவர்களையும், ஏன், எதிரியைக்கூட நண்பராக்கும் பாச வலையாகும்.

நாம் புதியதாக வேலை தேடிச் சென்றாலோ அல்லது பணி நிமித்தம் மற்றவர்களை பார்க்கச் போனாலோ நல்ல உடையுடன் சேர்த்து புன்னகையையும் அணிந்து செல்ல வேண்டும். நல்ல உடை மட்டும் ஒருவனைச் சிறந்தவனாகக் காட்டாது. சிடுசிடுப்பான முகத்துடன் உடை பகட்டாக இருந்தால் எந்தவிதமான பயனும் இல்லை. எனவே மற்றவர்கள் மனதில் நாம் பதிய வேண்டுமானால் அழகாக இயற்கையான முகிழ்நகையும் நம்முடன் இருக்க வேண்டும்.

புன்னகையை யாருக்கு வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் வழங்கலாம். விலையில்லா புன்னகையால் விளையும் பலன்களோ விலைமதிப்பற்றவை. புன்னகை - நல்லன எல்லாம் தரும்.

source dinamani

"அறிவை கூர்மைப்படுத்த நிறைய நூல்களை படிக்க வேண்டும்"

"அறிவை கூர்மைப்படுத்த நிறைய நூல்களை படிக்க வேண்டும்" என மதுரை புத்தக விழாவை துவக்கி வைத்த அமைச்சர் வைகை செல்வன் பேசினார். 

மதுரையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி), மாவட்ட நிர்வாகம் சார்பில் 8வது புத்தகத் திருவிழா தமுக்கம் மைதானத்தில் துவங்கியது. கலெக்டர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். "பபாசி" தலைவர் சண்முகம் வரவேற்றார். 

அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், "இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்த, அவர்களுக்கு குறிக்கோளை எடுத்துக்காட்ட, இந்திய பெருமையை, தமிழுக்காக பாடுபட்டோரை அறிய புத்தகங்கள் உதவுகின்றன. கல்விக்காக முதல்வர் ஜெயலலிதா பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்," என்றார்.

விழாவை துவக்கி வைத்த அமைச்சர் வைகை செல்வன் பேசியதாவது: "நிறைய புத்தகங்களை படித்தால்தான் நம்மை நாம் அறிய முடியும். ஒருவர் வாழ்வில் வெற்றி பெற உடல், மனம், அறிவு ஆகிய 3 தளங்கள் வேண்டும். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். எப்போதும் மாறுபட்டுக் கொண்டே இருக்கும் மனதை, ஒருமுகப்படுத்தி, ஒரே புள்ளியில் சந்திக்கும் யுக்தியை அறிய வேண்டும். 

அறிவை கூர்மைப்படுத்த நிறைய நூல்களை படிக்க வேண்டும். நூல்கள் அறிவுபூர்வமான விஷயங்களை தருகின்றன. எனவே நூலகங்களுக்கு நூல்களை வாங்க முதல்வர் ஜெயலலிதா ரூ. 30 கோடி நிதி தந்துள்ளார். செம்மொழி தமிழ் 20 ஆயிரம் ஆண்டுகளை கடந்தது என சமீபத்தில் படித்த ஒரு ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. தமிழை சைவமும், வைணமும் வளர்த்தன. அதனால்தான் 2000 ஆண்டுகளாக சிதையாமல் நிற்கிறது. இத்தகைய தமிழ்மொழி நூல்களை தினமும் 100 பக்கங்களாவது படிக்க வேண்டும். படிக்க படிக்க மகத்தான உயரத்தை அடைவீர்கள். 

நூல்களை பாதுகாக்க புத்தகக் கொள்கையை உருவாக்க வேண்டும் என எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் கூறினார். இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, ஆணை பெற்று, பொக்கிஷமாக விளங்கும் புத்தகங்களை பாதுகாக்க "புத்தகக் கொள்கையை" வெளியிடுவோம்." இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மேயர் ராஜன் செல்லப்பா, பபாசி பொருளாளர் வெங்கடாச்சலம் உட்பட பலர் பங்கேற்றனர். செயலாளர் வைரவன் நன்றி கூறினார். புத்தகத் திருவிழாவிற்கான, ஊடக உதவியை, "தினமலர்" நாளிதழ் வழங்குகிறது.

வேலை தேடுவதை எளிதாக்க நான்கு வழிகள்

இன்று ஒவ்வொரு ஆண்டு முடியும் போது பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகள் தங்கள் கல்லூரிப் படிப்பை முடித்து வேலை வாய்ப்பு சந்தைக்கு வருகிறார்கள். ஆண்டு தோறும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது, புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகிறது.

ஆனாலும், வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. ஒரு தனி நபரின் திறமையைப் பொறுத்த வேலையில் அமர்வது என்பதும் மிகவும் அரிதாக உள்ளது. ஒரு பட்டதாரிக்கு உரிய வேலை கிடைக்க முக்கியமான 4 வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் அவர்களுக்கான வேலை கிடைப்பதை எளிதாக்க முடியும் என்று வேலை வாய்ப்பு அறிஞர்கள் கூறுகிறார்கள். 

1. தெளிவான இலக்கைத் தேர்ந்தெடுங்கள்

வேலை தேடும் ஒவ்வொருவருக்கும் தெளிவான இலக்கு என்பது முக்கியமான தேவையாகும். இலக்கு என்றவுடனே மிக உயர்ந்த இலக்காகத்தான் இருக்க வேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். ஒரு தனி நபரின் பலம் மற்றும் பலவீனங்களின் அடிப்படையில் அவருக்கு ஏற்றபடியான இலக்கைத் தேர்ந்து எடுப்பதுதான் அவருக்கான பணி வாய்ப்பைப் பெறுவதற்கான முதல் படியாக அமையும். 

உதாரணமாக பிளஸ் 2 தகுதி உடைய ஒருவர் தனக்கேற்ற வேலை வாய்ப்புகள் என்னென்ன என்பதை அறிய வேண்டும். அதே போல் பி.எஸ்.சி., பி.காம்., பி.ஏ., பி.சி.ஏ., போன்ற படிப்பை முடித்தவர்கள் அவர்களுக்கேற்ற பணி வாய்ப்புகள் என்னென்ன இருக்கின்றன, அவற்றில் எது தனது பலம் மற்றும் பலவீனங்களுக்கு உட்பட்டு பொருத்தமாக அமையும் என்று ஆராய்ந்து தங்கள் இலக்கை முடிவு செய்ய வேண்டும். 

2. உங்கள் வேட்கையை துரத்தாதீர்கள்

ஒரு தனி நபர் தனது வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு விதமான வேட்கை அல்லது தாகத்தை கொண்டிருப்பதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். எனவே ஒரு தனிப்பட்ட வேட்கையைத் துரத்துவது என்பது அவரது பணி எதிர்காலத்திற்கான வளமான வாய்ப்பாக அமையாது என்று கூறுகிறார்கள். ஒரு தனி நபர் அதிகபட்ச நேரம் எந்த வேலையை செய்து கொண்டிருக்கிறாரோ, அதில் அதிக அனுபவம் மற்றும் வல்லமை ஏற்படுவதால் அது தொடர்புடைய பணியே சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் என்று கூறுகிறார்கள். 

3. தடைகளை உருவாக்குங்கள்

வேலை தேடும் ஒருவரிடம் இப்படி சொன்னால் கேட்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஆனால், சொல்ல விரும்பும் விஷயம் என்னவென்றால், நீங்கள் தேடும் வேலைக்கு சிறப்பு படிப்பு, தனித்திறன் போன்றவை தேவைப்படும்படியானதாக இருந்து அதனை உங்கள் இலக்காக கொள்வதன் மூலம் தனிப்பட்ட முறையில் உங்களின் முன்னேற்றம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. 

உங்கள் திறனை மேம்படுத்துவது, அதிக உயரங்களை எட்டுவது, ஆரோக்கியமான போட்டியில் முழு முயற்சி மேற்கொள்வது போன்ற பல்வேறு முன்னேற்ற சிந்தனைகள் இதன் மூலம் தூண்டப்படுவதால் நாம் முன்னேறுவதற்கான தடைகளை நாமே மேற்கொள்வதும் நமது சிறந்த பணி எதிர்காலத்திற்கான ஒரு வழியாக இருக்கும் என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். 

4. பயிற்சிகளே உங்கள் வெற்றிக்கு வழிகாட்டி

இன்டர்ன்ஷிப் எனப்படும் பயிற்சிகள் குறித்து பலரும் தவறான கருத்துகளை கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இவை நாம் எதிர்பார்க்காத அளவிற்கு சிறந்த பணி வாய்ப்புகளை வழங்கும் ஆற்றல் பெற்றவை. 

பட்டப் படிப்பை முடிப்பதற்கு முன் சிறந்த இன்டர்ன்ஷிப் பெற்று அதனுடன் நல்ல மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடிப்பது நமக்கு பணி வாய்ப்பிற்கான சிறந்த வாய்ப்புகளை வழங்கும். ஒருவேளை நாம் இன்டர்ன்ஷிப் பெற்ற நிறுவனத்தில் நமக்கு வேலை கிடைக்காவிட்டாலும் கூட அது பிற நிறுவனங்களால் சிறந்த வாய்ப்பாக கருதப்பட்டு நமது பணி வாய்ப்புகளை அதிகரிக்கவே செய்யும். 

சிறந்த பணி வாய்ப்பை நீங்கள் விரைவில் பெற்றிட வாழ்த்துக்கள்

"அண்ணா பல்கலைக்கழகம் பெருமை வாய்ந்தது"

"பெருமை வாய்ந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்ததற்கு பெருமைப்படுகிறேன்" என விருது பெறும் நிகழ்ச்சியில் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசினார்.

சென்னையில் உள்ள "அம்பாசிடர் பல்லவா" ஓட்டல் சென்னைக்கு சிறப்பு சேர்த்தவர்களுக்கு "டோயன்ஸ் ஆஃப் மெட்ராஸ்" என்ற விருதினை வழங்கியது. கல்வி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த சாதனையாளர்களை இவ் விருதுக்காக தேர்ந்தெடுத்து விருதினை வழங்கினர்.

"டோயன்ஸ் ஆஃப் மெட்ராஸ்" விருதினை, வி. சாந்தா, தலைவர், கேன்சர் இன்ஸ்டிடீயூட்,  எஸ்.எஸ். பத்ரிநாத், தலைவர் சங்கரா நேத்ராலயா, கிரிஷ் ஸ்ரீகாந்த், முன்னாள் கிரிக்கெட் அணி தலைவர், டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர், எம். நரேந்திரா, நிர்வாக இயக்குநர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இ. பாலகுருசாமி, முன்னாள் துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சுரேஷ் கிருஷ்ணா, நிர்வாக இயக்குநர், சுந்தரம் பாஸ்டனர்ஸ் ஆகியோர் பெற்றனர்.

விழாவில் விருதினைப் பெற்றது குறித்து முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறுகையில், "இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரி சென்னையில் தான் தொடங்கப்பட்டது. அந்தக் கல்லூரி கிண்டி பொறியியல் கல்லூரி, அப்படிப்பட்ட பெருமைவாய்ந்த கல்லூரிகளை உள்ளடக்கிய பெருமை வாய்ந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்ததற்கு பெருமைப்படுகிறேன்.

நகரம் வளர்ச்சி அடைந்தாலும் நடைபாதையில் மக்கள் வாழ்ந்து வருவது கவலை தரக்கூடியதாக இருக்கிறது. இவர்களை மேம்படுத்த தனியார் நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும். நகரத்தின் முன்னேற்றத்திற்காக ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும்" இவ்வாறு கூறினார்.

மேலும், "கூவம் நாற்றமெடுத்தாலும், கொசு கடித்தாலும் சென்னை நகரத்தில் வாழவே பிடித்திருக்கிறது" என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தியும், "சென்னையில் தான் பிறந்தேன், வளர்ந்தேன், படித்தேன், சென்னையில் தான் நான் சாகவும் வேண்டும்" என்று முன்னாள் கிரிக்கெட் அணி தலைவர் கிரிஷ் ஸ்ரீகாந்தும் கூறினர்.

வேலை தேடுதலில் நெட்வொர்க் என்பதன் பயன்பாடு

வேலை தேடும் போராட்டத்தில் பல முரணான விஷயங்களை பலரும் எதிர்கொண்டிருப்பார்கள். இந்த விஷயங்கள், அவர்களுக்கு, சோர்வையும், வெறுப்பையும் தரக்கூடியாதாகவும் இருக்கும்.

உதாரணமாக, ஒருவர், புதிதாக படித்து முடித்த பட்டதாரி என்றால், அவர் விண்ணப்பிக்கும் நிறுவனம், நாங்கள் அனுபவசாலிகளைத் தேடுகிறோம் என்று சொல்லி, அவர் விண்ணப்பத்தை நிராகரிக்கும்.

அதேசமயத்தில், அனுபவமுள்ள ஒருவர், ஒரு நிறுவனத்தில் குறிப்பிட்ட பணிக்காக விண்ணப்பித்தால், அந்நிறுவனம், நாங்கள் புதியவர்களைத்தான் தேடுகிறோம். இப்போதைக்கு அனுபவசாலிகள் தேவையில்லை என்று சொல்லி அவரை நிராகரிக்கும். எனவே, இதுபோன்ற சூழல்களை சமாளிக்க, ஒருவர், தனக்கான வேலை தேடுவோர் நெட்வொர்க்கை உருவாக்க வேண்டும் அல்லது அதுபோன்றதொரு நெட்வொர்க்கிலோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நெட்வொர்க்கிலோ இணைதல் வேண்டும். அப்போதுதான், பணி தேடும் செயல்பாடு சுலபமானதாக இருக்கும்.

சரியான நெட்வொர்க் இல்லாமல் வேலை தேடும் ஒருவர், ஒரு வாரத்திற்கு சில நிறுவனங்களையே அணுக முடியும். இதன்மூலம், அவரின் பணியின்மை காலம் நீடித்துக்கொண்டே செல்லும். சிலர் ஆண்டுக்கணக்கில் கூட, வேலையின்றி இருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், நெட்வொர்க்கில் இருக்கும் ஒரு நபர், நிறைய நிறுவனங்களை அணுகும் வாய்ப்பைப் பெறுகிறார்.

கூச்சமும், தயக்கமும் வேண்டாம்

சிலருக்கு அதிக கூச்சமும், தயக்கமும் இருக்கும். சிலருக்கு தாழ்வு மனப்பான்மையும் இருக்கும். அவர்களைப் போன்றவர்கள், மீட்டிங், நேர்முகத் தேர்வு மற்றும் ஈ-மெயில் அனுப்புவது போன்ற சிறிய விஷயங்கள் ஆகியவற்றைக் கூட, முடிந்தளவு தவிர்க்கவே பார்ப்பார்கள். அவர்களைப் போன்ற நபர்கள், இன்றைய போட்டி உலகில், நிச்சயம் காணாமல் போய்விடுவார்கள்.

எனவே, ஒருவர் கடினமாக முயற்சி செய்து, தனது கூச்ச சுபாவத்தையும், தயக்கத்தையும் கைவிட வேண்டும். பிற நபர்களோடு பேசுவதை சந்தோஷமாக உணர வேண்டும் மற்றும் தயக்கமின்றி பேச வேண்டும். இதுபோன்ற மனோநிலையை வளர்த்துக்கொண்டால், எளிதில் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.

புதிய மனிதர்களை சந்தித்து நண்பர்களாக்கி கொள்கையில், எப்போதுமே எதிர்மறை எண்ணத்தை வைத்திருக்கக்கூடாது. அதாவது, நாம் சந்திக்கும் நபர்கள், எங்கே நமக்கு உதவப் போகிறார்கள், எல்லாம் வீண் என்ற எண்ணம் தவறு. நீங்கள் ஒரு 25 பேரை சந்தித்தால், அதில், குறைந்தது ஒரு 3 பேராவது உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவக்கூடியவராக இருப்பார். சமயத்தில், நீங்கள் எதிர்பாராத நபரிடமிருந்தெல்லாம் உதவியைப் பெறுவீர்கள். அதேசமயம், நீங்கள் மிகவும் எதிர்பார்த்த நபர் உங்களுக்கு எதுவும் செய்யாமல் போகலாம். வாழ்க்கை என்பதே அப்படித்தான். திருப்பங்களும், ஆச்சர்யங்களும் நிறைந்தது.

வேலை தேடும் செயல்பாட்டில் உதவக்கூடிய முக்கியமான 4 நெட்வொர்க் விபரங்கள்

* உங்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நன்கு தெரிந்தவர்கள்
* உங்களின் உறவினர்கள் மற்றும் உறவினர்களின் நண்பர்கள்
* உங்களின் தொழில்முறை சங்கம். நீங்கள் எந்த துறையை சார்ந்தவராக இருந்தாலும் சரி, அதற்கென்று லாபநோக்கமற்ற ஒரு சங்கம் இருக்கும். அந்த சங்கத்தில் உங்களை உறுப்பினராக இணைத்துக்கொள்வதன் மூலமாக, உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர், பெரிய பதவிகளில் இருப்பார்கள் என்பதையும் மறத்தல் கூடாது.
* உங்கள் பகுதியில், ஆன்மீகம் மற்றும் சமூகப் பணிகளை மேற்கொள்வதற்கென்று, சில அமைப்புகள் இருக்கலாம். வழிபாட்டு இடங்களைப் பராமரித்தல் மற்றும் சமூக சேவைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளில் அந்த அமைப்புகள் ஈடுபட்டிருக்கும். எனவே, அதுபோன்ற அமைப்புகளிடம் நீங்கள் கொண்டிருக்கும் தொடர்புகளும்கூட, சில நேரங்களில் உங்கள் வேலைதேடும் செயல்பாட்டில் உதவி புரியும்.

மேலும், நீங்கள் யாரிடமாவது சிறிய உதவி பெற்றாலும்கூட, அவருக்கு குறைந்தபட்சம் தொலைபேசி மூலமாகவாவது நன்றி சொல்ல மறத்தல் கூடாது. மேலும், சற்று பெரியளவிலான உதவியாக இருந்தால், நன்றி தெரிவித்து ஒரு கடிதமே எழுதலாம். இதன்மூலம், நீங்கள் எளிதில் மனிதர்களை கவரலாம். மேலும், இன்னும் பல பெரிய வாய்ப்புகள் வந்தாலும், உங்களின் நன்றியால் கவரப்பட்ட மனிதர்கள், அந்த வாய்ப்புகளைப் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டும் என்று தூண்டப்படுவார்கள்.

வேறு சில ஆலோசனைகள்

நீங்கள் வேலை தேடுதல் தொடர்பாக, ஏற்படுத்திக்கொள்ளும் பழக்கங்கள் நீடித்த அம்சம் கொண்டதாக இருக்க வேண்டும். வெறுமனே அவசரப்பட்டு, ஒன்றிலிருந்து மற்றொன்று என்று தாவிக்கொண்டே இருத்தலானது, உங்களின் நோக்கத்தையே சிதறடித்துவிடும்.

நெட்வொர்க் குழுவை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நேரம் கிடைக்கையில், நீங்கள் யார் யாரிடமெல்லாம் பேசினீர்கள் என்பதைப் பற்றி நினைவிற்கு கொண்டுவர வேண்டும். இதன்மூலம், சரியான நேரத்தில் சரியான நபரை நீங்கள் அடையாளம் காண முடியும்.

நீங்கள் நெட்வொர்க் நபர்களிடம் பேசும்போது, ஆர்வத்துடனும், இன்முகத்துடனும் நடந்துகொள்ள வேண்டும். ஏனெனில், இந்தத் தன்மை, வெறும் வேலைக்காக மட்டுமின்றி, வாழ்க்கை முழுவதற்குமான செயல்பாட்டில் ஒரு நபருக்கு பேருதவி புரியும். நீங்கள் உரையாடலில் காட்டும் ஆர்வம்தான், உங்கள் எதிர் நபரை, உங்களின்பால் கவனம் காட்டத் தூண்டும்.

நெட்வொர்க் என்பதையே, உங்கள் திறன்களை விற்பனை செய்யும் செயல்பாடு என்று நினைத்து விடாதீர்கள். உங்களின் பொது சமூக தொடர்பை அதிகரிக்கும் செயல்பாடே நெட்வொர்க் ஆகும். நெட்வொர்க் செயல்பாடு என்பது, வெறுமனே வேலை பெறுவதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படும் சுயநல செயல்பாடு என்பதல்ல. அப்படி நினைத்தலும் கூடாது. இது புதிய மனித உறவுகளை பெறும் ஒரு செயல்பாடும்கூட. இதன்மூலம், இந்த உலகம் எப்படி போட்டி நிறைந்ததாக உள்ளது மற்றும் மனிதர்கள் எப்படி வெற்றிகொள்ள போராடுகிறார்கள் என்பன போன்ற தகவல்கள் கிடைக்கும்.
நீங்கள் ஒரு நெட்வொர்க் நபரிடம் ஏதேனும் ஒரு தகவலுக்காகவோ அல்லது உதவிக்காகவோ தொடர்புகொண்டு, அவரிடமிருந்து தெரியாது அல்லது தற்போது இயலாது என்ற பதில் வந்தால், அதற்காக உடனே தொடர்பை துண்டித்தல் கூடாது. ஏனெனில் அந்த மனிதரின் சூழல் அப்போதைக்கு வேறுமாதிரி இருக்கலாம்.

எனவே, அந்த சூழலில், எனக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கியமைக்கு நன்றி என்று சொல்லி அவரை மகிழ்விக்க வேண்டும். இதன்மூலம், அப்போது இல்லையென்றாலும், வேறு சமயங்களில் அவரால் உங்களுக்கு சில நன்மைகள் கிடைக்கலாம்.

வேலைதேடும் நெட்வொர்க் அம்சத்திலிருந்து, உடனடியாக பலன்களை எதிர்பார்ப்பது கூடாது. சில சமயங்களில் உடனடி பலன்கள் கிடைத்தாலும், பல சமயங்களில் சிறிது காத்திருக்க வேண்டும். ஆனால், எந்த சமயத்திலும் நம்பிக்கையை மட்டும் இழந்துவிடக்கூடாது. ஏனெனில், நெட்வொர்க் குரூப் மூலமாக, வெறுமனே வேலை வாய்ப்புகளை மட்டுமே நீங்கள் பெறுவதில்லை. மாறாக, ஒரு புது பணி தொடர்பான உறவுக் குழுக்களையே பெறுகிறீர்கள்.

நெட்வொர்க்கிங் என்பதன் தத்துவம்

ஒரு மாங்காயை வீழ்த்த பல கற்களை நாம் எறிய வேண்டியுள்ளது. எனவே, பல நெட்வொர்க் தொடர்புகளை நாம் பேண வேண்டியதும் அவசியமாகிறது. நெட்வொர்க் மூலம் ஒரு பணி வாய்ப்பை பெற்றதும், பலர் நெட்வொர்க் தொடர்புகளையே மறந்து விடுகிறார்கள். சிலர் மட்டுமே பழைய நண்பர்களோடு, தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள்.

ஏனெனில், இன்றைய யுகத்தில், ஒரே பணியில் காலம் முழுவதும் இருப்பதென்பது சவாலான விஷயமாகவே உள்ளது. அது பழைய கலாச்சாரம் என்பதாக ஆகிவிட்டது. எனவே, நெட்வொர்க் தொடர்பை தொடர்ந்து பேணி காப்பதன் மூலமாக, புதிய புதிய நன்மைகள் நமக்கு தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருப்பதோடு, மனித உறவுகளை மதிப்பதன் மாண்புகளையும் பெறலாம்.

* நெட்வொர்க் செயல்பாடு, உங்களின் வேலையில்லாத காலஅளவை குறைக்கும்.
* உங்களை செயல்பாட்டுத் திறத்துடனும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும்.
* வேலை வாய்ப்பு சந்தையைப் பற்றிய புதுப்பிக்கப்பட்ட அறிவை உங்களுக்கு வழங்கும்.
* உங்களுக்கான எதிர்கால வாய்ப்புகளை பெறுவதற்கு உதவிபுரியும்.

Thursday, August 29, 2013

இன்னும் என்ன தயக்கம், எம்.பி.ஏ - ஐ.டி. படிப்பில் சேர?

உங்களுக்கு மென்பொருள், தொழில்நுட்பம் மற்றும் தகவல்தொடர்பு போன்ற அம்சங்களில் ஆர்வம் இருக்கலாம். ஆனால், இவற்றை மட்டுமே வைத்துக்கொண்டு, மேலாண்மை திறன் இல்லையெனில், கார்பரேட் உலகில் நீங்கள் தோற்றுவிடுவீர்கள்.

இந்தியாவில், பலருக்கும் இருக்கும் ஒரு மோகம் எம்.பி.ஏ., மோகம். இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில், கார்பரேட் நிறுவனங்களில் வேலை பெறுவதற்காக, தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை படிப்புகளில் சேரும் ஆர்வம் எப்போதுமே அதிகமிருக்கும்.

தொழில் நிறுவனங்களைப் பொறுத்தவரை, தாங்கள் பணிக்கு எடுக்கும் ஒருவர், வெறும் மேலாண்மைத் திறனை மட்டும் பெற்றவராகவோ அல்லது வெறும் தொழில்நுட்பத் திறனை மட்டும் பெற்றவராகவோ இருப்பதை விரும்பவில்லை. மாறாக, அந்த இரண்டு திறன்களையும் ஒருங்கே பெற்றவரையே பணியமர்த்த விரும்புகின்றனர். அவர்களுக்கான சம்பளத்தையும் கேட்கும் அளவிற்கு தருவதற்கு தயாராக உள்ளனர்.

ஒவ்வொரு வணிக செயல்பாடும், வலுவான ஐ.டி., அடிப்படையை தேவையாகக் கொண்டுள்ளன. இதன்மூலம்தான், உச்சகட்ட போட்டியில் நாம் தோற்காமல் இருக்க முடியும். பெரியளவிலான வணிக செயல்பாட்டிற்கு, பெரியளவிலான ஐ.டி. ஆதரவு தளம் தேவை. எனவே, இந்த உலக சூழலை உணர்ந்து, மேலாண்மை கல்வி நிறுவனங்கள், அதற்கேற்ற வகையில், ஒரு படிப்பை அறிமுகம் செய்துள்ளன. அந்தப் படிப்புதான், MBA - IT (MBA in Information Technology).

இப்படிப்பு, வணிக மேலாண்மைத் திறன்களுடன், அடிப்படை ஐ.டி. திறன்சார் அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மேலாண்மை மற்றும் ஐ.டி. திறன்களை ஒருங்கேப் பெற்று, ஒரு நிறுவனத்தின் வியூகரீதியிலான இலக்குகளின் நேர்த்தியை அதிகரிக்கும் வகையிலான எதிர்கால வணிக தலைவர்களை உருவாக்கும் வகையில் இப்படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
திட்டமிடல், வடிவமைத்தல், தேர்வு செய்தல், ஐ.டி. வள ஆதாரங்களை பயன்படுத்தல் மற்றும் மேலாண்மை செய்தல் உள்ளிட்ட பல விஷயங்களை இப்படிப்பு கற்றுத் தருகிறது. மேலும், மேலாண்மை கோட்பாடுகள், டேட்டாபேஸ் மேலாண்மை அமைப்பு, வணிக நுண்ணறிவு, நெட்வொர்க் இயக்கம், மேலாண்மை மற்றும் பாதுகாப்பு, சிஸ்டம் பகுப்பாய்வு மற்றும் வடிவமைப்பு, மென்பொருள் இன்ஜினியரிங் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் வியூகரீதியான மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இப்படிப்பில் இடம்பெற்றுள்ளன.

இப்படிப்பில், வணிக அறிவைப் பெற்றுக்கொள்ளும் அதே நேரத்தில், ஐ.டி. கட்டமைப்பை பற்றியும், தேவைப்படும் அளவிற்கு விஷயங்களை இப்படிப்பை மேற்கொள்வோர் கற்றுக்கொள்ளலாம். இப்படிப்பில், மேலாண்மை மற்றும் நிதி கருத்தாக்கங்கள் பற்றிய தியரி அறிவை நீங்கள் பெறுகிறீர்கள் மற்றும் ஐ.டி. துறையில் புதிதுபுதிதாக ஏற்பட்டுவரும் மாற்றங்களை புரிந்துகொள்ளும் வகையிலான சூழல் பற்றிய விழிப்புணர்வும் வழங்கப்படும்.

ஏற்கனவே தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும், அதேசமயம் மேலாண்மைத் திறன் குறைவாக இருக்கும், ஏற்கனவே மேலாண்மைத் துறையில் பணிபுரிந்து, அதேசமயம் தொழில்நுட்பத் திறன்கள் சற்று குறைவாக இருக்கும் நபர்கள், இந்தப் படிப்பை தொலைநிலைக் கல்வி முறையில் மேற்கொள்ளலாம்.

MBA - IT படிப்பின் விபரங்கள்

இரண்டு வருட முதுநிலை படிப்பான இது, மொத்தம் 4 செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை தகுதிகள்

* 10+2 முடித்திருக்க வேண்டும்
* இளநிலைப் பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

மாணவர்களை தேர்வுசெய்யும் முறை

MAT
CAT
XAT
PGCET
ATMA
ICET
SNAP

மேற்கூறிய தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் பெற்ற மதிப்பெண்கள், குழு கலந்தாய்வு(GD) மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் ஒருவரின் செயல்பாட்டுடன் மதிப்பிடப்படும்.

MBA - IT படிப்பானது, MCA மற்றும் MSc IT ஆகிய படிப்புகளிலிருந்து வேறுபட்டது. எம்.பி.ஏ படிப்பை பொறுத்தவரை, ஐ.டி. துறையிலுள்ள மேலாண்மை அம்சங்களை அறிந்துகொள்வதோடு, புதிய ஐ.டி. டிரென்டுகளை எப்படி சமாளிப்பது என்பது பற்றியும் கற்றுக் கொள்ளலாம். ஆனால், MCA, MSc IT போன்ற படிப்புகள் வெறும் தொழில்நுட்பம் சம்பந்தமாக மட்டுமே தெளிவாக கற்றுத் தருகின்றன. இந்த இரண்டு படிப்புகளையும் மேற்கொள்வோர், C++, Java மற்றும் இதர ப்ரோகிராமிங் மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்.

வேலை வாய்ப்புகள்

ஐ.டி. தொழில்துறை பெரியளவில் வளர்ந்து வருகிறது. அந்த ஐ.டி. நிறுவனங்கள், தங்களுக்கான மேலாளர்களை எதிர்பார்க்கின்றன. அந்த மேலாளர்கள், நிறுவனத்தின் இலக்குகளை அடைய, கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள், தரத்தில் சற்றும் குறைவில்லாமல், அதிக உற்பத்தியை தந்து, நிறுவனத்தின் இலக்குகளை அடைய உதவக்கூடியவராக இருத்தல் வேண்டும்.

தொழில்நுட்ப அறிவுடன், மேலாண்மை அறிவையும் கொண்டவர்களுக்கான வேலைவாய்ப்பு சந்தை மதிப்பு, கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. MBA - IT படித்தவர்களுக்காக காத்திருக்கும் சில வகை பணி வாய்ப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

ஒருவருக்கு சிறந்த ஐ.டி. அறிவு இருந்து, ப்ரோகிராமிங் தொடர்பான திறமைகள் இருந்தால், MBA - IT அவருக்கு ஏற்ற படிப்பு. தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை ஆகிய இரண்டு திறமைகளும் பெற்றுள்ள நபர்களுக்கான பணி மதிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. டாடா கன்சல்டிங் சர்வீசஸ், விப்ரோ, இன்போசிஸ் போன்ற பெரிய நிறுவனங்கள், MBA - IT பட்டதாரிகளை பணிக்கு எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றன.

MBA - IT படிப்பு, தொழில்நுட்பத் துறை என்ற எல்லையை தாண்டி உங்களை சிந்திக்க வைத்து, ஒரு நிறுவனத்தின் இலக்குகளை அடைவதற்கு பேருதவி புரிய உங்களை தயார்படுத்துகிறது.

இன்னும் என்ன யோசனை? MBA - IT படிப்பில் சேர்வதற்கான வேலையைத் தொடங்குங்கள். இதன்மூலம் நீங்கள் இரண்டு அவதாரம் எடுக்கலாம். டெவலப்பர்கள் மற்றும் ப்ரோகிராமர்கள் குழுவுடன் இணைந்து ஒரு மொழியைப் பேசலாம் மற்றும் மேலாண்மை குழுவினருடன் இணைந்து ஒரு மொழியைப் பேசலாம். எனவே, ஒரு சவாலான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தை நோக்கி உங்கள் வாழ்க்கை நகர்வதை உறுதி செய்யுங்கள்.

இப்படிப்பை வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்

Faculty of management studies (FMS), Delhi
Symbiosis institute of computer studies and research, Pune
Symbiosis centre for information technology, Pune
ISBR Business school, Bangalore
ISBR Business school, Chennai
ABV - Indian institute of information technology and management, Gwalior
Indian institute of information technology and management, Allahabad.

Tuesday, August 27, 2013

பில்கேட்ஸ்... !!!!

உலகின் எதிர்காலப் பாதையைச் சரியாகக் கணித்து, அந்தத் திசையில் எல்லோரையும்விட வேகமாக ஓடி முதலிடத்தைப் பிடிப்பவர்கள் ஒரு வகை... அப்படி இல்லாமல் தானே ஒரு திசையைத் தீர்மானித்து, ஒட்டுமொத்த உலகத்தையும் அந்தத் திசையில் தன் பின்னால் ஓடிவரச் செய்பவர்கள் இரண்டாவது வகை...
பில்கேட்ஸ் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்।'உழைக்க மட்டுமல்ல... உழைப்பை விட்டு விலகியும் இருக்கத் தெரிய-வேண்டும்...' - இதுதான் பில்கேட்ஸ் நமக்கு உணர்த்தியிருக்கும் சமீபத்திய பாடம். அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஒரு பொருள் இருக்கிறது. ஒரு எம்.பி.ஏ. பாடத் திட்டத்துக்கு நிகரான வாழ்க்கைமுறை அவருடையது.

பள்ளிக்கூட காலத்திலேயே பில்கேட்ஸ் 'பாட'த்தைத் தொடங்கிவிட்டார்। கொடுக்கிற பாடத் திட்டத்தைப் படிப்பதைவிட விருப்பமானதைப் படிப்பதுதான் சிறந்தது என்பதை நம்பினார்। மற்ற மாணவர்களிடமிருந்து வேறுபட்டு, படிப்பில் ஆர்வமில்லாமல் இருந்த பில்கேட்ஸை, சியாட்டில் நகரின் 'லேக்சைட் (Lake Side) பள்ளி'யில் அவருடைய பெற்றோர் சேர்த்தனர். அங்கே பில்கேட்ஸை ஈர்த்தது ராட்சத சைஸில் பூதம் போல இருந்த கம்ப்யூட்டர்.

அந்தக் காலத்தில் கம்ப்யூட்டரை விஞ்ஞானக் கூடங்களில் மட்டுமே பயன்படுத்தினார்கள். இரவு பகலாக அதன் முன் தவமாகக் கிடந்த பில்கேட்ஸ், தானாகவே புத்தகங்களையும், கையேடுகளையும் படித்து கம்ப்யூட்டர் மொழியான 'பேசிக்'கில் (BASIC) புரோகிராம் எழுதத் தொடங்கினார். அவருடைய பள்ளித் தோழர் பால் அலெனுக்கும் அதே ஆர்வம். திடீரென்று ஒருநாள், 'இனிமேல் மாணவர்கள் கம்ப்யூட்டரை இலவசமாகப் பயன்படுத்த முடியாது' என்ற அறிவிப்பு வந்தது. இருவரும் கவலைப்பட்டனர்.அந்தக் காலகட்டத்தில் கம்ப்யூட்டரை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தும் பழக்கம் அதிகமாக இருந்தது। 'அந்த கம்ப்யூட்டரில் ஏதாவது குறைபாடு இருந்தால் வாடகை கொடுக்கத் தேவையில்லை' என்று வாடகைக்குக் கொடுக்கும் நிறுவனங்கள் அறிவித்திருந்தன. குறைபாடுகள் அதிகம் இருக்கவும் செய்தன.

பில்கேட்ஸ் நினைத்திருந்தால் வாடகைக்கு கம்ப்யூட்டர் எடுத்து, அதில் உள்ள குறைபாடுகளைச் சொல்லி, வாடகை கட்டாமல் பயன்படுத்தியிருக்க முடியும்। ஆனால், அவர் கம்ப்யூட்டர் வாடகைக்குத் தரும் நிறுவனங்களில் ஒன்றான 'கம்ப்யூட்டர் சென்டர் கார்ப்பரேஷனு'க்குச் சென்று அவர்கள் கம்ப்யூட்டரில் உள்ள குறைபாடுகளைக் கண்டுபிடித்துத் தருவதாக ஒப்பந்தம் செய்துகொண்டார். அதனால், அந்தக் குறைபாடுகள் நீக்கப்பட்டு, அவர்களுக்கு வாடகைப் பணம் பெருகியது. பில்கேட்ஸ் சம்பளமாகப் பெற்றுக்கொண்டது இலவசமாக கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் உரிமையை!

கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துவதைவிட, புதிய திசையில் வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளும் கலை அவரிடம் நிறையவே இருந்தது। வாகனப் போக்குவரத்து
விவரத்தை கம்ப்யூட்டரில் உள்ளிடும் 'டேட்டா என்ட்ரி' வேலை 17 வயது பள்ளி மாணவன் பில்கேட்ஸூக்குக் கிடைத்தது. ஒவ்வொரு வாகனமும் கடந்து செல்லும்போது காகிதச் சுருளில் ஒரு துளை போடப்படும். அந்தத் துளைகளை எண்ணி கம்ப்யூட்டரில் என்டர் செய்வதுதான் வேலை.

துளைகளை எண்ணிச் சொல்வதற்கு சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்து, 'டிராஃப்- ஓ -டேட்டா' (Traf-O-Data) என்று பெயரிட்ட பில்கேட்ஸூக்கு, இந்தத் தொழிலில் நல்ல லாபம்! போக்குவரத்து விவரங்களை அலசி அதை நெறிப்படுத்துவதற்காக பல நகராட்சிகள் அந்தக் கருவியை நாடியபோது, 'இனிமேல் நாங்களே அந்த வேலையை நகராட்சிகளுக்குச் செய்துதருவோம்' என்று அமெ-ரிக்க மத்திய அரசு அறிவித்துவிட்டது. பில்கேட்ஸின் பிஸினஸ் படுத்துவிட்டது.

இந்தச் சமயத்தில் அவர் ஹார்வர்ட் கல்லூரியில் இணைந்தார்। அதற்குப் பக்கத்திலேயே பால் அலெனுக்கு ஒரு வேலை கிடைத்தது. இருவரும் அடிக்கடி சந்தித்தனர். 1975 ஜனவரி மாதம் 'பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ்' இதழில் 'உலகின் முதல் மைக்ரோ கம்ப்யூட்டர் அல்டெய்ர் 8800' என்று வந்த கட்டுரையை எடுத்துக்கொண்டு பில்கேட்ஸிடம் ஓடிவந்தார் அலென். அதைத் தயாரித்த எம்.ஐ.டி.எஸ். (MITS) நிறுவனத்தைத் தொடர்புகொண்ட கேட்ஸூம் அலெனும், 'உங்கள் கம்ப்யூட்டரில் பேசிக் புரோகிராம் பயன்படுத்த முடிந்தால் நன்றாக இருக்கும். அதைச் செயல்படுத்த உதவும் பேசிக் இன்டர்பிரட்டர் (புரோகிராமை கம்ப்யூட்டர் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றித்தரும் இடைநிலை சாஃப்ட்வேர்) எங்களிடம் இருக்கிறது' என்று அள்ளிவிட்டனர். உண்மையில் அவர்களிடம் 'அல்டெய்ர்' ரக கம்ப்யூட்டர் ஒன்றுகூட கிடையாது.


'எம்.ஐ.டி.எஸ்-ஸின் ஹார்ட்வேர், தனது சாஃப்ட்வேர் இரண்டும் சேர்ந்து முழுமையான கம்ப்யூட்டராக இயங்கும்' என்ற ஒப்பந்தம் போட்டார் பில்கேட்ஸ். இனி இங்
கு என்ன வேலை என்று ஹார்வர்டில் இருந்து வெளியேறினார். 1975 ஏப்ரலில் 'மைக்ரோசாஃப்ட்' நிறுவனம் உருவானது.இனி எதிர்காலம் மைக்ரோ கம்ப்யூட்டருக்குத்-தான் என்பதை உணர்ந்த பில்கேட்ஸ், தன்னுடைய சாஃப்ட்வேர் உரிமையை கம்ப்யூட்டர் தயாரிக்கும் பிற நிறுவனங்களுக்கும் விற்பனை செய்தார்।

இதில் எம்.ஐ.டி.எஸ். அதிருப்தி அடைந்ததைப் பற்றியோ, கோர்ட்டுக்கு இழுத்ததைப் பற்றியோ கவலைப்படவில்லை. வெறும் 'பேசிக்' புரோகிராமோடு நிற்காமல் 'ஃபோர்ட்ரான்', 'கோபால்' ஆகிய மொழிகளுக்கும் இன்டர்பிரட்டர் உருவாக்கினார். 
அவற்றை கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களிடமே கொடுத்து கம்ப்யூட்டரோடு பொட்டலம் கட்டி விற்கும்படி ஒப்பந்தம் போட்டார். பில்கேட்ஸின் சாஃப்ட்வேர் இல்லாமல் கம்ப்-யூட்டர் முழுமையடையாது என்ற நிலையை உருவாக்கிவிட்டார்.மிகப்பெரிய கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ।பி।எம்। மைக்ரோசாஃப்ட் நிறுவனக் கதவுகளைத் தட்டியதுதான் பில்கேட்ஸின் வாழ்வில் திருப்பு-முனை! அப்படியரு சூழ்நிலையைக் கையாள்-வது எப்படி என்ற பாடத்திட்டம் உருவானது.

குட்டி கம்பெனிகள் மைக்ரோ கம்ப்யூட்டர் தயாரிக்கும்போது, தான் பின் தங்கிவிடக்கூடாது என்று தாமதமாக விழித்துக்கொண்ட ஐ।பி।எம்., நெருக்கடியான காலக்கெடுவோடு பில்கேட்ஸிடம் வந்தது.
அந்தக் காலக்கெடுவுக்குள் ஹார்ட்வேரை உருவாக்குவது சிரமமில்லை. ஆனால், அதைச் செயல்பட வைக்கும் சாஃப்ட்வேர்... அந்த சாஃப்ட்-வேரை ஹார்ட்வேருக்குப் புரியவைக்கும் ஆப-ரேட்டிங் சிஸ்டம்... இதையெல்லாம் உருவாக்குவது அத்தனை எளிதில்லை.

சாஃப்ட்வேருக்கு ஓகே சொன்ன மைக்ரோசாஃப்ட், இன்னொரு நிறுவனத்தின் ஆபரேட்டிங் சிஸ்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள சிபாரிசு செய்தது। ஆனால், அந்த இன்னொரு நிறுவனத்-துடன் ஐ।பி.எம்மால் உடன்பட முடியவில்லை. பந்து திரும்பவும் பில்கேட்ஸ் கோர்ட்டுக்கே வந்தது.

இந்தமுறை “சரி” என்றார் கேட்ஸ்। அதுதான் அவரை உலகின் முதல் பணக்காரர் ஆக்கிய வார்த்தை!

இத்தனை குறுகிய காலத்தில் 'ஆபரேட்டிங் சிஸ்ட'த்தை புதிதாக உருவாக்க முடியாது என்பது பில்கேட்ஸூக்கு தெரியும்। 'சியாட்டல் கம்ப்யூட்டர் புராடக்ட்ஸ்' (SCP) என்ற நிறுவனம் உருவாக்கியிருந்த 'க்யூடாஸ்' (QDOS) என்ற 'ஆபரேட்டிங் சிஸ்ட'த்தை, வெறும் இருபத்தைந்தாயிரம் டாலர் என்ற விலைக்கு வாங்கி-னார்। அதில் மராமத்து வேலைகள் செய்து,

தன்னுடைய கைவண்ணத்தைக் கொஞ்சம் காட்டி 'டிஸ்க் ஆபரேட்டிங் சிஸ்டம்' (ஞிளிஷி) என்ற பெயரில் ஐ।பி.எம். கம்ப்யூட்டரோடு சேர்ந்து உலகமெங்கும் பரப்பினார். 'பர்சனல் கம்ப்யூட்டர் புரட்சி' என்று சொல்லும் நிகழ்வாக இது 1981-ல் அமைந்தது. தன் தயாரிப்புதான் பவுடர் பூசி 'ஐ.பி.எம்'- கம்ப்யூட்டரோடு சக்கைபோடு போடுகிறது என்று 'சியாட்டல் கம்ப்யூட்டர் புராடக்ட்ஸ்' நிறுவனம் குய்யோ, முறையோ என்று கூவியபோது, பில்கேட்ஸ் பணத்தால் அடித்து, அந்த நிறுவனத்தின் வாயை அடைத்தார்.

உன்னால் ஒரு செயல் முடியாதபோது, யாரால் முடியுமோ அவரை உன்னுடையதாக்கு என்ற தத்துவம் அவருக்குக் கைவந்ததானது!

ஐ।பி।எம். நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தில் இருந்த சாமர்த்தியம்தான் பில்கேட்ஸிடம் கற்றுக்கொள்ள வேண்டிய அடுத்த முக்கியமான பாடம்.

என்னதான் 'ஐ।பி.எம்.' நிறுவனம் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் பாகங்களை உருவாக்கியிருந்தாலும், மற்ற யார் வேண்டுமானாலும் அதை காப்பியடிக்க முடியும். ஆனால், அதில் இயங்கும் சாஃப்ட்வேர் மைக்ரோசாஃப்டிடம் மட்டுமே இருந்தது. ஐ.பி.எம்-க்குப் போட்டியாக பல கம்பெனிகள் இறங்கியபோது அவை சாஃப்ட்வேருக்காக பில்கேட்ஸை நாடின. பிற நிறுவனங்களுக்கு விற்கக்-கூடாது என்று ஒப்பந்தம் போடாததால் 'ஐ.பி.எம்.' கையைப் பிசைந்துகொண்டு நிற்க, பில்கேட்ஸ் டாலர் மழையில் நனையத் தொடங்கினார். தூறல், மழையாகி, அதுவே அடைமழையாகக் கொட்டத் தொடங்கியது.

கீ போர்டு மூலம் மட்டுமே கட்டளைகளை உள்ளிடக்கூடிய 'டாஸ் சிஸ்ட'த்தில் 'மைக்ரோசாஃப்ட்' இருந்த நேரத்தில் 'மவுஸை' வைத்து திரையில் தெரியும் கட்டளைகளை 'க்ளிக்' செய்து செயல்படுத்தும் புதிய தளத்துக்குப் போயிருந்தது போட்டி நிறுவனமான 'ஆப்பிள்'. 1984-ல் அதன் 'மேகின்டாஷ்' கம்ப்யூட்டர் 'மவுஸ்' உடன் வெளிவந்தது.

'மேகின்டாஷ்' கம்ப்யூட்டரில் இயங்குவதற்கு ஏற்ப 'எம்.எஸ்.வேர்ட்'டை (MS word) மட்டும் உருவாக்கிக் கொடுத்தது. ஆனால், அந்த முயற்சியின்போது மவுஸால் கம்ப்யூட்டரை இயக்கும் சிஸ்டத்தின் நுணுக்கங்களை காப்பியடித்து, அதை வைத்து 'விண்டோஸ்' என்ற 'ஆபரேட்டிங் சிஸ்ட'த்தை தயாரித்ததாக 'மைக்ரோசாஃப்ட்' மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதை நீதிமன்றம் உறுதிப்படுத்தவும் செய்தது.
ஆனால், எதுபற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து நடைபோட்ட 'மைக்ரோசாஃப்ட்'டில் இருந்து, 1990-ல் 'விண்டோஸ்- 3।0' வெளியானது. அதைப் பிரபலப்படுத்த 'மைக்ரோசாஃப்ட்' தயாரித்து அளித்த 'எக்ஸெல்', 'வேர்ட்', 'பவர் பாயின்ட்' ஆகியவற்றை உள்ளடக்கிய 'மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்' மென்பொருட்கள் பெரிதும் பயன்பட்டது. 'ஆப்பிள்' கம்ப்யூட்டரில் கூட 'மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்' வெற்றிகரமாக இயங்கியது. 'விண்டோஸ்- 3.0' நல்ல வெற்றி. 1995-ல் வந்த 'விண்டோஸ் -95' அதை விடக் கூடுதல் வெற்றி. அதற்குள்ளாக அவர் உலகப் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்துக்குச் சென்றிருந்தார். 'விண்டோஸி'ன் நதிமூலம் 'ஆப்பிள்'தான் என்பது மறந்தே போயிற்று.

இப்படி 'ஆபரேட்டிங் சிஸ்டம்' பந்தயத்தில் கவனம் செலுத்திய பில்கேட்ஸ், இணையப் புரட்சியைத் தவறவிட்டார்। இணையதளங்களை மேய்வதற்கு 'நெட்ஸ்கேப் நேவிகேட்டர்' என்ற உலாவி பிரபலமாக இருந்தது. சுமார் 85 சதவிகிதம் பேர் இந்த உலாவியைப் பயன்படுத்தியே இணையத்தில் உலாவினார்கள்.

அதனால் என்ன... பில்கேட்ஸ் கையில்தான் ஒரு வெற்றி ஃபார்முலா இருக்கிறதே... உருவாக்கத் தவறினால் உருவாக்கியவனை அழுத்து என்று!'இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்' என்ற உலாவியைத் தயாரித்தார்। மக்கள் கவனத்தை இந்தப் பக்கம் திருப்ப அவர் எடுத்த ஆயுதம்... இலவசம்! 'விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்ட'த்தோடு 'இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை' இலவசமாகக் கொடுத்தார். விளைவைச் சொல்லவேண்டுமா... கொஞ்ச நாளில் 'நெட்ஸ்கேப்' பின்னுக்குத் தள்ளப்பட்டது.

'விண்டோஸ்' என்ற அரக்கனை வைத்துகொண்டு எல்லா சாஃப்ட்வேர் நிறுவனங்களையும் நசுக்குவதாக பில்கேட்ஸ் நீதிமன்றத்துக்கு இழுக்கப்பட்டார். மைக்ரோசாஃப்டின் சட்ட விரோத நடவடிக்கை நிரூபிக்கப்பட்டது. மைக்ரோசாஃப்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும். ஒன்று 'ஆபரேட்டிங் சிஸ்டம்' தயாரிக்க. மற்றது பிற சாஃப்ட்வேர்களைத் தயாரிக்க என்று நீதிமன்றம் சொன்னது. ஆனால், சாஃப்ட்வேருக்கு முன்-னால் சட்டம் கொஞ்சம் பலவீனமாகத்-தான் பேசி-யது. பிறகு, அந்தத் தண்டனை வெகுவாகக் குறைக்கப்-பட்டது.

இன்றும் சாஃப்ட்வேர் கொடி உயரத்தான் பறக்கிறது... பில்கேட்ஸ் சொல்லும் தெளிவான பாடம் இதுதான்... 'உழைக்கத் தயங்காதே... ஒரு கட்டத்துக்கு மேல் போனபிறகு உண்மையாக உழைப்பவனுடைய உழைப்பை தனதாக்கிக் கொள்ளவும் தயங்காதே...' இதுதான் சக்சஸ் ஃபார்முலா! அதற்கு வாழும் உதாரணமாக இருக்-கிறார் பில்கேட்ஸ்!

2006-ல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முழுநேர தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார்। அதன்பின் 'சேர்மன்' என்ற அளவில் மற்றவர்களை வைத்து கம்பெனியை நடத்தி, மேற்பார்வை செலுத்திவந்த பில்கேட்ஸ், தற்போது முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்। பல முனைகளிலும் இருந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சவாலைச் சந்திக்கும் நேரத்தில், இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார்। ஆனால், பில்கேட்ஸ் எனும் மனிதரும், அவர் உலக மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கமும் வரலாற்றின் பக்கங்களில் நிரந்தரமாகப் பொறிக்கப்பட்டிருக்கும், சாஃப்ட்வேர் சாம்ராஜ்ஜியத்தின் நிகரில்லாச் சக்கரவர்த்தி என்ற அடையாளத்தோடு.


Shared from friend blog

Sunday, August 25, 2013

பெர்றோர்களே வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுங்கள்

இன்றைய நவீன உலகில், கல்வி கட்டாயமாகிவிட்டது. அதுவும், முன்பெல்லாம் ஏதாவது ஒரு வேலையில் சேர வேண்டுமெனில், ஓரளவு எழுத்தறிவு பெற்றிருந்தால் போதும். இந்நிலை இன்று மாறிவிட்டது. மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை உயர்வு காரணமாக, வேலைவாய்ப்பு என்பது சுமையாக மாறி உள்ளது.

இன்றைய மாணவர்கள் கம்ப்யூட்டர் முதல் விவசாயம் வரை, அனைத்து துறைகளிலும் சாதிக்க தயாராக உள்ளனர். பாடப்புத்தக அறிவு மட்டுமல்லாமல், கூடுதல் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் விரும்புகின்றனர். 

இவ்வாறு சாதிக்க துடிக்கும் மாணவர்களை வழி நடத்துவது; வாய்ப்புகளை உருவாக்கி தருவதுதான் பெற்றோர் கடமை. குடும்ப நிலை எப்படி அமைந்திருந்தாலும், குழந்தைகளை பொறுத்தவரை பெற்றோர் அன்பு செலுத்த வேண்டும். படிப்பதற்கு ஏற்ற அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

பெற்றோரிடமிருந்து அன்பு, ஆதரவு, அரவணைப்பு கிடைக்காத குழந்தைகள், அதற்காக ஏங்கி தவிப்பதோடு, தனிமையில் வாடி, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எதிர்கால லட்சியத்தை தொலைத்து விடுகின்றனர். குழந்தைகளின் மனநிலையை புரிந்து கொள்ளாத பெற்றோர், அவர்கள் படிக்க முடியாமல் பின்னடைவு ஏற்பட்டிருப்பதற்கு காரணம், சரியாக கற்றுக்கொடுக்காத ஆசிரியர்கள் தான் என்று தவறாக அர்த்தம் புரிந்து கொள்கின்றனர்.

யாருடைய தவறு?

இன்றைய சூழலில், சில குடும்பங்களில் உள்ள பெற்றோர், தங்களது வேலையை பார்ப்பதற்கே முன்னுரிமை தருகின்றனர். குழந்தை தனிமைப்படுத்தப்படுகின்றனர். குழந்தைகளின் முன், பெற்றோர்கள் சண்டையிடுவதால், இதன் தாக்கமும் குழந்தைகள் மீது திரும்புகிறது. இதைத் தவிர்த்து விட்டு, குழந்தைகளின் படிப்புக்கு, அவர்களது விருப்பத்துக்கு ஏற்ப பெற்றோர் செயல்பட்டால், அனைத்து குழந்தைகளுமே சாதிப்பர்.

வாழ்வின் சுவையறிவோம்

சமீபத்தில் எனது சொந்த கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவுக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா நான்கு நாள் நடைபெற்றது. எப்போதுமே கிராமத்தில் நடைபெறும் விழாவுக்கு மும்பை, சென்னை என பல ஊர்களுக்கும் பிழைப்புத் தேடிச் சென்றவர்கள் அனைவரும் பறவைகள் போல வந்து கூடி விடுவார்கள். வாழ்க்கையில் தினசரி பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, மனிதர்களுக்குச் சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. அந்த ஓய்வு சொந்த ஊரில் என்றால் இரட்டிப்பு சந்தோஷம். அங்கிருக்கும் நாள்களில் சாப்பிட வேண்டியது. நண்பர்கள் உறவினர்களை சந்தித்துப் பேச வேண்டியது. கிணற்றுக்குச் சென்று நீச்சல் அடித்து குளிப்பது என நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தி உற்சாகமாக இருப்பார்கள்.

வாழ்க்கையில் இதுபோன்ற சந்தோஷம் இல்லாவிட்டால், மன உளைச்சல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும் என மன நல நிபுணர்களும் கூறுகிறார்கள் எனவே, நீங்களும் உங்களது சொந்த கிராமத்துக்கு அவ்வப்போது குடும்பத்துடன் சென்று வாழ்வின் ஒரு பகுதியை ருசிக்கத் தவறாதீர்கள்.

நான் சென்றபோது எங்கள் ஊரில் நடைபெற்ற நான்கு நாள் திருவிழாவில் ஒரு நாள் இரவு இன்னிசை பட்டிமன்றம் நடைபெற்றது. அம்பாள் வீதி வலம் வந்தபின்னர் நள்ளிரவு சுமார் 12 மணிக்கு பட்டிமன்றம் தொடங்கியது. ஆண், பெண் என சுமார் 200 பேர் பட்டிமன்றத்தை ரசிக்க வந்திருந்தார்கள். பட்டிமன்ற பேச்சாளர்கள் நகைச்சுவையாக பேசும்போது, ஆண், பெண் வித்தியாசமின்றி, அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். முழுமையாக ரசித்தார்கள். படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை பட்டிமன்றத்தை மிகவும் ரசித்தார்கள். பட்டிமன்ற நடுவர், "ஆஹா இதுவல்லவோ ரசனை. இப்படிப்பட்ட ரசிகர்கள்தான் எங்களுக்கு வேண்டும். உங்கள் ரசனைக்கும், ரசிப்புத் தன்மைக்கும் தலைவணங்குகிறோம்' என்றார். இது கிராமத்தை பொறுத்தவரை இயல்பான ஒன்றுதான் என்றாலும், அனைத்து தரப்பினரும் பட்டிமன்றத்தைக் கைதட்ட வேண்டிய நேரத்தில் கைதட்டி ரசித்தது சற்று வித்தியாசமான காட்சிதான். இவர்கள் வாழ்க்கையை முழுமையாக ரசிக்கத் தெரிந்தவர்கள். துக்கம் வந்தாலும், தும்மல் வந்தாலும் அடக்க மாட்டார்கள்.

இதுபோலத்தான் ஒருமுறை, ஒரு நண்பரைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர் தனது பேரக் குழந்தைகளுடன், குழந்தையாக மாறி விளையாடிக் கொண்டிருந்தார். அவர் பெரிய தொழிலதிபர். அவரிடம், "குழந்தைகளுடன் விளையாடுகிறீர்களே' எனக் கேட்டேன். "வாழ்க்கையில் பல பகுதி உள்ளது. பள்ளிப் பருவம். அப்போது பாடங்களை முழு ஈடுபாட்டுடன் ரசித்துப் படிக்க வேண்டும். பின்னர், வேலைக்குச் செல்லும் பருவம். பொறுப்பு அதிகரித்து விடுகிறது. எனினும், பார்க்கும் வேலையைச் ரசித்து செய்தால் முன்னேறலாம். பின்னர், திருமணம் செய்து விடுகிறோம். மனைவியுடன் சுற்றுலா சென்று ரசிக்க வேண்டும்.

குழந்தைகள் பிறந்ததும் அவர்களின் மழலை மொழியை ரசிக்க வேண்டும். அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து பிறக்கும் பேரன் பேத்திகளுடன் விளையாடினால்தான் வாழ்க்கை முழுமை அடையும். இதில் எந்த கட்டத்திலும் கௌவரம் பார்த்தல் நாம் வாழ்க்கையை ரசிக்கத் தவற விட்டவர்களாகி விடுகிறோம்' என நண்பர் கூறினார்.

அது உண்மைதான். பல இடங்களில் பல சம்பவங்களைப் பார்க்கிறோம். திரையரங்கில் நகைச்சுவைக்காட்சி வந்தால் சும்மா அமர்ந்திருப்பவர்கள் பலர் உள்ளனர். திருமண விழா உள்ளிட்ட விழாக்களில் நண்பர்களுடன் சிரித்துப் பேசினால் கௌரவம் பாதிக்கும் என லேசாகப் புன்கைத்து விட்டு செல்பவர்கள் பலர் உள்ளனர். "நான் பெரிய மனுஷன். நான் பெரிய பதவியில் இருக்கிறேன். நான் வாய்விட்டுச் சிரித்தால் பலர் தவறாக நினைப்பார்கள். அது கௌரவக் குறைச்சலாக இருக்கும்' என பலர் எண்ணுவதுண்டு.

பாவம். அவர்கள் வாழ்க்கையை ரசிக்கத் தெரியாதவர்கள். ஆனால். வாய்விட்டுச் சிரிப்பவர்களைப் பைத்தியம் மாதிரி இருக்கிறான் என நம்மில் பலரும் கூறுவதுண்டு. இவர்களுக்குப் பயந்து கொண்டு பலர் தங்களது ரசிப்புத் தன்மையை வெளிக் காட்டுவதில்லை.

ஆக, நம்மிடையை சிரித்தால் கேலி செய்பவர்கள் இருக்கிறார்கள். நமது ரசனையை வெளிக்காட்டினால் ஒரு மாதிரியாகப் பார்ப்பவர்கள் உள்ளனர். இந்த நிலை மாற வேண்டும்.

வாழ்க்கை மற்றும் அதில் நடைபெறும் சம்பவங்கள் நம்மைப் பாதித்தால், அவை எந்த மாதிரியான பாதிப்பு எனபதை சற்றேனும் வெளிப்படுத்த வேண்டும். நல்ல ரசிகராக இருந்து வாழ்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் ரசித்தால்தான் நல்ல ஆரோக்கியத்தையும், பிறந்த பயனையும் அடையலாம். வாழ்க்கை என்னும் விருந்தில் உங்கள் பங்குக்கான உணவை மகிழ்வோடு ரசித்து உண்ணுங்கள். வாழ்வின் சுவையை இழந்துவிடாதீர்கள்.

புன்னகை எனும் தொற்றுநோய்

எந்த உயிரினத்திற்கும் இல்லாத அழகான முக வடிவமைப்பை இறைவன் மனித இனத்திற்கு அளித்துள்ளான். அந்த முகத்திற்கு மேலும் மெருகூட்டி பொலிவாக்க புன்னகை என்னும் நகையை அணிந்து கொள்ள வழி செய்துள்ளான். ஆனால், மனிதர்களிடையே காணப்படும் போட்டி, பொறாமை, உறவுகளிடையே காணப்படும் வெறுப்புணர்வு ஆகியவை அந்தப் புன்னகையை மனிதர்களிடமிருந்து காணாமல் போகச் செய்கிறது. ஓவியர் லியொனார்டோ டாவின்சியால் வரையப்பட்ட "மோனாலிசா' ஓவியம் புன்னகையின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த ஓவியம்.

எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் பெண்ணை "புன்னகை அரசி' என்றும், ஆணை "புன்னகை மன்னன்' என்றும் கூறி நாம் புன்னகைக்கு மகுடம் சூட்டி மகிழ்கிறோம்.

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் காட்டும் புன்னகை அவர்களின் எதிர்காலத்திற்கு அஸ்திவாரமாகிறது. பிள்ளைகள் பெற்றோர்களிடம் காட்டும் புன்னகை, வாழ்க்கையை அர்த்தமாக்குகிறது. மருத்துவர் நோயாளிகளிடம் காட்டும் புன்னகை நம்பிக்கைக் கீற்றாக அமைகிறது. வாடிக்கையாளர்களிடம் கடைக்காரர்கள் காட்டும் புன்னகை வியாபாரத்தை அதிகரிக்கிறது. அதிகாரிகள் அலுவலர்களிடம் காட்டும் புன்னகை ஒற்றுமையை அளிக்கிறது. அரசியல் தலைவர்கள் மக்களிடம் காட்டும் புன்னகை ஜனநாயகத்திற்கு அடித்தளமாகிறது.

"புன்னகை எந்தப் பிரச்னையையும் நேராக்கும் வளைவுக் கோடு' என்பார்கள். ஒரு நொடிப் பொழுதில் உள்ளத்தில் எழும் மகிழ் உணர்வு புன்னகையாக வெளிப்படுகிறது. நமது மகிழ்ச்சியை இயற்கையாக பிரதிபலிக்கும் ஒரு சக்தியாக புன்னகை விளங்குகிறது. புன்னகை நமது உடலையும் உள்ளத்தையும் இணைத்து மூளைக்குத் தகவல்களை அனுப்பி நம்மை சஞ்சலமற்ற மனதுடன் சந்தோஷத்துடன் இருக்க உதவுகிறது. நமது மூளையின் புறப்பகுதியின் இடது பாகம் நமது சந்தோஷங்களைப் பதிவு செய்வதற்காகவே உள்ளது. தலைப் பகுதியிலுள்ள தசைகள் மூளையிலிருந்து வரும் சைகையை தாங்கி முகத்தில் உள்ள தசைகளை இயங்கச் செய்து உதட்டில் புன்னகையை தவழச் செய்து உடலை பரவசமாக்குகிறது. நாம் சோகமாக இருக்கும்போது, நாம் முன்பு செய்த நல்ல விஷயங்களை எண்ணிப் பார்த்து புன்னகைத்தால் அது நமது உடம்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தி மீண்டும் சந்தோஷத்தை ஏற்படுத்தும்.

நாம் சந்தோஷமாக இருக்கும்போது நமது உடம்பு நல்ல எண்ண அலைகளை வெளிப்படுத்தி மனதை தூய்மையாக்குகிறது. நாம் வீசும் ஒரு புன்முறுவல் மற்றவர்களையும் புன்னகைக்கச் செய்யும். அதாவது, நாம் சிரித்தால், நம்மைப் பார்த்து உலகம் சிரிக்கும் என்பார்கள். புன்னகை ஒரு தொற்று நோய். நம்மைச் சுற்றி வினோதமான, கோமாளித்தனமான நிகழ்வுகள் நடக்கும் போது நம்மால் புன்னகைக்காமல் இருக்க முடியாது. நமது நண்பர்களையோ உறவினர்களையோ சந்திக்கும்போது அவர்கள் வீசும் புன்னகையால் நம்மை அறியாமைலே நாம் புத்துணர்வு பெறுவோம். அதற்கு மாறாக முகத்தைச் சுளித்து, கடுமையான பார்வையைக் காட்டினாலோ அதனால் எதிர்வினைகள்தான் ஏற்படும்.

நமது மனம் உற்சாகத்திலிருக்கும்போது, உதடு புன்னகைக்கிறது. புன்னகை மனத்தளர்ச்சியை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைக்கிறது. நாம் புன்னகைக்கும்போது நமது உடம்பிலிருந்து எண்டார்பின், செரோடினின் போன்ற இயற்கையான வலி நிவாரணிகள் சுரக்கின்றன.

உடல்வலியைக் கட்டுபடுத்த இறைவன் நமக்கு அளித்த அருமருந்து புன்னகை. அது மன உளைச்சலையும் சோர்வையும் உடல்வலியையும் போக்கும். சிறு புன்னகைதான் பெரும் சிரிப்பை வரவழைக்கும். புன்னகை இல்லாமல் சிரிப்பில்லை. சந்தோஷ சிரிப்பு நம் உடல் நலனை சீராக்குவதுடன், ரத்த ஓட்டத்தையும் சீராக்கி, சீரான தூக்கத்தையும் அளிக்கும்.
எப்போதும் புன்முறுவல் பூத்தவாறு பிறருடன் அன்பாக பழகுபவருக்கு உடல்நலப் பாதிப்பு எப்போதும் ஏற்படுவதில்லை, அதிக அளவில் புன்முறுவல் பூத்து உற்சாகத்துடன் உழைப்பவர்கள் மற்றவர்களை விட ஏழு ஆண்டுகள் இளமையுடன் இருப்பார்கள் என தெரிவிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

நமது குறுநகை பிறருடைய கவனத்தை இழுக்கும் திறனுள்ளதாக அமையும். அதனால்தான் புகைப்படக் கலைஞர்கள் புகைப்படம் எடுக்கும்போது நம்மைப் புன்னகைக்கச் சொல்கிறார்கள்?

வேலைப் பளு காரணமாகவோ மன வருத்தம் ஏற்படும்போதோ, அல்லது பிறர் நம்மை வருந்துமாறு பேசினாலோ ஒரு சிறுநகை உதிர்த்தால் மனம் லேசாகி விடும். ஏதேனும் ஒன்றை எதிர்நோக்கியிருக்கும் பேராவல் ஏற்பட்டு அது கிடைக்காமல் போனால் மனம் விசாரம் கொள்ளாமல் இருக்கவும் புன்னகை உதவுகிறது. ஆபத்து வருமோ என்ற கவலையும் மனதிலிருந்து மறைகிறது. பிறரைக் கவர வேண்டுமானால் நமக்கு உயர்ரக ஆடைகளும், அலங்காரங்களும் தேவையில்லை. உதட்டில் புன்னகையை அணிந்தாலோ, அது முன்பின் தெரியாதவர்களையும், ஏன், எதிரியைக்கூட நண்பராக்கும் பாச வலையாகும்.

நாம் புதியதாக வேலை தேடிச் சென்றாலோ அல்லது பணி நிமித்தம் மற்றவர்களை பார்க்கச் போனாலோ நல்ல உடையுடன் சேர்த்து புன்னகையையும் அணிந்து செல்ல வேண்டும். நல்ல உடை மட்டும் ஒருவனைச் சிறந்தவனாகக் காட்டாது. சிடுசிடுப்பான முகத்துடன் உடை பகட்டாக இருந்தால் எந்தவிதமான பயனும் இல்லை. எனவே மற்றவர்கள் மனதில் நாம் பதிய வேண்டுமானால் அழகாக இயற்கையான முகிழ்நகையும் நம்முடன் இருக்க வேண்டும்.

புன்னகையை யாருக்கு வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் வழங்கலாம். விலையில்லா புன்னகையால் விளையும் பலன்களோ விலைமதிப்பற்றவை. புன்னகை - நல்லன எல்லாம் தரும்.

துன்பத்தைப் பகிர்வோம்

கூடிவாழ்ந்தால் கோடி நன்மை' என்பார்கள். ஆனால், இன்று கூடிவாழ்வதற்கே வழியில்லாமல் பெருநகரங்கள் சுருங்கிவிட்டன. ஒரு குடும்பத்தில் அண்ணன், தம்பி அனைவரும் பெற்றோருடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தால் இன்ப, துன்பங்களைப் பகிர்ந்து கொள்வதுடன், பொருளாதார ரீதியாகவும் நன்மை கிடைக்கும்.

இது ஒருபுறம் இருந்தாலும், நீண்ட தெருக்களில் சீரான வரிசையில் இருந்த தனித்தனி வீடுகள், திண்ணை, முற்றம் என பழைமையைப் பறைசாற்றிய வீடுகளில் வசிக்கும் பெண்கள் மாலை நேரங்களில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் அமர்ந்து அளவளாவியதும் தெருவின் கடைக்கோடியில் உள்ள கோயில் வாசலில் ஆண்கள் கூடி வீட்டு விஷயங்களை அசைபோட்டதும் அந்தக்காலம். தற்போது எங்கு பார்த்தாலும் அடுக்குமாடிக் குடியிருப்புகளாக நிரம்பிவருகின்றன.

தனித்தனி வீடுகளாக இருந்தபோது அக்கம்பக்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அந்த தெருவைச் சேர்ந்தவர்கள்தான் முன்நிற்பார்கள். அதனால்தான் திருமண அழைப்பிதழ்களில்கூட "சுற்றமும் நட்பும் சூழ வாழ்த்துங்கள்' என்று அச்சடிக்கப்பட்டது. ஆனால், இன்று வேலை நிமித்தமாக பெரும்பாலானோர் பெருநகரங்களில் வசிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளதால், நகரங்களில் இடப் பற்றாக்குறையினால் போதிய காற்று, வெளிச்சம் இல்லாத அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்க வேண்டியுள்ளது.

இதுபோன்று குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலான குழந்தைகளை ஓய்வு நேரத்தில் விளையாடக்கூட அனுமதிக்காமல் அறையில் போட்டு அடைத்துவிடுகின்றனர். இதனால் அந்தக் குழந்தைகள் உடல் ரீதியான நோய்களுக்கு உள்ளாகின்றனர். மேலும், அங்கு வசிப்போர் அக்கம்பக்கத்து வீடுகளில் என்ன நடக்கிறது என்றுகூட தெரியாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்.

காய்கறி வாங்குவதற்குக்கூட கீழே இறங்கி வருவது கிடையாது. மாடியிலிருந்து கயிற்றில் கூடையை கட்டி இறக்கிவிட்டு, அதில் பணத்தை போட்டு அனுப்புவார்கள். பின்னர் காய்கறியை மேலே இழுத்துக் கொள்வார்கள்.

இதைவிட ஒரு கொடுமை, அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகங்களில் உள்ள ஒரு வீட்டில் துக்க நிகழ்வு நடைபெற்றால், அந்த வீட்டின் உறவினர்கள் அருகில் இருப்பவர்களுக்கு இடையூறாக துக்கத்தை (அழுகையை) வெளிப்படுத்தக் கூடாது. விசேஷ நாள்களில் தண்ணீரைச் சிக்கனமாகச் செலவிட வேண்டும் என்பதுபோன்ற பல்வேறு கட்டுப்பாடுகளும் ஒருசில குடியிருப்புகளில் உண்டு. 

தங்களின் நாகரிக வாழ்க்கைத் தரத்துக்கு ஏற்றாற்போல் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகளை வாடகைக்கோ அல்லது அடிமனை விலையில்லாமல் பல லட்சங்களை கொடுத்து வாங்கும் வீடுகளில் வசதிகள் குறைவாகதான் இருக்கும். பெயரளவுக்கு வேண்டுமானால் "டூ பெட்ரூம்' "த்ரீ பெட்ரூம்' என்று கூறிக்கொண்டாலும், உயிருக்கு ஆபத்து என்று வரும்போது உயிரைக் காப்பாற்றிக் கொள்வது என்பது சிரமம்தான். இதற்கு உதாரணமாக, பல்வேறு சம்பவங்களை பட்டியலிட்டுச் சொல்லலாம். அங்கு வசிப்பவர்களைப் பார்க்கும்போது இரும்புக் கம்பிக்குள் தங்களை அடைத்துக் கொண்டு, தண்டனையை அனுபவிக்கும் சிறைச்சாலை போன்றுதான் காட்சியளிக்கிறது.

அண்மையில், நண்பர் ஒருவரின் தந்தை மரணமடைந்த செய்தி அறிந்து, அவரது வீட்டுக்குச் செல்ல திட்டமிட்டேன். அவர் வசித்ததோ நகரின் முக்கியப் பகுதியில் மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் அடங்கிய பிரம்மாண்டமான நகர். அங்கே சென்றதும் நம்மைச் சுற்றி, எங்கு பார்த்தாலும் வானுயர்ந்த நிலையில் அடுக்குமாடி வீடுகள், தனித்தனியாக பங்களாக்களும் இருந்தன. அங்கிருந்த சிலரிடம் (காவலாளி உள்பட) நண்பரின் பெயரை கூறி வீடு எங்கிருக்கிறது என்று கேட்டால் யாருக்கும் தெரியவில்லை. தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. ஏனெனில், அவரவர் தங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாத இயந்திர வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்பிறகு அங்கு பணிபுரியும் (துப்புரவுத் தொழிலாளி) பெண்ணிடம் கேட்டவுடன், அவர்,  வீட்டின் முகவரியைத்  தெரிவித்தார். நான் சென்று, நண்பரின் தந்தைக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு வெளியே வந்தபொழுதுதான் தெரிந்தது, இறந்தவரின் உறவினர்களில் யாரும் துக்கத்தை வெளிப்படுத்த முடியாமல் மனம் இறுகிக் காணப்பட்டதற்கு காரணம், அந்தக் குடியிருப்பின் கட்டுப்பாடு என்பது. மேலும், 3வது மாடியில் உள்ள 8 வீடுகளில் நண்பர் வீட்டைத் தவிர, மற்ற 7 பேரின் வீட்டில் உள்ளவர்களுக்கு நண்பரின் தந்தை இறந்த செய்தி வெகுநேரம் தெரியவில்லை, ஏன்,  மூன்றடி தொலைவில் உள்ள எதிர்வீட்டுக்குக் கூடத் தெரியவில்லை என்பதுதான் வேதனை. நண்பருடன் அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியர்கள்தான் வந்து முன்னின்று தேவையான பணிகளைச் செய்தனர்.

இதுபோன்ற நேரத்தில் அருகில் வசிப்பவர்கள் மனிதநேயத்துடன் துக்கங்களைப் பகிர்ந்து கொள்வதுடன், அவர்களுக்கு உதவியாக இருந்தால்தான் புதிய உறவுகள் தோன்றுவதுடன் நட்பும் பலப்படும்.

ஆசிரியர்கள் அச்சம் தவிருமா?

முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது.

தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அண்மைக்காலமாக மாணவ-மாணவிகளுக்கு அஞ்சும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கண்ணுக்குத் தெரிந்து தவறுகள் செய்யும் மாணவர்களை நேரடியாகக் கூப்பிட்டுக் கண்டிக்க முடியவில்லை. அப்படியே மாணவர்களின் நலன்கருதி கண்டிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களின் நிகழ்கால வாழ்வு அதோகதி நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. நான்காம் வகுப்பே படிக்கும் மாணவிக்குக்கூட இன்று கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.

ஆசிரியர்கள் தம் சொல்லாலும் செயலாலும் மாணவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக எப்பொழுதிலும் எத்தகைய வழியிலும் துன்பம் தரக்கூடாது என்று இக்கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் இரும்புக்கரம் கொண்டு வலியுறுத்துகின்றது. இதன் விளைவு என்ன தெரியுமா?

இளைய பாரதமாகத் திகழும் மாணவ சமுதாயம் திசைமாறிச் செல்வதைத் தடுக்க வழியின்றி ஆசிரியர்கள் கைகளைப் பிசைந்துகொண்டு உணர்வின்றி வெறுமனே கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக மாறிப்போய்விட்டனர்.நிதானம் தவறி வெற்று உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தம் இன்னுயிரைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தம்மை மாய்த்துக்கொள்ள நினைக்கும் மாணவச்சமூகத்தைத் திருத்தி நல் வழிக்காட்டுவது ஆசிரியர்களின்றி வேறு யார்?

அச்சு, காட்சி ஊடகங்கள், வளர்ந்து வரும் நவீனத் தொழில் நுட்பங்களான செல்பேசிகள், இணையங்கள், தெருவெங்கும் திறந்து கிடக்கும் மதுபானக்கடைகள், மலிவான போதைப்பொருள்கள், நலிவடைந்து போன மனித மதிப்புகள், அதிநுகர்வுக் கலாச்சார நோக்குகள் மற்றும் போக்குகள் போன்றவை பிஞ்சு உள்ளங்களைப் பெருமளவில் நஞ்சாக்கி வருவது கண் கூடு.

மேலும்,உடல் கவர்ச்சி மற்றும் எதிர்பால் ஈர்ப்புக் காரணமாகப் பதின்பருவ வயதினரிடையே இயல்பாக எழும் அன்பொழுக்கம் தவறாகத் திரிந்து காதலெனக் கூறப்பட்டு வகுப்பறைக்குள்ளும் வெளியேயும் சொல்ல நா கூசுமளவிற்குத் தகாத முறைகளில் நடைபெற்று வருவதை ஆசிரியர்கள் கண்டும் காணாமலும் ஒதுங்கிச்செல்லவே முற்படுகின்றனர்.இந்த இழிநிலைக்குக் காரணம் எது?

மாணவர்களுக்கு இரண்டாம் பெற்றோராக விளங்கும் ஆசிரியரின் கைக்கு விலங்கையும் வாய்க்குப் பூட்டையும் போடும் சட்டமா? பெற்றோரின் மாறிப்போன மனப்போக்கா? சமுதாயத்தின் ஒருதலைப்பட்சமான குறுகிய பார்வையா? பரபரப்பையும் விறுவிறுப்பையும் மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்படும் ஊடகங்களின் சமூக அக்கறையின்மையா? மாணவரிடையே மங்கிப்போன குருபக்தியா? இவ்வாறு ஒரு பெரும்விவாதமே நிகழ்த்தவியலும். தப்பித்தவறி தாய் உள்ளத்துடன் குடும்பநிலை மற்றும் வருங்காலம் குறித்து நல்லறிவு புகட்டத் துணியும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு மிஞ்சுவது மிரட்டல்கள் மட்டுமே. ஆம். காதல்வயப்பட்ட அப்பாவிப் பள்ளிச்சிறுமி வெளிப்படையாகவே ஆசிரியர்கள் மீது அவதூறுகளைப் பரப்பி அவர்கள் வாழ்க்கையையே நாசப்படுத்திவிடும் கொடுமையை என்னவென்பது?

ஒரு சார்பான தீர்ப்பினாலும் முடிவினாலும் அவ்வாசிரியரின் நல்லதோர் குடும்பம் வீண்பழியால் சிதைந்து சின்னாபின்னமாவது என்பது வெளிச்சத்திற்கு வராத பேருண்மையாகும்.இத்தகைய குரலற்றவர்களின் குரலைச் சற்றேனும் காதுகொடுத்து கேட்க இச்சமூகம் ஏனோ முன்வருவதில்லை. இருதரப்பு நியாயங்களை இனியாவது செவிமடுக்க முன்வருதல் எல்லோருக்கும் நல்லது.

அதுபோல,தாம் பணியாற்றும் பள்ளியை முழுத் தேர்ச்சி பெறவைக்கவும், தேர்ச்சிக்குரிய குறைந்த மதிப்பெண்கள் அடைவை எட்டாத மாணவ, மாணவியர்மீது தனிக்கவனம் செலுத்தி,சிறப்பு வகுப்புகள் நடத்தித் தேர்ச்சியுற வைக்கவும் முயலும் ஆற்றல்மிக்க ஆசிரிய, ஆசிரியைகள் படும்பாடுகள் சொல்லிமாளாதவை. மென்மையாகக்கூட மாணவ, மாணவிகளைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ இயலவில்லை. ஒருபக்கம் அரசு மற்றும் அதிகாரிகளின் கெடுபிடிகள் மற்றும் கிடுக்கிப்பிடிகள். மறுபக்கம் சொல்பேச்சுக்கேளாத அடங்காப்பிள்ளைகள். இதைத்தவிர, வேறொருபக்கம் நன்குத் திட்டமிடப்பட்டு வேலைக்கு உலைவைக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் அவப்பெயர்கள். அதிகம் போனால் பளார் அறைகள், கத்திக்குத்துகள், பாலியல் வன்கொடுமைப் புனைவுகள் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

தவிர, அண்மைக்காலமாக மாணவ, மாணவியரிடையே சில விரும்பத்தகாத நடவடிக்கைகள் பெருகிக் கிடப்பதை நன்கு அறிய முடிகின்றது. மேலும் சமூகத் தீங்குமிக்கப் பல்வேறு தகாத நடவடிக்கைகளும் மலிந்துள்ளன. கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளின்போதே தவறு செய்யும் மாணவனைக்கண்டு உண்மையில் ஆசிரியர்கள் கண்டிக்கத் திராணியின்றி அஞ்சி வருந்தும் அவலநிலைதான் எதிர்காலச் சிற்பிகளை உருவாக்கும் வகுப்பறை நடப்பாக இருக்கின்றது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த வகுப்பறைகளும் மாணாக்கர்களும் இவ்வாறு உள்ளனர் என்று பொதுவாகக் குற்றம் சாட்டுவது இங்கு நோக்கமல்ல. நல்ல நெல்மணிகளாய் மாணவக் கண்மணிகள் பலர் பல்வேறிடங்களில் அறியக்கிடைக்கின்றனர் என்பது மறுப்பதற்கில்லை. எனினும், பதர்கள், முட்செடிகள், நச்சுக்களைகள் போலுள்ள தீயோரை அடையாளம் காட்டுவதென்பது சமுதாயக் கடமையாகும். திசைமாறிப் பயணித்துக்கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்தை மீளவும் நல்வழிக்குக் கொணர பெற்றோர், சமுதாயம், அரசாங்கம், ஊடகங்கள் ஆகியவை ஆசிரியர்களுடன் கைகோர்ப்பது சாலச்சிறந்தது. ஆசிரிய சமுதாயத்தைத் தவறாகச் சித்தரித்து கேலி, கிண்டல் செய்து இழிவாகக் கருதும் சமுதாய பொது மனநிலை நிச்சயம் மாற்றம் பெற வைக்க வேண்டியது. அதற்கு ஆசிரியரின் தனிப்பட்ட நல்லொழுக்கப்பண்பும் மட்டுமல்லாது காலந்தோறும் சமுதாயத்திற்கு உதவக்கூடியவகையில் அமைந்த விழுமிய குணங்களும் முன்மாதிரி நடத்தைகளும் இன்றியமையாதவை.

ஆசிரியர்-மாணவர் உறவென்பது ஆண்டான்-அடிமை உறவல்ல.அதுவொரு நல்ல கருத்துப் பரிமாற்றம் உள்ளடக்கிய நட்புறவு.அதைப் போற்றிப் பேணிக்காத்தல் என்பது இருவரின் கடமையாகும். அப்போதுதான் வலியின்றிச் சுதந்திரமாக கல்வி மலரும். நாடும் நலமுடனும் வளமுடனும் ஒளிவீசித் திகழும்.

ஆதலால் காதல் செய்வீர்: தாமினியின் மனமாற்றத்துக்குக் காரணம்?

சின்னஞ் சிறுவர்களிடமும் வாழ்க்கை என்ற புரிதலுக்குள் புகுந்துவிடாத இளைஞர்களிடமும் காதலுக்காக உயிரையே கொடுப்பது போன்ற எண்ணத்தைக் கொண்டு சேர்த்து திசை திருப்பிய பெருமை சினிமாவைச் சேரும். இந்தக் காதல் சிந்தனைகளால் வருங்கால வளமான வாழ்க்கையை  இழந்தவர்கள் எத்தனையோ பேர். படிக்கும் வயதில் படிப்பை மறந்து சிந்தனையை முழுவதும் காதல் எண்ணங்களில் திளைக்கவிட்டு, வாழ்க்கையைக் கோட்டைவிடும் எத்தனையோ பேருக்கு தூண்டில் போட்டு இழுத்ததும் அதே திரைக்கதைகளே! 

இந்தச் சூழ்நிலையில், திரைக்கு வந்து அதே இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் ஆதலினால் காதல் செய்வீர். காதலுக்கும் காமத்துக்கும் வேறுபாடு தெரியாத இளைய சமுதாயம், காதல் என்ற போர்வையில் வளமான வாழ்க்கையைத் தொலைத்துத் தவிப்பதை இதே சினிமாதான் வெளிப்படுத்துகிறது. இந்தப் படமே, காதல் கதைகளால் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சினிமா வாரிசின் வாழ்க்கையை நேராக்கி இருக்கிறது என்கிறார்கள் சினிமாவுலகில்!

 
காதல் விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட இயக்குநர் சேரனின் மகள் தாமினி, ஆதலால் காதல் செய்வீர் படம் பார்த்து மனம் திருந்தி பெற்றோருடன் செல்ல ஒப்புக் கொண்டாராம். இவ்வாறு தகவல் வெளியாகி சினிமா மீதான மறுபார்வையை வெளிப்படுத்தியுள்ளது. 

நடனக் கலைஞர் சந்துருவை இயக்குநர் சேரனின் மகள் காதலித்ததும், அதற்கு துவக்கத்தில் ஆதரவு அளித்திருந்த சேரன், பின்னர் பின்வாங்கியதும் ஊடகங்களில் வெளியானது. இந்நிலையில், சேரன் மகள் தாமினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தன் காதலன் சந்துருவை கொலை செய்ய தன் தந்தை சேரன் முயற்சி செய்வதாக புகார் கூறியிருந்தார்.

இதை அடுத்து சேரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், இதற்கு சில நாள் முன்பு காதலன் சந்துரு மீதே தாமினி புகார் அளித்திருந்தார். அதில் சந்துரு தனக்கு தொந்தரவு தருவதாகக் குறிப்பிட்டு இருந்தார். இதன் அடிப்படையில் சந்துரு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி 2 வாரங்கள் குடும்பத்தினரைப் பிரிந்து தலைமை ஆசிரியர் வீட்டில் தாமினி வைக்கப்பட்டார். பின்னர் மனம் மாறி தந்தை சேரனுடன் வீட்டுக்குத் திரும்புவதாகக் கூறினார் தாமினி. இதன் மூலம் சேரன் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது. 

இந்நிலையில், தாமினி தலைமை ஆசிரியர் வீட்டில் தங்கியிருந்தபோது, 'ஆதலால் காதல் செய்வீர்' படத்தை அவர் பார்த்ததாகவும், அதன் பின்னர் தன் தவறு உணர்ந்து மனம் திருந்திய தாமினி, பெற்றோருடன் செல்வதற்கு ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.

1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும்.

2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம்
" இதெல்லாம் எங்க உறுப்படப்போது? " என்பது
போன்றே இருக்கும்.

3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம் , அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்குவார்கள்.உங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள்.

4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும்
ரசிப்பீர்கள்.

5) உடல் பருமன் ஏறாமல் , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது.

6) தினமும் shave செய்யாவிட்டால் , வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள்.

7) ஞாயிற்று கிழமைகளில் விளையாடும் கிரிக்கெட் மேட்ச் க்கு உங்களை கூப்பிட உங்கள் தெரு இளவட்டங்கள் மறந்து விடுவார்கள்.

உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ , சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம் என்பார்கள்?மாமாக்களோ உன் career பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க என்பார்கள்?

9) இந்த உலகை வெல்வதற்கான அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம் நிறைந்திருக்கும்.ஆனால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும்.

10) இந்த உலகைப் பற்றி உங்களுக்கு பள்ளிகளில் என்னக் கற்பிக்கப் பட்டதோ , அது அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்கும்.

11) வேலைக்காக எழுதும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் கூட , வேலை கிடைத்திருக்காது.

12) சிபாரிசு என்றவுடன் வேலை கிடைக்கும்.இங்கு எல்லாமே அரசியல் தான் என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.

13) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள்.காதலை விட நட்புச் சிறந்தது என்று உணர்வீர்கள் .

14) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக் கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை மட்டுமே உங்கள் மனசாட்சியை வழி நடத்தும்.

15) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான் எதிர்க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள்.

# எந்த அளவுக்கு துல்லியமாய் எழுதி இருக்கிறேன் என்றுத் தெரியாது.இதைப் படிக்கையில் நீங்கள் மகிழ்ச்சி அடைந்தால் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

-ஆதிரா from facebook