Blogger Widgets

Total Page visits

Sunday, November 24, 2013

KINGSTON ENGINEERING COLEGE,Faculty Recruitment

Professor/Associate Professor/Assistant professor in the Following Departments

  • Computer Science Engineering
  • Information Technology
  • Mechanical Engineering
  • Civil Engineering
  • Electrical and Electronics Engineering
  • Electronics and Communication Engineering
  • Master of Business Administration
Qualification & Remuneration
As per AICTE Norms
Send Your Complete Resume with Passport size Photo
Mail id:
recruitment@kingston.ac.in, principal@kingston.ac.in

Friday, November 22, 2013

விருதுகள் பலவிதம்! ! !

இந்திய அரசு 1954ஆம் ஆண்டிலிருந்து தம் குடிமக்களில் பெரும் சாதனைகள் புரிந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அதுதான் இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருது. அதற்கு அடுத்த நிலையிலான விருதுகள் பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ ஆகியவை. இவற்றை பத்ம விருதுகள் என்று சொல்வது வழக்கம். இவை சிவிலியன் விருதுகள். அரசியல் சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

 பாரத ரத்னா உள்ளிட்ட பத்ம விருதுகளுக்கு, பணம் எதுவும் கிடையாது. பட்டம் மாதிரி இவற்றை பெயரோடு சேர்த்துக்கொண்டு விளம்பரப்படுத்திக் கொள்ளக்கூடாது. ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான விழா நடத்தி அரசு இவ்விருதை வழங்குகிறது. இந்திய அரசின் அங்கீகாரம் என்பதால் அதனை அடைய ஒவ்வொருவரும் அரும்பாடுபடுகிறார்கள். யார் யாரையோ பிடித்து பரிந்துரை செய்ய வைக்கிறார்கள். செல்வாக்கு பெற்றவர்கள் தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு சிபாரிசு செய்கிறார்கள். மாநில அரசுகளும் சிபாரிசு செய்வதுண்டு. இறுதி முடிவை மத்திய அரசின் உள்துறை எடுக்கிறது.

 2013 ஆம் ஆண்டில் 1,300 பேர், பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார்கள். அதில் 108 பேர் விருது பெற்றார்கள். யாரெல்லாம் யார் யாரால்  விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்கள் என்பது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம்         கேட்டு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

சினிமா பின்னணி பாடகியும் பாரத் ரத்னா விருதுபெற்றவருமான லதா மங்கேஷ்கர், தன் சகோதரி உஷா மங்கேஷ்கர், பாடகர் சுரேஷ் வடேகர், கலை ஆர்வலர் ராஜ்மல் பரேக் ஆகிய மூவருக்கும் பரிந்துரை செய்திருக்கிறார். ஆனால், அவர்கள் யாருக்கும் விருது கிடைக்கவில்லை. சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி அமர் சிங், நடிகையும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜெயபிரதாவின் பெயரைப் பரிந்துரைத்தார். பத்ம விபூஷண் விருது பெற்றுள்ள சரோட் வாத்தியக் கலைஞர் அம்ஜத் அலிகான், தன் இரு மகன்களோடு மேலும் நான்கு பேருக்கு விருது கொடுக்க பரிந்துரை செய்தார். மோதிலால் வோரா என்ற காங்கிரஸ் தலைவர் இருபத்தைந்து பேருக்கு சிபாரிசு செய்துள்ளார். பல மத்திய அமைச்சர்கள், பலருக்குப் பரிந்துரை செய்து இருக்கிறார்கள். அதில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள். பத்ம விருதுகளுக்குப் பரிந்துரை செய்கிறவர்கள் சொல்லும் ஒரே காரணம், நாங்கள் மக்கள் தொண்டர்கள். தகுதி வாய்ந்தவர்களுக்குப் பரிந்துரை செய்கிறோம். எங்கள் சேவையில் அது ஓர் அம்சம். எனவே குறை சொல்ல முடியாது என்று அடித்துச் சொல்கிறார்கள்.

 ஆள்பிடித்து விருது வாங்கிக் கொண்டு பெரிய விழா நடத்திக் கொள்கிற கூட்டத்தில் சேராமல், அதனை நிராகரிக்கிறவர்களும் இருக்கிறார்கள். சினிமா பின்னணிப் பாடகி எஸ். ஜானகி பத்மவிபூஷண் விருதை ஏற்க மறுத்துவிட்டார். தனக்கு வெகு தாமதமாக விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. எனக்கு பாரத் ரத்னா கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அறிக்கை விட்டார். அரசு அதனைக் கண்டுகொள்ளவே இல்லை. பத்ம விபூஷண் விருது பெற்றவர்கள் பட்டியலில் அவர் பெயரைச் சேர்த்து வைத்துவிட்டது. விருது அறிவிப்பதோடு அரசு வேலை முடிந்துவிட்டது.

  2,577 பேர் இதுவரை பத்ம விருதுகள் பெற்றிருக்கிறார்கள். 1957-ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ பெற்ற முதல் தமிழர், எஸ்.ஆர். ரங்கநாதன் என்று அறியப்பட்ட சீர்காழி ராமாமிர்தம் ரங்கநாதன். நூலகத்தில் இடம்பெறும் புத்தகங்களை வகைப்படுத்த, "கோலன்' என்னும் குறியீட்டு முறையை அறிமுகம் செய்தவர் இவர்தான். அம்முறை உலகளாவிய முறையில் இன்றும் பின்பற்றப்படுகிறது. இந்த ஆண்டு பத்மஸ்ரீ பெற்றவர்களில் ஒருவர் - ஜப்பானியரான கரோஷிமா. இவர் தமிழ்த் தொல்லியல், இலக்கிய ஆய்வாளர்.

 இந்தியாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான பாரத ரத்னா, 1954ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக இருந்த ராஜேந்திர பிரசாத்தால் தொடங்கப்பட்டது. பணம் கிடையாது. அரச இலை வடிவிலான மெடல். அதன் ஒரு பக்கத்தில் "பாரத் ரத்னா' என்பது தேவநாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது; மறுபுறம் மூன்று முகசிங்கம். முதன்முதலாக பாரத ரத்னா விருது பெற்றவர்கள் சர்.சி.வி. ராமன், ராஜாஜி, டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன். இரண்டாவது ஆண்டில் விருது பெற்றவர் பிரதம மந்திரி ஜவாஹர்லால் நேரு.
 உயிரோடு இருக்கிறவர்களுக்கு மட்டும்தான் பாரத ரத்னா என்று முதலில் இருந்தது. ஆனால், அடுத்தடுத்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளால் மரணமுற்ற மகத்தான மனிதர்களுக்கும் பாரத் ரத்னா கொடுக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. மரணமென்றால்  எங்கிருந்து தொடங்குவது என்ற சிக்கல் ஏற்பட்டது. சுதந்திரப் போராட்டத்தை ஓர் எல்லையாக வைத்துக்கொண்டு வல்லபபாய் படேல், அம்பேத்கர், விநோபா பாவே,  காமராஜர், எம்.ஜி. ராமச்சந்திரன், ராஜீவ் காந்தி உள்பட பலருக்கு பாரத ரத்னா கொடுத்தார்கள்.

சுபாஷ் சந்திர போஸூக்கு 1992-ஆம் ஆண்டில் மரணத்திற்குப் பிந்தைய பாரத ரத்னா கொடுத்தார்கள். அவர் மரணம் உறுதி செய்யப்படவில்லை, எனவே மரணமுற்றவர்கள் பட்டியலில் அவர் பெயரைச் சேர்ப்பது முறையல்ல என்று வழக்குத் தொடரப்பட்டது. எனவே அரசு அவ்விருதை திருப்பிப் பெற்றுக் கொண்டது.

பாரத ரத்னா விருது எந்தத் துறையினருக்கும் கொடுக்கலாம் என்று இருந்தாலும் அதில் விளையாட்டுத்துறை சேர்க்கப்படவில்லை. இந்தியாவில் விளையாட்டு என்றால் கிரிக்கெட்டுதான். அது கேளிக்கையின் உச்சமாகிவிட்டது. நாள் முழுவதும் ஆடுகிறார்கள். தொலைக்காட்சிகளில் தொடர்ந்து அதனைக் காட்டுகிறார்கள். கிரிக்கெட்டில் புகழ் மிக்கவராக சச்சின் டெண்டுல்கர் இருந்து வருகிறார். எனவே அவருக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும். விதிமுறையில்லையென்றால் புது விதி உண்டாக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிலர் முன் வைத்தார்கள். மத்தியில் ஆளும் கட்சி ஏதோ காரணத்திற்காக அவருக்கு பாரத ரத்னா விருதை அறிவித்து விட்டது. உடனே ஊடகங்களில் அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் வர ஆரம்பித்துவிட்டன. எதிர்ப்பவர்கள் ஹாக்கி வீரர் ஒருவருக்குதான் தந்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அவர்கள் வாதத்தில் தவறில்லை. ஹாக்கிதான் இந்தியாவின் தேசிய விளையாட்டு. அது ஒலிம்பிக்கில் ஆடப்படுகிறது. ஒலிம்பிக்கில் ஆடி நாம் தங்க மெடல் பெற்றிருக்கிறோம். கிரிக்கெட் ஒலிம்பிக்கில் கிடையாது. 

நான்காயிரம் ஆண்டுகளாக செஸ் எனப்படும் சதுரங்கம் இந்தியாவில் ஆடப்பட்டு வருகிறது. அது இந்தியாவில் பிறந்தது. இன்று உலகம் முழுவதும் ஆடப்பட்டு வருகிறது. அறிவாளிகள் ஆட்டமாக அது அங்கீகாரம் பெற்றிருக்கிறது. செஸ் ஆட்டத்தில் உலக சாம்பியன் ஓர் இந்தியர். அவருக்குத்தான் முதன்முதலாக பாரத் ரத்னா தரவேண்டும் என்று சிலர் பேசவும் எழுத ஆரம்பித்தார்கள்.

உயர்ந்த விருது என்றால் அது தனக்குக் கிடைக்க வேண்டுமென்றும், தனக்கு வேண்டியவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டுமென்றும் பலர் விரும்புகிறார்கள். அதில் அரசியல் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், சமூக சேவகர்கள், நடிகை நடிகர்கள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், டாக்டர்கள் போன்ற பலரும் இருக்கிறார்கள்.

அவர்களில் தகுதியானவர்களும் தகுதியற்றவர்களும் கலந்தே இருக்கிறார்கள். அவர்கள் அரசுக்கு ஆண்டுதோறும் பெரும் நெருக்கடி கொடுக்கிறார்கள். இந்த பிரச்னை முற்றியதால் 2008ஆம் ஆண்டிலிருந்து பாரத ரத்னா விருது கொடுப்பதை அரசு நிறுத்தி வைத்தது.

உலகம் முழுவதிலும் உயர்ந்த விருதுகள் கொடுக்கப்பட்டபோதெல்லாம், இவருக்கு ஏன் கொடுக்கப்பட்டது என்றும் இவருக்கு ஏன் கொடுக்கவில்லை என்றும் கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டதுபோது, மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு கொடுக்கப்படாதது பற்றி பேசப்பட்டது. சிலருக்கு விருதுகள் அறிவிக்கும்போது எல்லா தரப்பினரும் மகிழ்ச்சியடைகிறார்கள். அதற்கு உதாரணம், இவ்வாண்டு விஞ்ஞானி சி.எஸ்.ஆர்.ராவுக்கு அறிவிக்கப்பட்டது. அதுவே பரிசு, விருது என்பவற்றை அர்த்தம் பெற வைக்கிறது.

இந்தியாவில் இதுவரையில் நாற்பத்து மூன்று பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. அதில் உயிரோடு இருந்து விருது பெற்றவர்களும், மரணத்திற்குப் பிறகு விருது அறிவிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். மரணத்திற்குப் பிறகு விருது பெற்றிருக்க வேண்டியவர் மகாத்மா காந்தி. "பெரிய விருது' என்று அறியப்படும் பாரத் ரத்னா அவரைப் பொருத்தவரை "சிறிய விருது' என்று கருதி அவருக்குக் கொடுக்காமல் விட்டுவிட்டார்கள் போலும்.

பெற்றோர்களின் கவனர்திற்கு ! ! !

1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.

2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.

3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.

4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.

5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!

6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.

7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்

8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.

9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!

10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.

11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!

12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.

13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!

15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.

16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!

17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"

21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.

22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!

25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!

நன்றி : அமுதா சுரேஷ்

Wednesday, November 20, 2013

மனம் ஒப்பவில்லை!

தனது 200ஆவது டெஸ்ட் பந்தய விளையாட்டை முடித்த கையோடு ஓய்வு பெறும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு, அவரது சாதனைகளைப் பாராட்டும் விதத்தில் இந்தியாவின் தலைசிறந்த விருதான "பாரத ரத்னா' விருது வழங்கி கௌரவித்திருக்கிறது மத்திய அரசு.

இந்திய கிரிக்கெட் சரித்திரத்தில் மட்டுமல்ல, உலக கிரிக்கெட் சரித்திரத்திலும் அழியாப் பெயரும் பெருமையும் சச்சின் டெண்டுல்கருக்கு உண்டு என்பதில் சந்தேகமே இல்லை. முதன் முதலாக, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த பெருமை சச்சினுடையது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நூறு முறை சதம் அடித்த பெருமை சச்சினுடையது. 17 தடவை டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ஆட்டக்காரராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை சச்சினுடையது. 62 முறை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறந்த ஆட்டக்காரராகத் தேர்வு செய்யப்பட்ட பெருமை சச்சினுடையது. டெஸ்ட் பந்தயங்களில் உலகிலேயே மிக அதிகமான ரன்களை (15,921) எடுத்த பெருமை சச்சினுடையது. ஒருநாள் கிரிக்கெட் பந்தயங்களில் மிக அதிகமான ரன்களை (18,426) எடுத்த பெருமை சச்சினுடையது. டெஸ்ட் போட்டிகளிலும் (51), ஒருநாள் போட்டிகளிலும் (49) மிக அதிகமாக சதமடித்த பெருமை சச்சினுடையது. சச்சினின் கிரிக்கெட் சாதனைகளைப் பட்டியலிடுவதாக இருந்தால் ஒரு புத்தகம்தான் எழுத வேண்டும்.

24 ஆண்டுகள் தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த சச்சின் டெண்டுல்கர், தனது 200ஆவது டெஸ்ட் ஆட்டத்தை முடித்த கையோடு, ஓய்வு பெறுவதாக அறிவித்தது பாராட்டுக்குரியது. இந்த சாதனையை எட்ட வேண்டும் என்பதற்காகவே, கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியபிறகும் சௌரவ் கங்குலி, ராகுல் திராவிட், வீரேந்தர் சேவாக், அனில் கும்ப்ளே, மகேந்திரசிங் தோனி ஆகியோரின் குழுவில் அவர் தொடர்ந்து ஆடி வந்தார். நினைத்ததை சாதிக்கவும் செய்திருக்கிறார்.

கிரிக்கெட் வீரர் என்கிற முறையில் சச்சினின் விடாமுயற்சி, சாதனை புரிய வேண்டும் என்கிற முனைப்பு, அற்புதமான விளையாட்டு ஆகியவற்றிற்காக அவர் பாராட்டப்பட வேண்டியவர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அதற்காக, அவருக்கு 1994இல் அவரது கிரிக்கெட் சாதனைகளுக்காக அர்ஜுனா விருது வழங்கப்பட்டபோதும், 1998இல் தலைசிறந்த விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் ராஜீவ்காந்தி "கேல் ரத்னா' விருது வழங்கப்பட்டபோதும், 1999இல் பத்மஸ்ரீ விருது தரப்பட்ட போதும், 2008இல் பத்ம விபூஷண் கொடுக்கப்பட்டபோதும், ஏன், அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட போதும் கரவொலி எழுப்பி மகிழ்ந்ததுபோல, "பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டிருக்கும் வேளையில் பாராட்டி மகிழ மனம் ஒப்பவில்லை.

"பாரத ரத்னா' விருது என்பது சாதனைகளுக்காக வழங்கப்படும் விருது அல்ல. சாதனையாளர்களின் சமுதாயப் பங்களிப்புக்காக வழங்கப்படும் விருது. அன்னை தெரசாவுடையது சாதனையல்ல, சேவை. "இசைக் குயில்' எம்.எஸ். சுப்புலட்சுமி தலைசிறந்த கர்நாடக இசைக்கலைஞர் என்பதற்காக விருது வழங்கப்படவில்லை. எத்தனை எத்தனையோ சமுதாய நல, மக்கள் நல்வாழ்வு முயற்சிகளுக்குத் தனது இசையின் மூலம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும், அரசுக்கும் நிதி வசூலித்துக் கொடுத்த சேவைக்கு வழங்கப்பட்ட விருது. காமராஜுக்கும், எம்.ஜி.ராமச்சந்திரனுக்கும் அரசியல் காரணங்களுக்காக விருது வழங்கப்பட்டது என்று சிலர் குறை கூறினாலும், அவர்கள் இறந்தும் பலரது மனதில் வாழ்கிறார்கள் என்பதால், அவர்களுக்குத் தரப்பட்ட விருதில் நியாயம் இருக்கிறது. அவர்களது சமுதாயப் பங்களிப்பை காலம் வழி மொழிந்திருக்கிறது.

சர்தார் வல்லபபாய் படேல் மறைந்து 41 ஆண்டுகளுக்குப் பிறகும், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் காலமாகி 34 ஆண்டுகளுக்குப் பிறகும்தான் நிஜமாகவே சமுதாயப் பங்களிப்பு நல்கிய அந்தப் பெருந்தகைகளுக்கு உயரிய விருதான "பாரத ரத்னா' வழங்கப்பட்டது. சச்சின் டெண்டுல்கருக்கு அவரது 200ஆவது டெஸ்ட் சாதனை முடிந்ததும் இந்த விருதை 40 வயதிலேயே வழங்கி கௌரவிக்க வேண்டும் என்பதற்காக, விருதுக்கான நிபந்தனைகளே தளர்த்தப்பட்டிருக்கிறதே, அதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சச்சின் டெண்டுல்கர் பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதராக இருந்து சம்பாதித்தார். கிரிக்கெட் விளையாடி சம்பாதித்தார். உலக அரங்கில் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக இருந்தார். அதெல்லாம் சரி, இவரது சமுதாயப் பங்களிப்பு என்ன? இவரால் பல இளைஞர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது என்பது "பாரத ரத்னா' விருது அளித்து கௌரவிக்கப்பட வேண்டிய தகுதியா, என்ன?

தகுதியற்றவர்களுக்காகத் தேவையற்ற கோரிக்கைகளுக்கு மத்திய அரசின் இந்த முடிவு வழிவகுக்கப் போகிறது. "பாரத ரத்னா'வின் மரியாதை குறையப் போகிறது. சச்சினின் விளையாட்டு சாதனைகளைப் பாராட்டும் அதே நேரத்தில், "பாரத ரத்னா' விருதுக்காக அவரை பாராட்ட மனம் ஒப்பவில்லை.

Sunday, November 17, 2013

Annai Mathammal Sheela Engineering College wanted Professors/Associate Professors/Assistant Professors

AMS Institution was founded in 1996 by a group of visionaries and intellectuals to impart quality education in a stimulating and innovative environment where students are empowered with knowledge and professional skills while upholding the value of integrity, tolerance and mutual respect. AMS is a community of students, staffs and faculty striving to be vibrant with learning processes which allow individuals to be themselves while being creative with their energy. The academic programmers prepare students down to earth performers innovators’ who continuously imbibe from real life business situations and experiences.The core values of the AMS include the belief in the individual as the primary vehicle for initiative. The AMS aims at attracting diversity and providing it with an event where it can flourish. It promotes a culture of openers and change, where merit is the only criteria coexisting with teamworkThe College, having about hundred acres of land is located at Erumapatty which is about 15 Kms from Namakkal town, the headquarters of Namakkal District.
 Job Title :Professors/Associate Professors/Assistant Professors
Departments
  • Civil Engineering
  • Mechanical Engineering
  • Computer Science and Engineering
  • Electronics and Communication Engineering
  • Electrical and Electronics Engineering
  • Electronics and Instrumentation Engineering
  • Management Studies (MBA)
  • Maths
  • English
  • Physics
  • Chemistry
 Qualification:ME/M.Tech/M.Sc& M.A with M.Phil/MBA/Ph.D
 Candidate Profile
  • Candidate should completed  thier UG/PG in relevent discipline 
  • Freshers may also Apply
  • Candidate should have Good Communication Skill
  • Commitment towards work
  • Have a good Publication record
Interview Process 
  • All the Candidate must Perform 5-10 Minutes Board Presentation
  • Personal Interview
Job Location: Namakkal
Last date : Apply Immediately
Apply Mode :Off-line/On-line (Email)
Website : Clickhere
Send your resume along with copies relevant certificates to the following E-mail id or Postal Address  
E mail id : info@amsheela.org.in

Postal Address
The Chairman
Annai Mathammal Sheela Engineering College
Erumapatty,
Namakkal District - 637 013
Tamilnadu
India

Note :
Immediate openings in Civil Engineering and Mechanical Engineering-Kindly Walk-in at any working days
For more details contact at  04286 -  252253, 252254/94437 11881/84/85
Ref : 6th November 2013,The Hindu,Tiruvananthapuram,Edition

Shanmuganathan Engineering College Recruits Assistant Professors

Shanmuganathan Engineering College would be the unceasing endeavour of everyone in the institution to prepare the students to face stiff competition and coping with the continuous rapid strides in technology with courage and confidence by providing them every opportunity to attain a high degree of professional competence through sustained rigorous training. Such students should prove to be an asset not only to their families but to the country itself as crusaders of its future progress and prosperity.

Job Title:  Professors/Associate Professors/Assistant Professors
Departments: 
  • Civil Engineering
  • Mechanical Engineering
  • Automobile Engineering
  • Computer Science and Engineering
  • Electronics and communication Engineering
  • Electrical and Electronics Engineering
  • English
  • Maths
  • Physics
  • Chemistry
Qualification and Experience: M.E/M.tech/M.Sc/M.A/M.Phil/Ph,D
Candidate Profile:
  • Candidate should completed  their PG /Ph.D in relevant discipline 
  • Candidate should have Good Communication Skill
  • Commitment towards work
  • Have a good Publication record
  • Recently Retired Persons can also apply
Last Date : With in 8 days
Job LocationPudukkottai
Scale of Pay : As per AICTE Norms
Apply mode : Online
Website : Clickhere

How to Apply: Send your resume along with  necessary certificates and passport size photo to the following E-mail id with in 8 days


E-mail id : corresec@gmail.com or corressec@gmail.com

Postal Address:
Shanmuganathan Engineering College
Arasampatti-622507
Thirumayam (TK),
Pudukkottai (Dist).

Ref: 6th November 2013,The Hindu ,Trichy Edition

Muthayammal Engineering College invites Applications for Professors/Associate Professors/Assistant Professors

Muthayammal Engineering College, started in the year 2000 and run by the Muthayammal Educational Trust and Research Foundation is located at Rasipuram, 25 Kms from Salem with the congenial and well-developed college campus .Under the able guidance and patronage of Shri R.Kandasamy, Chairman and Prof.K.Gunasekaran, M.E., (Ph.D) FIE, Secretary & Managing Trustee, The college has developed excellent facilities and resources such as spacious classrooms, seminar halls, well-equipped laboratories, workshops, well-stocked libraries, dedicated highspeed broadband Internet connectivity and well-qualified faculty.Our Vision is to be a Centre of Excellence in Engineering, Technology and Management on par with International Standards
Job Title:  Professors/Associate Professors/Assistant Professors
Departments: 
  • Civil Engineering
  • Mechanical Engineering
  • Computer Science and Engineering
  • Electronics and Communication Engineering
  • Electrical & Electronics Engineering
  • Information Technology
  • English
  • Maths
  • Physics
  • Chemistry
  • Master of Computer Application
  • Master of Business Administration
Qualification : As Per AICTE Norms
  
Candidate Profile:
  • Candidate should completed  their PG /Ph.D in relevant discipline 
  • Candidate should have Good Communication Skill
  • Commitment towards work
  • Have a good Publication record
  • Visiting Professors with strong Academic/ Industrial background are welcome. 
Last Date : With in 6 days
Job LocationNamakkal
Scale of Pay : As per Norms
Apply mode : Off-line/On-line(E-mail)
Website : Clickhere

How to Apply: Send your resume along with  necessary certificates and passport size photo to the following  
E mail id or Postal Address 

E mail id : hrdmetrf@gmail.com
Postal Address:
The Chairman
Muthayammal Engineering College,
Rasipuram-637 408,
Namakkal Dt
Tamil Nadu, India.
More details contact at + 91 - 4287 - 220837 , 226837
Ref: 13th November 2013,The Hindu,Madurai Edition

K.Ramakrishnan College of Technology Wanted Assistant Professors

K.RAMAKRISHNAN COLLEGE OF TECHNOLOGY, TIRUCHIRAPALLI in the famous temple town of Shri Samayapuram Mariyamman temple on the sprawling campus of 30 acres with a panoramic and pleasant view. This college stands as a testimony to the wisdom and foresight to cater to the educational needs and aspirations of the people. With a great wisdom, the founder of this institution has rightly coined the motto “Empower through Education”. The institution has grown excellently from strength to strength over the past three years, as a premier institute of higher learning under the able and committed leaderships of successive people. To emerge as an Institute of Excellence in higher learning, imparting value based education in line with global standards.Right from its inception, the institution has been laying more emphasis on teaching, research and extension activities in different subjects. Read more.

Job Title:  Professors/Associate Professors/Assistant Professors
Departments: 
  • Civil Engineering
  • Mechanical Engineering
  • Electrical and Electronics Engineering
  • English
  • Maths
  • Chemistry
Qualification and Experience: M.E/M.tech/B.E/M.Sc/M.A/M.Phil/Ph,D
Candidate Profile:
  • Candidate should completed  their PG /Ph.D in relevant discipline 
  • Candidate should have Good Communication Skill
  • Commitment towards work
  • Have a good Publication record
  • Recently Retired Persons can also apply
Last Date : With in 5 days
Job Location: Trichy
Scale of Pay : As per AICTE Norms
Apply mode : Online/Offline
Website : Clickhere

How to Apply: Send your resume along with  necessary certificates and passport size photo to the following E-mail id or Postal address with in 5 days


E-mail id : recruitmentkrgi@gmail.com

Postal Address:
The Principal,
K.Ramakrishnan College of Technology
Kariyamanikam Road, Samayapuram,
Trichy – 621112,

Tamilnadu, India.

Ref: 13th November 2013,The Hindu ,Trichy Edition

Saturday, November 16, 2013

சச்சினுக்கு பாரத ரத்னா விருது

கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் மற்றும்  வேதியியல் விஞ்ஞானி  சி.என்.ஆர்.ராவ் ஆகியோருக்கு இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப் படுவதாக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.

இந்த விருது பெறும் முதல் கிரிக்கெட் வீரர் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பாரத ரத்னா விருது குறித்த அறிவிப்பைக் கேட்டு தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், இந்த விருதை தனது தாய்க்கு சமர்ப்பிப்பதாகவும் கூறினார். மேலும், இந்தியா தான் தனது தாய் மண் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம், சச்சின் டெண்டுல்கரின் சாதனைகள் யாருடனும் ஒப்பிடமுடியாதவை; அவரது அறிவுக்கும் திறமைக்கும் விளையாட்டு மீதுள்ள உணர்வுக்கும் அளிக்கப்படும் உயரிய விருது இது என்று கூறியுள்ளது. சச்சின் ஏற்கெனவே பல விருதுகளைப் பெற்றிருந்தாலும், இது அவருக்கு உயரிய கௌரவம் என்று கூறியுள்ளது பிரதமர் அலுவலகம்.

மிக இளம் வயதில் பாரத ரத்னா விருது பெறுகிறார் சச்சின் டெண்டுல்கர். மேலும், அவர் தனது கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெற்று சில மணி நேரங்களில் அவருக்கு உயரிய இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த சில வருடங்களாக சச்சினுக்கு பாரத ரத்னா விருது தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது. ஆனால், தேர்தல் களை கட்டியுள்ள இந்த நேரத்தில், அவருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கண்ணீருடன் விடைபெற்றார்

 


 

  

 


கரகோஷத்தின் மத்தியில் நன்றி தெரிவித்தார் சச்சின்

மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களின் நீண்ட கரகோஷத்துக்கு மத்தியில் தனது நன்றி உரையை ஆற்றினார்.

சச்சின் பேச வந்ததும், ரசிகர்களின் கரகோஷம் நீண்ட நேரத்துக்கு நிற்கவேயில்லை. கரகோஷம் தொடர்ந்த நிலையிலேயே சச்சின் பேசத் துவங்கினார்.

நன்றி தெரிவிக்க வேண்டியவர்களின் பட்டியல் அவர் கையில் வைத்திருந்தார். முதல் முறையாக தான் இந்த பட்டியலை தயாரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

நா தழுதழுத்த குரலில் அவர் உணர்ச்சிப் பொங்க பேசியதாவது, "1999ஆம் ஆண்டு எனது தந்தையை இழந்தது எனக்கு மிகப்பெரிய பின்னடைவு. அவருடைய வழிகாட்டல் இல்லாமல் நான் இந்த அளவுக்கு முன்னேறி இங்கு நிற்கிறேன் என்றால், அது அவரது வளர்ப்புதான். அவர் எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். எனது 11 வயதில் நான் எந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் எனக்கு சுதந்திரம் அளித்தார்.

கனவு  காண வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். அதுவும் குறுகிய கனவுகளைக் காணக் கூடாது என்றும் கூறுவார். பாதை கடினமாக இருக்கும். அதனால் துவண்டு போகக் கூடாது என்று எப்போதும் கூறிக் கொண்டே இருப்பார். என்னை ஒரு நல்ல மனிதனாக உருவாக்கினார் எனது தந்தை. அவர் இல்லாததது, இந்த நேரத்தில் என்னை மிகவும் வருத்தமடையச் செய்கிறது.

அடுத்து எனது தாய், என்னைப் போன்ற மிகவும் சுட்டித்தனமான குழந்தையை வளர்க்க அவர் அதிகம் சிரமப்பட்டார். எனக்காக அவர் ஏராளமான தியாகங்களை செய்துள்ளார். எனது ஆரோக்கியம், எனது நலனை மட்டுமே அவர் நினைத்து வாழ்ந்துள்ளார். உங்களது வாழ்த்துக்களும், தியாகமுமே என்னை இந்த அளவுக்குக் கொண்டு வந்துள்ளது என்று கூறினார் சச்சின்.

1991ஆம் ஆண்டு அஞ்சலியை திருமணம் செய்தது எனது வாழக்கையில் நடந்த மிக அருமையான விஷயம். அஞ்சலி எனது குடும்பத்தை அழகாக கவனித்துக் கொண்டார். நான் கிரிக்கெட்டை கவனித்தேன். அவர் எனது குடும்பத்தை, எனது அனைத்து சுமைகளையும் அவரே தாங்கிக் கொண்டார் என்று தழுதழுத்த குரலில் கூறினார். அப்போது அஞ்சலி அதைக் கேட்டு கண் கலங்கினார்.

நான் காயம் அடைந்து விளையாடாமல் இருந்த போதெல்லாம், என்னை அடிக்கடி தொடர்பு கொண்டும், என்னுடன் நேரத்தை செலவிட்டும், இதோடு கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விடாது என்று கூறி எனக்கு உற்சாகம் அளித்த நண்பர்களுக்கும் நன்றி.

ஆனந்த் மேத்தா.. எனது கிரிக்கெட் பயிற்சியாளர். அவர் தான் எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருந்தவர். இங்கு நான் நிற்க அவரே முக்கியக் காரணம். இவர்கள் இல்லாமல் என் வாழ்க்கை முழுமை அடைந்திருக்காது.

எனது கிரிக்கெட் வாழ்க்கை 11  வயதில் துவங்கியது. எனது சகோதரர் அர்ஜூன், சகோதரி சாரா எல்லாரும் எனக்கு பல வகையில் உறுதுணையாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் இருந்துள்ளனர்.

எனது சகோதரிதான், முதல் முறையாக எனக்கு கிரிக்கெட் பேட் வாங்கி பரிசளித்தார். அது என் வாழ்க்கையில் கிடைத்த மிகச் சிறந்த பரிசாக இன்று வரை கருதுகிறேன்.

கிரிக்கெட் வீரர்கள் ராகுல் டிராவிட், கும்ளே, சௌரவ், லஷ்மண் ஆகியோர் எனது குடும்பத்தினராகவே நான் கருதுகிறேன். அனைத்து பயிற்சியாளர்கள், எனது உடலை பிட்டாக வைத்துக் கொள்ள உதவிய உடற்பயிற்சியாளர், மருத்துவர்கள் என அனைவருக்கும் எனது நன்றிகள்.

இந்திய அணியில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு இந்தியாவுக்காக விளையாடும் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. அடுத்த தலைமுறையினருக்கும் இது கிடைக்கும். நாட்டுக்கு சேவையாற்ற உங்களுக்கு கிடைத்திருக்கும் அதிர்ஷ்டத்தை அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எனக்கு இது நாள் வரை துணையாக இருந்த அனைத்து மீடியாக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது பிள்ளைகளுக்காக இதுவரை நான் நேரம் செலவிட்டதே இல்லை. இதுவரை உங்களுக்கு எதை எல்லாம் செய்ய முடியாமல் போனதோ.. அதை எல்லாம் இனி உங்களுக்காக நான் செய்வேன். இனி எனது நேரம் முழுமையாக உங்களுக்காகவே செலவிடுவேன்.

எனது பேச்சு நீண்டு கொண்டிருக்கிறது. எனினும், இதுவே உங்களிடம் நான் கடைசியாக பேசுவது என்பதால் மன்னித்துக் கொள்ளுங்கள்..

எனது இதயத்தில் எப்போதும் கிரிக்கெட் நீங்கா இடம்பெற்றிருக்கும்.

இவை எல்லாவற்றையும் விட கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவும், உற்சாகமும் தான் என்னை இந்த அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது.

நீங்கள் எனக்காக விரதம் இருந்து இருக்கிறீர்கள், பிரார்த்தனை செய்திருக்கிறீர்கள். பல விஷயங்கள் கடந்துவிடும். ஆனால், உங்களைப் பற்றிய நினைவுகள் எப்போதும் என்னை விட்டு நீங்காது.. உங்களது சச்சின் சச்சின் என்ற வார்த்தைகள் என் காதுகளில் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும்.

(அந்த நேரத்தில் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அனைவரும் ஒரு சேர சச்சின் சச்சின் என்று கோஷமெழுப்பினர். அனைத்து வீரர்கள் மற்றும் ரசிகர்களின் கண்களிலும் கண்ணீர் தளும்பியது)

அந்த கோஷத்தின் மத்தியில் கண்ணீர் மல்க சச்சின் கூறினார்.... குட்பாய்...

Wednesday, November 6, 2013

வேண்டாத அழைப்புகள்

ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு, உடை, உறைவிடம் ஆகியவை அத்தியாவசியமானவையாக நேற்று வரை கருதப்பட்டன. ஆனால் இன்று அவற்றைத் தாண்டி மிகவும் அத்தியாவசியமானதாக கருதப்படுவது செல்போன்தான். செல் இல்லாதவர் செல்லாதவர் என்றே கூறலாம்.

ஒரே செல்போனில் இரு சிம்கார்டுகளை பயன்படுத்தும் நவீன வசதிகளும் வந்துள்ளன. இந்த செல்போன்கள் எந்த அளவுக்கு தகவல் பரிமாற்றத்துக்கு உபயோகமாகிறதோ அதே அளவுக்கு இவற்றால் பல்வேறு பிரச்னைகளும் இருக்கத்தான் செய்கின்றன. பணம் மற்றும் நேரம் வீணாவதோடு பல்வேறு தொல்லைகளும் வருகின்றன.

ஆரம்ப காலங்களில் குறுந்தகவல்களில் பல்வேறு நிறுவனங்கள் விளம்பரங்கள் செய்தன. ஒரு சில நிறுவனங்களில் குறுந்தகவல்களுக்கு பதில் அளித்தால் அவர்கள் தொடர்ந்து பாடல்கள், ஜோக், படம் அனுப்புவது போன்ற வசதியையும் அளித்து அதற்கு கட்டணமும் வசூலித்தனர். தொடர்ந்து குறுந்தகவல்கள் வந்ததால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தேவையில்லாத குறுந்தகவல்கள் வருவதைத் தடுக்கும் விதத்தில் குறுந்தகவல்களைத் தடுக்க வழிமுறைகள் செய்யப்பட்டன. 

அதற்கு அடுத்தபடியாக கணினியில் பதிவு செய்யப்பட்ட அழைப்புகள் செல்போன்களுக்கு வரத்தொடங்கின. அந்த அழைப்புகளை ஆன் செய்தால் கணினியில் பதிவு செய்யப்பட்ட குரல் பேசும். அதில் பல திரைப்பட பாடல்கள் ஒலிக்கும்.  இந்தப் பாடலை உங்கள் செல்போனின் ரிங்டோனாக வைத்துக் கொள்ள இந்த எண்ணை அழுத்துங்கள் என அந்தக் குரல் வழிகாட்டும். அதனைப் பதிவு செய்தால் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு ரூபாய் முதல் அவர்கள் நிர்ணயித்துள்ள தொகை பிடித்தம் செய்யப்படும்.  இவ்வாறான செல்போன் அழைப்புகளால் வாடிக்கையாளர்கள் பணச் செலவு உள்பட பல்வேறு இன்னல்களுக்கு உள்ளானார்கள்.

தற்போது பல்வேறு செல்போன் நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு அந்தந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுடைய செல்போன் எண்களின் பட்டியலை விலை கொடுத்து வாங்கி, அதன் மூலம் தங்களுடைய பொருள்கள் சம்பந்தமாகவும், சேவை சம்பந்தமான விவரங்களையும் குறிப்பிட்ட நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரியும் ஆண் அல்லது பெண் செல்போன் வாடிக்கையாளரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு விளக்கி பேசுவார்கள்.

அந்த வாடிக்கையாளர் தன்னுடைய பணியிலோ, பயணத்திலோ, அலுவல் ரீதியான கூட்டத்திலோ இருக்கும் நேரத்தில் அவருடைய செல்போனுக்கு அழைப்பு வரும்.  அந்த வாடிக்கையாளரின் நிலைமையை சற்றும் அறியாமல் மறுமுனையில் வளவளவென பேசிக் கொண்டேயிருப்பார்கள்.

செல்போனை துண்டிக்க நினைத்தாலும், விடாமல் அவர்கள் பேசுவர். அவர்கள் சொன்ன பேச்சை நம்பி, தங்களது வங்கிக் கணக்கை சொல்லி கிரெடிட் கார்டு போன்ற வசதிகளைப் பெறுவோரும், அவர்கள் அளிக்கும் கவர்ச்சிகரமான திட்டங்களில் சேருவோரும் தங்களது பணத்தை இழப்பதுதான் மிச்சம்!

இந்தப் பிரச்னையாவது பரவாயில்லை. சிலருக்கு அவர் எந்த ஒரு நிறுவனத்தின் திட்டத்திலும் உறுப்பினராக ஆகாதபோதே பணம் மட்டும் மோசடி செய்யப்பட்டுள்ளது. மோசடி செய்தவர்கள் எவர் என்றே தெரியவில்லை. இதற்கெல்லாம் காரணம் செல்போன் நிறுவனங்கள் குறிப்பிட்ட கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு தங்களுடைய வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களின் பட்டியலை விலைக்கு விற்பதுதான். அதனால் பாதிக்கப்படுவது வாடிக்கையாளர்கள்தான்.

பணி நேரத்தில் அநாவசியமான செல்போன் அழைப்புகளால், கால விரயம், பண விரயம் என பல்வேறு இன்னல்களுக்கு வாடிக்கையாளர்கள் உள்ளாகின்றனர். இவ்வாறு விளம்பர அழைப்புகளுக்கு பதில் அளிக்காமல் விட்டுவிட்டால் திரும்பத்திரும்ப போன் செய்து தொல்லை கொடுக்கின்றனர். ஒரு முறை பதில் அளித்துவிட்டுஅடுத்த முறை அந்த அழைப்பை ஆன் செய்யாமல் விட்டுவிட்டால், வேறு எண்ணில் தொடர்பு கொள்கின்றனர். குறிப்பிட்ட அந்த எண் அழைப்பு வந்தால் அதைத் தடுக்கும் முறைகள் இருந்து அதைப் பயன்படுத்தினாலும் வேறு எண்கள் மூலம் மீண்டும் மீண்டும் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இவ்வளவு தொல்லைகளையும் சகித்துக்கொண்டு தங்களுடைய பணத்தையும் செலவு செய்து நிறுவனங்களை வளர்த்துக் கொண்டிருக்கும் இளிச்சவாயர்களாகவும், பணம் சம்பாதித்துக் கொடுக்கும் இயந்திரங்களாகவும் வாடிக்கையாளர்கள் கருதப்படுகின்றனர். இவ்வாறான தொல்லை தரும் அழைப்புகள் சம்பந்தமாக வாடிக்கையாளர்கள் எவருக்கும் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுக நேரமில்லை. பூனைக்கு யார் மணி கட்டுவது என்று அவர்களுக்குள்ளேயே பல பிரச்னைகள். அதனால் இத்தகைய தொல்லைகளை தொடர்ந்து சகித்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்படுகின்றனர்.

வாடிக்கையாளருக்கு அறிவிக்காமல் அவருடைய எண்ணை மூன்றாம் நபருக்கு பணம் பெற்றுக் கொண்டு அளிப்பது குற்றமே. முதலில் இதைத் தடுக்க வேண்டும்.  அப்போதுதான் செல்போன் வாடிக்கையாளர் இத்தகைய தொல்லைகளில் இருந்து தப்புவார்கள்.

மனித வாழ்க்கையில் முக்கியமான பருவம்

மனிதனின் வாழ்க்கையில் விளையாட்டுப் பருவம், கல்வி கற்கும் பருவம், திருமணப் பருவம், குழந்தைகள் பெறுகின்ற பருவம், செல்வம் சேர்க்கும் பருவம், உலகம் சுற்றிப் பார்த்து, வாழ்க்கையை அனுபவிக்கும் பருவம், ஓய்வெடுக்கும் பருவம், இறுதி காலம் என்றவாறு பிரிக்கலாம்.

இவற்றில், இன்று மிகப் பெரிய போராட்டமாக இருப்பது கல்வி கற்கும் கால கட்டம். ஆம். ஒரு குழந்தை வயிற்றில் இருக்கும் போதே, அக்குழந்தைக்கு எல்.கே.ஜி அட்மிஷனுக்கு கியூவில் நின்று, விண்ணப்பம் வாங்கி, முன்பதிவு செய்து கொள்ளும் அவசர போட்டி உலகத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சுருங்கச் சொன்னால், ப்ரீ ஸ்கூல் அட்மிஷன் முதல் போஸ்ட் கிராஜூவேட் அட்மிஷன் வரை இதே நிலை தான்.

கல்வியில் முன்னேறியவர்களுக்கு வேலை, செல்வம், திருமணம் இதெல்லாம் தானாகவே கிடைத்து விடுவதைக் காண்கின்றோம். மனிதர்களின் வாழ்க்கையின் அஸ்திவாரமாக இருப்பதே கல்வி தான். இத்தனை சக்தி வாய்ந்த கல்வியை முழுமையாகப் பெறுவதற்கு, மக்கள் பல போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது.

பொதுவாக, கல்வி கற்கின்ற காலகட்டங்களை கீழ்க்காணுமாறு பிரித்துக் கொள்ளலாம்.

1. எல்.கே.ஜி, யு.கே.ஜி
2. 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை
3. +1, +2
4. பட்டப்படிப்பு
5. உயர்  பட்டப்படிப்பு
6. ஆராய்ச்சிப் படிப்பு

இன்றைய  காலகட்டத்தில், பெற்றோர்களின் படிப்பு, அவர்களின் வேலை அல்லது தொழில், வேலை நேரம், மாத வருமானம் இப்படி ஏகப்பட்ட விவரங்களின் அடிப்படையில் தான் ஒரு குழந்தைக்கு  நல்ல பள்ளியில் எல்.கே.ஜி அட்மிஷன் கிடைக்கிறது. அதிலும் பெற்றோருக்கும், குழந்தைக்கும் தனித்தனியாக  இன்டர்வியூ வேறு நடக்கிறது.

குழந்தைகளின்  எல்.கே.ஜி அட்மிஷனுக்கே மூச்சு வாங்கும் பெற்றோர்கள், கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்குள், அவர்கள் வளர்ந்து 10-ம் வகுப்புக்கு வந்து நிற்கிறார்கள். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில், அடுத்த வீட்டுப் பையன்/பெண்ணை விட, அதிக மார்க் எடுக்க வைக்க பெரிய யாகமே செய்ய வேண்டியிருக்கிறது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்குப் பிறகு, +1, +2-வில் எந்த குரூப் எடுப்பது என்ற  குழப்பம். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள்  என்று பலரது ஆலோசனைகள் தந்த பெரிய குழப்பத்தில்,  தன் குழந்தையின் ஆர்வம் அடிபட்டுப் போக, +1, +2  அட்மிஷனும் அமோகமாக நடந்தேறுகிறது.

இதனைத்  தொடர்ந்து, கல்லூரியில் சேர்க்க மதிப்பெண்கள், காத்திருப்புகள், கவுன்சிலிங்குகள் என்று அடுத்தகட்டப் போராட்டம். எந்த குரூப் கிடைத்தால், காம்பஸ் இன்டர்வியூவிலேயே வேலை கிடைக்கும்? ஐந்திலக்க சம்பளம் கொடுக்கின்ற, எந்த மாதிரி அயல்நாட்டு நிறுவனங்கள் சார்ந்த ஐ.டி நிறுவனங்கள் காம்பஸ் இன்டர்வியூவிற்கு வருகிறார்கள்? எப்படி ஒரே வருடத்தில் வீடு, கார், வசதிகள் என்று வாழ்க்கையில் செட்டில் ஆகலாம்? இதுபோன்ற ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, ஒரு வழியாக கல்லூரி அட்மிஷனும் நடந்தேறுகிறது.

இனிமையாக  கழிய வேண்டிய, மாணவ மாணவிகளின் கல்லூரிக் காலங்கள், காம்பஸ் இன்டர்வியூ டென்ஷனிலேயே கழிகிறது. காம்பஸ் இன்டர்வியூவில் பாஸ் செய்வதற்கு ஆங்கிலம் பேசுவதற்கான பயிற்சி, சாஃப்ட்வேர் லாஜிகல் பயிற்சி, சரளமாக உரையாடப் பயிற்சி, இன்டர்வியூ செய்பவர்கள் கேட்கின்ற எரிச்சலடைய வைக்கின்ற கேள்விகளுக்குக்  கோபப்படாமல் சிரிப்பதற்குக் கற்றுக் கொடுக்கும் சகிப்புத் தன்மைப் பயிற்சி...என்று ஏராளமான பயிற்சி வகுப்புகளுடன் இன்றைய இளைஞர்களின் கல்லூரி வாழ்க்கை களைகட்டுகிறது.

காம்பஸ் இன்டர்வியூ, அதைத் தொடர்ந்து ஐந்திலக்க சம்பளம் என்று பலவிதமான கனவுகள், கற்பனைகள். மேலும், பெற்றோர், உற்றோரின் ஆசைகள், எதிர்பார்ப்புகள்.  இதோடு  கூடவே, காம்பஸ் இன்டர்வியூவில் ஜெயிக்கா விட்டால் என்ன செய்வது? அற்பமாய் பார்க்கும் சக மாணவ மாணவிகள் கண்களில் இருந்து எப்படி தப்பிப்பது?  இதுபோன்ற மன அழுத்தங்களுடன், இன்றைய இளைஞர்களுக்கு  கலகலப்பாகக் கழிய வேண்டிய கல்லூரி வாழ்க்கை, போராட்ட வாழ்க்கையாகவே இருக்கிறது.

இதில் ஏதேனும் ஓரிடத்தில் சற்றே சருக்கினாலும், பெற்றோர் மற்றும் குழந்தைகள் என இருபாலருக்குமே கோபம், ஆத்திரம், மன அழுத்தம் தான்.

உற்சாகமே வெற்றிக்கான திறவுகோல்

வருங்காலத்தைப் பற்றிய பயமே நிகழ்காலத்தின் செயல்பாடுகளுக்கு ஊன்றுகோலாக இருக்கிறது. பயம் அதிகமாகும்பொழுது ஒரு சிலருக்கு உற்சாகம் வரும், ஒரு சிலருக்கு கவலைகளும், பயங்களும் அதிகமாகும். உற்சாகம் உள்ளவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். கவலைகள் அதிகமாகிறவர்களுக்கு வாழ்க்கை துன்பத்தின் பாதையிலேயே நடைபோடும்.

நம் மகிழ்ச்சி, நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியை தரும். நமது கவலை உடன் இருப்பவர்களுக்கும் கவலையையும், தளர்வையும் ஏற்படுத்தும். ஒரு மனிதனிடமிருந்து பரவும் தொற்றுநோயைப் போன்றது இது. நம்மிடமிருந்து தொற்றுவது நன்மைகளும், மகிழ்ச்சியாகவும் மட்டுமே இருக்க வேண்டும்.

பள்ளி செல்லும் வயதில் வெள்ளிக்கிழமை மாலையில் ஏற்பட ஆரம்பிக்கும் உற்சாகம் திங்கள் கிழமை காலையில் மறைந்து விடுகிறது. கல்லூரிக் காலத்தில் விடுமுறைகளில் உற்சாகம் குறைந்து கல்லூரி நாட்களில் உற்சாகம் அதிகரிக்கிறது. வேலை தேடும் காலங்களில் மிகுந்த ஆவலுடன் நேர்முகத்தேர்வுக்கு செல்லும் நாட்களும், முதல் நாள் வேலைக்கு செல்லும் நாளும் உற்சாகம் மிகுந்தது.

உற்சாகங்கள் வயதிற்கு தகுந்தவாறும், சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறும் மாறுகிறது. ஆனாலும் ஒரு சில நாட்களைத் தவிர பெரும்பாலும் மனம் உற்சாகத்துடன் நம்மை இயங்க வைப்பதில்லை. சூழ்நிலைகள்தான் உற்சாகத்தை தருகின்றதே தவிர, நம் மனது தானாக உற்சாகத்தை உருவாக்குவதில்லை.

மனிதன் பிறந்தது முதல் ஏதோ ஒன்றை தேடி அலைவதற்கே வாழும் காலங்கள் சரியாகிவிடுகிறது. எப்போதும் இருக்கும் இந்தத் தேடலில் உற்சாகத்தை உறங்க வைத்துவிடுகிறோம். தேடல் எந்த அளவுக்கு அவசியமோ, அதே போன்று உற்சாகமும் அவசியம். உற்சாகம் இருந்தால்தான் தேடல் நிறைவு பெறும்.

உற்சாகம் என்பது ஏதோ ஒன்றை சார்ந்தது அல்ல, ஒன்றிலிருந்து மற்றொன்று என விரியும் சங்கிலித் தொடரின் இறுதியே உற்சாகமாகும். மனம்தான் உற்சாகம் என்று பலரும் நினைக்கின்றனர், மனம் ஒரு முக்கிய காரணியாக இருந்தாலும் அதன் தொடர்ச்சியாக உடல் நலம், எண்ணங்கள், செயல்பாடுகள் என தொடரும் அது ஒரு சங்கிலித் தொடர்.

சத்தான உணவுகள்

உடல் நலத்துடனும், சுறுசுறுப்புடனும் இருக்க வேண்டும். உடல் நலத்திற்கு சத்தான உணவுகள் அவசியம். சத்தில்லாத உணவுகள் உடலின் செயல்பாட்டை மந்தமாக்குகிறது. மந்தமான உடல் சிந்தனையிலும் மந்தத்தை உருவாக்குகிறது. சத்தான சரிவிகித உணவு உடல் நலத்தையும், சுறுசுறுப்பையும் தருகிறது.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி என்றவுடன் மணிக்கணக்காக செய்யும் உடற்பயிற்சி என்றோ, எடைகளை தூக்கி கடுமையாக செய்யும் உடற்பயிற்சி என்றோ நினைக்க வேண்டாம், கால் மணி நேர பயிற்சியே போதும். உடற்பயிற்சியே செய்யாமல் இருக்கும் நிலையில் 15 நிமிடம் என்பது போதுமானது. 15 நிமிடத்தில் என்ன செய்வது? கைகள், கால்கள், தலை, இடுப்பு, முதுகு, விரல்கள் என உடலின் அனைத்து பாகங்களையும் "ஸ்ட்ரெச்சிங்" என்று சொல்லக்கூடிய சோம்பல் முறிக்கும் பயிற்சியை செய்யுங்கள்.

நடை பழகுங்கள்

எங்களுக்குத் தான் நடக்கத் தெரியுமே என்கிறீர்களா? நடக்கத் தெரியும் என்றாலும் நாம் நடப்பதற்கு ஆவல் கொள்வது இல்லை, அதுவும் குறிப்பாக காலை நேரத்தில். காலையில் அதிக தூரம் நடக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஒரு 15 நிமிடம் நடந்தாலே போதும். காலை நேரத்தில் உற்சாகமாக செயல்படும் ஒவ்வோருவரின் உற்சாகமும் நம்மையும் தொற்றிக் கொள்ளும்.

இயற்கையை ரசியுங்கள்

இயற்கையை ரசிக்க தொலை தூரத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. நகரத்தில் வாழ்ந்தாலும், கிராமத்தில் வாழ்ந்தாலும் ஒவ்வொரு நாளையும் இயற்கையின் துணையோடுதான் கழிக்கிறோம். ஆனால் அதை நாம் உணர்வதில்லை என்பது உண்மையிலும் உண்மை. காலை நேரத்தின் பனியையும், தென்றலையும், வெயிலையும், அமைதியையும், சாலையின் அழகையும் உணர்வதற்கு ஒரு சில நிமிடங்கள் போதும்.

நகர வாழ்க்கையின் இரவில் நிலவை, நட்சத்திரங்களை எத்தனை பேர் பார்த்திருப்போம். ஒரு மூன்று நிமிடம் ஒதுக்கி வானத்தை ஆராயுங்கள் அது கொடுக்கும் அடுத்த நாளுக்கான உற்சாகத்தை.

இருக்கும் இடத்தில் மனதை செலுத்துங்கள்

தண்ணீரானது அது இருக்கும் பாத்திரத்திற்கு ஏற்ப தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறது. அது போன்று பள்ளியில், கல்லூரியில் இருக்கும்போது பாடங்களை பற்றியும், விளையாட்டு மைதானத்தில் விளையாட்டும், சாப்பிடும் பொழுது சாப்பாட்டிலும், படுக்கையில் தூக்கத்தை மட்டுமே நினையுங்கள். சிந்தனைகள் இருக்கும் இடத்திற்கு சம்பந்தமில்லாமல் விலகிச் செல்லும்பொழுது பதட்டங்களும், கவலைகளும் அதிகமாக வாப்பிருக்கிறது. எனவே மனதை திசை திருப்பி கொண்டு செல்லாதீர்கள்.

நேர்மறையாக எண்ணுங்கள்

இந்த உலகம் நன்மைகளாலும், தீமைகளாலும் நிரம்பி இருக்கிறது. நமக்குத் தேவையானவற்றை நாம் தான் தேடிப் பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வசந்த காலமும், இலையுதிர் காலமும், பனிக் காலமும், மழைக்காலமும், வேனிற் காலமும் நிரந்தரமாக இருப்பதில்லை. வருடம் முழுவதும் மாறி மாறி வருகின்றது. அதே போன்றுதான் பிரச்சனைகளும், மகிழ்ச்சியும். பிரச்சனைகளை எண்ணி அதிகம் கவலை கொள்வது, அடுத்தடுத்த செயல்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்துமே தவிர உற்சாகத்தை தராது. இவற்றை கடந்து விடலாம் அல்லது இது கடந்து போகும் என்று எந்த நிலையிலும் நினையுங்கள்.

நம்மை நாமே மாற்ற முயன்றாலும், மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்துவிட வாய்ப்புகள் குறைவு. பருகப் பருக பாலும் புளிக்கும் என்பது பழமொழி; எனவே தினந்தோறும் நிகழ்வுகளை தனதாக்கிக் கொண்டால் தான் நீடித்த உற்சாகம் தனதாகும்.

Sunday, November 3, 2013

CTS Placement Drive for B.E / B.Tech Freshers , Engineering Colleges in Coimbatore Zone

Anna university organizing placement drive for the final year students who are pusuing in anna university and its all affiliated colleges in Coimbatore zone for B.E /B.Tech  freshers .Apply for Cognizant Technology Solutions placement to be held on Nov 8, 9, 11, 2013 at Mahendra Engineering College , Namakkal

http://i1.wp.com/2.bp.blogspot.com/-7lXghxE3hkM/UnX2Nn__tvI/AAAAAAAADbc/H17VUsA3IO8/s320/cts.jpg?resize=320%2C124
  
Placement Drive Description :

Students who are currently on final year are eligible to apply for the placement, mean that one should not have standing arrears in any of the semester from 1st sem .

Education Qualification :  B.E / B.Tech in CSE , ECE , EEE, IT, ICE , PG – MCA .

Job Role : Programmer Analyst Trainee

Salary package : 3 lakh / annum .

Official website : www.annauniv.edu

Eligibility Criteria:

-    2014 passing out candidates only
-  B.E/B. Tech (CSE, ECE, EEE, EIE, ICE & IT) & PG (MCA)
-   Minimum 75.00% from 10th onwards
-  CGPA of 7.50 and above
- No standing arrears allowed at the time of recruitment process
- Strong Written and Oral Communication Skills
- Flexibility to work in Shifts and in any Cognizant Location
- Open only to Indian Nationals

Selection Process :

Group Discussion for ALL the Candidates

Online Aptitude Test for Shortlisted Candidates

Technical & HR Interview for Shortlisted Candidates

How to Apply ?

Download the application form from Here ,Fill in the details along with the bonafade from your institution,
- Six recent Photographs (both ears visible on a light background) Resume (maximum of 2 pages)
- Photocopy of all academic records and
- College ID Card

Registration Fee : Rs. 750 in DD in favour of ” The Director, CUIC, Anna university ” payable at chennai

ICC Player Rankings T20 Rankings

Twenty20 Batsmen

ICC Player Rankings
RankNameCountryRating
ENG 842
NZ 818
IND 749
NZ 738
SL 731
AUS 729
AUS 728
IND 712
IND 705
AUS 702

 

Twenty 20 Bowlers

ICC Player Rankings
RankNameCountryRating
WI 817
PAK 721
PAK 689
SL 686
BAN 668
ENG 667
ENG 664
BAN 660
ZIM 659
SL 655

 

Twenty20 Allrounders

ICC Player Rankings
RankNameCountryRating
AUS 446
PAK 440
IND 363
BAN 350
PAK 304
WI 273
WI 253
WI 252
SL 247
ENG 204

ICC Player Rankings ODI rankings

ODI Batsmen

ICC Player Rankings
RankNameCountryRating
IND 857
SA 844
AUS 835
SL 829
SA 826
IND 780
ENG 754
SL 746
PAK 720
AUS 708

 ODI Bowlers

ICC Player Rankings
RankNameCountryRating
PAK 768
WI 733
IND 716
ENG 708
SL 699
ENG 696
SA 672
AUS 670
SA 667
PAK 666

ODI Allrounders

ICC Player Rankings
RankNameCountryRating
PAK 399
BAN 380
SL 371
AUS 370
IND 359
SL 344
PAK 315
WI 282
IRE 266
SA 256

ICC Player Rankings Test Matches

Test Batsmen

ICC Player Rankings
RankNameCountryRating
SA 909
SA 898
WI 880
SL 866
AUS 853
PAK 783
IND 777
SA 771
PAK 769
ENG 748


Test Bowlers

ICC Player Rankings
RankNameCountryRating
SA 903
SA 899
SL 831
PAK 824
AUS 782
AUS 760
ENG 760
IND 757
ENG 741
ENG 740

Test Allrounders

 

ICC Player Rankings
RankNameCountryRating
BAN 362
SA 332
IND 321
ENG 288
SA 283
ENG 280
AUS 247
NZ 247
WI 227
AUS 208