Blogger Widgets

Total Page visits

Tuesday, February 25, 2014

பொறியியல் மாணவர்களின் நிலை கேள்விக்குரியதா?

வரும் மே மாதத்தில் தமிழகத்தில் உள்ள 550க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து முடித்து வெளியேற இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் வேலை உறுதியாக காத்திருக்கிறதா என்பது கேள்விக்குரியதே.

இதில் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் முதுநிலை படிக்க செல்பவர்களின் எண்ணிக்கை என குறிப்பிடத்தகுந்த அளவான மாணவர்கள் மட்டும் வேலைவாய்ப்பை எதிர்பார்க்காமல் இருக்கலாம்.

தகவல் தொழில்நுட்பத்துறை

பொறியியல் பாடங்களில் முக்கியத்துவமான பாடமாக பார்க்கப்பட்டு 2002ம் ஆண்டு முதல் 2008 வரை பெரும் முன்னேற்றம் கண்ட துறையாக விளங்கியது தகவல் தொழில்நுட்பத்துறையாகும். 2008க்குப் பிறகு படிப்படியாக குறைய ஆரம்பித்ததும்,  ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி வளாகத்தேர்வுக்கு வரும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் குறைந்ததும்  ஆர்வத்துடன் படிக்க வந்த மாணவர்களிடையே கவலையை உண்டாக்கியுள்ளது.  

ஆனால், அதே நேரம் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு வரும் நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதோடு, தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு கொடுக்கப்படுவதாக உறுதியளிக்கும் ஊதியத்தின் அளவும் அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு அதிகமான ஊதியத்துடன் கிடைத்த வாய்ப்புகள் மற்ற கல்லூரி மாணவர்களிடையே ஏக்கத்தையும், வியப்பையும் உருவாக்கியுள்ளது. அதே போன்று சிறந்த தனியார் கல்லூரிகள், தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் நடக்கும் வளாகத்தேர்விலும் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் சிறப்பான ஊதியத்தை  பெறுகின்றனர்.

மைக்ரோசாஃப்ட், ஆரக்கிள், கூகுள், விப்ரோ, டி.சி.எஸ்., அக்செஞ்சர், கோக்னிசன்ட், இன்ஃபோசிஸ் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றன. இது சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும்,  பிற கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகிவிடுகிறது. இந்த நிலை தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஒரே மாதிரிதான் இருக்கிறது.

ஆட்தேர்வில் மாற்றம்

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளை கணக்கில் எடுத்தால் 3 ஆயிரத்தை கடந்து செல்லும். இதில் படிக்கும் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் வேலை பெறுவது சந்தேகமே. தற்பொழுது நிறுவனங்களும் ஆள் எடுப்பில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்றன. மாணவர்களை தேர்ந்தெடுத்து, பின்னர் அவர்களுக்கு பயிற்சியளித்து பணிக்கு அமர்த்துகின்றனர். பயிற்சிக்கு செலவழிக்கும் தொகை அதிகமாக இருப்பதால், பயிற்சி அளிப்பதை நிறுத்தி நேரடியாக பணிக்கு தயாராக இருப்பவர்களை மட்டும் தேர்ந்தெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையின் காரணமாக கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு பயிற்சியை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. பொறியியல் மாணவர்களின் வேலைவாய்ப்பின்மைக்கு அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் நிலைப்பாட்டை கல்வியாளர்கள் குறை கூறுகின்றனர். ஏனெனில் வருடம்தோறும் புதிய புதிய கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து வருகிறது. 

பாதிப்பிற்கான காரணம்

"இருக்கின்ற கல்வி நிறுவனங்கள் போதிய கட்டமைப்புகளோடு இல்லாத நிலையிலும், மாணவர்கள் வேலை பெறுவதற்கான திறன்களை மேம்படுத்த பல கல்வி நிறுவனங்கள் முயற்சி செய்யாத நிலையிலும், தேவைக்கு அதிகமாக கல்லூரிகள் உள்ள நிலையிலும் புதிய கல்லூரிகள் உருவாவது நாட்டின் எதிர்காலத்திற்கும் உகந்தது அல்ல" என்பதே கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஒரே துறை சார்ந்து அதிகமான கல்வி நிறுவனங்கள் உருவாவது பிற துறைகளின் வளர்ச்சியை பாதிப்பதோடு, சமூக வளர்ச்சியிலும் ஒரு சம நிலையை உருவாக்குவதில் மறைமுகமான தடைகளாக இவை இருக்கிறது. 

சரிவிகித வளர்ச்சி அவசியம்

தமிழகத்தைப் பொறுத்த வரை 2005களில் 200களில் இருந்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 2013ல் 550ஐ கடந்து சென்றுவிட்டது. இந்த அபரிவித வளர்ச்சிக்கு தகுந்த வகையில் கல்வி நிறுவனங்களை மேற்பார்வையிடுவதும், குறைகளைக் களைவதற்கு நடவடிக்கை எடுப்பதும் அவசியமாக இருக்கிறது. ஏனெனில் தொழில் நிறுவனங்களைப் போன்றது அல்ல கல்வி நிறுவனம். படிக்கும் இளையோர்களின் எதிர்காலம் அவர்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சிக்கும் அவசியமாக இருக்கிறது.

thanks dinamalar

Walk-In Interview at St. Johns College of Engineering,Vellore Wanted Professor,Assistant Professor and Lecturer

Post Date: 25th  February 2014
Name of the College: St. Johns College of Engineering

Job Title : Principal/Professor/Assistant Professor/Lecturers
Departments
  • Electronics and Communication Engineering
  • Electrical and Electronics Engineering
  • Computer Science and Engineering
  • Information Technology
  • Mechanical Engineering
  • Civil Engineering
Qualification: M.E/M.Tech/Ph.D and As per AICTE Norms
Experience: Required for all position minimum 3 years 

Candidate Profile
  • Candidate should completed  thier UG/PG in relevent discipline 
  • Candidate should have Good Communication Skill
  • Commitment towards work
  • Have a good Publication record
Interview Process 
  • All the Candidate must Perform 5-10 Minutes Board Presentation
  • Personal Interview
Job Location: Vellore
Walk-in Interview date: 26th and 28th February 2014

Walk-In Interview Time: 10.00 AM to 05.00 PM
Apply Mode :Offline
Website: Clickhere

How to Apply: Interested and eligible candidates are bring your detailed resume along with all necessary original certificates and passport size photograph to the following Venue Address on above mentioned date
Venue Address
The Chairman
St. Johns College of Engineering
Dhanusu Complex,
Sankaranpalayam Road,
Tollgate,
Vellore-632 001.
  
Ref : 25th February 2014,Dailythanthi,Vellore Edition
 

Monday, February 24, 2014

'வாட்ஸ்அப்' கண்டுபிடிப்பாளரின் போராட்டம் நிறைந்த வாழ்க்கை

பிரபல, 'வாட்ஸ்அப்' தொழில்நுட்பத்தால், 1,200 கோடி ரூபாய்க்கு அதிபதியான, ஜான் கூமின், கடந்த கால வாழ்க்கை, போராட்டம் நிறைந்தது.

உலகம் முழுவதும், மொபைல் போன் பயன்பாட்டாளர்களிடையே, 'வாட்ஸ்அப்' மென்பொருள் புகழ் பெற்று விளங்குகிறது. தங்கள் கையில் உள்ள, மொபைல் போன் மூலம், உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ளவர்களுடன், குறுஞ்செய்திகள் மற்றும் படங்களை எளிதாக, குறைந்த கட்டணத்தில் அனுப்பி வருகின்றனர். கடந்த வாரம், இந்த மென்பொருளை, 'பேஸ்புக்' சமூக வலைதளம், 1.15 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கியதுடன், ஜான் கூமை, தன்னுடைய இயக்குனர்கள் குழுவில் ஒருவராக நியமித்தது. ஆனால், ஜான் கூம், இந்த நிலையை அடைய, பெரும் போராட்டம் நடத்தியுள்ளார். சோவியத் யூனியன் உடைந்த பிறகு, உக்ரைனில், யூதர்களுக்கு எதிரான போலீசாரின் அடக்குமுறையில் இருந்து தப்பித்து, தாயுடன், அமெரிக்காவிற்கு குடியேறிய கூம், பழைய நோட்டுப் புத்தகங்களுடன், ஒரு வேளை உணவுக்காக வரிசையில் காத்திருக்க நேரிட்டது. பின்னர், ஒரு மளிகைக் கடையில், தரையை சுத்தம் செய்யும் பணியை செய்தவாறு, கல்லூரி படிப்பை முடித்தார். அவருடைய தாய்க்கு புற்றுநோய் தாக்கியிருப்பதை அறிந்த அமெரிக்க அரசு, மருத்துவத்திற்காக நிதியுதவி அளித்தது. கல்லூரி படிப்பை முடித்த பிறகு, சிலிகான் வேலியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் பாதுகாப்பு நிறுவனப் பணியில் சேர்ந்தார். அங்கு, கலிபோர்னியாவைச் சேர்ந்த, பிரையன் ஆக்டன் நண்பரானார். கூமின் தாய் இறந்த பின், அவருக்கு ஆக்டன் ஆதரவளித்தார்; இருவரும் இணைந்து யாகூவில் பணியாற்றியவாறு, தங்களுடைய கண்டுபிடிப்பில் ஈடுபட்டனர். கடந்த 2007ல், யாகூவை விட்டு வெளியேறிய பின், மொபைல் போன்களில் பயன்படுத்தும், 'வாட்ஸ்அப்' அப்ளிகேஷனை வெற்றிகரமாக தயாரித்து செயல்படுத்தினர்.

இன்று, பேஸ்புக், டுவிட்டரை விட, அதிகளவில், இந்த அப்ளிகேஷனை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எந்த இடத்தில், ஒரு வேளை உணவுக்காக, தன் தாயுடன் வரிசையில் நின்றாரோ, அதே சிலிகான் வேலி பகுதியில் அமைந்துள்ள, பேஸ்புக் நிறுவனத்தின் அலுவலகத்தில், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். பதினாறு வயதில் இருந்து போராடத் துவங்கிய கூம், தன்னுடைய, 38வது வயதில் கோடீஸ்வரராகி சாதித்துள்ளார்.

Source dinamalar

Friday, February 21, 2014

K S R Institute for Engineering and Technology Wanted Professor/Associate and Assistant Professor


College Profile: The K S R Institute for Engineering and Technology is another landmark of the Aarthi Educational & Charitable Trust which has the perquisite of sprawling education proportionally to the society.  It has been founded in the year 2011 by the man of great insight, Thiru.R. Srinivasan.  He is the younger son of Lion Dr.K.S.Rangasamy whose altruism enlightens the society.  His constant dreams and endeavours erected the doom of knowledge for quenching the long unanswered quest among the blooming minds.


Job TitleProfessor/Associate Professor/Assistant Professor
Departments: 
  • Mechanical Engineering
  • Electronics and Communication Engineering
  • Computer Science and Engineering
  • Electrical and Electronic Engineering
  • Information Technology
  • Maths
  • Physics
  • Chemistry
  • English
Qualification: M.E/M.Tech/M.Sc/M.A/M.Phil/Ph.D and As per AICTE Norms

Candidate Profile:
  • Candidate should completed  their PG  in relevant discipline 
  • Candidate should have Good Communication Skill
  • Commitment towards work
  • Have a good Publication record
Job LocationNamakkal
Scale of Pay : As per College Norms

Last Date: With in 9 day

Apply Mode : Offline

Website : Clickhere
How to Apply: Interested and Eligible candidates are request to send your detailed resume along with necessary document and passport size photograhp to following Postal Address with in 9 days

Postal  Address:
The Principal,
K S R Institute for Engineering and Technology,
K.S.R. Kalvi Nagar, Tiruchengode - 637 215,
Namakkal District, Tamilnadu, India

Ref: The Hindu, Coimbatore Edition, 20th February 2014

Arulmurugan College of Engineering, Karur Wanted Professor/Associate Professor/Assistant Professor


Post Date19th February 2014
Name of the College Arulmurugan College of Engineering
College Profile: Arulmurugan College of Engineering, started in the year 2012 as a partner of the youth of today, with an outcome-based laser focus on prosperity, shares the youth's urgency and optimism for the future of the individual and the country. Arulmurugan College of Engineering is geared to work side by side with the individual students and committed, too, through the boldness by design and shape for future initiatives, to our continuous improvement and stake holders. Arulmurugan is an innovative and creative Institution. The entire faculty attempt to provide advanced knowledge delivery with research input, uniquely equipped to partner in the community development and regional economic development initiatives that will be so vital to our future.


Job Title: Professor/Associate Professor/Assistant Professor
Departments: 
  • Mechanical Engineering
  • Civil Engineering
  • Computer Science and Engineering
  • Electronics and Communication Engineering
  • Electrical and Electronics Engineering
  • Maths
  • Physics
  • Chemistry
  • English
Qualification: M.E/M.Tech/M.Sc/M.A/M.Phil/Ph.D and As per AICTE Norms

Candidate Profile:
  • Candidate should completed  their PG  in relevant discipline 
  • Candidate should have Good Communication Skill
  • Commitment towards work
  • Have a good Publication record
Job LocationKarur
Scale of Pay : As per AICTE Norms

Last Date: As soon as possible

Apply Mode : Offline/Online

Website : Clickhere
How to Apply: Interested and Eligible candidates are request to send your application along with necessary document and passport size photograh to following Postal Address or Email Address as soon as possible

Email Address: engg@arulmurugan.edu.in

Postal  Address:
ThePrincipal,
Arulmurugan College of Engineering,
Thennilai,
Karur – 639 206.
Tamilnadu, India

Thursday, February 20, 2014

உங்கள் மூளையை திறன்மிக்கதாய் மாற்றும் வழிகள்

தேர்வுக்கு தயாராகும்போது நீங்கள் முக்கியமாக கவனிக்கக்கூடிய விஷயங்களுள் ஒன்று உங்கள் மூளை. "அது இருந்தால்தான் இவ்வளவு பிரச்னை இருக்காதே" என்று கேட்கிறீர்களா? மனிதனாக பிறந்தாலே மேல் மாடியில் ஏதோ ஒரு சாம்பல் வஸ்து ஒரு இருக்கின்றது இல்லையா.. அப்படியானால் அடடே உங்கள்ளுக்கும் மூளை இருக்கின்றதுதான்!

கவனமாக படியுங்கள். உங்களுடைய திறமையின் அச்சாரமே உங்கள் மூளைதான். அது சீராக செயல்பட்டால் அதனுடைய ஆற்றல் பிரமிக்கத்தக்கது. ஆனால் நம்மில் பெரும்பாலோருக்கு அது சீராக செயல்படுவதில்லை. ஆகவேதான் கவனக்குறைவு, படிப்பது நினைவில் நிற்பது இல்லை. படிக்கவே தோன்றுவது இல்லை அல்லது அதில் நாட்டம் இல்லை. வீடியோ கேமில் வரும் உற்சாகம் படிப்பில் வருவது இல்லை போன்ற குறைபாடுகள்.

அதனை சொல்லியும் குற்றம் இல்லை. நீங்கள் ஒரு கம்ப்யூட்டர், அல்லது கார் வாங்க செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவற்றோடு கூட அதை எப்படி இயக்க வேண்டும் என்ற சின்ன புத்தகத்தை கொடுப்பார்கள். எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்று அதில் தெளிவாக எழுதி வைத்திருக்கும். அனால் நீங்கள் பிறந்தபோது உங்களோடு சேர்ந்து உங்கள் மூளையை எப்படி இயக்குவது என்று ஒரு சின்ன புத்தகமும் சேர்ந்து பிறந்ததா என்ன? இல்லையே. அந்த குறையை நிவர்த்தி செய்வதற்கு இப்போதைய அறிவியல் நம் மூளையை பற்றிய பல விஷயங்களை ஒவ்வொரு நாளும் கண்டறிந்து இருக்கின்றது. அவற்றை ஒவ்வொன்றாய் பார்ப்போம். 

இந்த மூளையை சீராக இயக்க மட்டும் கற்றுக் கொண்டால் ஒவ்வொருவரிலிருந்தும் ஒரு அசகாய சக்தி பிறந்து அவர்களை எதையும் சாதிக்க வைக்கும். இத்தகு ஆற்றல் மிகுந்த மூளையை இயக்க கற்றுக்கொள்வது எப்படி என்பது ஓரிரு நாட்களுக்குள் நடைபெறும் பணி அல்ல. அது ஒரு கடல். ஞாபக மறதி, கவனமின்மை, நாட்டமின்மை இவை எல்லாமே பொய்களாகி, மகா மக்கு மாணவர்களுக்கு கூட இந்தக் கலையை இந்த பக்கங்களுக்குள் அடக்கி கற்று தந்துவிட முடியாது. 

முதலாவதாக இந்த மூளை இயங்கும் இடம் நம்முடைய உடல். அதனை ஒழுங்காக பராமரிப்பதன் மூலம் நாம் நம் மூளையின் சிறந்த செயல்பாட்டிற்கு வழி வகுக்கலாம். தேர்வுக்கென்று நீங்கள் தயாராகும் சமயத்தில் உங்கள் மூளையை இப்போதிருந்தே நீங்கள் பராமரிப்பது அவசியம். இந்த இருபது நாட்களுமே உங்கள் உணவில் உங்கள் மூளைக்கு ஏற்ற ஊட்ட சத்துக்கள் இருக்குமாறு பார்த்து கொள்ளவும். 

ஐந்து அத்தியாவசிய உணவுகள் தேர்வு காலத்தில்:
 
1. முளை கட்டிய தானியங்கள் ஒரு கப் அன்றாடம் அல்லது மீன்/முட்டை.
2. பசலைக் கீரை பொரியல், சூப், குழம்பு என எதோ ஒரு வடிவத்தில்
3. வாழைத்தண்டு - ஒரு கிண்ணம் - கூட்டு / ஜூஸ்
4. உலர்ந்த பழங்கள் - பாதாம், பேரிச்சை, திராட்சை
5. பச்சை காய்கறிகள் / பழங்கள் 

அப்படியே அறவே தவிர்க்க வேண்டிய ஐந்து உணவுகள்: 

1. சீஸ்: இது செரிமானத்திற்கு கஷ்டமான உணவு, தேர்வு சமயத்தில் தவிர்ப்பது நல்லது.

2. காபி / டி: இது கண் விழித்து படிப்பதற்கு உதவும் என்று அதிக மாணவர்கள் குடிக்கும் விஷயம். அனால் இது இயல்பான தூக்க நிலையை கெடுப்பதுடன் தூங்கும் வேளையில் கூட மூளைக்கு தேவையான ஓய்வை தராது. இதற்கு பதிலாக சுக்கு காபி, இஞ்சி காபி போன்றவற்றை சூடாக குடிக்கலாம்.

3. சிகரெட் / மது: இவற்றை பற்றி சொல்லவே வேண்டாம். மூளை மற்றும் உடலின் முதல் எதிரிகள்.

4. சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் (மைதா, வெள்ளை அரிசி, வெள்ளை சர்க்கரை, அதிகமான இனிப்புகள்) : ஜீரணத்திற்கு பாதகம் விளைவிக்கும் என்பதினால், இவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டாம் என்றாலும், கூடிய மட்டும் குறைத்துக் கொள்ளலாம்.

5. கடைகளில் விற்கப்படும் அடைக்கப்பட்ட உணவுகள், நொறுக்கு தீனிகள்.
இவற்றோடு சேர்ந்து அடிக்கடி தண்ணீர் அருந்தும் பழக்கம். இது உங்களுடைய உடலையும் அதற்குள் இயங்கும் மூளையையும் சிறந்த நிலையில் வைத்திருக்க உதவும். துருப்பிடித்த சைக்கிள் அதுவே எண்ணெய் விட்டால் எவ்வளவு அருமையாக ஓடுகிறது இல்லையா? அதே போல் உங்கள் மூளை சீராக இயங்க மிகவும் தேவையான சமாச்சாரங்கள் இவை. 

இன்று முதல் இவற்றை ஒவ்வொரு நாளும் பின்பற்றுங்கள். தேர்வு நேரத்தில் களைப்படையாமல் எழுத, சமயோசிதமாக செயல்பட என்று அனைத்திற்கும் ஏதுவாக இருக்கும். இவை உடலளவில் அவசியம். அனால் இதே மூளையை படிக்க பயன்படுத்தும் போது இன்னும் சில விஷங்களை நீங்கள் கடைபிடித்தால் அதன் ஆற்றல் பன்மடங்கு பெருகும்.

                                                        -  கீர்த்தன்யா, மைன்ட்பிரஷ்
Shared from dinamalar education malar

பி.இ. தகவல் தொழில்நுட்ப படிப்பை கைவிடும் 18 கல்லூரிகள்

தமிழகத்தில் வரும் 2014-15 கல்வியாண்டில் 18 பொறியியல் கல்லூரிகளில் பி.டெக். தகவல் தொழில்நுட்ப படிப்பை கைவிட முடிவு செய்துள்ளன.

கடந்த 2013-14 கல்வியாண்டில் இந்தப் படிப்பை 19 பொறியியல் கல்லூரிகள் கைவிட்டன. இப்போது இந்தப் படிப்பை கைவிட 18 கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்துள்ளன. மேலும், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளை இழுத்து மூடுவதற்கும் கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள், கல்லூரி வளாகத் தேர்வுக்கு வரும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது உள்ளிட்ட காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.

நடந்து முடிந்த 2013-14 கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வில் இசிஇ பிரிவில் உள்ள அரசு ஒதுக்கீட்டிலான 42,966 இடங்களில் 24,992 இடங்கள் நிரம்பின.

பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் உள்ள 33,505 இடங்களில் 15,684 இடங்கள் நிரம்பின. பி.டெக். தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.) துறையில் மொத்தமுள்ள 16,466 இடங்களில் 6,705 இடங்கள் மட்டுமே நிரம்பின.

பி.டெக். தகவல் தொழில்நுட்பம் படிப்பில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்ததால், இந்தப் படிப்பை இழுத்து மூடும் நிலைக்கு பல கல்லூரிகள் தள்ளப்பட்டுள்ளன.

மேலும் கம்ப்யூட்டர் சார்ந்த பிற படிப்புகளான இசிஇ, சிஎஸ்இ படிப்புகளிலும் மாணவர் சேர்க்கையை குறைக்க கல்லூரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

படிப்புகளை நிறுத்தும் இந்த கல்லூரிகள் பேராசிரியர் குறைப்பு நடவடிக்கையையும் இப்போது தொடங்கியுள்ளன.

Thanks dinamani

Wednesday, February 12, 2014

குடும்ப வாழக்கையை சீர்குலைக்கும் சட்டத் திருத்தம்

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று நமது அரசியல் சட்டம் கூறுகிறது; ஆணும் பெண்ணும் சமம் என்று நம்புபவன்; அதன் மூலம் நாட்டை முன்னேற்ற நினைப்பவன் நான். ஆனால் தற்போது குடும்பத்தைச் சின்னாபின்னமாக்கும் பல சட்டங்களைக் அரசு கொண்டுவருகிறது.

2013ம் வருடத்திய இந்து திருமண திருத்த மசோதாவின் படி, ஒரு பெண் விவாகரத்து கோரி்ப் பெற்றால், அவருக்கு கணவரின் சொத்தில் பாதி வழங்கப்பட வேண்டும். கணவரின் பரம்பரைச் சொத்தாக இருந்தாலும், திருமணத்திற்கு முன் சேர்த்த சொத்தாகவும் இருந்தாலும், அதில் பாதியைப் பெற விவாகரத்து கோரும் மனைவிக்கு உரிமை உண்டு என்கிறது இந்த புதிய சட்டத்திருத்தம். மேலும் மனைவி விவாக ரத்து கோரினால் அதை மறுக்கும் உரிமை கணவனுக்கு இல்லை.

இது சட்டமாக மாறினால், அது சமுதாயத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். இந்த திருத்த மசோதா ஒரு தலைப்பட்சமானது; பாரபட்சமான இத்தகைய சட்டங்களை எதிர்க்க வேண்டும். நம்பிக்கை அடிப்படையில் இருக்க வேண்டிய குடும்ப நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் இந்த திருத்த மசோதாவை நிறைவேற்ற விடக்கூடாது.

இந்த திருத்த மசோதாவை மேலோட்டமாக படித்தாலே, நாம் திருமணம் இல்லாத ஒரு சமுதாயத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்ிழோம் என்பது தெளிவாகும். இதனால் முறையற்ற உறவுகளும் தந்தையர் இல்லாத குழந்தைகளும் உருவாகும் நிலை ஏற்படும்.

பொறுப்பற்ற பெண்களுக்கு இந்த சட்டத் திருத்தம் மேலும் ஒரு அராஜக ஆயுதமாக கிடைத்து விடும். பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதென்பது, ஆண்களின் உரிமைகளை ஒடுக்குவதாக இருக்கக்கூடாது.

இந்த புதிய சட்டத் திருத்ததின்படி, மனைவி விவாகரத்து கோரினால், கணவனால் அதை மறுக்க முடியாது. இது அரசியல் சட்டத்ததுக்கு எதிரானதல்லவா? ஏன் கணவன் விவாகரத்து பெற்று வேறு திருமணம் செய்யக்கூடாது? விவாகரத்து பெறும் மனைவிக்கு கணவனி்ன் பரம்பரைச் சொத்திலும், சுயமாக சேர்த்த சொத்திலம் பங்குஎன்பது எப்படி நியாயம்? ஒரு நாள் மனைவியாக இருந்தாலும், கணவனின் பரம்பரைச் சொத்திலும், அவன் உழைப்பால் சேர்த்த சொத்திலும் உரிமை கோருவதென்பது அர்த்தமற்றதாக இருக்கிறதே.

சொத்தில் பங்கு கேட்பதற்கு, குறிப்பிட்ட காலம் சேர்ந்து வாழ்ந்திருக்க வேண்டு்ம் என்று நிர்ணயிக்கப்பட வேண்டும்.

சட்டம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக இருக்க வேண்டு்ம்; கணவன் விவாகரத்து கோரினால் அதை எதிர்க்க மனைவிக்கு உரிமை இருக்கும்போது, மனைவி கோரும் விவாக ரத்தையும் எதிர்க்க கணவனுக்கு உரிமை தரப்பட வேண்டும்.

விவாகரத்தின்போது பரபம்பரைச் சொத்தை கணக்கில் கொள்ளக்கூடாது. நிதிநிலைச் சிரமம் என்பதற்கு தெளிவான விளக்கம் கொடுக்கப்பட வேண்டும்; இல்லையேல் பெண்கள் இதையே வியாபாரமாக கருதி விடக்கூடும்.

இருவரும் சேர்ந்து வாழ்ந்த காலத்தையும், இநத் திருமணத்தால் இருவருக்கும் ஏற்பட்ட இழப்பையும் கருத்தில் கொண்டு நிதி .உதவி நிர்ணயிக்கப்பட வேண்டும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும் விவாகரத்து வழங்கப்படும் முன் நிர்ணயிக்க வேண்டும்.

ஏற்கனவே உள்ள வரதட்சணைக் கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துவதால் எத்தனை ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். இந்த சட்டங்கள் அப்பாவி பெண்களுக்கு பயனுள்ளவைதான்; ஆனால் வேண்டுமென்றே தவறும் செய்யும் பெண்கள் இதை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.

நிறைவாக இந்த பதிய திருத்த சட்டத்தால் குடு்ம்ப ஒற்றுமையை நாம் இழப்போம்; தற்கொலைகள் அதிகரிக்கும். குழந்தைகள் தாய் தந்தையர் கவனிப்பின்றி அனாதைகளாக அடிமைகளாக மாற்றப்படுவர். இததகைய நிலை ஏற்படுவதைத் தடுக்க, இப்போதே நடவடிக்கை எடுப்பார்களா? .

Sourcse dinamalar

Wednesday, February 5, 2014

எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் பட்டமேற்படிப்பால் சாதிக்கலாம்

வாழ்க்கையில் சாதிக்க கூடிய எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் பிரிவில் பல்வேறு பட்ட மேற்படிப்புகள் உள்ளன. இப் படிப்புக்கு குறைந்த அளவு வேலைவாய்ப்பே உள்ளது என்பது பலரது கருத்தாக உள்ளது. ஆனால், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துறை வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதால் பல்வேறு துறைகளில் இப் படிப்புக்கு சிறந்த எதிர்காலம் நிறைந்துள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ. மற்றும் எம்.டெக். பட்ட மேற்படிப்புகளில் ஹை- வோல்டேஜ் இன்ஜினீயரிங், எனர்ஜி இன்ஜினீயரிங் உள்ளிட்ட படிப்புகள் உள்ளன. ரினிவபல் எனர்ஜி இன்ஜினீயரிங், நியூக்லியர் இன்ஜினீயரிங் பட்ட மேற்படிப்புகளை சாஸ்தா, எஸ்.ஆர்.எம். உள்ளிட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன. பாபா அகாடமி ரிசர்ச் சென்டர் ஓராண்டு பட்டமேற்படிப்பாக நியூக்லியர் இன்ஜினீயரிங் படிப்பை அளிக்கிறது. 

எம்.இ. மற்றும் எம்.டெக். பட்ட மேற்படிப்புகளில் பல்வேறு சிறப்பு பாடப்பிரிவுகள் உள்ளன. அதில், பவர் எலக்ட்ரானிக் அண்ட் டிரைவ்ஸ், பவர் சிஸ்டம்ஸ் எலக்ட்ரிக்கல் மிஷின்ஸ் அப்ளைடு தி எலக்ட்ரானிக்ஸ் படிப்புகளை எடுத்து படிப்பதன் மூலம் பணி வாய்ப்பு சிறப்பாக உள்ளது. 

நேஷனல் பவர் பிளான்ட் இன்ஸ்டிடியூட் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் மாணவர்களுக்கு குறைந்தபட்ச பட்ட மேற்படிப்புகள் வழங்குகின்றன. எலக்ட்ரிக்கல் பில்டிங் சர்வீசஸ் படிப்பு சுய வேலைவாய்ப்பு அளிக்கும் படிப்பாக உள்ளது. 

வீடு, கடை, நிறுவனங்களில் மின்சாதனப் பொருட்களின் உபயோகம் அதிக அளவு உள்ளது. எனவே, எலக்ட்ரிக்கல் இன்ஸ்டாலேஷன் இன் பில்டிங் அண்டு அவுட்டோர் படிப்பு உடனடி வேலைவாய்ப்பை அளிக்கிறது. பி.ஜி. புரோகிராம் டிப்ளேமோ இன் எனர்ஜி எஃபிசியன்ஸி, எனர்ஜி ஆடிட் அண்ட் மேனேஜ்மென்ட் படிப்புகள், சி.இ.இ.எஸ். சர்ட்டிபிகேட் கோர்ஸுக்கு தகுதியானது. இப் படிப்பின் மூலம் எனர்ஜி எக்ஸ்பர்ட்டாகவும், எனர்ஜி கன்சல்டன்ட், எனர்ஜி ஆடிட்டர், எனர்ஜி மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்களுக்கும் செல்ல இயலும். நியூக்லியர் எனர்ஜி இன்ஜினீயரிங்குக்கு அதிக அளவு தேவை உள்ளது. குஜராத்தில் உள்ள ஸ்கூல் ஆஃப் நியூக்லியர் இன்ஜினீயரிங், தீனதயாள் பண்டிட் பெட்ரோலியம் யுனிவர்சிட்டி மூலம் நியூக்லியர் எனர்ஜி பட்ட மேற்படிப்பை வழங்குகிறது. எனர்ஜி பவர் செக்டாரில் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெறுவதன் மூலம் எனர்ஜி ஆடிட்டர் கோர்ஸ் எடுக்க முடியும். 

பொறியியல் பட்டப் படிப்பு முடித்த பிறகு ஆட்டோமோடிவ் எலக்ட்ரிக்கல்- எலக்ட்ரானிக்ஸ் கோர்ஸ் பகுதிநேரமாக படிக்கலாம். பெங்களூருவில் உள்ள எம்.எஸ்.ராமையா ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ் ஸ்டடியில் இப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. சோலார் எனர்ஜி பணிக்கான தேவை அதிக அளவு உள்ள நிலையில், தனியார் நிறுவனங்களில் சேர்வதிலும், சுயதொழில் செய்வதிலும் வாய்ப்பு உள்ளது. குஜராத் இன்ஸ்டிடியூட் ஆஃப் சோலார் எனர்ஜி கல்வி நிறுவனத்தில் இதற்கான பட்ட மேற்படிப்புகளை அளிக்கின்றனர். இதில் அட்வான்ஸ் சர்ட்டிபிகேட் இன் சோலார் எனர்ஜி 6 மாத பட்ட மேற்படிப்பு உள்ளது. எம்.பி.ஏ. பட்ட மேற்படிப்பிலும் பவர் மேனேஜ்மென்ட் எடுத்து படிப்பதால், சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளலாம். 

கணினித் துறையில் கணிசமான வாய்ப்புகள்!

பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.டெக். இன்ஃபர்மேஷன் படிப்பவர்கள் படிக்கும்போதே தொழில்நுட்ப அறிவை புதுப்பித்துக்கொள்வதுடன் (Updating) எம்.இ., எம்.டெக். போன்ற மேற்படிப்புகளைப் படித்தால் மிகச் சிறந்த எதிர்காலத்தை பெறலாம். பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும்போதே, நீங்கள் தேர்வு செய்யக்கூடிய தொழிலின் தன்மை மற்றும் நிறுவனத்துக்கு ஏற்ற, கணினி அறிவை கற்பது அவசியம். 

ஆங்கில மொழி அறிவு மிக அவசியம். பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர்களின் பாடத் திட்டத்துக்கும் அவர்கள் செல்லும் பணியின் தன்மைக்கும் இடைவெளி அதிகமாக உள்ளது. இதனால் சிறந்த மதிப்பெண் எடுத்தவர்களும்கூட பணியில் சிறப்பாக செயல்பட முடிவதில்லை. எனவே, மூன்றாம் ஆண்டு படிக்கும்போதே, புதியதாக அறிமுகமாகும் கிளவுட் கம்ப்யூட்டிங், ஆர் - லேங்குவேஜ், பிக் - டேட்டா, ஹேடூப் (HADOOP), டேட்டா அனலைடிக்ஸ் போன்ற கணினி தொழில்நுட்பங்களை கற்பது அவசியம். 

பெரிய நிறுவனங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று, அதில் தகுதி பெறுவதன் மூலம் எளிதில் வேலை வாய்ப்பு பெறலாம். இதுபோன்ற தேர்வுகள் குறித்து பலரும் அறியாமல் இருக்கின்றனர். வேலை வாய்ப்பு இணைய தளங்களில் தொடர்பில் இருப்பதன் மூலம் மைக்ரோ சாஃப்ட் ஸ்டூடன்ட் பார்ட்னர் புரோகிராம், ஃபேஸ் புக் அம்பாசிடர், கூகுல் அம்பாசிடர், மொசிலா கேம்பஸ் ரெப்ரசென்டேட்டிவ், ஒபேரா கேம்பஸ் க்ரு, மைக்ரோசாஃப்ட் இமேஜின் கப், ஐ.பி.எம். கிரேட் மைண்ட், கூகுல் சம்மர் கோப், ஃபேஸ் புக் எக்கத்தான் போன்ற பெரும் நிறுவனங்களின் போட்டித் தேர்வுகளை அறிந்துகொள்ளலாம். 

அதேபோல், இரண்டாம் ஆண்டு படிக்கும்போதே சிஸ்கோ சர்டிஃபிகேஷன், மைக்ரோசாஃப்ட் சர்டிஃபிகேஷன், சன் சர்டிஃபிகேஷன், ஆரக்கல் சர்டிஃபிகேஷன் உள்ளிட்ட சான்றிதழ் படிப்புகளையும் முடிப்பது வேலை வாய்ப்பை அதிகப்படுத்தும். எம்.இ. படிக்க விரும்புவோர் கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங், வயர்லெஸ் நெட்வொர்க்கிங், சாஃப்ட்வேர் வொர்க்கிங் இன்ஜினீயரிங், சைபர் நெட்வொர்க்கிங் செக்யூரிட்டி உள்ளிட்ட பாடப் பிரிவுகளை தேர்வு செய்யலாம். 

ஐ.ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி அண்டு மேனேஜ்மென்ட் பட்ட மேற்படிப்பு உள்ளது. பெங்களூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 இடங்களில், அக்கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. GATE தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை உண்டு. இதனை படிப்பவர்களுக்கு 100 சதவீத வேலை வாய்ப்பு உண்டு. தவிர எம்.பி.ஏ. உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகள் மூலமும் சிறப்பான வேலை வாய்ப்பு பெறலாம்.