Blogger Widgets

Total Page visits

Saturday, August 17, 2013

நியூசி., செல்லுமா இந்திய அணி

நியூசிலாந்து தொடரில் பங்கேற்க, இந்திய அணி அங்கு செல்லுமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) எதிர்கால அட்டவணைப்படி, இந்திய அணி, வரும் 2014 பிப்., முதல் மார்ச் வரை நியூசிலாந்து சென்று, மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு "டுவென்டி-20' போட்டியில் பங்கேற்க வேண்டும். 

இதனிடையே, 2014, பிப்., 24 முதல் மார்ச் 8 வரை, வங்கதேசத்தில் ஆசிய கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இதில் இந்திய அணி பங்கேற்கிறது. இதனால், நியூசிலாந்து தொடரில் போட்டிகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தெரிவித்தது. 

இதன்படி, தலா இரண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் இரண்டு "டுவென்டி-20' போட்டிகள் போதும் என, இந்தியா தெரிவித்தது. இதுகுறித்து இன்னும் இறுதி முடிவெடுக்கப் படவில்லை. 

இருப்பினும், இந்திய அணியின் நியூசிலாந்து பயணம் அதிகமான வருமானத்தை பெற்றுத்தரும் என்பதால், பி.சி.சி.ஐ., முடிவுக்காக, அவர்கள் காத்திருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து நியூசிலாந்து கிரிக்கெட்டின் தலைமை அதிகாரி டேவிட் ஒயிட் கூறுகையில்,"" இந்தியா தொடர் குறித்து பி.சி.சி.ஐ.,யுடன் நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்பது உண்மை தான். அடுத்த சில வாரங்களில் போட்டிகள் குறித்த அட்டவணை வெளியாகும் என்று நம்புகிறோம்,'' என்றார்

No comments: