Blogger Widgets

Total Page visits

Sunday, December 10, 2017

டிஜிட்டல் போதை 12: வராத தூக்கம்... வராத கவனம்!

னிதனுக்குத் தொழில்நுட்பம் அறிமுகமானதும் முதலில் களவாடப்பட்டது நம் தூக்கத்தைத்தான். இரவானவுடன் ஓய்வைத் தொடங்கிய ஆதிகால மனிதன், தூக்கத்தை இழந்தது நெருப்பைக் கண்டுபிடித்த பிறகுதான்.
தொலைக்காட்சி வருவதற்கு முன், தினமும் ஒருவர் 8 மணி நேரம்வரை கண்டிப்பாகத் தூங்க வேண்டும் என்று சொல்லி வந்த டாக்டர்களின் வாயை மூடிவிட்டன பெருநிறுவனங்கள். இன்று 6 மணி நேரம் தூங்கினாலே போதும் என்கிறார்கள். ஆனால் அதையும் நம் குழந்தைகளிடமிருந்து பிரித்துவிட்டது ஸ்மார்ட்போன்.

சிதையும் தகவல்கள்

உடலுக்கும் மூளைக்கும் தூக்கம் அவசியமானது. தூங்கும் நேரத்தில்தான் நம் உடல் உறுப்புகள் தம்மைச் சீர்செய்துகொள்கின்றன. மூளை, தான் பெற்ற அனைத்துத் தகவல்களையும் ஒருங்கிணைக்கிறது. போதுமான தூக்கம் இல்லை என்றால், உடலுக்கும் ஓய்வில்லை, தகவல்களும் கலைந்துவிடுகின்றன. போதுமான தூக்கமின்மை பல துணைநோய்களை உடலுக்குப் பரிசளிக்கிறது.
அதிக எடையுடன் இருப்பவர்கள், கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வார்கள். தங்கள் கலோரிகளை எரிப்பார்கள். ஆனால் 6 மணி நேரம் தொந்தரவில்லாமல் தூங்கினால் உடலே சுமார் 1,000 கலோரிகளை எரித்துவிடுகிறது. சரியான தூக்கமே உடல் எடை அதிகரிப்பை நிறுத்துகிறது.

ஒழுங்கற்ற தூக்கம்

ஆனால் போதுமான தூக்கம் இல்லை என்றால், உங்கள் உடல் சோர்வடைகிறது. மனச் சோர்வு ஏற்படுகிறது. எரிச்சல், கவனமின்மை, அதீத கோபம், பொறுமையின்மை எனப் பல துணைப் பிரச்சினைகளைத் தூக்கமின்மை கொண்டுவருகிறது.
உண்மையில் வீடியோ கேம் விளையாடுவதால் ஒருவர் தூங்குவதே இல்லை என்று சொல்லிவிட முடியாது. மூளை அப்படி வேலை செய்ய முடியாது. முதலாவதாக தூக்கம் ஒழுங்கற்றுப் போகும். முதல் 24 மணி நேரம்வரை ஓய்வு கொடுக்காமல், அடுத்த நாளின் நேரத்தைக் கடன் வாங்கி அதிகமாகத் தூங்குவார்கள். படுக்கைக்குச் செல்லும் நேரமும் ஒழுங்காக இருக்காது. இரவில் தூங்குவதற்குப் பதில் பகலில் தூங்குவார்கள். கால் நீட்டி வசதியாகப் படுக்காமல், கணினி முன் இருக்கும் இருக்கையில் அமர்ந்தபடி தூங்குவார்கள்.
இவை எதுவுமே சரியான தூங்கும் முறை கிடையாது. போதுமான தூக்கம் இல்லாமல் பள்ளியில் கற்க முடியாது. உடலை வளைத்து விளையாடவும் முடியாது. புதிதாக எதையும் சாதிக்கவும் முடியாது.

தூண்டுதலுக்கு மட்டுமே கவனம்

வீடியோ கேம் ஆடுவதால் குழந்தைகளின் கவனம் சிதறுகிறது என்று நான் பொய் சொல்லப் போவதில்லை ஆனால் மிக முக்கியமான சில பாதிப்புகள் இருக்கின்றன.
வீடியோ கேம் விளையாடும்போது, அது விளையாடுபவர்களின் கவனத்தை நன்றாகக் குவிக்க உதவுகிறது. அப்போதுதான் அவர்களால் பாயிண்ட் எடுக்க முடியும். என்றாலும் இதில் பிரச்சினை இல்லாமல் இல்லை.
அதிகமாக வீடியோ கேம் விளையாடுபவர்களால் குறிப்பிட்ட சில தூண்டுதல்களுக்கு மட்டும்தான் கவனம் குவிக்க முடிகிறது. சுற்றுப்புறத்தில் எந்த சுவாரசியமோ, கண்னை வசீகரிக்கும் வண்ணங்களோ இல்லை என்றால் அவர்களின் கவனம் குவிவது கடினமாகிவிடுகிறது.

விளையாட்டில் மட்டுமே கவனம்

வீடியோ கேம் விளையாடும் குழந்தைகளை ஆய்வுசெய்து பார்த்ததில் மிகவும் கலவையான முடிவுகளே கிடைத்தன. சாதாரணமாக வீடியோ கேம் விளையாடும் குழந்தைகள் சில செயல்களில் கவனத்தை குவிப்பது கடினமாக இருந்தது. அதேநேரம், அதீதமாக வீடியோ கேம் விளையாடும் சிறுவர்கள், அந்தக் குறிப்பிட்ட செயலில், அதாவது வீடியோ கேம் விளையாட்டில் மட்டுமே கவனத்தைக் குவிக்க முடிந்தது.
மற்றொருபுறம், குறைவான நேரம் வீடியோ கேம் விளையாடும் குழந்தைகளால் பல சாதாரணச் செயல்களில் எளிதாகக் கவனத்தைக் குவிக்க முடிந்தது. ஆனால், அதீதமாக விளையாடுபவர்களால் அவற்றில் கவனத்தை நிலைநிறுத்த முடியவில்லை.
click here for original article

Friday, December 8, 2017

10 Roles For Artificial Intelligence In Education



1. Artificial intelligence can automate basic activities in education, like grading.

2. Educational software can be adapted to student needs.

3. It can point out places where courses need to improve.

4. Students could get additional support from AI tutors.

5. AI-driven programs can give students and educators helpful feedback.

6. It is altering how we find and interact with information.

7. It could change the role of teachers.

8. AI can make trial-and-error learning less intimidating.

9. Data powered by AI can change how schools find, teach, and support students.

10. AI may change where students learn, who teaches them, and how they acquire basic skills.


Click here to read full story 

Wednesday, November 29, 2017

This is what fraud looks like in the age of Artificial Intelligence

You’re summoned to court where a ton of evidence including phones calls, handwritten notes, emails and chat logs undeniably prove your complicity in a crime.

The problem is, none of that evidence belongs to you. They have been masterfully crafted by Artificial Intelligence algorithms that have meticulously profiled you.

Developments in Artificial Intelligence are helping revolutionize many fields such as conversational commerce. But the same technology can serve as a tool to invade privacy and commit acts of fraud.
Here are some of the ways fraudsters may put AI to ill use in the future.


Handwriting forgery

In the old days, imitating hand writings and signatures was a feat that required skill and practice. Not anymore, according to an AI algorithm developed by researchers at University College London (UCL).

Titled “My Text in your Handwriting,” the algorithm only needs a paragraph’s worth of script to learn a person’s handwriting. It can then write any text in the person’s handwriting. This is the most accurate replication of human script to date.

The innovation has positive uses such as helping stroke victims formulate letters without the concern of illegibility. It can also help in translating comic books while preserving the author’s original writing style.

However, evil actors can also take advantage of the technology. Given its accuracy, it can become instrument in forging legal and financial documents—or maybe changing history. The researchers were able to reproduce the handwriting of as Abraham Lincoln, Frida Kahlo, and Arthur Conan Doyle.

The researchers claim that forensics experts could tell the difference. But that will become harder as the software develops and becomes more advanced.

Fake conversations

Chat bots are finding their way into more and more domains. And thanks to artificial intelligence, they’re succeeding in providing increasingly natural experiences. But what happens when they become too real? 

Last year, messaging app company Luka created a chatbot that impersonated the cast of HBO’s Silicon Valley. The app’s neural networks ingested the script from the first two seasons of the show to learn the characters’ language patterns. It then created bots that talked like the actual fictional characters.Two seasons’ worth of dialogue is not enough to create an efficient chatbot, but the idea behind it was very real.

A few months later, the company used the same technique to virtually bring the dead back to life. By feeding the algorithm with a history of text messages, social media conversations and other sources of information, Luka’s engineers succeeded in creating a chatbot based on the company’s deceased co-founder.

Luka wants to create bots that mimic real-life people. And with newer generations of people creating even more digital content, that goal is becoming achievable. Such chatbots can have some very productive uses — as long as they are within your control.

But fraudsters can put the same technique to malicious uses. For instance, spear phishers usually spend weeks and months to learn and mimic the habits of their targets. Will they use AI and machine learning as a shortcut?

Voice forgery

TNW recently ran a report about Lyrebird, an AI company that synthesizes speech in anyone’s voice with a one-minute recording. The samples published on the company’s website are rather rudimentary.

Google’s Wavenet provides a similar functionality. It requires a much bigger data set, but it sounds eerily real. The technology behind it is, as you guessed it, neural networks.
The point is, the technology is advancing at an accelerating pace. And as Lyrebird’s founders warn, copying the voice of someone else is possible and audio recordings might no longer be a trusted source of evidence.


When put together, voice, handwriting and conversation forgery can do an awful lot of good — or evil. We might be heading toward an era where guarding your every bit of data will become critical.

Thursday, November 16, 2017

CS8251 PROGRAMMING IN C

CS8251                                              PROGRAMMING IN C                                                       L T  P  C                                      
                                                                                                                                          3 0  0  3
OBJECTIVES:
• To develop C Programs using basic programming constructs
• To develop C programs using arrays and strings
• To develop applications in C using functions , pointers and structures
• To do input/output and file handling  in C

UNIT I              BASICS OF C PROGRAMMING                                                  9
Introduction to programming paradigms - Structure of C program - C programming: Data Types – Storage classes - Constants – Enumeration Constants - Keywords – Operators: Precedence and Associativity - Expressions - Input/Output statements, Assignment statements – Decision making statements - Switch statement - Looping statements – Pre-processor directives - Compilation process

UNIT II             ARRAYS AND STRINGS                                                                       9
Introduction to Arrays: Declaration, Initialization – One dimensional array – Example Program:Computing
Mean, Median and Mode - Two dimensional arrays – Example Program: Matrix Operations (Addition, Scaling, Determinant and Transpose) - String operations: length, compare, concatenate, copy – Selection sort, linear and binary search

UNIT III            FUNCTIONS AND POINTERS                                                                                   9
Introduction to functions: Function prototype, function definition, function call, Built-in functions (string functions,  math  functions)  –  Recursion  –  Example  Program:  Computation  of  Sine  series,  Scientific calculator using built-in functions, Binary Search using recursive functions – Pointers – Pointer operators – Pointer arithmetic – Arrays and pointers – Array of pointers – Example Program: Sorting of names – Parameter passing:  Pass by value, Pass by reference – Example Program: Swapping of two numbers and changing the value of a variable using pass by reference

UNIT IV           STRUCTURES                                                                                                             9
Structure - Nested structures – Pointer and Structures – Array of structures – Example Program using structures and pointers – Self referential structures – Dynamic memory allocation - Singly linked list -
typedef

UNIT V            FILE PROCESSING                                                                                                   9
Files – Types of file processing: Sequential access, Random access – Sequential access file - Example
Program: Finding average of numbers stored in sequential access file - Random access file - Example
Program: Transaction processing using random access files – Command line arguments

OUTCOMES:
Upon completion of the course, the students will be able to
• Develop simple applications in C using basic constructs
• Design and implement applications using arrays and strings
• Develop and implement applications in C using functions and pointers.
• Develop applications in C using structures.
• Design applications using sequential and random access file processing.
TEXT BOOKS:
1. Reema Thareja, ―Programming in C‖, Oxford University Press, Second Edition, 2016.
2. Kernighan, B.W and Ritchie,D.M, ―The C Programming language‖, Second Edition, Pearson Education, 2006
REFERENCES:
1. Paul Deitel and Harvey Deitel, ―C How to Program‖, Seventh edition, Pearson Publication
2. Juneja, B. L and Anita Seth, ―Programming in C‖, CENGAGE Learning India pvt. Ltd., 2011
3. Pradip Dey, Manas Ghosh, ―Fundamentals of Computing and Programming in C‖, First Edition, Oxford University Press, 2009.
4. Anita Goel and Ajay Mittal, ―Computer Fundamentals and Programming in C‖, Dorling Kindersley (India) Pvt. Ltd., Pearson Education in South Asia, 2011.
5. Byron S. Gottfried, "Schaum's Outline of Theory and Problems of Programming with C",McGraw-Hill Education, 1996.

Saturday, April 15, 2017

இந்த டெக்னாலஜி தெரிந்தால் போதும் மாதம் லட்சங்களில் சம்பளம் வாங்கலாம்..!


உலகம் முழுவதிலும் உள்ள நிறுவனங்கள் செலவுகளைக் குறைத்தல், சம்பளத்தைக் குறைத்தல் ஆட்டோமேசன் தொழில்நுட்பங்களைப் புகுத்துதல் என்று செய்து வரும் போதிலும் பல தொழில்நுட்பங்கள் புதிதாக வந்துகொண்டே தான் இருக்கின்றன. அதனைக் கற்றுக்கொள்பவர்களுக்கு ஐடி துறையில் இருந்து வேலை இழப்பு என்ற ஒன்று இருக்கவே இருக்காது. ஆம், ஒரு காலத்தில் நாம் சி, சி++, ஜாவா, .நெட் உள்ளிட்ட கணினி மிழிகள் தெரிந்து இருந்தால் நல்ல சம்பளம் கிடைக்கும் என்று இருந்தது எல்லா இன்றளவும் நாம் கேள்வி பட்டு வந்தாலும் பல புதிய தொழில்நுட்பங்கள் புதிதாக ஐடி துறையை ஆக்கிரமித்து உள்ளன. இந்த டெக்னாலஜிகள் பெரும்பாலும் டேட்டா அனலிட்டிக்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்றவை ஆகும். தொழில்நுட்ப நிறுவனங்களும் இது போன்ற புதிய டெக்னாலஜியை ஊழியர்களுக்குக் கூடுதலாகப் பயிற்சியும் அளிக்கின்றன. இப்படிப்பட்ட புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் நீண்ட கால ஐடி துறையில் உங்களால் இருக்க முடியும். இந்தப் புதிய தொழில்நுட்பங்களை நீங்கள் தெரிந்து வைத்து இருந்தால் மைக்ரோசாப்ட், ஐபிஎம் என மிகப் பெரிய நிறுவனங்களில் லட்சங்களில் சம்பளம் வாங்கலாம். எனவே இந்தப் புதிய தொழில்நுட்பங்கள் என்னென்ன, எந்த நிறுவனங்களில் எல்லாம் வேலை வாய்ப்பு கிடைக்கும், எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று இங்குப் பார்ப்போம்.

ஸ்பார்க் (Spark) ஆரக்கிள், கேப்ஜெமினி, எம்பசிஸ், சிட்டி மற்றும் டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களில் ஸ்பார்க் தொழில்நுட்பம் தெரிந்தவர்களைப் பணிக்கு எடுக்கின்றனர். இந்த மென்பொருள் மூலமாகக் கிளவுடில் உள்ள மிகப் பெரிய தரவை எளிதாகத் தங்களுக்குக் கிடைத்துள்ள ப்ராஜக்டுகளுக்கு இந்த நிறுவனங்கள் மாற்றிக்கொள்ளும். ஸ்பார்க் தொழில்நுட்பம் தெரிந்த பொறியாளர்கள் 14.6 லட்சம் வரை ஆண்டுச் சம்பளம் பெற முடியும்.

அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) 2017-ம் ஆண்டு அதிக அளவில் எதிர்பார்க்கும் திறன் என்றால் அது அமேசான் வெப் சர்வீசஸ் தெரியுமா என்பதாகத் தான் இருக்கும். அக்சன்சர், ஐபிஎம், விப்ரோ மற்றும் அமேசான் மேம்பாட்டு மையங்களில் அமேசான் வெப் சர்வீசஸ் வல்லுநர்களுக்கான தேவை அதிகமாக இருக்கின்றது. இதுவும் ஒரு கிளவுடு தொழில்நுட்பம் தான். இந்த அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) மென்பொருள் உங்களுக்குத் தெரிந்து இருந்தால் ஆண்டுக்கு 13.8 லட்சம் வரை சராசரியாகச் சம்பளம் வாங்கலாம்.

டேவ்ஓப்ஸ் (DevOps) டேவ்ஓப்ஸ் (DevOps) ஒரு ஆடோமேடிக் மென்பொருள் தளமாகும், இந்தத் தொழில்நுட்பத்தைத் தெரிந்தவர்களுக்கு அக்சன்சர், டெக் மஹிந்த்ரா, பார்க்லேஸ் மற்றும் எக்ஸ்பீடியா நிறுவனங்களில் எளிதாக வேலைக் கிடைக்கும். டேவ்ஓப்ஸ் உங்களுக்குத் தெரிந்தால் 13.7 லட்சம் ரூபாய் ஆண்டுச் சம்பளமாகப் பெற முடியும்.

மெஷின் லேர்னிங் மெஷின் லேர்னிங் தெரிந்த பொறியாளர்களுக்கு அமேசான் மேம்பாட்டு மையம், மைக்ரோசாப்ட் இந்தியா ஆர் & டி, அக்சன்சர், ஐபிஎம், GE இந்தியா மற்றும் ஹர்மன் உள்ளிட்ட நிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளது. இந்த மென்பொருள் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தில் பணிபுரியக்கூடிய மென்பொருள் ஆகும். மெஷின் லேர்னிங் உங்களுக்குத் தெரிந்திருந்தால் ஆண்டுக்கு 13.7 லட்சம் வரை சம்பளம் பெறலாம்.

ஏஜ்யூர் (Azure) மைக்ரோசாப்ட் இந்தியா ஆர் & டி, கேப்ஜெமினி, எர்னஸ்ட் & யங், டெல் மற்றும் ஹனிவெல் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏஜ்யூர் (Azure) கிளவுட் மென்பொருள் தெரிந்து பொறியாளர்களை அதிகமாகப் பணிக்கு எடுக்கின்றன. இந்தத் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் ஆண்டுக்கு 13.1 லட்சம் வரை சம்பளம் வாங்கலாம்.

டேபில்யூ (Tableau) எர்னஸ்ட் & யங், அக்சன்சர், வோடபோன், மோர்கன் மற்றும் ஸ்டான்லி போன்ற நிறுவனங்கள் டேபில்யூ (Tableau) தொழில்நுட்பம் தெரிந்தவர்களை அதிக ஆளவில் பணிக்கு எடுக்கின்றன. டேபில்யூ (Tableau) ஒரு வணிக நுண்ணறிவு மென்பொருள் ஆகும். இந்தத் தொழில்நுட்பம் உங்களுக்குத் தெரிந்து இருந்தால் ஆண்டுக்கு 13 லட்சம் சம்பளம் பெற முடியும்.

பிஸ்னஸ் அனலிட்டிக்ஸ் ஐபிஎம், கேபிஎம்ஜி, எச்பி, சேப் லேப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பிஸ்னஸ் அனலிட்டிக்ஸ் தெரிந்தவர்களை அதிக அளவில் பணிக்கு எடுக்கின்றன. பிஸ்னஸ் அனலிட்டிக்ஸ் ஆண்டுக்கு 12.4 லட்சம் வரை சராசரியாகச் சம்பளம் வாங்கலாம்.

சேல்ஸ்ஃபோர்ஸ் ஏடோஸ், லின்க்டுஇன், ஜேஸ்லர், கேப்ஜெமினி மற்றும் அக்செஞ்சர் உள்ளிட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர் உறவுகள் மேலாண்மைப் பயன்பாடுகளை அறியப்படும் சேல்ஸ்ஃபோர்ஸ் தொழில்நுட்பம் தெரிந்தவர்களை அதிக அளவில் பணிக்கு எடுக்கின்றன. சேல்ஸ்ஃபோர்ஸ் நிபுணத்துவம் பெற்ற பொறியாளர்கள் சராசரி சம்பளம் வருடத்திற்கு 11.8 லட்சமாக உள்ளது.

ஜீரா ஜேபி மோர்கன், ஹர்மன், டெக் மஹிந்த்ரா, விசா மற்றும் சிட்டி உள்ளிட்ட நிறுவனங்கள் கண்காணிப்புப் பிழைகள் மற்றும் திட்ட மேலாண்மை செயல்பாடுகளைச் செய்யும் ஜீரா தொழில்நுட்பத்தைத் தெரிந்தவர்களைப் பணிக்கு ஆண்டுச் சம்பளம் 11.7 லட்சம் ரூபாயுடன் எடுக்கின்றன.

செலினியம் ஜேபி மோர்கன், எம்பசிஸ், டெக் மஹிந்த்ரா, ஆரக்கிள் மற்றும் டெல் போன்ற முக்கியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் வலை பயன்பாடுகள் பணிகளைச் செய்யக்கூடிய செலினியம் தொழில்நுட்பம் தெரிந்தவர்களை ஆண்டுக்கு 9.9 லட்சம் ரூபாய் சம்பளத்தில் பணி அமர்த்துகின்றன.


நண்பர்கள் தெரிந்து கொள்ள பகிர்கிறேன்.  

Sunday, March 5, 2017

அதிகரிக்கும் தற்கொலைகள்... காரணமாகும் மனஅழுத்தம்... விரட்டியடிக்கும் திறவுகோல் எது? #MustRead

‘நான் பயங்கர டென்ஷன்ல இருக்கேம்ப்பா...’ (Yes I’m Stressed...) இந்த வாசகத்தை உபயோகிக்காதவர்கள் எவரும் இல்லை. அவ்வளவு ஏன்... குழந்தைகள்கூட சர்வ சாதாரணமாகச் சொல்லக்கூடிய வாசகமாகிவிட்டது இது! 
மனஅழுத்தம்
அதீத உழைப்பும் ஆபத்தே!
‘அதிகமாக வேலை பார்த்தால் டென்ஷன் குறையும்’ (Less Tension More Work) என்ற வாசகம்கூட உற்பத்தித்திறனை (Productivity) மையப்படுத்தியே உருவாக்கப்பட்டிருக்கும் எனத் தோன்றுகிறது. இந்த நூற்றாண்டில்தான் `டென்ஷன்’ என்ற வார்த்தை மிக இயல்பாக புழங்கிக்கொண்டிருக்கிறது. அதாவது உலகமயமாக்கல், குழந்தைகளைக்கூட விட்டுவைக்கவில்லை. 
ஒரே கலாசாரம், கல்வி முறையில் இருப்பவர்களுக்குள் நிகழ்ந்த போட்டியைவிட உலகமயமாக்கலுக்குப் பின்னர் பூமத்திய ரேகை தாண்டியும் போட்டியிடவேண்டிய அவசியத்தை நாம் உருவாக்கிக்கொண்டோம். இதில் வெவ்வேறு நேர மண்டலங்களையும் (Time Zone) இருக்கும் 24 மணி நேரத்துக்குள் அடக்கிக்கொள்ளும் எல்லையற்ற சுதந்திரம் வளர்ச்சிதான் என்றாலும், ஏதோ ஒரு கட்டத்தில் அந்த முன்னேற்றத்தை வரைமுறைப்படுத்தவும், `போதும்’ என நிறுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்படாமலேயே வாழ்கிறோம். சிறு வயதில் சைக்கிள் ஓட்ட ஆசைப்படும் காலத்தில், எப்படியோ பெடலில் கால் வைத்து ஏறி மிதிப்போம், வானத்தில் பறப்பதுபோல இருக்கும். நாம் பெரியவர்களாகிவிட்டோம் என்கிற நினைப்பும் கூடவே ஓடும். ஆனால், சில அடிகள் நகர்ந்து போனதும், எப்படி இறங்குவது எனத் தெரியாமல் விழிப்போம். அதைப்போன்றே இன்றைய வாழ்க்கைச் சூழலும் அமைந்துவிட்டது. `சூரியன் உதிப்பதற்கு முன்னர் எழு! அஸ்தமனத்துக்குள் வேலைகளை முடித்துக்கொள்! நிலவொளியில் தூங்கு!’ என்பதெல்லாம் மாறிப் போக, இயற்கைக்கு எதிர்த்திசையில்... சொல்லப்போனால் எதிரி திசையிலேயே பயணித்துக்கொண்டிருக்கிறோம். 
தத்துவவாதியும், மானுடவியலாளருமான ஹெர்பெர்ட் ஸ்பென்ஸர் (Herbert Spencer) முதன்முறையாக உதிர்த்த தத்துவம்தான் `வலுவுள்ளவனே வாழத் தகுந்தவன்’ (Survival of the fittest) எனும் பரிணாமக் கொள்கை. அது இன்று ஆழ்மனதில், நம் அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகளின் ஒவ்வொரு செயலிலும் தெரிகிறது. இதில் உடலும் மனமும் சதா உழைப்பதற்காகவே ஆயத்தப்படுத்தப்படுகிறது. இங்கு இளைப்பாறுவதற்கான காலங்கள்கூட சோம்பல் என்ற வகையில் முகம் சுளிப்புக்குள்ளாவதை பலரும் உணர்ந்திருப்போம். `உடல் சோர்வாக இருக்கிறது; ஓய்வெடுக்கலாம்’ என நினைத்தால், எத்தனை பேரால் அதை நிகழ்த்திக்கொள்ள முடியும்? பெரும்பாலானவர்களால் நிச்சயம் முடியாது. காரணம், ஒவ்வொரு மணித் துளிகளையும் கணக்கிட்டு செலவழித்துக்கொண்டிருக்கும் நாம், உண்மையில் பயணிப்பதை விரும்பத் தொடங்கி, இறுதியில் வேகத் தடைகளையும் மதிக்காமல் பிரேக் இல்லாத வண்டிபோல எங்கேயாவது முட்டி நிற்கும்வரை ஓடிக்கொண்டிருக்க முனைகிறோம். அது பெரும்பாலும் இயல்பான நிறுத்தமாக இல்லாமல், ஆக்ஸிடன்ட்டாகவே முடிந்து போகிறது என்பதுதான் சோகம். 
மனஅழுத்தம்
ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம், பத்து மாதத்துக்கு மேலாகியும் ஓரிரு வாரங்கள் கூடுதலாக வயிற்றில் பிள்ளையைச் சுமந்த தாய்மார்களைப் பற்றிக் கேட்டிருப்போம் இப்போதெல்லாம் டாக்டரின் இருப்பையும், பேறுகால விடுமுறையை கணக்கில் வைத்தும் அறுவைசிகிச்சைக்கான தேதி குறிக்கப்படுகிறது. இதில் தனி மனிதர்கள் மீது தவறு எனச் சொல்வதற்கில்லை. அவசரம் இல்லாத மனிதர்கள், வளர்ச்சியின் பாதையில் புறக்கணிக்கப்படுவதாக ஒரு கூற்றும் உண்டு. எனவே, ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தானே ரோபோவைப்போல வடிவமைத்துக்கொள்கிறோம் இதில் நாமாக நமக்கு வைத்துக்கொள்ளும் டார்கெட்தான் ஆபத்தை வரவேற்கச் செய்யும் முதல் செயல்பாடு.
உடலும் மனமும் ஒருங்கிணைக்கப்படாத இடத்தில் நோய்கள் சூழும்!
உடல் களைத்துப் போய் இருந்தாலும், உடல்மொழியையும் மனச்சோர்வையும் நாம் குரல் கொடுத்துக் கேட்பதில்லை. கேட்கப்படாத மனதின் இந்தக் குமுறல்தான் இன்று பெண்கள் மத்தியில் மிக அதிகமாக இருக்கிறது; இள வயதுப் பிள்ளைகளையும் தொடர்கிறது. இதுதான் பின்னாளில் உயிரை வாங்கும் தற்கொலையைத் தூண்டும் மனஅழுத்த நோயாகவும் மாறிவிடுகிறது. 
மனஅழுத்தம் என்பது ஒரே நாளில் நிகழ்ந்துவிடுகின்றதா என்றால், அது மிக மிக அரிது என்று சொல்லலாம். அப்படியென்றால், மனஅழுத்தம் எப்படி அவதரிக்கிறது... இது அனைவருக்கும் வருமா? எனக் கேட்டால், மரபணுரீதியில் சிலருக்கும், வாழ்வியல் முறை நோய்கள் (Lifestyle Diseases) வழியில் பலருக்கும் இது நிகழும். 
குறிக்கோள்களை குறிபார்க்கும் மனஅழுத்தம்
குறிக்கோள் (Ambition - Aim) இதுதான் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதற்கான அடையாளம். இறுக்கமாக பின்னப்பட்ட வீணைக் கம்பிகளில் முன்னும் பின்னுமாக மீட்டப்படும் மெல்லிசையைப்போல, ஒவ்வொரு செயலையும் ஆனந்தமாக விரைந்து செய்ய, மனிதனுக்காக இயற்கை கொடுத்த செயலியாகத்தான் குறிக்கோள்களை நான் கருதுகிறேன். ஒருவேளை, குறிக்கோள் எனும் இந்தச் செயலி இல்லாமல் போனால், மனிதர்கள் எல்லோரும் ஏதுமற்ற ஏகாந்த நிலையில் தேவைகள் தேவைப்படாமல் வாழ்ந்துகொண்டிருக்கலாம். இன்று இந்த அறிவியலும், மனித வாழ்வியல் வளர்ச்சிகளும் ஏன் மனிதனின் பரிணாம வளர்ச்சியும்கூட திசைமாறியிருக்கலாம். மனிதனை இயக்கும் குறிக்கோள் எனும் இந்தச் செயலியின் மேனுவல் (Manual) மனிதனால்தான் உருவாக்கப்படுகிறது என்றாலும், முன்னர் குறிப்பிட்டதுபோல வீணைக் கம்பியின் லாகவமான இறுக்க அளவில் குறிக்கோள்களைக் கையாளும்வரை இந்தச் செயலி பிரச்னையின்றி செயல்பட முற்படும். எப்போது இதன் இறுக்கம் அதிகமாகி, எதிர்பார்ப்பு எனும் அழுத்தம் கூடுகிறதோ, அப்போதே உடலும் மனமும் ஓய்வுக்கான அறிகுறியாக, தவறு (Error) காட்ட முற்பட்டுவிடும். மனநலக் காப்பாளர், ரமா இன்பா சுப்ரமணியத்தின் ஒரு வாசகத்தை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்... `மன அழுத்தத்தின் நுழைவாயில் டென்ஷன்’ (Tension is the Gateway of Stress). இந்தத் தவறுதான் மனதில் அழுத்தத்தை உருவாக்கி, `டென்ஷன்தானே..!’ என நாம் ஒதுக்கும் உணர்வை, ஸ்ட்ரெஸ் ஆக உருவாக்குகிறது. 
தற்கொலை
பாபுவுக்கு 12 வயது. ஐந்து வயதிலிருந்தே சங்கீதம்தான் அவன் இலக்கு. வசதி குறைவு மற்றும் சுற்றுப்புறச்சூழலால் வீட்டுக்கு அருகிலேயே கிடைத்த ஒரு குருவை ஏற்று, சங்கீதம் கற்றான். இருந்தாலும், தேர்ந்த குருவிடம் சங்கீதம் கற்க பணமும் வாய்ப்பும் கிடைக்கவில்லையே எனச் சஞ்சலப்படவும் தொடங்கினான். ஆரம்பத்தில் வீட்டில் அவனுடைய சங்கீத ஆர்வத்துக்கு மறுப்புதான் பதிலாகக் கிடைத்தது. பக்கத்து வீட்டு சங்கரைப்போல கம்ப்யூட்டர், கராத்தே ஆகியவற்றில் சேர்க்கவே வீட்டார் விரும்பினார்கள். பிறகு, வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார்கள். ஓரிரு கோயில்களில் அவன் இறை வாழ்த்துப் பாடியதும் கிடைத்த கைதட்டல்களும் வாழ்த்துக்களும் அவனை மெய்சிலிர்க்கச் செய்தன. `மற்றவர்போல நாம் இல்லை’ என்ற உணர்வும், இதை அப்படியே தக்கவைத்துக்கொள்ளவேண்டிய எண்ணமும் வந்தது. உடன் இருந்தவர்கள், `ஆஹா... `பாட்டு போட்டி’ல கலக்கிடுவடா பாபு’ எனச் சொன்னதும் இன்னமும் பிரஷர் ஏற ஆரம்பித்தது. இனி சரியாகப் பாடவில்லை (Perform செய்யவில்லை) என்றால் மானம் போகும் என்பதை மெள்ள மெள்ள உணர ஆரம்பித்திருந்தான் பாபு. 
அடுத்து நடந்த ஒரு பள்ளிப் போட்டியில் பாபு தோல்வி அடைந்தான். மேலும் ஓரிரு போட்டிகளிலும் அதே நிலை. `சரி சங்கீதத்தை விட்டுவிடலாம்’ என்றால், நெருங்கியவர்களும் உடன் இருப்பவர்களும் அவன் மீது வைதிருந்த நம்பிக்கையும், `இவ்வளவு காசு செலவு பண்ணியிருக்கேன்... ஆரம்பத்துலயே சொன்னேன் கேட்டியா? நீ வேஸ்டு...’ என இவனைப் புரிந்துகொள்ளாத குடும்பச் சூழலும் நிலவுகின்றன. இந்த நிலையில், குறிக்கோள் குப்புறச் சாய்ப்பதும் சாத்தியமே. தன்நம்பிக்கை வழியும், முயற்சியின் வழியும் இயல்பாக நிகழவேண்டிய செயல், அழுத்தம் காரணமாக நிகழ்த்தியே ஆகவேண்டும் என்ற பரபரப்பை உண்டாக்குகிறது. இது நம்மாலும் நம்மைச் சார்ந்தவர்களாலும் போட்டிகள் நிறைந்த இவ்வுலகத்தாலும்தான் உருவாக்கப்படுகிறது.
மனஅழுத்தம் (Stress) ஒரு நோய் அல்ல!
குடும்பத்தாரின் நேர்மறையான அணுகுமுறை (Positive Approach), ஊக்கம் இவை கிடைத்தால் நிச்சயம் மனஅழுத்தம் என்பது, எளிதில் களையக்கூடிய ஒன்று. ஆனால், அந்த ஆறுதல் கிடைக்காத பட்சத்தில் ஏமாற்றத்தால் மனமுடைந்து தூக்கமிழப்பதும், உணவில் கவனம் செலுத்தாமல் இருப்பதும், போதுமான அளவுக்குத் தண்ணீர் அருந்தாத நிலையும் களைப்புக்கு உள்ளாகவைக்கும். பின்னர் அதுவே இயலாமையை அதிகப்படுத்தி, நம்பிக்கையின்மையும் உண்டாக்கும். ஒரு கட்டத்தில் தனக்கு யாருமில்லை என்ற ஆதரவற்ற நிலையில் ஏற்படும் சுயபச்சாதாபத்தையும் உருவாக்கிவிடும். இப்படி குடும்பத்தில் புரிதல் கிடைக்காமல், குறிக்கோள்களில் தோல்விகளைச் சந்திக்கும்போது இயற்கையின் எச்சரிக்கை மணியை மதிக்காமல் மனச்சோர்வுடன் டார்கெட்டை நோக்கி ஓடுபவர்களை மனஅழுத்தம் அதன் அடுத்த கட்ட தாக்குதலான `மனச்சிதைவு’ எனும் நிலைக்குத் தள்ளிவிடுகிறது. 
அப்படி என்னதான் உடலில் நிகழ்ந்துவிடும்?
உணர்வுச் சமநிலையின் (Emotional Balance) ஒரு பகுதியாக இது பார்க்கப்பட்டாலும், உடலில் அப்படி என்னதான் நிகழ்ந்துவிடுகிறது என யோசித்தால், `மூளையின் நியூரோட்ரான்ஸ்மிட்டரில் நிகழும் மாறுதல்கள்தான் மனஅழுத்தத்தை உருவாக்குகிறது’ என்கிறார்கள் வல்லுநர்கள். பல வேதிப் பொருட்களைத் தாங்கிய நம் மூளைப் பகுதியில், சில வேதிப் பொருட்கள் நம் வேகத்தைக் கூட்டவும், சில நம்மை அமைதிப்படுத்தவும் பயன்படுகின்றன. இதில் நிகழும் மாறுதல்கள்தான் மனஅழுத்தம்.
உடல் பாதிப்பு
எப்படித் தெரியும்?
‘ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி வெளிப்படும் என்றாலும், படுத்தால் தூக்கம் வரவில்லை, எப்போதும் சாப்பிட்டுக்கொண்டிருப்பது அல்லது பசியில்லாமல் இருப்பது, ஒபிசிட்டி, தனக்கென யாரும் இல்லை எனும் சுயபச்சாதாபம், உதவி கோருவதில் இறுக்கம், மனநிலை ஊசலாட்டம் (Mood Swing), களவு, குற்றஉணர்வு, மிக முக்கியமாக தற்கொலை முயற்சிகள் நிகழ்வது இந்த மனஅழுத்தத்தின் வெளிப்பாடே' என்கிறார்கள் மருத்துவர்கள். 
உலக சர்வே என்ன சொல்கிறது?  
உலக சுகாதார நிறுவனம் 2015–ம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையின்படி, `உலக அளவில் 15 – 29 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிக மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள். ஆண்களைவிட பெண்களே அதிக அளவில் மனஅழுத்ததில் உழல்கிறார்கள்.’  
குறிப்பாகப் பெண்கள் ஏன்?
பெண்களைக் குறிப்பிடுவதற்கான முக்கியக் காரணம், அவர்கள் உடம்பில் இருக்கும் ஹார்மோன்களின் வடிமைப்புகள்தான் இதில் பெரும் பங்காற்றுகின்றன. ஆண்களின் உடம்பைவிட பல்வேறு வேதியல் மாற்றங்களுக்கு மிக எளிதாக மாறவேண்டிய நிலையில் இருக்கும் பெண்களின் உடலும் மனமும் அதிக ஓய்வு தேவைப்படுபவை. எனவேதான், `நாளொன்றுக்கு ஆண்களுக்கு 6 மணி நேரத் தூக்கமும், பெண்களுக்கு 8 மணி நேரத் தூக்கமும் அவசியம்’ என அறிவியலாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இளைப்பாறுங்கள்!
வளர்ச்சி மற்றும் குறிக்கோள்கள் மிக அவசியமானவை. என்றாலும், அவற்றின் அளவுகோலை நம் உடல் சூழல் மற்றும் மன திடத்துக்கு ஏற்ப அமைத்துக்கொள்ள வேண்டும். 
`போட்டிகள் நிறைந்த உலகம்’ எனச் சொல்லிக்கொண்டு, குறிக்கோள் எனும் செயலியை அடுத்தவரின் தகுதியை வைத்து நம் இலக்கை நிர்ணயிக்க வேண்டாம். இது பெரும்பாலும் பேரன்ட்டல் கைடுலைனில் கொடுக்கப்படும் அறிவுரைதான் என்றாலும், நம் அனைவருக்குமே இது பொருந்தும் . 
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு என உணர்ந்து, அதன் வழி நம் குறிக்கோள்களைத் திட்டமிடுவோம். குறிக்கோள்கள், பல சமயங்களில் சுற்றுச்சூழலாலும், பால்யத்தின் பதிவுகளாலும் உருவாக்கப்பட்டிருக்கலாம். எனவே, குறிக்கோள்களை அடைய மனஅழுத்தம் இன்றி தன்னம்பிக்கையோடு முனையுங்கள். இலக்கு எட்டப்படவில்லை என்றாலும், வாழ்க்கை முடிந்துவிடப் போவதில்லை. வாழ்க்கையின் ஓட்டத்தில் குறிக்கோள்களும் நம் தேவைகளுக்கு ஏற்ப மறுபரிசீலனைக்கு உட்பட்டவையே. 
மனமும் உடலும் நோயின்றி இருக்க வாழ்க்கை ஓட்டத்துக்கு இடையே இளைப்பாறுங்கள். அதுதான் மனஅழுத்ததை விரட்டியடிக்கும் ஆரோக்கியத்தின் திறவுகோல். 
மனநல ஆலோசனை
மனநல ஆலோசனை மிக அவசியம்!
வெற்றியில் உடன் இருக்க அவசியமில்லை; தோல்வி என்றால், தோள் கொடுத்தால் போதும். மனநல ஆலோசகரின் உதவியுடன் எளிதில் இயல்பு நிலைக்கு மாறிவிடலாம். டென்ஷன், மனஅழுத்தம் இவற்றைக் குடும்ப உறுப்பினர்கள் நினைத்தால் எளிதில் சரிசெய்துவிடலாம். பாதிக்கப்பட்டவர் பேசும்போது `உம்...’ கொட்டும் குணத்தை மட்டும் கையாளுங்கள். அவர்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டாமல், விட்டுக் கொடுத்து முதுகை வருடிவிடுங்கள். அது அவர்களின் குறிக்கோள்களை மீண்டும் தட்டியெழுப்பி, சாதிக்கவும் உதவலாம். மன அயர்ச்சியில் இருக்கும் எவரைச் சந்தித்தாலும் அன்புடன் அணுகுங்கள். மனநல ஆலோசகரிடம் செல்பவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்களாகப் பார்க்கப்படும் மனத்தடையெல்லாம் மாறிவிட்டன. அலுவலகம், பள்ளி, மருத்துவமனை... என எல்லா இடங்களில் இன்று கவுன்சலிங் வெகு எளிதில் கிடைக்கிறது. பல ஐடி கம்பெனிகளில் `ஸ்ட்ரெஸ் பால்’ (Stress Ball) வழங்குவதுபோல மனஅழுத்த ஆலோசனைகளும் சர்வ சாதாரணமாக நிகழ ஆரம்பித்துவிட்டன. 
வருமுன் காப்போம்! (Prevention is better than cure) 
மனஅழுத்தத்தோடு இருப்பதாக உணரும்போதே மனநல ஆலோசகரை அணுகி, அதற்கான வாழ்வியல் மாற்றங்களைக் கையாளுங்கள். தற்கொலை எண்ணங்கள் நிகழாமல் ஆரோக்கியமாக வாழ இது மிக அவசியம். 

வாழ்க்கை சுமைதாங்கி மட்டும் அல்ல; அது இளைப்பாறவும் தகுதியான இடமே. எனவே, வாழ்க்கையை நம் மனநிலைக்கு ஏற்ப பழக்கப்படுத்திக்கொள்வோம். வருமுன் காப்போம்!
  
- மதுமிதா



விகடனில் வெளியிடப்பட்ட செய்தி, நண்பர்கள் தெரிந்து கொள்ள பகிர்கிறேன்.