Blogger Widgets

Total Page visits

Saturday, August 17, 2013

தலைவா பட தயாரிப்பாளருக்கு நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி

தலைவா படம் ரிலீஸாகாததால் மன உளைச்சலுக்கு ஆளான அப்படத்தின் தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விஜய் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ‘தலைவா’. இப்படத்தை மிஷ்ரி புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் சந்திர பிரகாஷ் ஜெயின் தயாரித்து இருந்தார். இப்படம் ஆகஸ்ட் 9ம் தேதி உலகம் முழுக்க வெளியானது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ரிலீஸ் ஆகவில்லை. தியேட்டர் அதிபர்களுக்கு குண்டுவெடிப்பு, அரசியல் தொடர்பான வசனங்கள் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு, வரிவிலக்கு நிராகரிப்பு என அடுத்தடுத்து பிரச்னைகள் வந்தன. இதனால் தற்போது வரை படம் ரிலீஸாகாத சூழல் உள்ளது.

தலைவா படத்தை திரையிட முதல்வர் உதவ வேண்டும் என நடிகர் விஜய் வேண்டுகோள் வைத்து இருந்தார். அதேசமயம் தயாரிப்பாளரும் இதே கோரிக்கையை முதல்வருக்கு வைத்தார். படம் ரிலீஸ் ஆகாததால் தனக்கு ஏகப்பட்ட நஷ்டம் என்று கூறியிருந்தார். மேலும் நேற்று இப்படம் ரிலீஸாக வேண்டி ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு செய்து அதற்கு போலீசிடம் அனுமதியும் கேட்டுள்ளனர் தலைவா படக்குழுவினர். ஆனால் தலைவா படத்திற்கு எந்த முடிவும் இதுவரை சாதகமாக வரவில்லை.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினுக்கு திடீரென இன்று(ஆகஸ்ட் 17ம் தேதி) நெஞ்சுவலி ஏற்பட்டது. இ‌தனையடுத்து அவர் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். படம் ரிலீஸாகாததால் ஏற்பட்ட மன உளைச்சல் தான் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட காரணம் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்

No comments: