Blogger Widgets

Total Page visits

Wednesday, March 20, 2013

ஏழைத் தாயின் மனசு ..



பாத்திரம் தேச்சு, பசி பழகி..
என் வலி மறைத்து 
படிப்பவனை படிக்கவைக்க 
பலவீட்டு வேலைசெய்தேன்..
பெரிய படிப்புப் படிச்ச 
என்மகன் என்னைப் பார்த்து
கேள்வி கேட்டான்;
"படிக்காத உனக்கு என்னத்தெரியும்னு 
நீ என்னிடம் பேசவந்துட்ட?"
இராப் பகலா பொத்தி வளர்த்த 
எம் மகளும்...
காதல் தாகத்தில் வயசு மோகத்தில்
என்னிடம் கேட்கிறாள் :
"அன்புன்னா என்னவென்று 
உனக்கு எங்கே புரியபோகுது
அன்பகாட்ட உனக்கு உன்  புருஷன் இருக்கானா?"
பூக்களுக்கு என்ன கவலை - மரத்தையே 
தாங்கும் வேர்களைப் பற்றி
கேள்விக்கணைகள் மனதை துளைத்தாலும் 
பெத்த மனசு சொல்லுது.."
ஆண்டவா அவர்களைக் காப்பாத்து.."
இந்த செய்தி சிந்தனைசிதறல்கள் என்னும் வலை பக்கத்தில் இருந்து பலரும் படித்து பயன் பெற பகிரபடுகிறது 

No comments: