Blogger Widgets

Total Page visits

Friday, March 22, 2013

இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்…!


ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில்ஒன்றாவான். 

http://media1.onsugar.com/files/2012/06/25/1/2203/22031473/141104e8a0e58e23_escanear0001.preview.jpg

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.


பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய் கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்டநேரம் வேலை செய்வ தன் மூலம் தியாகம் செய்கிறான். 


அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான். ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச்செலுத்த தன் வாழ் நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமையை தியாகம் செய்கி றான்.


அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும், மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சி க்கின்றனர்.


இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக் கொடுத்துக் கொண்டிரு ப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது. 


பெண்களே! உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.


அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.


ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.


இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்…!


பெண்களால் பாதிக்க‍ப்பட்ட‍ ஓர் ஆண் மகனின் வலிகளே மேற் காணும் வரிகள்! இந்த வரிகளை முகநூலில் அவர் பகிர்ந்துள்ளார்.


No comments: