Blogger Widgets

Total Page visits

Saturday, March 16, 2013

பெண் பற்றிய பொன்மொழிகள்

 பெண் இறைவனின் படைப்புகளில் எல்லாம் அழகானது, மேலானது - மில்டன்

பெண்ணே மனிதனின் உயர்ந்த ஊக்கங்கள் எல்லாவற்றிற்கும் விளக்கு - ஜேம்ஸ் எல்லீஸ்

உலகத்தின் உன்னதமான பொருள் பரிபூரணம் அடைந்த பெண்ணே. -லவல்

அவதூறு நல்ல பெண்ணின் வீட்டு வாசலில் பலமிழந்து மாய்ந்து விடுகிறது. -ஹீஸ்

பெண்ணின் மடியில் இறையன்பு வளர்கிறது - இக்பால்

பெண் இல்லாத வீடும், வீடில்லாத பெண்ணும் மதிப்பில்லாதவை.  - சைரஸ்

 
நாகரீகம் உண்டாக்கத்தக்க நிச்சயமான வழி பெண்ணின் செல்வாக்குதான் - மெர்ஸன்

பெண்ணின் வாழ்வு அன்பின் சரித்திரம் -துவிஜேந்திரலால்

ஒரு நாட்டில் பெண்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்களோ அவ்வளவு தூரமே அந்நாடு முன்னேறும். -ஜவஹர்லால் நேரு

காற்றை விட கடுவேகம் கொண்டது பெண்ணின் எண்ணம் - ஷேக்ஸ்பியர்

அறிவின் தாயகமாய், அருள் நிறைந்த உள்ளமாய் இருப்பவள் பெண் -ஜெயகாந்தன்

பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு - லெனின்

சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண் - காந்தியடிகள்

அன்பு செய்யும் பெண்ணின் நெஞ்சம் எப்போதும் இளமை உடையது - டேவிட்ஹ்யூம்

ஆண் தனக்குத் தெரிந்ததைச் சொல்வான். ஆனால் பெண் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதைத்தான் சொல்வாள் - ரூஸோ

பெண்கள் யாரை மனதாரக் காதலிக்கிறார்களோ அந்த ஆண்கள் அந்தப் பெண்கள் எதிரில் பச்சைக் குழந்தைகளாகி விடுவர் - ரவீந்திரநாத் தாகூர்.

எந்த வீட்டில் பெண்கள் கவுரவமாக நடத்தப்படுகிறார்களோ, அங்கு தேவதைகள் குடியேறும்.

- மனு

ஒரு பெண்ணைப் படிக்க வைப்பது ஒரு குடும்பத்தையே படிக்க வைப்பதற்கு நிகரானது

- டிக்கன்ஸ்

 
வாழ்க்கை எனும் ஆற்றை, கடலைக் கடப்பதற்கு பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை.  - கண்டேகர்

ஆணை அடக்கிப் பண்படுத்தவே ஆண்டவன் பெண் பிறவியைப் படைத்திருக்கிறான்

- வால்டேர்

பெண்ணின் அன்பும் பரிவும் எங்கிருக்கிறதோ, அங்கு ஆடையும், பண்பும் அடைக்கலம்

- மாபசான்

No comments: