Blogger Widgets

Total Page visits

Friday, March 22, 2013

வளரட்டும் உங்கள் மனவாழ்கை பல ஆண்டிற்கு..,


http://www.toonpool.com/user/1308/files/thats_amore_166285.jpg


மலரும் பூக்கள் யாவும்
இறைவன் பாதம் செல்வதில்லை..,
மானிடன் வேண்டுதல் யாவும்
ஆதவன் செவி செல்கிறதா தெரிவதில்லை..,
ஆனால் நீயோ   
ஆதவன் தோட்டத்து மலர்,
பகவான் வீட்டு செல்ல குட்டி,
ஆம் நீ தெய்வத்தின் குழந்தை,
ஆனந்தத்தை வசம் செய்த மங்கை,
உன் புன்னகை பார்த்து கோபம் கொள்வார் யார்?
தெய்வ குழந்தையே,
பகலவனின் மங்கையே,
உன்னை மணப்பதால் பாக்கியம் பெறுகிறார் உன் துணைவர்..,
 உன் வாழ்க்கையில் ஆனந்தம் மேலும் பெருக
உன் ஐம்பத்தி ரெண்டு மாணவனின்
ஆசையோடு, ஆவலோடு,விருப்பத்தோடு
நானும் இணைகிறேன் ஒருவனாய்! ! !
வாழட்டும்  உங்கள் அன்பு பல காலத்திற்கு .., 
வளரட்டும் உங்கள்  மனவாழ்கை பல ஆண்டிற்கு .., 

ஆனந்தம் கொள்க!                                 சுபமாய் வாழ்க!


என் சகோதரியின்  திருமண விழாவிற்கு  என்னுடைய சிறு படைப்பு.

No comments: