Blogger Widgets

Total Page visits

Wednesday, October 2, 2013

டீன்ஏஜ் பெண்களா நீங்கள்?

டீன்ஏஜ் பெண்கள் காலத்திற்கேற்ப உணவும் "ட்ரன்டு" ஆக சாப்பிட ஆரம்பித்து விட்டனர். பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் பெண்கள் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு இப்போதெல்லாம் நேரமே ஒதுக்குவதே இல்லை.

பெண்கள் சத்தான உணவுகளை சரிவர உட்கொள்வதில்லை. பசியெடுத்தால் உடனே "ட்ரன்டு" உணவான பிட்சா, பர்கர், எண்ணெயில் ஊறிய பொருட்களை சாப்பிடுவது ஸ்டைல் என்று நினைக்கின்றனர். இதனால் ஏற்படும் பின்விளைவுகளை நினைத்து பார்ப்பதே இல்லை. எந்த நோயும் வருவதற்கு முன் நம்மை பாதுகாக்க வேண்டும்.

பெரும்பாலான பெண்கள் காலை உணவை எடுத்து கொள்வதே இல்லை. காலை உணவை எடுக்காததால் பெண்களுக்கு அயன் குறைபாடு ஏற்படுகிறது. அயன் குறைபாடு ஏற்பட்டால் இரத்த சோகை, சோர்வு, மறதி, ஆர்வமின்மை, முடி கொட்டுதல் ஆகிய பிரச்னைகள் படிப் படியாக ஏற்படுகிறது.

சைவ உணவு உண்பவர்களை விட அசைவ உணவு உண்பவர்களுக்கு மிக அதிக அளவில் இரும்புச்சத்து கிடைக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அசைவ உணவை சாப்பிடாதவர்கள் அதிகளவு காய்கறிகள், கீரை வகைகள் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

முருங்கைக்கீரை, அகத்திக் கீரை, அரைக்கீரை, புதினா, பொன்னாங்கண்ணிக் கீரை போன்ற கீரைகளில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. பருப்பு வகைகள் எடுத்து கொள்ளலாம். பழவகைகளில் பேரீச்சை, அத்திப்பழம் ஆகியவற்றில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. பெண்கள் தினம் ஒரு முட்டையை எடுத்து கொள்ளலாம். பால், தயிர் ஆகியவற்றில் வைட்டமீன் சத்து அதிகம் உள்ளது. மீன் கண், சருமம், முடியை பளபளப்பாக்கும் தன்மையுடையது. இறைட்சியை அவ்வப்போது உணவில் எடுப்பது நல்லது. பெண்கள் இது போன்ற சத்தான ஆகாரங்களை நேரம் ஒதுக்கி எடுத்து கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும். அப்பரம் என்ன நோயில்லமல் 100வயது வரை ஆரோக்கியமாக வாழலாம்.

No comments: