Blogger Widgets

Total Page visits

Tuesday, October 29, 2013

மாணவர்கள் எதிர்காலம்?

தமிழ்நாட்டிலுள்ள ஐந்தாறு பொறியியல் கல்லூரிகளில் நூற்றுக்கும் அதிகமான தனியார் கல்லூரிகளில், இந்த ஆண்டு குறைந்த அளவு மாணவர்களே சேர்ந்திருக்கிறார்கள். 50 சதவிகிதம் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையே இல்லை. ஒட்டு மொத்த சேர்க்கையில் (ஞஇ) மாணவர்கள்தான் அதிக இடங்களில் விண்ணப்பித்து இடம் பெற்றுள்ளார்கள். இவர்களை ஒப்பிடும்போது நான்கில் ஒரு பங்குதான் எஸ்.சி. மாணவர்கள் இடம் பெற்றுள்ளார்கள். இந்த நிலையில் இன்னமும் ஏறத்தாழ 16,755 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த நிலை வருவதற்கு காரணம் சரியான கட்டமைப்பு இல்லாத, கல்வித் தகுதி இல்லாத ஆசிரியர்கள், பாடத்திட்டத்தை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சரியாகப் புரிய வைக்காதது இவைதான். வந்தேன், பார்த்தேன், கொடுத்தேன் என்று (அஐஇபஉ) போன்ற மைய அரசு அமைப்புகள் சகட்டுமேனிக்கு ஒப்புதல் வழங்கி வருவது இன்னொரு காரணம். இந்த ஆண்டு மட்டும் 27 பொறியியல் கல்லூரிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது. 77,505 மாணவர்கள் இடங்கள் சேர்க்கை பெறவில்லை.

மருத்துவக் கல்லூரி சேர்க்கைகளை பார்த்தால் அதிகபட்ச மாணவர்கள் சேர்க்கை பெறுகிறார்கள். இதில் பெருவாரியான கல்லூரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சதவீதத்தில் ஒரு சீட்டிற்கு அரைகோடி ரூபாய் என கொள்ளையடிக்கிறார்கள். சமீபத்தில் இந்திய மருத்துவக் கவுன்சில் ஒரு சில கல்லூரிகளுக்கு முதலாண்டு சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. அப்படியிருந்தும் மறுப்பு தேதிக்கு பின்னால் மாணவர்களிடத்தில் லட்சக்கணக்கில் நன்கொடை பெற்றிருக்கிறார்களாம். இது குறித்து ரகசிய புலன் ஆய்வு செய்ய வேண்டும்.

இப்போது கொடுத்த நன்கொடை தொகையை பெற முடியாமல் பெற்றோர்கள் சிரமப்படுகின்றார்கள். அரசு கல்லூரிகளுக்கு கூடுதல் சீட் வழங்கப்பட்டிருந்தும், இந்த மாணவர்களை அரசு ஏன் அங்கு மாற்றவில்லை? கட்டிய தொகையை ஏமாற்ற முற்படும்போது, தேர்வுகளில் (ஙஇஐ)அனுமதிக்காதபோது, மாணவர்கள் கொதிப்படைந்து கல்லூரிக்கு சேதம் விளைவிக்க முற்படுகின்றார்கள். உண்ணாவிரதம் இருக்கின்றார்கள்.

சரியான ஆய்வு செய்யாமல் மருத்துவக் கவுன்சில் உரிமம் வழங்கியதுதான் இதற்கு காரணம். ஒரு கல்லூரிக்கு ஒப்புதல் வழங்கும்போது குறிப்பாக மருத்துவக் கல்லூரிகளில் எல்லா வகை பிரிவுகளுக்கும் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். எல்லா துறைகளிலும் எல்லா உபகரணங்களும் வாங்கியிருக்க வேண்டும். நூலகங்களில் எல்லா மருத்துவப் பிரிவுகளுக்குரிய இந்திய வெளியீடு, பன்னாட்டு வெளியீடு போன்ற எல்லா வகையான புத்தகங்களும் மற்றும் மெடிக்கல் கவுன்சில் ஆராய்ச்சி புத்தகங்களும் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆய்வு நேரத்தின்போது பிற மாநில கல்லூரிகளில் வேலை செய்யும் டாக்டர்கள், சர்ஜன்கள், செவிலியர்கள் போன்றவர்கள் ஒரு சில நாள்களுக்கு மட்டும் வாடகைக்கு அமர்த்தப்படுகின்றார்கள்.

இவர்கள் எங்கு பணியாற்றி இருந்தாலும் நிரந்தரமாக பணியிலிருந்து நீக்கப்பட வேண்டும். தனியார் மருத்துவமனையில் இருந்து செயல்படும் பட்சத்தில் அவர்கள் சில ஆண்டுகள் பிராக்டிஸ் செய்ய தடை செய்யப்பட வேண்டும். இந்த நடைமுறைகளை பின்பற்றும் கல்லூரிகளுக்கு உரிமம் தடை செய்வதில் தவறில்லை. அதிகமான ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த அறிஞர்கள் வயது உச்சவரம்பு பார்க்காமல் கல்லூரியில் பணியாற்ற, விதிமுறை தடைகள் நீக்கப்பட வேண்டும். உயரிய ஆராய்ச்சி சாதனங்கள், சோதனைக்கூட உபகரணங்கள் பயன்பாட்டில் இருக்கவேண்டும். அவர்கள் கட்டியிருக்கும் மருத்துவமனையில் ஒரு நாளைக்கு எவ்வளவு நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றார்கள். எத்தனை அறுவை சிகிச்சை நடந்தேறியது நோயாளிக்கு தந்த சிகிச்சை எண்ணிக்கை அறிக்கை கணினியில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அளிக்கப்பட்ட விவரங்கள் உண்மைதானா என்பதை ஆய்வுக் குழு உறுதி செய்யவேண்டும். மாணவர்களுக்கு அளிக்கப்படும் போதனைத் திறன், செய்முறை சோதனை திறன் எங்ஙனம் உள்ளது என (ச்ங்ங்க்க்ஷஹஸ்ரீந்) மாணவர்களிடம் கேட்டறிய வேண்டும். அதன் பின்னர்தான் ஆசிரியர்கள் சேர்க்கை உறுதி செய்யப்பட வேண்டும். மருத்துவ கல்லூரிகள் நிலை இப்படி இருக்கும்போது மருத்துவம் சார் படிப்புகள் எந்த நிலையில் உள்ளது என்று பார்த்தால் அதிலும் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. 20க்கு 30 அடியில் 500 மாணவர்கள் அல்லது 600 மாணவர்கள் படிக்கின்றார்கள்.

நர்சிங் பாடம் நடத்த இந்திய நர்சிங் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழம் தவிர வேறு எவருக்கும் உரிமம் தர சட்டத்தில் இடமில்லை. அல்லது மனிதவள மேம்பாட்டு துறை அனுமதித்திருக்க வேண்டும். நிலைமை அப்படி இருக்க ட்ங்ஹப்ற்ட் ஹள்ள்ற் பயிற்சி வகுப்பு என தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் ரூ.50 ஆயிரம் செலுத்தி உரிமம் பெறுகின்றார்கள். ஆனால் மாற்று சான்றிதழ் வழங்கும்போதுட்ங்ஹப்ற்ட் ஹள்ள்ற் பக்கத்தில் சன்ழ்ள்ண்ய்ஞ் என எழுதி வழங்குகின்றார்கள். 10-வது பெயில், 10-வது பாஸ் என சேர்த்துக்கொண்டு வெள்ளை உடை அணியவைத்து ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் என வசூல் செய்கின்றனர்.

1000 மாணவிகளை ஒருசேர கொண்டு கால்நடைகளை அடைத்துவைப்பதுபோல் அடைத்து வைத்து பயிற்சி என்ற பெயரில் பல லட்சம் பணம் பார்க்கின்றனர். ள்ற்ன்க்ஹ் ஸ்ரீங்ய்ற்ழ்ங் அல்லது ஸ்ரீர்ம்ம்ன்ய்ண்ற்ஹ் ஸ்ரீர்ப்ப்ங்ஞ்ங் உரிமம் வழங்குவதற்கு முன் பல்கலைக்கழகம் ஏன் ஆய்வு மேற்கொள்வதில்லை? தொலைதூர கிராமங்களில் இருந்து வரும் மாணவியர்களுக்கு ஆய்வுக்கூடம், நூலகம், விளையாட்டுத்திடல், பஸ் வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏன் செய்துதரப்படுவதில்லை? எல்லாவற்றையும்விட அரசு வேலை தேடித் தரும் நிறுவனம் இவர்களைப் பதிவு செய்ய அனுமதிப்பதில்லை.

அது ஏன்? ஒருசில இரண்டாம் தர மருத்துவமனைகளில் ரூ.3 ஆயிரத்துக்கு வேலை செய்ய அடிமைகளைப்போல பயன்படுத்துவார்கள். நம் குழந்தைகள் எதிர்காலம் எங்கே போகிறது என பெற்றோர்கள் உணரவேண்டாமா? சேர்க்கும் கல்வி கூடத்தில் எந்த படிப்புகளுக்கு உரிமம் பெற்றிருக்கின்றார்கள் என்ற சான்றிதழை வாங்கிப் பார்க்க வேண்டும்.

÷கட்டமைப்பு, ஆசிரியர் கல்வித்தகுதி, கழிவறை வசதிகள், நூலகம், ஆய்வுக்கூடம், உரிமம், சான்றிதழ் மற்றும் இதுவரை எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தந்திருக்கிறார்கள் என்ற ஆதாரப் பட்டியலை வினவி பார்ப்பதற்கு பெற்றோர்களுக்கு உரிமை உண்டு. பார்த்தாக வேண்டும். அப்படி பார்த்தால்தான் உங்கள் குழந்தைகளுக்கு எதிர்காலம் உண்டு.

No comments: