Blogger Widgets

Total Page visits

Sunday, September 22, 2013

மெளன மழை தினமலர்

‘ஒத்தவீடு’ அறிமுகநாயகன் திலீப்குமார் நடித்து இரண்டாவது வீடாக வெளிவந்திருக்கும் படம்தான் ‘மெளன மழை’

முதலாளி காதல் தண்டபாணியின் கையாள் சேரா என்னும் திலீப்குமார், இன்ஸ்பெக்டர் சண்முகராஜினின் மகள், வில்லன் சசியின் மாமன் மகள் என இரண்டு பெரும் எதிர்பார்ப்பாளர்களின் வீட்டு பெண் கயல் என்னும் மனிஷாஜித்! சேரா - திலீப்புக்கு கயல் - மனீஷா மீது காதல்! காதல் தண்டபாணியின் தயவுடன் வில்லன் மற்றும் ‘இன்ஸ்’ அப்பாவின் எதிர்ப்பை மீறி கயலை, திலீப் கரம் பிடித்தாரா? இல்லையா? என்பது ‘அடிதடி’ அதிரடி நிறைந்த மீதிக்கதை. இதில் எங்கிருந்து ‘மெளன மழை’ பெய்தது என்பது இயக்குநர் ஆனந்துக்கே வெளிச்சம்!

நாயகன், நாயகி மாதிரியே காதல் தண்டபாணி, கஞ்சா கருப்பு, சண்முகராஜன், வில்லன் சசி, ‘ஆடுகளம்’ ஸ்டெல்லா, நட்சத்திரா, பாட்டி மதுரை சரோஜாம்மாள், ‘மைனா’ நாகு, ரவிராகுல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் ஒவ்வொருவரும் பாத்திறமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

ஆதிஸின் இசையில், வி.எம்.ஆறுமுகத்தின் 5 பாடல்களுக்கான வரிகளும், விக்ரமன் - எஸ்.ஏ.ராஜ்குமார் ர(ரா)கம்! டி.மகிபாலனின் ஒளிப்பதிவில் அந்த ஊர் அழகு! ஆனந்தின் எழுத்து, இயக்கத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் ‘மெளன மழை’ திரையரங்குகளில் பெய்திருந்ததென்றால் - ரசிக பயிர்களால் திரையரங்குகள் நிரம்பி இருந்திருக்கும்.!

‘மெளன மழை’ - பெரிதாக பெய்யவுமில்லை; சிறிதாக பொய்க்கவுமில்லை.

No comments: