Blogger Widgets

Total Page visits

Sunday, September 22, 2013

மத்தாப்பூ விமர்சனம்

‘தினந்தோறும்’ நாகராஜின் இயக்கத்தில் ‘தினந்தோறும்’ படத்தின் வெற்றிக்கும் நீண்ட இடைவெளிக்கும் பின் வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் ‘மத்தாப்பூ’.

ஆண்களையே பிடிக்காத நாயகி ‌காயத்ரி, அவரையே சுற்றிவரும் அறிமுக நாயகர் ஜெயன். இவர்களது காதலுக்கு இரு வீட்டு தரப்பும் சம்மதம் தெரிவித்தும் காயத்ரி காதலுடன் ஜெயனை பார்க்க மறுக்கிறார். அது ஏன்? அவருக்கு ஆண்களையே பிடிக்காத காரணம் என்ன? என்பதுதான் ‘மத்தாப்பூ’ படத்தின் மொத்த கதையும்! இறுதியில் ஆண்களை வெறுக்கும் காயத்ரி ஜெயனின் நற்குணங்களைக் கண்டு ஜெயனை காலித்தாரா? கரம் பிடித்தாரா?! என்பது க்ளைமாக்ஸ்!

புதுமுகம் ஜெயின், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ காயத்ரி, அம்மா, சின்னம்மா (!) கேரக்டரில் மாஜி நாயகிகள் ரேணுகா, கீதா, சித்தாரா, அப்பா, சித்தப்பா கேரக்டரில் கிட்டி, இளவரசு மற்றும் செஞ்சி, உதய், சங்கர்குருராஜா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே படம் முழுக்க பவனி வருகிறது! கார்த்திக் என்னும் கேரக்டராகவே வாழ்ந்திருக்கும் புதுமுகம் ஜெயன் சூப்பர்ப்!

கே.வேலாயுதத்தின் பாடல்கள் இசை, சபேஷ் முரளியின் பின்னணி இசை, சி.ஆர்.மாறவர்மனின் ஒளிப்பதிவு, சி.கே.மகேஷின் படத்தொகுப்பு என ஏகப்பட்ட ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தும் ‘தினந்தோறும்’ நாகராஜின் எழுத்து, இயக்கத்தில் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பே ‘மத்தாப்பூ’ வெளிவந்திருந்ததென்றால், தமிழ் சினிமாவின் ‘காதல் பூ’வாக இருந்திருக்கும்! சற்றே காலதாமதமாக வந்திருப்பதால் இன்றைய இளைஞர்களுக்கு ‘காதுல பூ’வாக தெரிகிறது!

ஆக மொத்தத்தில் ‘மத்தாப்பூ’ - நிறைய காதல் பூ; கொஞ்சம் காதுல பூ’.

No comments: