Blogger Widgets

Total Page visits

Thursday, October 30, 2014

வேலை - வாழ்க்கை சமநிலையில் வைக்க வழிகள்!

வேலை - வாழ்க்கை சமநிலையில் வைக்க வழிகள்!
 
சிலருக்கு வேலை செய்யும் அலுவலகம் தான் எல்லாம் என்று வொர்க்கஹாலிக் நபர்களாக இருப்பார்கள். சிலர் வேலை என்பது கடமைக்கு தான் எனக்கு வீடு தான் முக்கியம் என்று இருப்பார்கள். சிலர் எனக்கு இரண்டும் தான் முக்கியம் ஆனால் இரண்டையும் எப்படி சமாளிப்பது என்று புரியாமல் தவிக்கிறேன் என்பார்கள். இப்படி இருப்பவர்கள் வேலை வாழ்க்கை இரண்டையும் சமநிலையில் வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிகள் இதோ...
 
 1.நேரத்தை திட்டமிடுங்கள்!
 
உங்கள் நேரத்தை திட்டமிட்டு கொள்ளுங்கள்.இன்றைக்கு நீங்கள் அலுவலகத்தில் என்ன வேலை செய்ய வேண்டும் எவ்வளவு மணி நேரத்தில் இந்த வேலையை முடிக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கான நேரம் குறைவாக இருந்தால் வேலையில் சற்று வேகத்தை கூட்டி வேலை செய்யுங்கள். அதேபோல் குறிபிட்ட நேரத்திற்கு மேல் ஒரு வேலையை எடுத்து செல்லாதீர்கள். குறிபிட்ட நேரத்துக்குள் முடிக்க முடியாத வேலை உங்களது இயலாமையை காட்டும். சரியான நேர திட்டமிடலில் வேலையை முடித்து உங்கள்: குடும்பத்துக்கு ஒதுக்க வேண்டிய நேரத்தை ஒதுக்குங்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியையும் மறுநாள் வேலையை துவங்க புத்துணர்ச்சியையும் தரும்.
 
2.எனர்ஜியை வீணக்காதீர்கள்!
 
உங்கள் வேலையை சிறப்பாக செய்யவும், உங்கள் குடும்ப சூழலை சிறப்பாக கவனிக்கவும் நீங்கள் எனர்ஜியாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் எனர்ஜியை குறைக்கும் வேலைகளை குறையுங்கள். உதாரணமாக நீங்கள் வேலை செய்ய வேண்டிய நேரத்தில் யாரவது ஒரு நண்பர் தொலைபேசியிலோ அல்லது சமூக வலைதளங்களிலோ உங்களை தொடர்பு கொண்டு பேசும்போது அவர்களை கூடியமட்டில் முக்கியமான விஷயம் இல்லையெனில் தவிர்க்க பாருங்கள். அந்த நேரம் உங்கள் வேலையை பாதித்தால் நீங்கள் வேலையை விட்டு செல்ல வேண்டிய நேரம் அதிகரிக்கும். அதனால் உங்கள் குடும்பத்தில் நீங்கள் செலவிட வேண்டிய நேரம் குறைந்து வேலை மற்றும் வாழ்க்கையில் பரபரப்பாக செயல்பட வேண்டிய சூழல் உருவாகும். உங்கள் எனர்ஜி மற்றும் நேரத்தை குரைக்கும் செயல்களை தவிர்த்தால் உங்கள் வேலை மற்றும் வாழ்க்கையை சமநிலையில் வைத்திருக்கலாம்.
 
3.எளிமை படுத்தி கொள்ள பழகுங்கள்!
 

நீங்கள் அலுவலகத்தில் பார்க்க வேண்டிய வேலைகளை முடிந்த அளவிற்கு எளிமையாக செய்ய பாருங்கள். உங்களுக்கு ஒருநாளில் இரண்டு வேலை மட்டும் தான் மறுநாள் நான்கு வேலை இருக்கிரது என்றால் இன்றைக்கு இரண்டு வேலை தான் பார்ப்பேன் என்று இல்லாமல் மறுநாள் வேலையில் சிலவற்றிற்கு இன்றைக்கே முன்னுரிமை அளியுங்கள். அப்போது இன்றும் மறுநாளும் உங்களால் சரியான் நேரத்தில் வேலையை முடித்து வீட்டிற்கு செல்ல முடியும். அதேபோல் வீட்டிற்கு சென்றதும் கணினியை திறந்து அலுவலக வேலைகளை பார்க்காமல் வீட்டில் குழந்தைகளோடும் மற்ற உறவினர்களோடும் நேரத்தை செலவழியுங்கள். அதேசமயம் வீட்டில் உள்ளவர்களுக்கு இரயில் டிக்கெட் புக் செய்ய ஸ்டேஷனுக்கு சென்று காத்திருக்காமல் ஆன்லைன் மூலமாக புக் செய்து உங்கள் குடும்பத்தோடோ அல்லது அலுவலகத்திலோ செய்யும் வேலைக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்.
 
4. அலுவலகம் vs வீடு
 
அலுவலகத்திற்கு இவ்வளவு நேரம் தான் ஒதுக்க வேண்டும். வீட்டிற்கு இவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை திட்டமிடுங்கள்  அதனை சரியாக் ஒதுக்கி கொள்ள திட்டமிடுங்கள். அந்த திட்டத்தை கூடியவரையில் கட்டாயப்படுத்தி கொள்ளுங்கள். அதில் மாற்றம் வர அனுமதிக்காதீர்கள். அப்படி அனுமதிக்கும்போது இரண்டையுமே நீங்கள் மன அழுத்தமாக உணருவீர்கள். அதனை தவிர்த்து உங்கள் கால அட்டவணையை சரியாக பிரித்து கொள்ளுங்கள். அது உங்கள் வாழ்க்கையில் சமநிலையை உண்டாக்கும்.
 
5.ஓய்வை மறக்காதீர்கள்!
 
நீங்கள் வாரத்தில் ஐந்து நாட்களோ அல்லது ஆறு நாட்களோ வேலைக்கு செல்பவராக இருக்கலாம். ஆனால் ஞாயிற்று கிழமை பொதுவாக விடுமுறையாக தான் இருக்கும். அதிலும் அலுவலக வேலைகளை பார்ப்பது, தனது சொந்த வேலைக்காக நேரம் ஒதுக்குவது என்று இல்லாமல் எந்த வித கவலையுமின்றி உங்கள் மனதையும், உடலையும் முழு ஓய்வுக்கு அனுமதியுங்கள் அது உங்களது அடுத்த வாரத்தை புத்துணர்ச்சியாக்கும்,
 
இந்த ஐந்து வழிகளை பின்பற்றினால் உங்கள் வேலை சமநிலையை அடையும். தேவையில்லாத அலுவலக மற்றும் வீட்டு பிரச்னைகளை சந்திக்காமல் நிம்மதியாக வேலையிலும் வீட்டிலும் கவனம் செலுத்தலாம்.
 
ச.ஸ்ரீராம்

No comments: