Blogger Widgets

Total Page visits

Monday, November 3, 2014

அதிகரித்த ஏடிஎம் கட்டணம்... சமாளிப்பது எப்படி?

ஏடிஎம் இயந்திரம் அறிமுகப்படுத்தப் பட்டதன் நோக்கமே, வங்கிக்குப் போய் வரிசையில் நின்று பணம் எடுப்பதைத் தவிர்க்கவும், அதிகப் பணத்தைப் பாதுகாப்பாக வங்கியில் சேமித்து வைக்கவும்தான். ஆனால், இன்று அந்த ஏடிஎம் இயந்திரங்களைப் பயன் படுத்துவதைக் குறைக்க ஆர்பிஐ புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்திருப்பது வேடிக்கைதான். ஏடிஎம்மைப் பயன் படுத்துவதில் புதிதாக கொண்டுவரப் பட்டிருக்கும் நடைமுறைகள் என்னென்ன என்று முதலில் பார்த்துவிடுவோம். 
1. சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் ஒரு மாதத்துக்கு ஐந்து முறை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் பணம் எடுக்கலாம். அதற்குப்பின் வங்கிகள் தேவைப்பட்டால் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கலாம்.
2. வங்கிக் கணக்கு அல்லாத மற்ற வங்கிகளில் பயன்படுத்த ஐந்து வாய்ப்புகள்தான். அதுவும் மெட்ரோ அல்லாத நகரங்களில் ஐந்து முறையும், சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய ஆறு மெட்ரோ நகரங்களில் உள்ள ஏடிஎம்களில் மூன்று முறையும் பயன்படுத்தலாம். அதற்குமேல் செய்யும் பரிமாற்றங்களுக்குப் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப் படும்.
3. இதற்கான கட்டணமாக 20 ரூபாய் வரையும், அதோடு வேறு ஏதாவது சேவைக் கட்டணம் இருந்தால் அதனையும் வங்கிகள் வசூலித்துக் கொள்ளலாம். 

ஆர்பிஐயின் இந்தப் புதிய நெறிமுறை கள் மக்களை பெரிய அளவில் பாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்று சம்பாதிக்கும் அனைவருமே பணத்தை மொத்தமாகக் கையில் வைத்துக்கொண்டு செலவழிப்பதில்லை. சராசரியாக இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் மாதத்துக்கு ஏடிஎம்மில் 10 - 12 முறை பரிவர்த்தனை செய்கிறாராம். தமிழகத்தில் தேசிய சராசரியைவிட பயன்பாட்டு விகிதம் சற்று அதிகமாகவே உள்ளது.

அதிலும் மற்ற வங்கி ஏடிஎம் இயந்திரத்தைப் பயன்படுத்துவது என்பது மொத்த பயன்பாட்டில் 35 -  40% என்ற அளவில் இருந்தாலும், கணக்கு வைத்திருக்கும் வங்கியில் ஒரு மாதத்துக்கான பயன்பாடு என்பது குறைந்தபட்சம் 8 - 10 என்ற அளவிலும் உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் சேவை தருவதற்காக எக்கச்சக்கமாக செலவு செய்ய வேண்டி யிருப்பதால் பயன்பாட்டுக் கட்டணத்தை விதிக்க வேண்டும் என வங்கிகள் ஆர்பிஐயிடம் கோரிக்கை வைத்ததால், இப்போது இந்தப் புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்திருக்கிறது ஆர்பிஐ.
ஆர்பிஐ அறிவித்த முக்கிய அறிவிப்புகளால் வங்கிகளில் ஏடிஎம் மூலம் பணம் எடுக்க புதிய நெறிமுறைள் கடந்த நவம்பர் முதல் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இதனால் ஒருவர் மாதத்திற்கு அவர் கனக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்மில் 5 முறையும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்மில் 3 முறையும் ஆக மொத்தம் 8 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. அதற்கு மேல் செல்லும் போது 20 ரூபாய் வரை பயனபாட்டுகட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

இந்த சூழலை சமாளிக்க 10 வழிகள் இதோ!
1. உங்களுக்கான ஒரு மாத செலவுகளை திட்டமிட்டு அதற்கேற்றவாறு பணத்தை எடுத்து சரியாக செலவு செய்யப் பழகுங்கள். இப்படி செய்யும்போது இரண்டு அல்லது மூன்று பரிவர்த்தனை களுக்கு  மட்டுமே ஏடிஎம் கார்டினை பயன்படுத்தும் நிலையை உருவாக்கிக் கொள்ளலாம்.

2. உங்களால் ஒரு மாதத்துக்கான செலவை முழுமையாக திட்டமிட சிரமமாக இருந்தால், ஒரு வாரத்துக்கு ஒருமுறை என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதையும் நீங்கள் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் முதலில் செய்யுங்கள். 

3. தொலைபேசிக் கட்டணம், ரயில் டிக்கெட் முன்பதிவு கட்டணம் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் செய்யுங்கள். ஆன்லைன் பரிவர்த்தனை செய்வதன் மூலம் உங்கள் நேரத்தையும் தேவையில்லாமல் ஒரு பயன்பாட்டையும் குறைக்கலாம்.

4. இந்த மாதம் இந்த செலவு மட்டுமே என திட்டமிட்டால், அடிக்கடி ஏடிஎம்மை நாட வேண்டிய அவசியம் இருக்காது.

5. அதிக தொகையை எடுக்க நேரிட்டால், வங்கிக்கு சென்று எடுங்கள். இதன்மூலம் ஏடிஎம் கார்டின் பயன்பாட்டை வெகுவாகக் குறைக்க முடியும்.

6. காசோலைகளைப் பயன்படுத்த கட்டணம் இல்லை என்பதால் காசோலைகள் ஏற்றுக்கொள்ள கூடிய இடங்களில் காசோலைகளைப் பயன்படுத்துங்கள். 

7. அனைவருக்குமே தற்போது சம்பளம் என்பது பெரும்பாலும் நேரடியாக வங்கி கணக்கில் சேரும்படியுள்ளது. உங்கள் சம்பலத்தில் முதன்மை செலவுகள் என்ன என்பதை உணர்ந்து அதனை செலவு செய்ய ஒரே நேரத்தில் பனத்தை எடுத்து செலவழிப்பது நல்லது.உதாரணமாக வீட்டு வாடகை, பள்ளி கட்டணம், கல்லூரி கட்டனம், பஸ் பாஸ் போன்றவற்றை கணக்கிட்டு ஒரே முறையில் எடுப்பது சிறந்தது.

8.கல்லூரி மாணவர்கள் தான் இதன் மூலம் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் கல்லூரியிலேயே கணக்கு வைத்திருப்பார்கள். அதற்கு பெரும்பாலும் இன்டர்நெட் பேங்கிங் வசதி இருக்கும். அதனை பயன்படுத்தி தனது தேவைகளையும் சரியாக பயன்படுத்தியும், பயன்பாட்டு கட்டணங்களையும் குறைக்கலாம்.

9.ஷாப்பிங் செய்யும்போது பணத்துக்குப் பதிலாக டெபிட்/கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துங்கள்.பெரிய மால்களில் ஏடிஎம்கள் வைத்திருப்பார்கள் அவற்றில் சென்று பணத்தை எடுத்து மால்களின் பல கடைகளில் செலவு செய்யாமல் ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலவு செய்வோம் என கணித்து அந்த தொகைக்கு அந்ததந்த மால்களின் காட்டுகளை பெற்று அதன் மூலம் ஷாப்பிங்கிற்காக பனம் எடுத்து செலவழியும் பயன்பாட்டு கட்டணத்தை தவிர்க்க பாருங்கள்.

10.மெட்ரோ நகரங்களில் ஏடிஎம் பயன்பாட்டுக்கு குறைவான வாய்ப்புகள் வழங்கப்படுவதால் நீங்கள் இருக்கும் இடத்தில் அல்லது பயணிக்கும் இடத்தில் மெட்ரோ எல்லைக்குள் அல்லாத ஏடிஎம்களை பயன்படுத்தினால் உங்களது வாய்ப்புகளை மிச்சப்படுத்தலாம்.

இந்த பத்து வழிகளை பயனபடுத்தி தேவையில்லாத பயன்பாட்டு கட்டணத்தை குறைக்கலாமே!

ச.ஸ்ரீராம்

No comments: