Blogger Widgets

Total Page visits

Saturday, November 22, 2014

எதிர் நீச்சல் போட கற்று குடுங்கள் பிள்ளைகளுக்கு


நேற்று ஒரு பள்ளி செல்லும் பெண் என்ன காரணத்தினாலோ பெற்றோர்கள் வீட்டில் இல்லாதபோது தூக்கில் தொங்கி உயிரை விட முடிவு செய்து விட்டால். தற்போது அந்த 15 வயது குழந்தையின் நிலை என்ன என்று தெரியவில்லை. 



அந்த சமயம் நான் அவர்களின் பக்கத்தில் இருக்க நேர்ந்தது, அந்த பெண்ணின் தாயாரின் கதறலும், கண்ணீரும் என்றும் என் நினைவில் இருந்து விலகாது, பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருந்தது.

அந்த பெண்ணின் தாயார் மற்றும் தந்தை கூலி வேலை செய்பவர்கள், தினமும் காலையில் வேலைக்கு சென்று விட்டு இரவு தான் திரும்புவார்கள் என்று அங்கு இருந்த மக்கள் பேசிகொண்டார்கள். அவர்கள் அப்படி வேலை செய்து என்ன பயன்?

பெற்ற பிள்ளைகளை பக்கத்தில் இருந்து அன்பு காட்டி, அரவணைத்து, மன தைரியத்தை ஊட்டி, நல்லது கேட்டது சொல்லி நல்ல மனிதர்களாய் உருவாக்க வேண்டிய கடமையை யார் செய்வார்கள்? 

காசு, பணம் சம்பாதித்து, பிள்ளைகளுக்கு வேண்டியதை வாங்கிதந்தாள் மட்டுமே ஒருவர் நல்ல பெற்றவர்களாய் ஆகி விடமுடியாது, பிள்ளைகளின் மனது அறிந்து, அவர்களுக்கு எது பிடிக்கும், பிடிக்காது, அவர்களின் ஆர்வம் எதில் உள்ளது என்று பிள்ளைகளை நன்கு அறிந்து அவர்கள் வாழ்கையில் எதையும் தாங்கும் மன பக்குவம் பெரும் வகையில் அவர்களை பக்குவபடுதுவதில் பெற்றவரின் பங்கு அளப்பரியது.

தற்கொலை என்றும் நமது துன்பத்திற்கு, கவலைகளுக்கு ஒரு முடிவு அல்ல. அது ஒரு கோழைத்தனம் என்று குறிப்பால் உணர்த்துவது யார் பொறுப்பு. 

வாழ்கை ஒரு போர்களம் என்று சொல்லி,போராட கற்று குடுங்கள் 

எதிர்ப்புகள் இல்ல வாழ்க்கை சுவாரசியம் இல்ல பயணம் என்று சொல்லி, சுவாரசியமான பயணம் செய்வது எப்படி என்று சொல்லி குடுங்கள்.

எதிர் நீச்சல் போட கற்று குடுங்கள் பிள்ளைகளுக்கு.

கிருஷ்ணமூர்த்தி

No comments: