Blogger Widgets

Total Page visits

Tuesday, May 28, 2013

சச்சினின் கிரிக்கெட் சகாப்தம் முடிவுக்கு வருகிறது

ஐபிஎல் போட்டிகள் முடிந்தவுடன் சச்சின் டெண்டுல்கர் வெளிப்படையாகத் தனது கடைசி ஐபிஎல் போட்டித் தொடர் இதுதான் என்று அறிவித்தார். அத்துடன் தனது கிரிக்கெட் வாழ்க்கை இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது என்பதையும் தெரிவித்தார். மேலும் இந்த சீஸன் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் நிறைவுப் பகுதியாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.


பெரும்பாலான மூத்த இந்திய கிரிக்கெட் வீரர்களும் சர்வதேச முதல்தர போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில், ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் நபராக சச்சின் இருப்பார் என்கின்றனர் ரசிகர்கள்.

ஏற்கெனவே சர்வதேச டி20, ஒரு நாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு பெற்று விட்டார் சச்சின். இந்நிலையில் ஐபிஎல்லில் இருந்தும் இந்த வருடம் விடைபெற்று விட்டதால், சச்சின் ரசிகர்கள் இந்த சீஸனே அவரது கிரிக்கெட் சகாப்தத்தின் இறுதிப் பக்கங்களாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

வரும் நவம்பர் தென்னாப்பிரிக்காவுடன் டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ளன. தொடர்ந்து நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளும் உள்ளன. இந்நிலையில், சச்சின் தனது 200 வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளதாக பெருமை கொள்கின்றனர் சச்சின் ரசிகர்கள்.

இந்த தகவல் தினமணி வலைபக்கத்தில் இருந்து பகிரப்படுகிறது.  

No comments: