Blogger Widgets

Total Page visits

Wednesday, April 24, 2013

விடைகொடுக்கும் ஈர விழிகள்

என் உயிர் தோழிகளுடன்
உறவாடிய பொழுதுகள்...

என் உயிர் நண்பர்களுடன்
என் நட்பு விளையாடிய நிமிடங்கள்...

இன்று முடிவடையும்
என் கல்லூரி வாழ்க்கை...

கல்லாகிய என் இதயம்...
கலங்கிய என் விழிகள்....

இதயம் கணக்கிறது...
என் நட்புகளை பிரிவதை எண்ணி...

இனி என்று கிடைக்கும்
என் தோழிகளின் மதிய உணவு பரிமாற்றம்...

எப்போது மாறி அமருவோம்...
சின்ன சின்ன சண்டைகளுக்காக
வேறொரு இருக்கை ...

ஒருவரை ஒருவர் கேலி ,கிண்டல்
செய்து சிரித்து எங்கள் துக்கம்
மறந்த நிமிடங்கள்...

வருங்கால வாழ்க்கை
பற்றிய சிறு சிறு பரிமாற்றங்கள்....

வலிக்கும் இதயத்திற்கு ஆறுதல்
சொல்ல தெரியவிலை...
கல்லூரி வாழ்க்கை முடிவதை எண்ணி...

நான் இழந்த கல்லூரி வாழ்க்கை
திரும்ப கிடைக்காத என ஏக்கம்
என் நட்பெனும் இதயத்தில்...

ஆசிரியர்களின் விருப்பத்திற்காக
சிலமணி நொடிகள் மவுனம்
வகுப்பில்....

நட்பின் திருமண அழைப்பிதழுக்கு
வேண்டி காத்திருக்கும்
நிமிடங்கள்...

ஏதோ அவ்வபோது
குறுதகவல் முலம் விசாரிப்பு....

கல்லூரி அடி எடுத்து வைத்த
தொடக்க நாள் முதல்
இன்று நடந்தது வரை

நினைவுக்கு வரும் நாம்
பிரிந்து செல்லும் இந்த
கடைசி நிமிடம்....

பத்து மாதம் நம்மை
சுமக்க வில்லை
என்றாலும் நம் நட்பை
சுமக்கும் உயிர் நட்புகளின்
உறவை அம்மா அப்பா
இன்று அழைக்கும் உரிமை...

என் வகுப்பு நண்பர்களின்
டேய், மாமா ,மச்சான், பங்காளி
என்ற பேச்சுக்களை ரசிந்த
நிமிடங்கள்....அனைத்தும்
இனி என்று கிடைக்கும் என் வாழ்வில்...

கல்லூரி நினைவுகளுடன்
வருடங்கள் நம்மை கடக்க
மற்ற கல்லூரி தலைமுறைகளை.
பார்க்கும் போது

நமது கல்லூரி வாழ்க்கை
நம்முடன் நடை போடும் அந்த நொடி ....

No comments: