Blogger Widgets

Total Page visits

Showing posts with label நேர்முகத் தேர்வு. Show all posts
Showing posts with label நேர்முகத் தேர்வு. Show all posts

Wednesday, January 3, 2018

நேர்முகத்தேர்வில் வேலைவாய்ப்பை இழக்கச்செய்யும் 5 முக்கியத் தவறுகள்!

நாம் என்னதான் திறமைமிக்கவராக இருந்தாலும் வாழ்க்கையை வடிவமைக்கக்கூடிய நேர்முகத்தேர்வில் கோட்டைவிட்டுவிட்டால், ஆயுளுக்கும் அதை நினைத்து வேதனைப்பட்டுக்கொண்டிருப்போம். ஐ.ஏ.எஸ் தேர்வுகளைக்கூட சிலர் நல்ல முறையில் எழுதியிருப்பார்கள். ஆனால், நேர்முகத்தேர்வில் சரியாக பதில் சொல்ல முடியாமல் தோல்வியைச் சந்தித்திருப்பார்கள். இன்டர்வியூ அறை என்பது, வாழ்க்கையைத் தீர்மானிக்கும் இடம் என்பதை மறந்துவிடக் கூடாது. அங்கே என்ன நடக்கும் எனக் கணித்துவிட்டுப் போக முடியாது. அனுபவம், திறமை, பணித்திறன் எல்லாவற்றையும் தாண்டி, இன்டர்வியூ நடத்துபவர்களின் மன ஓட்டத்தை அறிந்து பதிலளித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். இன்டர்வியூவின்போது நாம் செய்யும் ஐந்து முக்கியத் தவறுகளால் வேலைவாய்ப்பைத் தவறவிடுகிறோம் என்கிறார்கள் வல்லுநர்கள். 
நேர்முகத்தேர்வு -  வேலை
நல்ல உடை, பாலீஷ் போடப்பட்ட காலணி, தோற்றம் எல்லாவற்றையும் தாண்டி இன்டர்வியூ நடத்துபவரை நேருக்குநேர் பார்த்துப் பேச வேண்டும். கண்களைத் தவிர்க்கும்பட்சத்தில் நம்பிக்கையற்றவர்களாக நம்மைக் கருத ஆரம்பித்துவிடுவார்கள். இன்டர்வியூவுக்குச் செல்லும் 70 சதவிகிதம் பேர், கண்களைப் பார்த்துப் பேசாததன் காரணமாக ரிஜெக்ட் செய்யப்பட்டு, வேலைவாய்பை இழக்கிறார்கள். எனவே, இன்டர்வியூவின்போது கண்களைப் பார்த்துப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள். 
இன்டர்வியூ நடைபெறும்போது, பழைய நிறுவனங்களைப் பற்றித் தவறாக எதுவும் பேசக் கூடாது. பழைய நிறுவனங்களைப் பற்றித் தெரிந்துகொண்டு இன்டர்வியூ நடத்துபவர்கள் வேண்டுமென்றே உங்களிடம் ஏதாவது தவறாகக்கூடக் கேட்கலாம். அப்போது, அதற்கு உங்களின் பதில் ஜென்டிலாக இருக்க வேண்டுமே தவிர, குறை கூறும்விதத்தில் இருக்கக் கூடாது. பணிபுரிந்த இடங்களில் உங்கள் மூத்த அதிகாரி பற்றியோ, சக ஊழியர்களைப் பற்றியோ குறை கூறாமல் இருப்பது நல்லது. பழைய நிறுவனத்தைக் குறை கூறும்விதத்தில் நீங்கள் பதில் அளிப்பதால், இன்டர்வியூ நடத்துபவர்களுக்கு உங்கள் மீது தவறான கண்ணோட்டம் எழ வாய்ப்பிருக்கிறது. உங்கள் மதிப்பு இந்த இடத்தில்தான் முக்கியமாகக் கணிக்கப்படுகிறது.
பணியைப் பற்றிய தெளிவான அறிவை வளர்த்துக்கொள்வது அவசியம். செய்யவேண்டிய பணிகளைப் பற்றி இன்டர்வியூ நடத்துபவர்களிடம் கேள்விகள் எழுப்புவது, பணியில் உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தும். பணி பற்றி கேள்வி எழுப்பாமல் இருந்தால், ஆர்வம்குறைவு என முடிவெடுத்துவிடுவர். அதனால், வேலையைப் பற்றி இன்டர்வியூ நடத்துபவர்களிடம் சில கேள்விகளை முன்வைப்பது நல்லது. நமது திறமைகள் குறித்து அதிகம் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, நமக்கு எந்த விஷயத்தில் ஆர்வம் அதிகமிருக்கிறதோ அது குறித்துப் பேசுவது நல்லது. 
இன்டர்வியூவின்போது பொய் சொல்வதையோ அல்லது உங்கள் பணிவாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களையோ சொல்வதைத் தவிர்க்கவும். இன்டர்வியூ நடத்துபவர்கள் அவற்றைக் கேட்க விரும்புவதில்லை. கண்ணியமும் நேர்மையும்தான் உங்களுக்கு வேலையைப் பெற்றுத் தருவதில் முதல் இடத்தில் உள்ளன என்பதை கருத்தில்கொள்ளுங்கள்.
இன்டர்வியூவில் கேட்கும் கேள்விகளை நன்கு கவனிக்கவேண்டும். தகவல்களைத் திறம்பட பரிமாறிக்கொள்ளும் திறமைகொண்டவர்களால் மட்டுமே அடுத்தவர்களை சிறந்த முறையில் கவனிக்க முடியும். எனவே, `இன்னொரு முறை சொல்லுங்கள்' என்று கூறுவதைத் தவிர்க்கவும். கேள்விகளைக் கூர்ந்து கவனிப்பது, நம்மை நல்லமுறையில் பதில் சொல்லவைக்கும். கேள்விக்குத் தகுந்த பதிலை மட்டும் அளியுங்கள். பணிக்குச் செல்லும் முன், அந்த நிறுவனத்தைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்டு செல்வது  பயனளிக்கும். 

Click Here for Original Content

Saturday, April 15, 2017

இந்த டெக்னாலஜி தெரிந்தால் போதும் மாதம் லட்சங்களில் சம்பளம் வாங்கலாம்..!


உலகம் முழுவதிலும் உள்ள நிறுவனங்கள் செலவுகளைக் குறைத்தல், சம்பளத்தைக் குறைத்தல் ஆட்டோமேசன் தொழில்நுட்பங்களைப் புகுத்துதல் என்று செய்து வரும் போதிலும் பல தொழில்நுட்பங்கள் புதிதாக வந்துகொண்டே தான் இருக்கின்றன. அதனைக் கற்றுக்கொள்பவர்களுக்கு ஐடி துறையில் இருந்து வேலை இழப்பு என்ற ஒன்று இருக்கவே இருக்காது. ஆம், ஒரு காலத்தில் நாம் சி, சி++, ஜாவா, .நெட் உள்ளிட்ட கணினி மிழிகள் தெரிந்து இருந்தால் நல்ல சம்பளம் கிடைக்கும் என்று இருந்தது எல்லா இன்றளவும் நாம் கேள்வி பட்டு வந்தாலும் பல புதிய தொழில்நுட்பங்கள் புதிதாக ஐடி துறையை ஆக்கிரமித்து உள்ளன. இந்த டெக்னாலஜிகள் பெரும்பாலும் டேட்டா அனலிட்டிக்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்றவை ஆகும். தொழில்நுட்ப நிறுவனங்களும் இது போன்ற புதிய டெக்னாலஜியை ஊழியர்களுக்குக் கூடுதலாகப் பயிற்சியும் அளிக்கின்றன. இப்படிப்பட்ட புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் நீண்ட கால ஐடி துறையில் உங்களால் இருக்க முடியும். இந்தப் புதிய தொழில்நுட்பங்களை நீங்கள் தெரிந்து வைத்து இருந்தால் மைக்ரோசாப்ட், ஐபிஎம் என மிகப் பெரிய நிறுவனங்களில் லட்சங்களில் சம்பளம் வாங்கலாம். எனவே இந்தப் புதிய தொழில்நுட்பங்கள் என்னென்ன, எந்த நிறுவனங்களில் எல்லாம் வேலை வாய்ப்பு கிடைக்கும், எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று இங்குப் பார்ப்போம்.

ஸ்பார்க் (Spark) ஆரக்கிள், கேப்ஜெமினி, எம்பசிஸ், சிட்டி மற்றும் டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களில் ஸ்பார்க் தொழில்நுட்பம் தெரிந்தவர்களைப் பணிக்கு எடுக்கின்றனர். இந்த மென்பொருள் மூலமாகக் கிளவுடில் உள்ள மிகப் பெரிய தரவை எளிதாகத் தங்களுக்குக் கிடைத்துள்ள ப்ராஜக்டுகளுக்கு இந்த நிறுவனங்கள் மாற்றிக்கொள்ளும். ஸ்பார்க் தொழில்நுட்பம் தெரிந்த பொறியாளர்கள் 14.6 லட்சம் வரை ஆண்டுச் சம்பளம் பெற முடியும்.

அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) 2017-ம் ஆண்டு அதிக அளவில் எதிர்பார்க்கும் திறன் என்றால் அது அமேசான் வெப் சர்வீசஸ் தெரியுமா என்பதாகத் தான் இருக்கும். அக்சன்சர், ஐபிஎம், விப்ரோ மற்றும் அமேசான் மேம்பாட்டு மையங்களில் அமேசான் வெப் சர்வீசஸ் வல்லுநர்களுக்கான தேவை அதிகமாக இருக்கின்றது. இதுவும் ஒரு கிளவுடு தொழில்நுட்பம் தான். இந்த அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) மென்பொருள் உங்களுக்குத் தெரிந்து இருந்தால் ஆண்டுக்கு 13.8 லட்சம் வரை சராசரியாகச் சம்பளம் வாங்கலாம்.

டேவ்ஓப்ஸ் (DevOps) டேவ்ஓப்ஸ் (DevOps) ஒரு ஆடோமேடிக் மென்பொருள் தளமாகும், இந்தத் தொழில்நுட்பத்தைத் தெரிந்தவர்களுக்கு அக்சன்சர், டெக் மஹிந்த்ரா, பார்க்லேஸ் மற்றும் எக்ஸ்பீடியா நிறுவனங்களில் எளிதாக வேலைக் கிடைக்கும். டேவ்ஓப்ஸ் உங்களுக்குத் தெரிந்தால் 13.7 லட்சம் ரூபாய் ஆண்டுச் சம்பளமாகப் பெற முடியும்.

மெஷின் லேர்னிங் மெஷின் லேர்னிங் தெரிந்த பொறியாளர்களுக்கு அமேசான் மேம்பாட்டு மையம், மைக்ரோசாப்ட் இந்தியா ஆர் & டி, அக்சன்சர், ஐபிஎம், GE இந்தியா மற்றும் ஹர்மன் உள்ளிட்ட நிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளது. இந்த மென்பொருள் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தில் பணிபுரியக்கூடிய மென்பொருள் ஆகும். மெஷின் லேர்னிங் உங்களுக்குத் தெரிந்திருந்தால் ஆண்டுக்கு 13.7 லட்சம் வரை சம்பளம் பெறலாம்.

ஏஜ்யூர் (Azure) மைக்ரோசாப்ட் இந்தியா ஆர் & டி, கேப்ஜெமினி, எர்னஸ்ட் & யங், டெல் மற்றும் ஹனிவெல் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏஜ்யூர் (Azure) கிளவுட் மென்பொருள் தெரிந்து பொறியாளர்களை அதிகமாகப் பணிக்கு எடுக்கின்றன. இந்தத் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் ஆண்டுக்கு 13.1 லட்சம் வரை சம்பளம் வாங்கலாம்.

டேபில்யூ (Tableau) எர்னஸ்ட் & யங், அக்சன்சர், வோடபோன், மோர்கன் மற்றும் ஸ்டான்லி போன்ற நிறுவனங்கள் டேபில்யூ (Tableau) தொழில்நுட்பம் தெரிந்தவர்களை அதிக ஆளவில் பணிக்கு எடுக்கின்றன. டேபில்யூ (Tableau) ஒரு வணிக நுண்ணறிவு மென்பொருள் ஆகும். இந்தத் தொழில்நுட்பம் உங்களுக்குத் தெரிந்து இருந்தால் ஆண்டுக்கு 13 லட்சம் சம்பளம் பெற முடியும்.

பிஸ்னஸ் அனலிட்டிக்ஸ் ஐபிஎம், கேபிஎம்ஜி, எச்பி, சேப் லேப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பிஸ்னஸ் அனலிட்டிக்ஸ் தெரிந்தவர்களை அதிக அளவில் பணிக்கு எடுக்கின்றன. பிஸ்னஸ் அனலிட்டிக்ஸ் ஆண்டுக்கு 12.4 லட்சம் வரை சராசரியாகச் சம்பளம் வாங்கலாம்.

சேல்ஸ்ஃபோர்ஸ் ஏடோஸ், லின்க்டுஇன், ஜேஸ்லர், கேப்ஜெமினி மற்றும் அக்செஞ்சர் உள்ளிட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர் உறவுகள் மேலாண்மைப் பயன்பாடுகளை அறியப்படும் சேல்ஸ்ஃபோர்ஸ் தொழில்நுட்பம் தெரிந்தவர்களை அதிக அளவில் பணிக்கு எடுக்கின்றன. சேல்ஸ்ஃபோர்ஸ் நிபுணத்துவம் பெற்ற பொறியாளர்கள் சராசரி சம்பளம் வருடத்திற்கு 11.8 லட்சமாக உள்ளது.

ஜீரா ஜேபி மோர்கன், ஹர்மன், டெக் மஹிந்த்ரா, விசா மற்றும் சிட்டி உள்ளிட்ட நிறுவனங்கள் கண்காணிப்புப் பிழைகள் மற்றும் திட்ட மேலாண்மை செயல்பாடுகளைச் செய்யும் ஜீரா தொழில்நுட்பத்தைத் தெரிந்தவர்களைப் பணிக்கு ஆண்டுச் சம்பளம் 11.7 லட்சம் ரூபாயுடன் எடுக்கின்றன.

செலினியம் ஜேபி மோர்கன், எம்பசிஸ், டெக் மஹிந்த்ரா, ஆரக்கிள் மற்றும் டெல் போன்ற முக்கியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் வலை பயன்பாடுகள் பணிகளைச் செய்யக்கூடிய செலினியம் தொழில்நுட்பம் தெரிந்தவர்களை ஆண்டுக்கு 9.9 லட்சம் ரூபாய் சம்பளத்தில் பணி அமர்த்துகின்றன.


நண்பர்கள் தெரிந்து கொள்ள பகிர்கிறேன்.  

Tuesday, June 23, 2015

அத்தியாயம் 18-நெருக்கடியில் நீங்கள் யார்?

முடிவெடுக்கும் திறனை ஆராய்ந்து பார்க்க, ரயில் வரும் கேள்வியைப் பார்த்தோம்.
ஒரு கிராமம், இரண்டு இரயில் பாதைகள். ஒன்று 15 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இல்லை. இன்னொன்றில் தினமும் மாலை 4 மணிக்கு ரயில் வரும். அப்படி ஒரு நாள், பயன்பாட்டுத் தடத்தில் 10 குழந்தைகள் விளையாடுகிறார்கள். ஒரு குழந்தை மட்டும் பழைய தடத்தில் விளையாடுகிறது. ரயில் வந்துகொண்டிருக்கிறது. நீங்கள்தான் நிலைய அதிகாரி. ரயிலின் பாதையை மாற்றும் லீவர் உங்கள் கையில்… ரயில் பழைய பாதையில் செல்லுமா? தினசரி செல்லும் பாதையில் செல்லுமா? குழந்தைகளைக் காக்க, என்ன முடிவெடுப்பீர்கள்?
இந்தக் கேள்வி கேட்கப்படும்போது பெரும்பான்மையானோர் ஒரே முடிவைத்தான் எடுப்பார்கள்.
ரயிலை பழைய பாதைக்குத் திருப்பிவிடுவது! ஏனெனில், அதில்தான் ஒரு குழந்தை மட்டும் விளையாடிக்கொண்டிருக்கிறது. மற்ற 9 குழந்தைகளும் காப்பாற்றப்படும் என்று சிந்தித்தோம் என்று பதில் வரும்.
இதைத்தான் Emotional Decision Making என்று சொல்கிறோம். அதாவது உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பது…
ஆனால், சரியான முடிவு இது இல்லை.
இந்த ரயில் பிரச்னையை இன்னும் ஆழமாக அணுகினால் போதும். நீங்கள் ஸ்டேஷன் மாஸ்டராக இருக்கும்பட்சத்தில், முதலில், ஒன்றுமே செய்யாமல் அமைதியாக இருப்பதுதான் நல்லது என்று முடிவெடுப்பீர்கள். ஏனெனில், ரயில் ஒவ்வொரு நாளும் 4 மணிக்கு வரும் என்று தெரிந்துதான் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும். ஆகவே, ரயில் அருகில் வரும்போது, ஆண்டாண்டு காலமாக, பயன்படுத்தாமல் இருக்கும் பாதையில் சென்று நின்றுகொள்ளலாம் என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கும்.
ஒரு குழந்தை மட்டும் பழைய பாதைக்குச் சென்றிருக்கும்பட்சத்தில், அது மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது. மேலும், நாம் குழந்தைகளுக்கு வழிகாட்ட விரும்பினால், அந்த பழைய பாதையை நோக்கி போகச் சொல்லிவிட்டு பேசாமல் இருக்கலாம்.
இப்போது, ரயில் அதன் பாதையில் வரும். குழந்தைகள் பழைய பாதையில் நிற்பார்கள். ரயில் அதன்போக்கில் சென்றுவிடும்.
ஆனால், நன்மை செய்கிறேன் பேர்வழி என்று பழைய பாதைக்கு ரயிலை திருப்பிவிட்டால் என்ன ஆகும்?
15 ஆண்டுகளாகப் பயன்படுத்தாத பாதை, - அப்படியெனில் அது பராமரிப்பே இல்லாமல்தான் இருந்திருக்கும். வேகமாக ரயில் அதன் மீது வரும்போது என்னவேண்டுமானாலும் ஆகலாம். அந்த வகையில் திடீரென்று அந்தப் பழைய தண்டவாளம் உளுத்துப்போய் இருந்து, ரயிலின் பாரம் தாங்காமல் உடைந்துவிட்டால் என்ன ஆகும்? மிகப்பெரிய விபத்து ஏற்படும். அந்த ஒரு குழந்தையோடு சேர்த்து, ரயிலில் பயணிக்கும் 1500 பயணிகளின் உயிருக்கும் ஆபத்து நேரிடும்.
மேலும், இன்னொரு பிரச்னையும் உண்டு. ரயில் அருகில் வந்துவிட்டது என்று தெரிந்ததும், விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் பழைய பாதையை நோக்கிப்போனால் என்ன ஆகும்? யாருமே மிஞ்சமாட்டார்கள்.
ஆக, ஸ்டேஷன் மாஸ்டரான நீங்கள் உணர்ச்சிவசத்தால் எடுக்கும் முடிவு, பெரிய சோகமான செய்தியாக மாறியிருக்கும்.
அப்படியெனில், அனைத்தையும் உணர்ச்சிவசப்படாமல் யோசித்து முடிவெடுப்பதற்கு என்ன பெயர்?
Rational Decision Making – விழிப்புணர்வுடன், தர்க்கரீதியாகச் சிந்தித்து முடிவெடுத்தால் போதும். அனைவரது வாயிலிருந்தும் ‘வாவ்’ நிச்சயம்!
ஆக, முடிவெடுப்பதிலும் ஒரு சரியான அணுகுமுறை தேவை என்பது புரிந்துகொள்ளலாம். ஏனெனில், பல நேரங்களில், நிறுவனங்களுக்கு அப்படிப்பட்ட திடீர், அதிரடி முடிவுகளை எடுக்கவேண்டி நேரிடும். அதனை எடுக்கவைப்பது அங்கு வேலை பார்க்கும் நீங்கள்தான் என்றால், அந்த முடிவை எடுத்ததே நாம்தான் என்று ஆகிவிடும். அந்த அடிப்படையில், ஒரு பிரச்னை ஏற்படும்போது எப்படி முடிவெடுக்கிறோம் என்று நிறுவனம் நம்மை எடைபோட்டுப் பார்க்கும்.
அதை நெருக்கடி நிலைச் சிந்தனை என்று தமிழில் சொல்லலாம். ஆங்கிலத்தில் CRITICAL THINKING என்கிறார்கள்.
மேற்கண்ட ரயில் கதை ஒரு நெருக்கடி நிலை முடிவெடுக்கும் திறனைச் சோதிக்கும் முயற்சிதான்! நிதானமாக அமர்ந்து, டீ குடித்துக்கொண்டே முடிவெடுக்க முடியாத நிகழ்வுகள் நம் நிறுவன வேலை வாழ்வில் அடிக்கடி நிகழும். அதில் எடுக்கும் பல தவறான முடிவுகள் நிறுவனத்தின் தலையெழுத்தையே மாற்றும் வல்லமை படைத்தவை! அது நடக்காமல் இருக்கத்தான் நிறுவனங்கள் கொஞ்சம் கூர்மதியுடன் அப்படிப்பட்ட சரியான சிந்தனை உள்ள மனிதர்களை வேலைக்கு அமர்த்த முயற்சிக்கின்றன. 
நமக்கும் வாழ்வில், பல தருணங்களில், நெருக்கடி நிலை முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும். அதனை நாம் உணர்ச்சிவசப்பட்டு அணுகினோமா? அறிவுப்பூர்வமாக அணுகினோமா? என்பதை வைத்தே அதன் விளைவு என்ன ஆகியிருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.
பொதுவாக, உணர்ச்சிவசப்பட்டு எடுத்த எல்லா முடிவுகளின் விளைவும் தவறாகத்தான் போயிருக்கும். அறிவுப்பூர்வ முடிவுகளின் விளைவுகள் நிச்சயம் முழுத் தவறாகப் போயிருக்க வாய்ப்பில்லை.
ஒரு காகிதத்தை எடுத்துக்கொள்ளுங்கள். வாழ்வில் எடுத்த நெருக்கடி நிலை முடிவுகளைப் பட்டியலிடுங்கள். அதில் நீங்கள் எடுத்த அதிகபட்ச முடிவுகள் உணர்வு சார்ந்திருந்தால், உங்கள் முடிவெடுக்கும் திறனை நீங்கள் மறுபரிசீலனை செய்யவேண்டி இருக்கும்.
எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் பெரிய கடனாளி ஆகிவிட்டார். கடனை அடைக்க முடியாமல்போன தருணத்தில், கடன் கொடுத்த ஒருவர் வீட்டு வாசலில் வந்து சத்தம் போட்டுச் செல்லவும், என்ன செய்வதென்று தெரியாமல், அன்று இரவே விஷம் வாங்கிவந்து, உணவில் கலந்து மனைவி, பிள்ளைகளுக்குக் கொடுக்கும் முடிவுடன் கடைசியாக குடும்பத்துடன் அமர்ந்திருக்கிறார்.
அதற்குப்பிறகு நடந்ததுதான் அவரது வாழ்க்கையையே மாற்றியிருக்கிறது.
என்ன நடந்தது என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

அத்தியாயம் 17-சாதுர்யம் சாதிக்கும்

நண்பர் என்பவர் எனக்கு ஒரு சிந்தனைப் பகிர்தலுக்குத்தான். அவரது ஆசாபாசங்களும், என்னுடையதும் வேறாயிருக்கலாம். ஒன்றாயிருந்தாலும் தவறில்லை. ஆனால், என்ன துறை எடுப்பது என்று இருவருமே தனித்தனியே சிந்தித்து, தன் பலம், பலவீனங்களை அலசி, அதன்படி முடிவெடுத்திருந்தால், வாழ்க வாழ்கவென்று வாழ்த்தலாம்.ஆனால், பொதுவாக என்ன நடந்துவிடுகிறது என்றால், ‘செந்தில், இன்ஜினீயரிங்கில் என்ன படிக்கலாம்னு இருக்க?’ என்று கேட்டால்,
சந்துரு மெக் படிக்கலாம்னு சொல்றான். அதுலதான் நல்ல ஸ்கோப் இருக்காம்!’
‘ஓ, அப்படியா? சந்துரு, இதை எதை வச்சு சொல்றானாம்?’
‘அவன் எதிர்வீட்டு பையன் பிரபுன்னு இருக்கான். அவன் அதான் எடுக்கப்போறானாம். அதனால சொல்றான். ஏன்னா, பிரபு ப்ளஸ்டூல 1175  மார்க் எடுத்திருக்கான்’
பிரபுவிடம் கேட்டால்,
‘எங்க அப்பா சொன்னாங்க!’
அவனது அப்பாவிடம் கேட்டால்,
‘சார், நான் ஒரு ஆட்டோமொபைல் கம்பெனில வேலை பாக்குறேன். அதே கம்பெனியில் என் பையனுக்கு என்னால இன்ஜினீயர் வேலை வாங்கிடமுடியும். அதனாலதான் சொன்னேன். மேலும், என் ஃப்ரெண்டு
வேலு, டெய்லி பேப்பர் படிக்கிறவர்! அவர்தான் சொன்னார். இப்போ கம்ப்யூட்டரெல்லாம் வேஸ்டாம்! அப்புறம், மெடிக்கல் படிக்கவைக்க காசு அதிகமா செலவாகும். மேலும் MBBS மட்டும் படிச்சா போதாது. ஏதாவது Speciality MD வேற படிக்கணும். பாவம் பையன் 26 வயசுலதான் வேலைக்குப் போகமுடியும். அதான் இந்த முடிவெடுத்தேன்’.
அந்த பேப்பர் படிக்கும் நபரைக் கேட்டால் இப்படிச் சொல்லுவார்.
‘மெக்கானிக்கல் படிச்சா, ஒரு மெக்கானிக் ஷெட்டாவது வச்சு பொழச்சுக்கலாம்ல சார்! அதான் சொன்னேன்’.
ஆக மொத்தத்தில், வேலுவின் கும்மாங்குன்ஸான கணிப்புதான், செந்திலை இயந்திரவியல் எடுக்கவைத்திருக்கிறது. ஆனால், ஆழமாகச் சோதித்துப் பார்த்தால், செந்திலுக்கு நன்றாக எழுதவும், பேசவும் வரும். அவன் ஜர்னலிஸம் படித்தால், பெரிய ஆளாக வாய்ப்பு இருக்கிறது.
‘நண்பன்’ படத்தில் விஜய் போகிறபோக்கில் அழகாகச் சொல்லுவார். ‘இவன் காதலிக்கிறது ஃபோட்டோகிராபிய, கல்யாணம் பண்ணிக்கிட்டது
இன்ஜினீயரிங்கை!’
அப்படி, தன் விருப்பத்திலேயே இல்லாமல், யாரோ ஒருவரின் திருப்திக்காகவோ, தன்னால் முடிவெடுக்க முடியாமலோ ஒரு துறையைத் தேர்ந்தெடுத்தவர்களை, நிறுவனங்கள் அடையாளம் கண்டு, அவர்களுக்குப் பயிற்சி அளித்து வேலையில் தக்கவைத்துக்கொள்வதே கடினம் என்று எண்ணி, அவர்களை  ‘வேண்டாம்’ என்று நாசூக்காகவோ, நறுக்கென்றோ சொல்லிவிடும்.
உண்மையிலேயே நண்பன் சொன்னதை நம்பி, கண்ணை மூடிக்கொண்டு ஒரு துறையைத் தேர்ந்தெடுத்திருந்தாலும், சேர்ந்த பிறகாவது அதனை நேசிக்கத் துவங்கியிருந்தால், நான்கு ஆண்டுகளில் அதன் மீது ஒரு பிடிமானம் வந்து, நேர்முகத் தேர்வை மிகவும் தைரியமாக எதிர்கொள்ளலாம். அந்த நேரத்தில் நண்பர் எந்தத் துறை? ஏன்? என்று கேட்கப்படும்போது, சாதுரியமாகப் பதில் சொல்லலாம்.
‘என்னால் உடனடியாக முடிவெடுக்கமுடியாமல், இன்ஜினீயரிங் எடுத்தேன்.
ஆனால், இப்போது அந்த முடிவை சரி என்று நிரூபிக்க என்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்கிறேன்’.
இந்தப் பதிலில் நேர்மையும் உறுதியும் ஒருங்கே தென்படுவதால், நிறுவனம் ஏற்றுக்கொள்ளும்.
அல்லது, நண்பன் வேறு துறையில் இருக்கிறான். நான் வேறு துறையில் இருக்கிறேன் என்று சொன்னால், ஏன் அந்த முடிவெடுத்தீர்கள்? என்று அடுத்த கேள்வி வந்து விழும். அப்போது இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.
என் நண்பனும் நானும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டுள்ளோம். அவனுக்கு எது சரியாக இருக்கும் என்று நான் சொன்னேன். அதுவே அவன் மனதிலும் இருந்தது. அதேபோல் நான் எதைத் தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும் என்று அவன் சொன்னான். அதன்படி முடிவெடுத்தோம் என்று யதார்த்தமாகப் பதில் சொன்னால், சிறப்பாக இருக்கும். நமது முடிவெடுக்கும் திறனை வைத்துத்தான், நம்மைத் தேர்ந்தெடுப்பதா  வேண்டாமா என்று  நிறுவனம் முடிவெடுக்கும். அதைக் கண்டறியத்தான் முன் அத்தியாயங்களில் பேசப்பட்ட கேள்விகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ கேட்பார்கள்.
சில முடிவெடுத்தல் தொடர்பான கேள்விகள் கதைபோல ஆரம்பித்து, எப்படி முடிவெடுக்க வேண்டும் என்று கேட்கப்படும்.அது ஒரு கிராமத்து ரயில்வே ஸ்டேஷன். அதில் மொத்தமே இரண்டு ரயில் பாதைகள்தான் இருக்கின்றன. ஒன்று 15 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படவே இல்லை. இன்னொன்றில், காலை 8 மணிக்கும், மாலை 4 மணிக்கும் ஒருநாளைக்கு 2 முறை ரயில் வந்து செல்லும். 
அன்று ஞாயிற்றுக்கிழமை, மாலை 3:59 மணி. பள்ளி செல்லும் சிறுவர்கள் பத்து பேர், ரயில் வரும் பாதையில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரே ஒரு குட்டிப் பையன் மட்டும் ரயில் வராத தண்டவாளத்தில் சென்று விளையாடுகிறான். மற்ற அனைவரும், பயன்படுத்தப்படும் தண்டவாளத்தில் விளையாடுகிறார்கள்.ரயில் வரும் சத்தம் கேட்கிறது.
நீங்கள்தான் ஸ்டேஷன் மாஸ்டர்! உங்களுக்கு அங்கு இருக்கும் இரண்டு வழித்தடங்களில் ஏதாவது ஒன்றில் ரயிலைச் செல்லவைக்கும் அதிகாரம் இருக்கிறது. அதாவது, உங்களால் ரயிலின் பாதையை அந்த இடத்தில் மாற்றமுடியும். அந்த லீவர் உங்களிடம்தான் உள்ளது. அதிகபட்ச குழந்தைகள், ரயில் வரும் பாதையில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரே ஒரு குழந்தை பயன்படுத்தமுடியாத, பழைய தண்டவாளத்தில் விளையாடிக்கொண்டிருக்கிறது. ஆக, புதிய ட்ராக்கில் ரயில் வந்தால் 9 குழந்தைகள் பலியாவார்கள். பழைய ட்ராக்கில் சென்றால் ஒரு குழந்தை பலியாகும் என்று உங்களுக்குத் தோன்றுகிறது.
உங்கள் முன் இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன.
1. லீவரை பயன்படுத்தி, ட்ராக்கை மாற்றி பழமையான பயன்படுத்தாத தண்டவாளம் வழியே ரயிலை போகச் செய்வேன்…
2. லீவரை மாற்றாமல் வேறு ஏதாவது உபாயம் செய்வேன்…
இதில்தான், நிறுவனம் வேலைக்கு எதிர்பார்க்கும் அடுத்த தகுதியும் ஒளிந்திருக்கிறது.
இதில் நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள்?

அத்தியாயம் 16-முடிவே முழுமை

வ்வொரு நாளும், பல்வேறு தருணங்களில் நாம் வெவ்வேறு முடிவுகளை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அந்த முடிவுகளை ஒரு வரிசைப்படுத்திப்பார்த்தால், அதன் விளைவுகளில் இருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம் என்று பார்க்கலாம்.
ஆனால், ஏதாவது ஒரு முடிவை எடுத்துவிட்டு அதனால் ஏற்படும் விளைவுக்கு மட்டும் நான் பொறுப்பல்ல என்ற நினைப்புதான் மிகவும் ஆபத்தானது. அல்லது, எடுத்த முடிவால் ஏற்பட்ட எதிர் விளைவை நினைத்து வருந்திக்கொண்டே இருப்பதும், அதனால், இனி இதுபோன்ற முடிவே எடுக்கக்கூடாது என்று முடிவெடுப்பதும் அடுத்த கட்டத் தவறுகள்.
உதாரணமாக, ஒரு தூரத்து ஊருக்குச் செல்லவேண்டும். பஸ்ஸில் போகலாமா? இரயிலில் போகலாமா? என்று குழப்பம். பல்வேறு காரணிகளை ஆராய்ந்து பஸ்ஸில் போகலாம் என்று முடிவெடுக்கிறீர்கள். பஸ் மிகமிகத் தாமதமாகக் கிளம்புகிறது. மழை வேறு பெய்கிறது. நீங்கள் போகவேண்டியது 8 மணி நேரப்பயணம். பஸ் ஒழுகுகிறது. திண்டாடிப்போகிறீர்கள். போய் இறங்கும்போதும் கிட்டத்தட்ட 15 மணி நேரம் ஆகியிருக்கிறது. கோபம் கோபமாக வரும்.
இதுக்குத்தான் நான் பஸ்ஸிலேயே போகவேண்டாம்னு நினைச்சேன் என்று சொல்வீர்கள். அல்லது, உங்கள் கூட வந்தவர்கள் தோழர், மனைவி, உறவு என்று யாராக இருந்தாலும் அவர்களது தூண்டுதல்தான் காரணம் என்று அவர்கள் மீது குறை சொல்வோம். பிறகு, அடுத்தமுறை எதில் போவது என்று முடிவெடுக்க வேண்டி வரும்போது, பஸ்ஸில் போன பிரச்னை நினைவுக்கு வந்து, இனிமேல் பஸ்ஸிலேயே போகவேண்டாம் என்று முடிவுக்கு வருவோம். ஆனால், இதுவும் ஒரு முடிவாக ஆகிவிடும்.
ஆனால், இப்படி யோசிக்கலாம்.! முதலில் இரயிலிலா? பஸ்ஸிலா? என்று முடிவெடுக்கும்போதே, தட்பவெப்ப நிலையையும் கணக்கில் எடுத்துகொண்டிருக்கலாம். எந்த பஸ்ஸில் போகப்போகிறோம்? அதனைப்பற்றி ஏற்கனவே சென்றவர்கள் என்ன கருத்து சொல்கிறார்கள் என்று பார்த்திருக்கலாம். அதனையும் மீறி, நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள் நடக்கும்போது, இயல்பாக எதிர்கொள்ளலாம். ஆனால், நாம் எடுத்த முடிவு நம்மீது திணிக்கப்பட்டது என்றோ, இனிமேல் இதுபோன்ற முடிவே எடுக்கக்கூடாது என்றோ பொத்தாம் பொதுவாக அடுத்த முடிவெடுத்தால், அது புத்திசாலித்தனமாக இருக்காது.  அதாவது, ஏன் பஸ்ஸில் போகவேண்டும் என்பதற்கு ஒரு சரியான, புத்திசாலித்தனமான காரணம் இருந்தால், பின்னர் வரும் பிரச்னைகளும் உங்களுக்கு அடுத்து முடிவெடுக்கும்போது கணக்கில் கொள்ளவேண்டிய காரணிகளுக்குள் வந்துவிடும்.
நிறுவனங்கள், நம்மிடம் முடிவெடுப்பதில் புத்திசாலித்தனத்தையும், ஆய்வுத்திறனையும், கவனித்தலையும் எதிர்பார்க்கின்றன. காரணங்களையோ, கவலைகளையோ அல்ல!  ஆக, முடிவெடுத்து, அதனை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் நமது முடிவெடுக்கும் திறன் வளரும்.


ஒரு நேர்முகத்தேர்வில், பங்கேற்பாளரின் முடிவெடுக்கும் திறனை எப்படி எடைபோடுவார்கள்?
முடிவெடுக்கும் திறனை அளக்கும் கேள்விகள் இப்படித்தான் இருக்கும்!
ஏன் பொறியியலில் எலக்ட்ரானிக்ஸை எடுத்தீங்க?
பனிரெண்டாம் வகுப்பில் ஏன் இந்தப் பிரிவைத் தேர்ந்தெடுத்தீங்க?
உங்க க்ளோஸ் ஃப்ரெண்ட் என்ன படிச்சார் ?
ஃபைனல் இயரில் அந்தப் பிராஜக்ட் எடுக்கணும்னு ஏன் முடிவெடுத்தீங்க?
அந்தக் காலேஜில் ஏன் சேர்ந்தீங்க?
கலை, அறிவியலில் ஏன் உங்களுக்கு பயோ டெக்னாலஜி மேல் ஆர்வம் வந்தது?
இந்தக் கேள்விகளை, ஏதோ நம் படிப்பு பற்றி அக்கறையுடன் விசாரிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு,
வேற டிப்பார்ட்மெண்ட்டே கிடைக்கலை சார்! 
எலக்ட்ரானிக்ஸ் படிச்சாத்தான் வேலை கிடைக்கும்னு சொன்னாங்க!
எங்க அண்ணன் கம்பெல் பண்ணினான்.
என் க்ளோஸ் ஃப்ரெண்டும் நானும் ஒண்ணாத்தான் கோர்ஸ் தேர்ந்தெடுத்தோம்.
நாங்க தேர்ந்தெடுக்கலை சார். அந்தப் பிராஜக்ட்தான் கரெக்டா ரிசல்ட் வந்தது. மேலும், வேற எதை யோசிச்சாலும், அதை யாராவது செஞ்சிருந்தாங்க!
அந்தக் காலேஜ்தான் எங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தது. அல்லது  அந்தக் காலேஜ்தான் சிட்டில இருந்தது.
பயோ டெக்னாலஜி புது டிப்பார்ட்மெண்ட், அதுக்கு நல்ல எதிர்காலம் இருக்குன்னு ஃப்ரெண்டெல்லாம் சொன்னாங்க !
மேற்கண்ட பதில்கள் எல்லாம், இந்த முடிவுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஏதோ நடந்தேறிவிட்டது என்று சொல்வதையே பிரதிபலிக்கிறது. இப்படி பதில்சொன்னாலே, நம்ம ஆளுக்கு முடிவெடுக்கத் தெரியாது என்று நிறுவனத்துக்குத் தானாகத் தெரிந்துவிடும்.
ஆக, மேற்கண்ட கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்லலாம்.?
பதில்கள் தானாக வரவேண்டும். இருந்தாலும் கீழ்க்கண்ட விபரங்களை மனதில் வைத்துக்கொள்வதுதான் நல்லது!
எலக்ட்ரானிக்ஸ் என்பது அழியாத துறை, அதில் இன்னும் முன்னேற்றங்கள் நடந்துகொண்டே இருக்கிறது. ரேடியோவாக இருந்தாலும் சரி! இனி வரப்போகும் ரோபோக்களாக இருந்தாலும் சரி! எலக்ட்ரானிக்ஸ் என்பது நிரந்தரமாக இருக்கும். மேலும் எனக்கு சிறுவயதில் இருந்தே, எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் மீது மிகவும் ஆர்வம் அதிகம். ஆகவே எனக்குப் பிடித்த, அழியாத துறையை எடுத்தால், என் எதிர்காலம் வளமாக இருக்கும் என்று யோசித்து இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தேன் என்று சொன்னால் போதும்!
நிறுவனம் அசந்துவிடும். உங்கள் முடிவெடுக்கும் திறன் மேல் நம்பிக்கை வந்துவிடும். இதுபோல்தான் நண்பர் பற்றிய கேள்வியும்.! அதில், ஒரு விபரம் அடங்கியிருக்கிறது. நீங்கள் நண்பரைப் பின்பற்றுகிறீர்களா? அல்லது அவர் உங்களைப் பின்பற்றுகிறாரா என்ற விபரமும் வந்துவிடும். ஏனெனில், அவர் உங்களைப் பின்பற்றியிருந்தால், அது நிறுவனத்துக்குப் பிரச்னையே இல்லை. பழக்கத்துக்காகப் படித்தேன் என்று சொல்வதை எந்த நிறுவனமும் ஏற்றுக்கொள்ளாது. ஆகவே இந்தப் பதிலில் இன்னும் கவனம் தேவை!
என்ன பதில் சொல்லலாம் என்று அடுத்த வாரம் பார்ப்போம்.!

அத்தியாயம் 15- முடிவெடுக்க…முடிவு முக்கியம்

பொறுப்பாக இரண்டு வாரங்களாக நேர்முக்கியத்தேர்வுக்கு பொறுப்பு எவ்வளவு முக்கியம் என்று புரிந்தாலும், இந்தத் தொடரை பொறுப்பாகப் படித்துவரும் நண்பர்களுக்கு நன்றியுடன், அடுத்த எதிர்பார்ப்பை அலசுவோம். நிறுவனம் நடத்துவதில் இருக்கும் இன்னொரு சிக்கல், ஊழியர்கள் இரண்டுவிதமாகச் செயல்படும் மனநிலைதான்.! அதாவது தனக்கு எல்லாம் தெரியும். தானே எல்லா வேலையும் செய்துவிடலாம் என்று கொஞ்சம் அதீதமாக நம்பி, 10% சதவீத வெற்றியையும் 90% சொதப்பலையும் நிர்வாகத்துக்குப் பரிசளிக்கும் ஆட்கள் முதல் ரகம்!

எதுக்கு வம்பு? என்ற ஒரே தாரக மந்திரத்துடன், எதை எடுத்தாலும், எங்க சாரைத்தான் கேக்கணும் என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டு, தன்னால் எந்த ஒரு செயலும் நடக்காதமாதிரி செயல்பட்டு, வெற்றியோ, சொதப்பலோ எதையுமே நிறுவனத்துக்குப் பரிசளிக்காமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளும் நபர்கள் இரண்டாம் ரகம்.!

இதில் எது நல்லது என்று கேட்டால்…, இரண்டுமே தவறு என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. ஏனெனில், ஒரு நிறுவனத் தலைவர் தனக்கான ஊழியர்களை ஒவ்வொரு துறைக்கும் நியமிப்பதே, அந்தந்தத் துறையில் அனைத்து வேலைகளையும் அவர்கள் பார்த்து, தன்னிடம் பதில் சொல்வார்கள். அந்தத்துறையைப் பற்றி நாம் கவலைப்படாமல் நிதி, செயல்பாடு , முன்னேற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தலாம் என்று நம்பித்தான்!

ஆனால், மேலே கண்ட இருவிதமான நபர்களும் நிறைய குடைச்சலைக் கொடுக்கக்கூடியவர்களாக ஆகிவிடுவார்கள்.



ஆக, நேர்முகத்தேர்வில், இத்தனை கட்டங்களைத் தாண்டிய ஒரு இளைஞனை / ஞியை, அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்போவது அவர்களது முடிவெடுக்கும் திறன்தான்.. இந்த நேரத்தில்தான், இந்த ஆள் நமக்கு ஊழியராக வேண்டுமா, வேண்டாமா என்று நிறுவனம் முடிவெடுக்கும்.

நாலு வாரத்துக்கு முன்னாடிதானே, தீர்வுத் திறன்கிறதைப் பார்த்தோம், அதுவும் முடிவு எடுப்பதுதானே என்று உடனே தோன்றும். அதில்தான் சில வித்தியாசங்களை நாம் உணரவேண்டும். தீர்வு என்பது சிந்தனையின் முடிவு. ஆனால் முடிவெடுப்பது, செயல்வடிவத்தின் வாசல்!

தீர்வுத் திறன் என்பது ஒரு நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது, அதற்கு அறிவும், பெட்டியைவிட்டுச் சிந்திக்கும் ஆற்றலும் தேவை! ஆனால், முடிவெடுக்கும் திறனுக்கு தீர்வுத்திறனுடன் சேர்ந்து,  கால் கிலோ தைரியம், கால் கிலோ பொறுப்புணர்வும் தேவை!

முடிவெடுக்கும் திறன் என்பது இரண்டுவிதமாக வேலையில் வெளிப்படும்.

நமது மேலதிகாரி அன்று வரவில்லை. அவரது அனைத்து தகவல் தொடர்புகளும் Not Reachable ல் இருக்கிறது. ஒரு முக்கிய முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம். இன்று ஏதாவது முடிவு எடுக்கவில்லை என்றால், அது அவ்வளவுதான் என்ற நிலை! அந்தச் சூழலில், தீர்வு என்னவென்று தெரிந்தும், மேலதிகாரியின் அனுமதி இன்றி அதனை செயல்படுத்த தைரியமும், அப்படி எடுத்த முடிவால், ஏதேனும் பிரச்னை வந்தால் அதனை ஏற்றுக்கொள்ளும் பொறுப்புணர்வுடன் சேர்ந்து இருந்தால், சரியோ, தவறோ - அந்தச் சூழலை ஒரு சரியான ஊழியன் சிறப்பாகக் கடந்துவிடுவான்.

இரண்டாவது விதம் என்னவென்றால், மேலதிகாரி ஊரில்தான் இருக்கிறார். ஒரு முடிவை எடுக்கிறார். ஆனால், அவர் எடுக்கும் முடிவில் தவறு இருக்கலாம் என்று பல்வேறு காரணிகள்மூலமாக, ஊழியருக்குத் தெரியவருகிறது. உடனே

'எக்கேடாவது கெடட்டும்'

'சொன்னா, கேக்கவா போறாரு!'

'அதிகப்பிரசங்கி, முந்திரிக்கொட்டைன்னு திட்டிட்டா?'

'நாம அவசரக்குடுக்கையா முடிவை மாத்திச் சொல்லி, ஏதாவது பிரச்னை ஆகிட்டா?'

'நாம சொல்ற முடிவு சரியா இருந்தா என்ன கிரீடமா குடுக்கப்போறாங்க?' என்று பல்வேறு சிந்தனைகள் ஓடி, உண்மையில் நமக்குத்தோன்றிய -உணர்வை,- முடிவெடுக்கும் திறனை ஒடுக்கிவிடும்.

இதனை எப்படி வளர்த்துக்கொள்வது என்று பார்த்தால், பெரிய சூத்திரம் எதுவும் இல்லை.

ஒவ்வொரு நாளும் நாம் குறைந்தபட்சம் 26 முடிவுகளை எடுப்பதாக புள்ளிவிபரம் சொல்கிறது.




வீட்டில் காஃபி, டீ, ஹார்லிக்ஸ், க்ரீன் டீ போன்ற அனைத்து பானங்களும் கிடைக்கும்.  எதைக் கேட்கிறோமோ அதைத்  தருவார்கள் என்றால், , ஒருநாள் காஃபி கொடுக்கச் சொல்வோம். அன்றைய தினம் ஒரு நண்பரைச் சந்தித்துப் பேசும்போது, க்ரீன் டீயின் சிறப்பையும், அதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கியத்தையும் பற்றி அவர் சிலாகித்தால், நாம் கொஞ்சம் குழம்பி அடுத்த நாள் காலையில் நம் வாயிலிருந்து 'எனக்கு க்ரீன் டீ' என்று வந்து விழும்..

இதுதான் துவக்கம். அதற்கு முன்னால், அலாரம் அடித்தவுடன்,  எழுந்திருக்க வேண்டாம் என்று எடுக்கும் முடிவாகட்டும்,

இந்த உடையை அணிவது.?

கிளம்பும் நேரத்தை நிர்ணயிப்பது,.

பைக்கா?, காரா?, பஸ்ஸா?.

காலை டிஃபனுக்கு இட்லியா? சப்பாத்தியா?

குறுக்கு வழியிலா? மெயின் ரோட்டிலா?

மேனேஜர் கண்ணில் படுவதா? வேண்டாமா?

முதலில் எந்த வேலையைப் பார்ப்பது?

போன்ற சின்னச்சின்ன கேள்விகளுக்கு விடையாக எடுக்கும் முடிவுகள்தான் அன்றைய நாளின் போக்கைத் தீர்மானிக்கின்றன. ஒரு சிலர் நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் அன்று எடுத்த முடிவுதான் என் வாழ்க்கையையே மாற்றியது என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். உண்மைதான்! வேலைக்குச் சேரும் ஊழியர் உண்மையில் முடிவெடுக்கும் திறனுடன் இருக்கிறாரா என்று நிறுவனம் அறிந்துகொண்டால்தான், அவரை சேர்த்துக்கொள்ளவேண்டுமா இல்லையா என்று முடிவெடுக்க முடியும்.

அதை எப்படிக் கண்டுபிடிப்பது? அதை எப்படி வளர்த்துக்கொள்வது? அடுத்த வாரம் முடிவெடுப்போம்.

அத்தியாயம் 14-பொறுப்பு எனும் கலை!

ஒரு நிறுவனம், தனக்கு எந்த நிலையில், எந்தப் பதவியில் ஊழியர்கள் தேவை என்றாலும், அவர்களிடத்தில் அடிப்படையாக பொறுப்புணர்வை எதிர்பார்ப்பார்கள். ஏனெனில், ஒரு நிறுவனத்தின் தலைவரே அனைத்து வேலைகளையும் செய்யமுடியாது என்பதால்தான் ஊழியர்களை நியமிக்கிறார்கள். அவர்களும் எனக்கென்ன என்று இருந்தால், அந்த ஊழியரை நியமித்ததே தனது குற்றமோ என்று நிறுவனம் பொறுப்பாகச் சிந்திக்கத் துவங்கிவிடும்.

ஆக, வேலைக்குத் தேர்ந்தெடுக்கும்போதே, ஓரளவாவது பொறுப்பானவரா என்று பார்ப்பார்கள். அதைச் சோதிக்கும்முன், உண்மையில் பொறுப்பு என்பது எப்படியெல்லாம் வெளிப்படும் என்று புரிந்துகொள்வோம்.

ஒரு செயல் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, அதனை முடிப்பதோ, தீர்வு காண்பதோ – எதுவாக இருந்தாலும் – நான் செய்கிறேன்; இந்த வேலையை முடிப்பது என் பொறுப்பு என்று ஏற்றுக்கொள்ளுதல் முதல் வகை! - உதாரணமாக, பள்ளியில் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும்போது, மாணவர்களை ஒருங்கிணைத்து, பஸ்ஸுக்குத் திரும்ப அழைத்து வருவது உன் பொறுப்பு என்று ஒரு பையனை நியமிப்பார்கள். அவனும் அதனை மனமுவந்து ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினால், அவன் முதல் வகைப் பொறுப்பில் வருகிறான். ‘நான் சொல்றதை பசங்க கேக்கமாட்டாங்க சார். வேற யாரையாவது போடுங்க’ என்று ஒதுங்கும் மாணவன், தானாக தனக்கு வந்த பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறான்.

அடுத்தது, எந்த இடத்துக்குச் சென்றாலும், அந்த இடம் நம்முடையது என்ற சொந்தநிலை உணர்வுடன், அங்கு இருக்கும் தவறுகளையோ, சூழலையோ சரி செய்வதுதான் அடுத்த வகைப் பொறுப்பு! குறைந்தபட்சம், அதைச் சரி செய்யக் கோரிக்கை அல்லது ஆலோசனையாவது முன்வைக்கலாம். இதில், அங்கு இருக்கும் நல்லவற்றைப் பாராட்டுவதும் அடங்கும்! உதாரணமாக, நிறைய திரைப்படங்களில் வந்த காட்சிதான்! கேலண்டரில் சரியான தேதியைக் கிழிப்பது, சிதறிக் கிடக்கும் செய்தித்தாள்களை ஒழுங்குபடுத்துவது, நமக்கு சரி எனப் படுவதை வெட்கப்படாமல் செய்வது, அருகில் இருப்பவர் குப்பை போட்டால், அதனை எடுத்துச்சென்று அதற்கான தொட்டியில் போடுவது, தேவையில்லாமல் ஓடும் மின்விசிறியை நிறுத்துவது என்று இயல்பாகச் செய்தல் இந்தவகைப் பொறுப்பு! ஆனால், இதில் நடித்தால் பத்து நிமிடங்களில் பல் இளித்துவிடும். இயல்பாக மாற்றிக்கொள்ளுதல் நலம். இதனை வீட்டில்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். எனக்கென்ன என்று வீட்டில் இருப்பவர்களை, வெளியில் பொறுப்பானவர்கள் என்று ஒருபோதும் சமூகம் ஏற்றுக்கொள்ளாது. ஏன்? அவர்கள் மனசாட்சியே எதிரில் நின்று கெக்கேபிக்கே என்று சிரிக்கும்.

மூன்றாவது வகைப் பொறுப்புணர்வு என்பது, தவறுகளை ஏற்றுக்கொள்வது. 

இந்தப் பொறுப்புணர்வுதான், இந்தக் காலகட்டத்தில் குடிதண்ணீர்போல மிகவும் அரிதாகிவிட்டது.  ஒரு தவறு நடந்துவிட்டது. ஆமாம். நாம்தான் இதற்குப் பொறுப்பு. என்ன செய்வது என்று ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகருவோம். அதனைச் சரி செய்ய முயலுவோம் என்று எண்ணுபவரை நிறுவனம் ஏற்றுக்கொண்டுவிடும். ஆனால், தான் தவறே செய்யவில்லை, அல்லது அதற்கு நான் பொறுப்பாக முடியாது என்று மொக்கையான லாஜிக்குடன் வாதாடுபவர்களை - அவர்கள் மீதுதான் தவறு என்று – நிரூபிக்கும்வரை நிறுவனமோ, மேலதிகாரியோ ஓயமாட்டார். இதில் சம்பந்தப்பட்ட நபருக்குப் பெரிய பிரச்னையே தடுப்பாட்டம் ஆடுவதே முதல் வேலையாகிவிடும். அதாவது இந்தத் தவறுக்கு தான் பொறுப்பில்லை என்று நிரூபிக்கத்தான் அதிக நேரம் செலவிடுவார். அப்புறம் எங்கே அவர் தீர்வு கண்டுபிடிப்பது? அனைத்து நிறுவனங்களும் இவர்களைத்தான் டேஞ்சர் ஸோனில் கொண்டு நிறுத்தும்.

அப்படியெனில், முதல் இரண்டு வகைப் பொறுப்புகளைவிட, மூன்றாம் வகைப் பொறுப்பைத்தான் நிறுவனம் உற்று நோக்கும். அப்படியெனில், இதனை எப்படிக் கண்டறிவார்கள்? ஏனெனில், முதல் இரண்டு பொறுப்புணர்வாவது ஏதாவது ஒரு செயலில் வெளிப்பட்டுவிடும். 

இதற்குத்தான் நிறுவனங்கள் சந்தேகம் வராத, இயல்பான கேள்விகளை வீசுவார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு நிறுவனத்துக்கு, ஒரு பொறுப்பான வேலைக்கு விண்ணப்பித்து, ஒரு இளைஞன் நேர்முகத் தேர்வுக்கு வந்தான். அப்போது, நானும் அந்த நிறுவன அதிபருடன் உடன் இருந்தேன். 
 
அவனது பொறியியல் படிப்பின் 3-வது மற்றும் 4-வது செமஸ்டர் மதிப்பெண்கள் மிகவும் குறைந்திருந்தது. (பொதுவாகவே கொஞ்சம் பொறுப்புக் குறைவான மாணவர்கள், பொறியியல் பட்டத்தின் இரண்டாம் ஆண்டில் கொஞ்சம் ஜாலியாக இருந்துவிடுவார்கள். பிறகு அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்து, விட்டதைப் பிடிக்கலாம் என்ற எண்ணம்) அதைக் குறிப்பிட்டு அவர் கேட்டார்.

‘ஏன் இந்த ரெண்டு செமஸ்டர் மட்டும் மார்க் குறைஞ்சிருக்கு?’

‘மூணாவது செமஸ்டர் எக்ஸாம் அப்ப எங்க அக்காவுக்கு மேரேஜ் சார். அந்த வேலையா சுத்தவேண்டியதாயிடுச்சு! அதுல கொஞ்சம் படிக்கிறதுல கவனம் செலுத்த முடியலை சார்! எங்க அப்பாகிட்ட தலைதலையா அடிச்சுக்கிட்டேன். ரெண்டுமாசம் கழிச்சு கல்யாணம் வச்சுக்குங்கன்னு. கேக்கவே இல்லை. இப்போ அது ஒரு பெரிய இஷ்யூவா எனக்கு முன்னாடி நிக்கிது’ என்றான்.

‘ஓ… அப்படியா? அப்போ 4-வது செமஸ்டர்…?’  

‘அக்கா பிரக்னென்ட்டாயிட்டாங்க சார்! அவங்களை ஹாஸ்பிட்டல் கூட்டிக்கிட்டுப்போறது, கொண்டுவந்து விடறதுன்னே நேரம் போச்சு சார். சுத்தமாப் படிக்க முடியலை’ என்று லாஜிக் மீறாமல் காரணம் சொன்னான்.

ஆனால், ஒரு விவரத்தை நாங்கள் கவனிக்கவில்லை என்று நினைத்துவிட்டான். அந்த மாணவனின் ஊர் கோவில்பட்டி. அவன் கல்லூரி தஞ்சாவூரில்.

அதில்கூட சில லாஜிக் இருக்க வாய்ப்பிருந்ததால், அவர் என்னைப் பார்த்தார். என்னைப் பொறுத்தவரை, அவன் ‘இல்லை சார்! கொஞ்சம் மெத்தனமா இருந்துட்டேன்’ என்று சொல்லியிருந்தால், அவனை ஏற்றுக்கொண்டிருக்கலாம் என்று பட்டது. ஆகவே நான் ஒரே ஒரு அஸ்திரத்தை வீசினேன்.

‘You are appointed Mr……. உங்க அக்கா கல்யாண பத்திரிகையையும், ஆல்பத்தையும், உங்க அக்கா குழந்தையின் பர்த் சர்டிஃபிகேட்டையும் நிறுவனத்தில் காட்டிட்டு ஜாயின் பண்ணிக்குங்க!’

இன்றுவரை அந்த இளைஞன் திரும்ப வந்ததாகத் தெரியவில்லை.

Monday, May 18, 2015

அத்தியாயம் 13- பொறுப்பே பிரதானம்

நேர்முகத்தேர்வு என்ற வார்த்தையை சற்றே மாற்றி, நேர் முக்கியத் தேர்வு என்று தலைப்பிடக் காரணமே, ஒவ்வொரு நேர்முகத் தேர்வின் போதும், உள்ளே செல்லும் நபர் , 'எப்படியாவது' தேர்வு நடத்தும் அதிகாரியின் மனதில் இடம் பிடித்துவிடவேண்டும் என்று நினைப்பதும், அது முடியாமல் போனால், 'அந்த Interview எடுத்த ஆள் சரியில்லை' என்று குறைகூறுவதும் நடக்கும். 

அல்லது வேலை கிடைத்துவிட்டால், 'எனக்கு இந்த மாதிரி interview எல்லாம் ஜுஜுபி' என்று தன் திறமைக்கு மட்டுமே வேலை கிடைத்துவிட்டதாக நினைப்பதும் – இரண்டு விளைவுகளை உருவாக்கும். 

முதலாமவர், அடுத்தவரைக் குறை சொல்வதை விட்டுவிட்டு , தன் மேல் என்ன தவறு என்று சிந்தித்துப்பார்க்க வேண்டும். அதே சமயத்தில், இரண்டாமவர், தனக்கு போதுமான அளவுக்குத் திறமை இருப்பதாக கற்பனை செய்துகொண்டு, உண்மையில் அன்றுதான் அவர் கடைசியாகத் திறமையாக நடந்துகொண்டார் என்று சொல்லும் அளவுக்கு சொதப்பிவிடவும் கூடாது. இதில் நிறுவனத்தின் பிரதிநிதிக்கும் கத்தி மேல் நடக்கும் வேலை! சரியான ஆளைத் தேர்ந்தெடுத்தாரோ பிழைத்தார்… !! இல்லையென்றால்.. பிழை ஆகிவிடுவார். ஆக, ஒரு நிறுவனம் என்ன எதிர்பார்க்கிறது என்று உண்மையில் சரியாகத் தெரிந்துகொண்டு அதற்கேற்றார்ப் போல் தகுதிகளை வளர்த்துக் கொள்ளும் நபர்கள் கில்லாடிகளாக வலம் வருகிறார்கள். 
 
ஆக, ஒரு ஊழியராக வருபவரின் நிறை குறைகளை இருபுறமும் தெரிந்து கொள்ளும் ஒரு சரியான கருவியாக நேர்முகத்தேர்வு இருப்பதால்தான் அதன் முக்கியத்துவம் உணர்ந்து நேர் முக்கியத் தேர்வு என்றோம்.

இதை ஏன் இந்த 13 வது அத்தியாயத்தில் விளக்கவேண்டும் என்று தோன்றும். இங்குதான் நாம் அடுத்துப் பார்க்கப் போகும் குணம் ஒளிந்திருக்கிறது. ஒரு ஆள், ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும்போது, நான்கைந்து பேர் ஒரு வேலையைச் செய்து அதில் தவறு நிகழ்ந்துவிட்டால், அனிச்சையாக வரும் பதில்  'என் மேல தப்பில்லை' என்பதுதான்!

அதாவது, நியாயமாக யார்மேல் தவறு என்று ஆராய்ந்து அதனைச் சரிசெய்வது ஒரு விதம்! மொத்தத்தில் தவறு நிகழ்ந்துவிட்டது வாருங்கள் . தீர்வைக் கண்டறிந்து சரி செய்வோம் என்று நினைப்பது இன்னொரு விதம். அதை விட்டுவிட்டு, என் மேல் தவறே இல்லை என்று எல்லாருமே ஒதுங்கினால், என்ன ஆகும்? தவறு தானாகவே நிகழ்ந்துவிட்டதா என்று பிரச்னை வேறு கோணத்தில் பயணிக்கும்.

இதை உணர்த்தத்தான், அந்த நேர்முகத்தேர்வு உதாரணம் சொன்னேன். நான் நன்றாகத்தான் பதிலளித்தேன். ஆனால், அவர்கள் என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று ஒரு முன்முடிவை எடுத்துவிட்டால், நேர்முகத் தேர்வு மட்டுமல்ல. வாழ்வில் எதிலுமே அந்த நபர் கற்றுக்கொள்வது நின்றுவிடும். அப்படியானால், நேர் முக்கியத் தேர்வுக்குத் தேவையான அடுத்த குணம் என்ன?

பொறுப்புணர்ச்சி !!

பொதுவாக நிறுவனங்களில், ஒரு வேலையில் ,பிரச்னை என்று வரும்போது, 

நான் பாக்கலை சார்!
என் வேலை இல்லை சார்!
அவர் பாக்குறாரேன்னு விட்டுட்டேன் மேடம்!
கம்ப்யூட்டர்தான் ஏதோ மிஸ்டேக்!
நான் தப்புப் பண்ண வாய்ப்பே இல்லை!
அடுத்தவங்க செஞ்ச தப்புக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?
என் லெவல் வரைக்கும் கரெக்டா இருக்கு பாருங்க!

இப்படிக் காரணங்களை அடுக்க மட்டும் எந்த ஊழியரும் மறப்பதே இல்லை. ஆனால், ஒரு நிறுவனம் என்பது அப்படி அல்ல..! நீங்கள் உள்ளே நுழைந்தவுடனேயே உங்கள் ஊதிய மீட்டர் ஓடத் துவங்கிவிடும்.. ஆனால் அவர்களது வேலை மீட்டர்?
 
இங்கு பல்வேறு நிறுவனங்களில் நடக்கும் கூத்து என்னவென்றால், மேலதிகாரி இருந்தால், ஒருமாதிரியும், அவர் இல்லாவிட்டால் வேறொரு மாதிரியும்தான் ஊழியர்கள் நடந்துகொள்கிறார்கள். அமீபாவாகத் தெரியும் இந்த பிரச்னைதான் அனகோண்டாவாக மாறி நிறுவனத்தையே விழுங்கிவிடும்.

கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே

என்று திரமூலரின் திருமந்திரத்தில் ஒரு பாடல் வரும். அதன்படி, நம்மைக் கண்காணிக்க யாருமே இல்லை என்றுதான் நாம் பல தவறுகளைச் செய்கிறோம். ஆனால், கண்காணிப்பவர் எல்லா இடத்திலும் இருக்கிறார் என்று உணர்ந்தவர்கள் தவறு செய்யமாட்டார்கள்.  இதனை நான் நிறுவனத்துக்கும் உரித்தாக்குகிறேன்.

நம்மைப் பார்க்க யாருமே இல்லை என்ற நேரத்திலும், சரியாக நடந்துகொண்டால் போதும்.

ஒரு போக்குவரத்து சிக்னல், இரவு இரண்டு மணி, நாம் மட்டும் வாகனத்தில் செல்கிறோம். நம் வழியில் சிகப்பு விழுந்திருக்கிறது. அதனை மதித்து நிற்பதுதான் பொறுப்புணர்ச்சி!

இங்கு குப்பைப் போடாதீர்கள் என்ற பொது இடத்தை மதித்து , அப்போது சாப்பிட ஆரம்பித்த சாக்லேட் பேப்பரை , குப்பைத்தொட்டியைத் தேடிப் போய்ப் போட்டுவிட்டு வந்தால், அதன் பெயர் பொறுப்புணர்ச்சி!

அப்படிப்பட்ட பொறுப்புணர்ச்சி இருக்கிறதா என்று நேர்முகத்தேர்வில் எப்படிக் கண்டுபிடிப்பார்கள் ? 

ஒரு வாரம் நேரம் இருக்கிறது. சிந்திக்கலாம்...

அத்தியாயம் 12 - தீர்வின் வாசல்

இன்றைய நிர்வாகச் சூழலில் Problem Solving Skill என்பது மிக மிக அத்தியாவசியமானதாகிவிட்டது. முன்பெல்லாம், ஒரு மேலதிகாரி முடிவெடுத்துக் கொள்ளட்டும் என்று கீழுள்ளவர்கள் சென்றுவிடுவார்கள். ஆனால், இன்றோ, அனைவருமே, அனைத்துப் பிரச்னைகளையும் கையாள வேண்டும் என்று நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. ஏனெனில் இன்றைய யுகத்தில், மனிதவளம்தான், Money தரும் வளம் என்று நிறுவனங்கள் நம்புகின்றன.

பிரச்னைகளைத் தீர்க்கும் திறன் இயல்பிலேயே இருந்தாலும், நம் சுற்றுச் சூழலும், குடும்பமும் அந்தக் குணத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெரும்பாலும், நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் போதோ, அல்லது அங்கு ஒரு சில கேள்விகள் கேட்கப்பட்ட பிறகோ, ஒரு சிறு பதட்டம் வரும். அதனை எப்படிக் கையாள்கிறோம் என்பதில் கூட பிரச்னைகளைத் தீர்க்கும் திறனை அறிந்து கொள்ளலாம்.
 

பொதுவாகவே, தினமும் பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டே இருப்பவர்களுக்கு அதைத் தீர்த்துக் கொண்டே வருவதால், அந்தத் திறன் அதிகமாகத் தெரியும். ஆக, பிரச்னையைத் தீர்க்கும் திறன் என்பது பிறவிக் குணம் அல்ல என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால் அது எல்லாப் பிரச்னைக்கும், ஒரே மாதிரி தீர்வாகவும் இருந்து விடக்கூடாது.

ராக்கெட் ஏவும் வேலைக்குச் சேர்ந்தாராம் மொக்கைச்சாமி! அன்று அனுப்ப வேண்டிய ராக்கெட் கவுண்ட் டவுன் டைம் முடிந்தும் கிளம்பவே இல்லை! உடனே இவர் சென்றார். ராக்கெட்டை சாய்க்கச் சொன்னார். அதன் இடுப்புப் பகுதியில் ஒரு உதை விட்டார். இப்ப ஸ்டார்ட் பண்ணுங்க! என்றார். எல்லா விஞ்ஞானிகளும் அதிர்ச்சியாக.. என் ஸ்கூட்டரையே இப்படித்தான் நான் ஸ்டார்ட் பண்ணுவேன். ராக்கெட் எம்மாத்திரம்! என்றார்.

ஆக, ஸ்டார்ட் ஆகாத எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வுதான் என்ற மன நிலையும் ஆபத்தானது. ஆனால், எல்லாப் பிரச்னைகளையும் தீர்ப்பதற்கு ஒரு விஞ்ஞானரீதியான, உளவியல் ரீதியான முறை ஒன்று இருக்கிறது என்று பார்த்தோம். அதற்கு டாப் என்ற பெயரும் கண்டோம்.

அதை எப்படிப் பயன்படுத்துவது?

THINK ON PAPER என்றாலே, எண்ணங்களைக் காகிதத்தில் கொண்டு வருவது தான்..நாம் நினைப்பது எல்லாவற்றையும் காகிதத்தில் கொண்டு வந்தால் சரியாகிவிடுமா? என்றால்,.. இல்லை. நாம் எப்படி நினைக்கிறோம் என்பதையும் நாம்தான் வடிவமைக்கவேண்டும்.

அதற்குத்தான், இதில் நாம் ஒரு முறையைக் கையாளப்போகிறோம்.

ஒரு காகிதத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் ! கீழ்க்கண்ட செயல்களை வரிசைப் படிச் செய்யுங்கள் !

  1. உங்களுக்கு இருக்கும் தலையாய பிரச்னைகள் மூன்றை வரிசையாக எழுதுங்கள்!

  2. அதனை, இப்போது முக்கியத்துவ அடிப்படையில் - அதாவது, எந்தப் பிரச்னையை உடனே தீர்க்கவேண்டும் என்ற வகையில் - வரிசைப்படுத்தி, அதில் தேர்வான முதல் பிரச்னையை மீண்டும் கீழே எழுதுங்கள்.

  3. இந்தப் பிரச்னை ஏன் ஏற்பட்டது என்று எழுதுங்கள்.

  4. எதற்காக இது பிரச்னையாகக் கருதப்படுகிறது என்று எழுதுங்கள். இது இப்படியே போனால் என்ன ஆகும் என்று எழுதுங்கள்.

  5. எப்படி இது ஆரம்பித்தது என்று குறிப்பிடுங்கள்.

  6. எங்கு தவறு நடந்திருக்கும் என்று சிந்தித்து அதையும் எழுதுங்கள்.

  7. யார் காரணம் என்று குறிப்பிடுங்கள்.

  8. எப்படித் தீர்ப்பது, தீர்வுக்குப் பிறகு கிடைக்க இருக்கும் பலனை எழுதுங்கள்.

  9. மனதில் தோன்றும் அத்தனைத் தீர்வுகளையும் வரிசையாக எழுத ஆரம்பியுங்கள்.

  10. அவற்றில் முக்கியமாகவும், சரி வரக் கூடியதாகவும் கருதப்படும் 3 தீர்வுகளை மீண்டும் எடுத்து எழுதுங்கள்.

  11. மூன்றையும் ஆராய்ந்து, அவற்றில் ஏதாவது ஒரு தீர்வை “இதைத் தவிர வேறுவழியில்லை” என்ற வகையில் தேர்ந்தெடுங்கள்.

  12. அதுதான் அந்தப் பிரச்னைக்குத் தீர்வு!

இப்படித்தான் TOP வேலை செய்கிறது.
 
இதனை நடைமுறையில் செய்துப் பார்த்தால், உண்மையிலேயே சிறப்பான தீர்வை அடைந்துவிடலாம். பொதுவாக பிரச்னைகளைப் பற்றி சிந்திப்பதில் செலவழிக்கும் நேரத்தில் பத்தில் ஒரு பங்குகூட, இதனைச் செய்துப் பார்க்க ஆகாது.

மேற்கண்ட பயிற்சியை எந்தப் பிரச்னைக்கு வேண்டுமானாலும் செய்துபாருங்கள்.

ஒரு சில சுவாரஸ்யங்கள் நிகழும். யார் காரணம் என்ற கேள்விக்கு பெரும்பாலோருக்கு “நான்தான்” என்று பதில் வரும்.

நீங்கள் கண்ட தீர்வை விட சிறந்த தீர்வு இருக்கவே முடியாது என்று வந்து நிற்கும். ஏனெனில், உங்கள் பிரச்னையில், அனைத்துச் சூழலும், அதன் தன்மையும், அதன் வீரியமும், அது ஏற்படுத்தப் போகும் தாக்கமும் அறிந்தவர் நீங்களாக மட்டும்தான் இருப்பீர்கள்.

சரி..பிரச்னையைத் தீர்க்கும் சூட்சுமம் தெரிந்து கொண்டாகிவிட்டது. இத்தோடு நேர்முகத் தேர்வில் விட்டு விடுவார்களா? என்றால், இப்போது பாதி கிணறுதான் தாண்டியிருக்கிறோம் என்பதுதான் உண்மை…

மீதிக் கிணறை வரும் வாரங்களில் தாண்டுவோம்.

அத்தியாயம் 11 - டாப் நல்லது

நேர்முகத் தேர்வை அணுக இதுபோன்ற குணங்களெல்லாம் தேவை என்று சொல்லிக்கொண்டே செல்கிறோம். அதில், தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர், பிரச்னைகளைத் தீர்க்கக்கூடியவராக இருக்க வேண்டும் என்று நிறுவனங்கள் எதிர்பார்ப்பதற்கு, பல்வேறு தேவைகளும் நடைமுறைகளும் காரணமாக இருக்கின்றன.

பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகளும், உயர் அதிகாரிகளும் அந்நிறுவனத்தின் ஒவ்வொரு கிளைக்கும் தினசரி வந்து சென்றுகொண்டிருக்க முடியாது. அதே நேரத்தில், அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளும் தவறின்றி நடைபெற வேண்டும் என்று நினைப்பார்கள். அதனைக் கையாள முதலில் ஒரு ஒழுங்குமுறையை உருவாக்கி வைத்திருப்பார்கள். பிறகு, அந்த ஒழுங்குமுறையைப் பின்பற்ற சரியான ஆள்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இங்குதான் தினசரிச் செயல்பாடுகளில் பிரச்னை வரும். அதனைத் தீர்க்கும் மனோபாவம் உள்ளவர்கள்தான், அந்த நிறுவனத்தின் அன்றாடச் செயல்பாடுகளை முறையாகக் கொண்டுசெல்ல முடியும். அதனால்தான் பிரச்னைகளைத் தீர்ப்பவர்களை எதிர்பார்க்கிறார்கள். இதன்மூலம் நிறுவனத்துக்கு ஒரு பிரச்னை தீர்கிறது என்பது மட்டுமல்ல, அந்த நபரை அந்த நிறுவனம் சொத்தாகப் பார்க்கத் துவங்கிவிடும் என்பதுதான் நிதர்சனம்.

சென்ற வாரம், இயல்பான இரண்டு பிரச்னைகளைச் சொல்லி, அதற்குத் தீர்வு சொல்லச் சொல்லியிருந்தோம். அதற்கு நேரம், உழைப்பு, பணம் மூன்றும் செலவழியாத ஒரு தீர்வாக இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி! அதன்படி யோசித்தால், என்ன தீர்வு வரும் என்று பார்க்கலாம்.

அது ஒரு குறுகலான மலைப்பாதை. இருபுறமும் பாறைகள். ஒருநாள், ஒரு பெரிய பாறை உருண்டு அந்தப் பாதையில் விழுந்துவிட்டது. நீங்கள் அதனை அப்புறப்படுத்தி, போக்குவரத்தைச் சீர் செய்ய வேண்டும். கிரேன் போன்றவற்றைக் கொண்டுவர இயலாது. வெடி வைத்துத் தகர்க்க முடியாது. நேரமும் குறைவுதான். என்ன செய்வீர்கள்?

இதுதான் முதல் கேள்வி! இதற்கான தீர்வு, அதே சாலையில், அந்தப் பாறைக்கு அருகில் அதன் அளவுக்கு ஒரு பள்ளம் தோண்டி, அந்தப் பள்ளத்தில் பாறையைத் தள்ளிவிட்டுவிடலாம். அதன் மேல் இந்தப் பள்ளத்தின் மண்ணைப் போட்டுவிட்டால், சாலை தயார்! இதற்கு, கல்லை வெடி வைத்துத் தகர்க்க வேண்டும். பாறை மேல் அப்படியே சாலை போட வேண்டும். கிரேன் மூலம் பாறையைத் தூக்க வேண்டும் என்ற தீர்வுகளைத்தான் யோசிப்போம். ஆனால், இந்தத் தீர்வில், நேரம், உழைப்பு, பணம் ஆகியவை மிச்சமாவதைக் காணலாம்.

அடுத்ததாக,

ஒருநாளில் 35,000 சோப்புகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றிலிருந்து வெளிவரும் சோப்புப் பெட்டிகளில், பரவலாக, பல சோப்புப் பெட்டிகளுக்குள் சோப்பு இல்லாமல், கவர் மட்டும் வருவதாகப் புகார் எழுகிறது. அந்தத் தொழிற்சாலையில் சோதிக்கும்போது, சோப்புகளை கவர்களுக்குள் போட்டு சீல் செய்யும் இடத்தில், அந்தக் கவருக்குள் சோப்பு இருக்கிறதா என்பதை ஆராயும் வழிமுறை இல்லை என்று தெரியவருகிறது. அதாவது, அங்கிருந்து செல்லும் எல்லா சோப்புப் பெட்டிகளிலும் சோப்பு இருக்க வேண்டும். வெற்றுக்கவராக ஒரு பெட்டிகூடச் செல்லக்கூடாது. இதற்கு நீங்கள் எப்படித் தீர்வளிப்பீர்கள்?

இதற்கான தீர்வு, மிகவும் எளிமையானது. சோப்புகளை அதற்கான உறைக்குள் அடைத்தபின் வெளிவரும் கன்வேயர் பெல்ட்டை நோக்கி ஒரு பெரிய காற்றாடியை (FAN) வைத்துவிட்டால் போதும். சோப்பு இல்லாத உறைகள் எல்லாம் பறந்துவிடும். ஆனால், பொதுவாக நாம், சோப்புகளை எடை போட வேண்டும். ஒரு டிஜிட்டல் லேசர் இயந்திரம் வைக்க வேண்டும். ஒரு எக்ஸ்ரே இயந்திரம் வைக்க வேண்டும். ஒவ்வொரு சோப்பையும் யாராவது தூக்கிப் பார்க்க வேண்டும் என்று பல்வேறு தீர்வுகளை முன்வைப்போம். இவை எல்லாவற்றையும்விட, எது நேரம், உழைப்பு, பணத்தைச் சேமிக்கிறது என்பதுதான் முக்கியம்.

ஆக, பிரச்னையைத் தீர்க்கவும், கற்பனை சக்தியும், கவனமும்தான் கைகொடுக்கும் என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

நமக்கு வேலையில் மட்டுமா பிரச்னை வருகிறது? சொந்த வாழ்விலும் வருகிறது. அவற்றைத் தீர்க்க முடியாமலோ அல்லது இன்னும் சிக்கலாக்கிக்கொண்டோதான் நாம் வாழ்ந்து வருகிறோம். ஒரு சிலருக்கு மட்டும் பிறவியிலேயே சிக்கலைத் தீர்க்கும் வகையில் கொஞ்சம் ஆழமாகச் சிந்திக்கும் அல்லது தீர்வுகாணும் இயல்பு இருக்கும். ஆனால், அவர்களைத் தவிர மற்றவர்களும், அதேபோன்று தீர்வு காணலாம் என்பதை உணர வேண்டும். ஒரு வேலைக்குப் போவதற்கு மட்டுமல்ல! மொத்த வாழ்க்கைக்குமே, சிக்கலைத் தீர்க்கும் மனநிலை உதவும். இதனை நாம் வளர்த்துக்கொள்ளலாம்.

இதற்கு ஒரு வழிமுறை இருக்கிறது.

அது என்னவென்றால், 

ஒரு பிரச்னை ஏற்படுகிறது என்றால், நாம் என்ன செய்கிறோம்? என்னடா இப்படி ஆகிவிட்டதே?

கொஞ்சம் முன்னர் சிந்தித்திருக்கலாமோ?
யாரும் ஒன்றும் சொல்லிவிட மாட்டார்களே?
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?
என்று பல்வேறு சிந்தனைகள் ஓடி, தீர்வு காணும் மனநிலை மறைந்து, கவலை தலையெடுத்துவிடும். அதுதான், நமது பலத்தை பலவீனமாக்கும் இடம். இந்த இடத்தில்தான் நாம் ஒரு செயலைச் செய்ய வேண்டும்.

அதுதான் TOP.
இதன் விரிவாக்கம் Think On Paper!
அதை எப்படிச் செய்வது?

நமது பிரச்னையை, நிறுவனத்தின் பிரச்னையை – காகிதத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதைத்தான் மிகப்பெரிய வெற்றியாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.
காகிதத்தில் சிந்திப்பது என்றால்? நாம் ஒரு பிரச்னை ஏற்பட்ட பிறகு எப்படிச் சிந்திக்க வேண்டும் என்று முறைப்படுத்துவது. மேலும், அப்படிச் சிந்திப்பதை உடனடியாகக் காகிதத்தில் பதிவுசெய்வது. இதுதான் மிகவும் மேம்படுத்தப்பட்ட வழிமுறையாகப் பார்க்கப்படுகிறது.

அதன்படி, ஒரு பிரச்னையைப் பற்றி யோசிக்க ஆரம்பிக்கும்போதே, பேனாவுடன் ஒரு காகிதத்தை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு…?

ஒரு வாரம் காத்திருங்கள். தீர்வுடன் சந்திப்போம்…

அத்தியாயம் 10 - தீர்வுத் திறன்

பட்டப்படிப்பு முடித்துவிட்டேன். கல்வியறிவு இருக்கிறது. முறையாக ஒரு சுய விவரம் (ரெஸ்யூமே) இருக்கிறது. கவனம் இருக்கிறது. கற்பனை வளத்துக்கும் பஞ்சமில்லை. இன்னும் எனக்கு வேலை கொடுக்க என்னதான் பிரச்னை? என்று ஒரு நேர்முகத் தேர்வுக்கு வரும் நபர் கேட்டால், என் பதில் இப்படித்தான் இருக்கும்.
பிரச்னைதான் பிரச்னை!
புரியவில்லை என்றால், பிரச்னைகளை எப்படி அணுகுகிறார்கள்? எப்படித் தீர்க்க முயல்கிறார்கள் என்பதுதான், அடுத்தகட்டமாகத் தேவைப்படும் திறன். அதாவது, PROBLEM SOLVING SKILL.
வேலை பார்க்கும் இடத்தில் என்ன மாதிரியான பிரச்னை வந்துவிடப் போகிறது? அதனைத் தீர்க்க என்ன புதிதாக ஒரு திறன் தேவைப்படப் போகிறது? என்று கொஞ்சம் கண்டுகொள்ளாமல்தான் இருப்போம். ஆனால், ஆழ்ந்து பார்க்கும்போதுதான், விஷயம் விளங்கும்.
ஏனெனில், அடிப்படையாகவே எல்லா நிறுவனங்களுமே பிரச்னைகளை அடிப்படையாக வைத்துத்தான் இயங்குகின்றன. பிறரின் பிரச்னையைச் சரி செய்வதுதான் ஏறத்தாழ எல்லாத் தொழில்களின் அஸ்திவாரம். அதாவது, வாடிக்கையாளருக்கு ஒரு பிரச்னை. அதனைச் சரி செய்வதுதான் அந்த நிறுவனத்தின் தொழில்.



உலகச் செய்திகளை வீட்டுக்குள்ளேயே தெரிந்துகொள்ள முடியவில்லையே என்ற பிரச்னை – தினசரி செய்தித்தாள் என்பது தீர்வு!

துணிகளைத் துவைக்க கை வலிக்கிறது என்பது பிரச்னை – வாஷிங் மெஷின் என்பது தீர்வு!
உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வை பார்க்கமுடியவில்லையே என்பது பிரச்னை – தொலைக்காட்சி என்பது தீர்வு!
அழுக்குப் போக, நுரை வரக் குளிக்க முடியவில்லையே என்பது பிரச்னை – சோப் என்பது தீர்வு!
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக்கு வேகமாகக் செல்ல முடியாதது பிரச்னை – மோட்டார் வாகனங்கள் தீர்வு!
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அதன்படி, ஒரு பிரச்னைக்குத் தீர்வாகத்தான் நிறுவனங்கள் இயங்குகின்றன. அவற்றில் வேலை பார்ப்பவர்களுக்கு, அன்றாடம் வேலையில் வரும் பிரச்னையைத் தீர்ப்பவர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறே இல்லையே?

பொதுவாக, ஒரு நிறுவனத்தில், வாடிக்கையாளருக்கு ஒரு சேவை செய்யும்போது, அதில் ஒரு பிரச்னை வந்தால், அதனை எப்படித் தீர்க்க வேண்டும் என்பது மிக முக்கியம். அதில், நிறுவனத்தின் நன்மதிப்பு உயர வேண்டும். நேரம், பணம், உழைப்பு ஆகியவற்றை மிச்சப்படுத்த வேண்டும். பிரச்னைகளை வேறு ஒரு கோணத்தில் அணுகி, தீர்வுடன் வரும் சாமர்த்தியம் வேண்டும்.
சரத்குமார் இரு வேடங்களில் நடித்த ‘ஐயா’ திரைப்படத்தில், ஒரு கிராமத்து ஏரியைத் தூர் வார 37 லட்ச ரூபாய் செலவாகும் என்பதால், செய்ய இயலாது என்று அரசு சொல்லிவிடும். அது ஒரு பிரச்னையாக நிற்கும். அதனை மிகவும் எளிய முறையில், எதற்கு என்ன செலவழித்தால், எப்படி வருமானம் ஈட்டினால், கிராம மக்களே அந்த ஏரியைத் தூர் வார முடியும் என்று தீர்வு சொல்வார் சரத்குமார். அதில், பிரச்னையை எல்லாக் கோணத்திலும் அலசிய புத்திசாலித்தனம் தெரியும்.



பொதுவாக, நேர்முகத் தேர்வில், ஒரு நபரிடம் கேள்வி கேட்கும்போது, அவரது தீர்வு காணும் திறனைச் சோதிக்க, கற்பனையாகச் சில கேள்விகள் கேட்பார்கள். உதாரணமாக…

அது ஒரு குறுகலான மலைப்பாதை. இரு புறமும் பாறைகள். ஒருநாள், ஒரு பெரிய பாறை உருண்டு அந்தப் பாதையில் விழுந்துவிட்டது. நீங்கள் அதனை அப்புறப்படுத்தி, போக்குவரத்தைச் சீர் செய்ய வேண்டும். கிரேன் போன்றவற்றைக் கொண்டுவர இயலாது. வெடி வைத்துத் தகர்க்க முடியாது. நேரமும் குறைவுதான்.. என்ன செய்வீர்கள்.?
அடுத்ததாக,
ஒருநாளில் 35,000 சோப்புகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றிலிருந்து வெளிவரும் சோப்புப் பெட்டிகளில், பரவலாக, பல சோப்புப் பெட்டிகளுக்குள் சோப்பு இல்லாமல், கவர் மட்டும் வருவதாகப் புகார் எழுகிறது. அந்தத் தொழிற்சாலையில் சோதிக்கும்போது, சோப்புகளை கவர்களுக்குள் போட்டு சீல் செய்யும் இடத்தில், அந்தக் கவருக்குள் சோப்பு இருக்கிறதா என்பதை ஆராயும் வழிமுறை இல்லை என்று தெரியவருகிறது. அதாவது, அங்கிருந்து செல்லும் எல்லா சோப்புப் பெட்டிகளிலும் சோப்பு இருக்க வேண்டும். வெற்றுக் கவராக ஒரு பெட்டிகூடச் செல்லக் கூடாது. இதற்கு நீங்கள் எப்படித் தீர்வளிப்பீர்கள்?
இதுபோன்று எண்ணற்ற கேள்விகள் உள்ளன. இதற்கான தீர்வுகளை நாம் எப்படிக் கண்டுபிடிக்கிறோம்? எந்த விதத்தில் அதற்கு பதில் சொல்ல முனைகிறோம்? எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறோம்? என்பது போன்ற பல விவரங்கள் பார்க்கப்படும்.
சில நேரங்களில், பிரச்னைகளைத் தீர்ப்பதற்காகச் சொல்லும் தீர்வுகளே பிரச்னையாகிவிடக்கூடாது.
அதாவது, அவசரமாக விக்கல் எடுக்கிறது என்பது பிரச்னை. அதற்குத் தீர்வாக, அருகில் இருக்கும் விஷத்தை எடுத்துக் குடித்துவிடுவது!
இப்போது, தீர்வு இன்னொரு பிரச்னையை உருவாக்கிவிடும். விஷம் குடித்தால் விக்கல் நின்றுவிடும். ஆனால், விஷம் தன் வேலையைக் காட்ட ஆரம்பிக்குமே?
அப்படித்தான், சில பிரச்னைகளுக்குத் தீர்வு யோசிக்கும்போது, தவறு செய்துவிடுகிறார்கள்!
சரி! பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திறனை எப்படி வளர்த்துக்கொள்வது? அது என்னிடம் எப்படி இருக்கிறது என்பதை எப்படி அளப்பது?
அதற்குமுன், நான் கேட்ட இரண்டு பிரச்னைகளுக்கும் தீர்வை சிந்தித்து வையுங்கள். அடுத்த வாரம் சந்திக்கலாம்!