Blogger Widgets

Total Page visits

Showing posts with label சும்மா. Show all posts
Showing posts with label சும்மா. Show all posts

Friday, August 8, 2014

ஃபிளிப்கார்ட்:4 லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 42,000 கோடி ரூபாய்

சிறிய மளிகைக் கடைக்காரர்கள் சூப்பர் மார்க்கெட்களைப் பார்த்து பயந்தார்கள். பின்னர் கார்ப்பரேட் கம்பெனிகள் வந்தன. சமீபத்தில் எஃப்டிஐ, அதாங்க சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு. அதைப் பார்த்துப் பயந்தார்கள். இப்போது அனைவரும் ஆன்லைன் வணிக நிறுவனங்களைப் பார்த்துப் பயப்படும் அளவுக்கு ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்திருக்கிறது.

புத்தகங்கள், மளிகை, ஜூவல்லரி, ஆடைகள், காலணி, மொபைல் என அனைத்தையும் ஆன்லைனில் வாங்கத் தொடங்கியுள்ளார்கள். இதனால் எல்லா வணிக நிறுவனங்களும் இணையம் மூலம் பொருள்களை விற்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதற்கு முன்னோடியாக அமேசான் (அமெரிக்கா), அலிபாபா (சீனா) உள்ளிட்ட பல நிறுவனங்கள் இருக்கின்றன. இந்தியாவில் ஃபிளிப்கார்ட்டைச் சொல்லலாம்.

ஆரம்பம்

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை சச்சின் பன்சால், பின்னி பன்சால் ஆகிய இருவரும் 2007-ம் ஆண்டு ஆரம்பித்தார்கள். இருவரும் டெல்லி ஐஐடியில் படித்தார்கள். அமேசான் நிறுவனத்தில் வேலை பார்த்தார்கள். பின்னர் வெளியேறி 4 லட்ச ரூபாய் முதலீட்டில் பிளிப்கார்ட்டைத் தொடங்கினார்கள்.
ஆரம்பத்தில் புத்தங்களை மட்டுமே விற்று வந்தார்கள். ஹைதராபாத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயர் leaving microsoft to change the world என்னும் புத்தகத்தை முதன்முதலில் வாங்கியுள்ளார்.

பிஸினஸ் செய்வதற்கு முதலீடு தேவை இல்லை, ஐடியா மட்டுமே போதும் என்பதற்கு இவர்கள் சரியான உதாரணம். இவர்களது ஐடியாவைப் பார்த்து வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் இவர்களது நிறுவனத்தில் முதலீடு செய்ய தயாராக இருக்கின்றன. முதல் 18 மாதங்களுக்குத் தங்களுக்கான சம்பளத்தை இவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை.

கிரெட் கார்ட் அல்லது டெபிட் கார்டு வைத்திருப்பர்கள் மட்டுமே ஆன்லைன் பொருள்களை வாங்க முடியும் என்பது தடையாக இருந்துவந்தது. அதனால் கேஷ் ஆன் டெலிவரி திட்டத்தை 2010-ம் ஆண்டு கொண்டுவந்தார்கள். பொருளை ஆர்டர் செய்துவிட்டுத் தேவை இல்லை என்று சொல்லலாம், வீடு பூட்டியிருக்கலாம் எனப் பல ரிஸ்க் இருந்தாலும் பன்சால் ஜோடி துணிந்தது. இது நிறுவனத்துக்குப் பெரிய வெற்றியைக் கொடுத்தது.

முதலீடு திரட்டல்

பிஸினஸ் வளர்வதற்கு வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களிடம் பேசி நிதி திரட்டினார்கள். 2009-ம் ஆண்டு 10 லட்சம் டாலர் முதலீட்டை ஆக்செல் பார்ட்னர் நிறுவனம் பிளிப்கார்டில் முதலீடு செய்தது. தவிர டைகர் குளோபல், நாஸ்பர், மார்கன் ஸ்டேன்லி உள்ளிட்ட பல நிறுவனங்கள் பிளிப்கார்டில் முதலீடு செய்திருக்கின்றன.

கடந்த ஏழு வருடங்களில் 176 கோடி டாலர் அளவுக்கு ஃபிளிப்கார்டில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. உலகளவில் அதிகளவு முதலீட்டை திரட்டிய இந்திய நிறுவனம் பிளிப்கார்ட்தான்.

வளர்ச்சி

திரட்டிய முதலீட்டை பிஸினஸில் முதலீடு செய்வது ஒரு வகையான வளர்ச்சி என்றால், நிறுவனங்களைக் கையகப்படுத்தி வளர்வதும் இன்னொரு வகையான வளர்ச்சி. இன் ஆர்கானிக் குரோத் என்பார்கள். ஃபிளிப்கார்ட் இந்த வேலையையும் செய்து வருகிறது.

மிக சமீபத்தில் 2,000 கோடி ரூபாய் கொடுத்து மிந்த்ரா டாட் காம் Myntra.com நிறுவனத்தை வாங்கியது.

2012-ம் ஆண்டு லெட்ஸ்பை (Letsbuy.com) என்னும் நிறுவனத்தை வாங்கியது. இது தவிர இன்னும் சில நிறுவனங்களையும் ஃபிளிப்கார்ட் வாங்க இருக்கிறது.

இப்போது ஃபிளிப்கார்ட்டில் மட்டுமே கிடைக்கும் என்று விளம்பரப்படுத்திப் பொருள்களை விற்க ஆரம்பித்திருக்கிறது. இப்படி விற்பதால் அதிக அளவு தள்ளுபடி கொடுக்க முடிவதால் மோட்டோ நிறுவன செல்போன்களை ஃபிளிப்கார்ட்டில் வாங்க கூட்டம் அலைமோதியது. சமீபத்தில் சீனாவின் Xiaomi Mi3 செல்போன் சில வினாடிகளில் விற்றுத் தீர்ந்தது. இதை அறிமுகப்படுத்திய அன்று ஃபிளிப்கார்ட் இணையதளம் கொஞ்சம் ஆடித்தான் போனது.

6000 கோடி ரூபாய் (2013-14) அளவுக்கு வருமானம் இருந்தாலும் ஃபிளிப்கார்ட் இன்னும் லாப பாதைக்குத் திரும்பவில்லை. இது குறித்து கேட்டதற்கு, “லாபம் ஒரு விஷயமே இல்லை. என்றைக்கு விரிவாக்கப் பணிகளை நிறுத்துகிறோமோ அப்போதே லாப பாதைக்குத் திரும்பிவிடலாம். ஆனால் செய்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது” என்கிறார் அதன் தலைமைச் செயல் அதிகாரி சச்சின் பன்சால்.

4 லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 42,000 கோடி
ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

15 கோடிக்கும் மேலானவர்கள் இணையத்தைப் பயன்படுத்தினாலும், இதில் 10 சதவீதம் நபர்கள்தான் ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்குகிறார்கள். ஆன்லைன் வணிகம் 2020-ம் ஆண்டு 7,000 கோடி டாலராக உயரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டையும் வைத்துப் பார்க்கும் போது 2020-ல் ஃபிளிப்கார்ட் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும், லாப பாதையில் திரும்பி இருக்கும். சிறந்த தொழில்முனைவோராக உயர்வது எப்படி இருப்பது என்று ஐஐஎம் கல்லூரிகளில் சிறப்பு வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கலாம்.
ஆனால்...

ஃபிளிப்கார்ட் யாரும் செய்யாததைச் செய்யவில்லை. பல வருடங்களுக்கு முன்பு ஆன்லைன் வணிகம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. பிளிப்கார்ட் ஒரு எர்லி பேர்டு. அது மட்டுமல்லாமல் சரியான சமயத்தில் வந்த பேர்டும்கூட.

தகவல்: தி ஹிந்து  

Saturday, July 26, 2014

ஆட்குறைப்பு பேரங்கள்

கண்ணாடியும், பளிங்குக் கல்லுமாய்ப் பளபளக்கும் கட்டிடங்கள். ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்குச் சவால் விடும் வசதிகள். படித்து முடிக்கும் முன்பாகவே, காம்பஸில் தேடி வந்து வேலை தரும் கம்பெனிகள். கை நிறையச் சம்பளம். நாம் கும்மிடிப்பூண்டி போவதுபோல், அடிக்கடி அமெரிக்கா பயணம். வெளியில் இருந்து பார்க்கும் நமக்கு சாஃப்ட்வேர் கம்பெனிகள், பி.பி.ஓக்கள், பூலோக சொர்க்கங்கள்.

இந்த சொர்க்கங்களுக்கு இன்னொரு சோகப் பக்கம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? தலைக்கு மேல் எப்போதும், ஒரு கத்தி தொங்கும் – வேலை எப்போதும் பறிக்கப்படலாம். அமெரிக்காவில் மிகப் பரவலாக இருக்கும் Hire and fire policy நம் நாட்டுக்கும் வந்துவிட்டது. அதாவது, வேலை நிரந்தரம் கிடையாது. பிஸினஸ் நன்றாக ஓடுகிறதா, ஆயிரக்கணக்கில் ஆட்களை எடுப்பார்கள். பிஸினஸ் சரிகிறதா, வீட்டுக்கு அனுப்புவார்கள்.

சாஃப்ட்வேர், பி.பி.ஓ கம்பெனிகள் மட்டுமல்ல, எல்லாத் துறை நிறுவனங் களும், பிஸினஸ் சறுக்கும்போது ஆட்குறைப்பைத்தான் ஒரே வழியாக வைத்திருக்கிறார்கள். திடீரென வேலைகளை இழக்கும் போது, தொழிலாளிகளின் உள்ளங் களும், வருங்கால வாழ்க்கையும் சிதறிப்போகின்றன. ஊழியர்கள் மனம் காயப்படாமல், அவர்களுடைய வருங்கால வாழ்க்கை அதிகம் பாதிக்கப் படாமல் பணி நீக்கம் செய்ய வேண்டும்.

அதே வேளையில், நிறுவனத்தின் லாபத்திலும் அதிக சேதம் ஏற்படக்கூடாது. இது எப்படி முடியும்? போகாத ஊருக்கு வழி கேட்பது போல் இருக்கிறது என்று எல்லோரும் நினைப்போம். இல்லை, இது முடியும் என்று நிரூபிக்கிறது, டாடா ஸ்டீல் கம்பெனியின் அனுபவம். 1990 – களில் இந்திய இரும்பு உருக்குத் தொழில், மிகவும் பின் தங்கிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக்கொண்டிருந்தது. ஜப்பான் நாட்டில் ஒரு தொழிலாளியின் சராசரி தயாரிப்பு ஆண்டுக்கு 602 டன்கள். கொரியாவில் 420 டன்கள், பிரேசில் நாட்டில் 218 டன்கள், டாடா ஸ்டீலில் வெறும் 57 டன்கள்.


1992 – இல் டாடா ஸ்டீல் மேனேஜிங் டைரக்டராக டாக்டர் இரானி பதவி ஏற்றார். இந்தியா தன் வாணிபக் கதவுகளை வெளி உலகத்துக்குத் திறக்கத் தொடங்கியிருந்த நேரம். கம்பெனி தன்னை மாற்றிக்கொள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை இரானி உணர்ந்தார்.

அவர் சொன்னார், “இன்றைய யுத்தங்களை மகாபாரத ஆயுதங்களால் ஜெயிக்க முடியாது. உலகளாவிய போட்டியை சமாளிக்க டாடா ஸ்டீலுக்கு இரண்டே இரண்டு வழிகள்தாம் – நவீன தொழில்நுட்ப உற்பத்தி முறையைப் பின்பற்றவேண்டும், தொழிலாளர்கள் எண்ணிக்கையை அதிரடியாகக் குறைக்கவேண்டும். இல்லாவிட்டால், பாரம்பரியம் மிக்க இந்தக் கம்பெனி அழிந்தே போய்விடும்.”

டாடா ஸ்டீலின் முக்கிய தொழிற்சாலை ஜாம்ஷெட்பூர் நகரத்தில் இருக்கிறது. 1992 – இல், இங்கே, 78,300 பேர் வேலை பார்த்தார்கள். குறைந்தபட்சம் 30,000 பேரை வீட்டுக்கு அனுப்பவேண்டும். கம்பெனியின் பல்வேறு இடங்களில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டன, நிறுவனம் இருக்கும் நெருக்கடி நிலையை விளக்கின, 30,000 பேரை வேலையிலிருந்து நீக்கவேண்டிய கட்டாயத்தை விளக்கின.

யூனியன் – மேனேஜ்மென்ட் பேச்சு வார்த்தைகள் தொடங்கின. முதல் இரண்டு, மூன்று சுற்றுக்கள் – கம்பெனி நிர்வாகிகள் ஏன் 30,000 பேரை வேலை நீக்கம் செய்யவேண்டுமென்பதை நியாயப்படுத்தினார்கள். “ஏன் தொழிலாளி அடிமடியில் கை வைக்கிறீர்கள்? கம்பெனியில் ஏராளமான விரயச் செலவு நடக்கிறது. அதைக் கட்டுப்படுத்துங்கள்” என்று யூனியன் தலைவர்கள் புள்ளி விவரங்களை அடுக்கினார்கள். பேச்சு வார்த்தைகளில் இழுபறி.

நிர்வாகம் இப்போது, இரண்டு ஆலோசனைகளை முன்வைத்தது. கட்டாய வேலை நீக்கம் கிடையாது; விருப்பமாக வேலையை விட்டுப் போகிறவர்கள் மட்டுமே போனால் போதும். இரண்டாம் ஆலோசனை, நஷ்ட ஈடு தொடர்பானது.

அன்றைய தொழிலாளர் நலச் சட்டங்களின்படி, ஒருவரைப் பணி நீக்கம் செய்தால், பிராவிடண்ட் பண்ட் தவிர, அவருக்கு நிவாரணத் தொகை தர வேண்டும். இந்தத் தொகை, அவர் பணியாற்றிய ஒவ்வொரு வருடத்துக்கும் ஒரு மாதச் சம்பளம் என்று கணக்கிடப்படும். சட்டம் நிர்ணயித்த இந்தத் தொகையைத் தருவதாக, டாடா ஸ்டீல் நிர்வாகம் சொன்னது. சுமார் 1000 தொழிலாளிகள் இதை ஏற்றுக்கொண்டார்கள். வி.ஆர்.எஸ். வாங்கிக்கொண்டார்கள்.

நிர்வாகத்தின் இலக்கு 30,000 பேர். சென்றவர்களோ 1,000 பேர். என்ன செய்யலாம்? தொழிலாளிகளுக்கு அதிர்ச்சி தர முடிவெடுத்தார்கள். யூனியனை அடுத்த சுற்றுப் பேச்சுக் களுக்கு அழைத்தார்கள். முதல் முயற்சி பலிக்காத மேனேஜ்மென்ட் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் என்று யூனியன் எதிர்பார்த்தது.

“முதலாளியா, தொழிலாளியா? ஒரு கை பார்த்து விடுவோம்” என்று வேலை நிறுத்தத் துக்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் இறங்கியது. தொழிலாளிகளின் மனங் களில் பயம், நிர்வாகம் தொழிற் சாலையை மூடிவிட்டால் என்ன செய்வது? அவர்கள் குடும்பத்தோடு வசித்தது கம்பெனி குடியிருப்புகளில். தொழிற்சாலையை மூடினால், வீடுகளையும் காலி பண்ணவேண்டும்.

பேச்சு வார்த்தைகள் தொடங்கின. மேனேஜ்மென்ட் பிரதிநிதி தங்கள் ஆலோசனைகளை ஒவ்வொன்றாகப் படிக்கப் படிக்க, யூனியன் தலைவர்களுக்கும், தொழிலாளர் பிரதிநிதி களுக்கும் தாங்கள் கேட்பதை நம்பமுடியவில்லை. அப்படி என்ன தந்தது நிர்வாகம்?

வேலை நீக்கம் செய்யப்படும் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய சம்பளத்தின் 150 சதவிகிதத் தொகை, அவர்கள் ஓய்வுபெறும் 55 வயதுவரை வழங்கப்படும். அதாவது, வேலைக்கு வராமலே 50 சதவிகித அதிக ஊதியம்! பானர்ஜி என்பவர் தன் 20 – ம் வயதில் டாடா ஸ்டீலில் வேலைக்குச் சேர்ந்தார். இன்று அவர் வயது 40, மாதச் சம்பளம் 8000 ரூபாய். தொழிலாளர் சட்டப்படி, அவருக்குக் கிடைக்கவேண்டிய தொகை 8000 x 20 = 1,60,000 ரூபாய்.

டாடா ஸ்டீலின் புதிய திட்டப்படி, அவருக்கு மாதம் 12,000 ரூபாய் வீதம், அவருடைய 55 வயதுவரை, அதாவது இன்னும் 15 வருடங்களுக்கு மாதாமாதம் கிடைக்கும். அடுத்த 180 மாதங்களில், கம்பெனி அவருக்குக் கொடுக்கப்போகும் தொகை 12,000 x 180 = 21,60,000 ரூபாய். 20 லட்சம் ரூபாய் அதிகம். பானர்ஜி பிற கம்பெனிகளில் தாராளமாக வேலைக்குப் போகலாம்.

அப்போதும், மாதத் தொகை தொடரும். ஒருவேளை பானர்ஜி இறந்துவிட்டால், இந்தப் பணம் அவர் குடும்பத்துக்குத் தரப்படும். ஊரைவிட்டுப் போகிறவர்கள், புதிய இடங்களில் வீடுகள் வாங்க 3 லட்சம் வட்டியில்லாக் கடன் வேலையை விட்டாலும், தொழிலா ளிகளுக்கும், அவர்கள் குடும்பத்துக்கும் டாடா ஆஸ்பத்திரியில் குறைந்த செலவில் சிகிச்சை. டாடா ஆஸ்பத்திரியைப் பயன்படுத்த முடியாதவர்களுக்கும், விரும்பாதவர்களுக்கும் 3 லட்ச மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசி.

ஆமாம், டாடா ஸ்டீல் நிர்வாகம் தொழிலாளர்களுக்குத் தந்தது வெறும் அதிர்ச்சியல்ல, ஆனந்த அதிர்ச்சி! அடுத்த ஆறு ஆண்டுகளில் 30,300 பேர் விருப்ப ஓய்வு வாங்கிப்போனார்கள். பிற கம்பெனிகளும், ஊடகங்களும், டாடா ஸ்டீல் மாபெரும் தவறு செய்துவிட்டதாகக் கேலி செய்தார்கள். ஆனால், வரவு செலவுக் கணக்குகள் இரானியின் தீர்க்கதரிசனம் எத்தனை சரியானது என்பதை நிரூபித்தன.

டீலை வெற்றிகரமாக முடித்தார் இரானி. பேச்சு வார்த்தைகளில் அவர் கண்ட வெற்றியின் ரகசியங்கள் – 30,000 பேரைக் குறைக்கவேண்டும் என்னும் இலக்கில் தெளிவு, உறுதி, தொழிலாளர் நலம் காக்கவேண்டும் என்னும் நேர்மையான கொள்கை, பிரச்சினையைப் பல கோணங்களிலிருந்து ஆழமாக ஆராய்ந்த கடும் முயற்சி, தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளை எகிறவிடாமல் அடக்கிவாசித்த யுக்தி, அவர்கள் நினைத்துப்பார்த்தேயிராத சலுகைகள் தந்த பரந்த மனம். டீல்களில் ஜெயிக்க நம் எல்லோருக்கும் ஒரு பாடம்.

Sunday, April 27, 2014

ஏர்டெல் நிறுவனம் புதிய திட்டம் அறிமுகம் செய்துள்ளது.

ஏர்டெல் நிறுவனம் மிகக் குறைந்த சிறப்பு இரவுக் கட்டணங்கள் மூலம் ஏர்டெல் நைட் ஸ்டோரை அறிமுகம் செய்துள்ளது. 

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.7க்கு அளவில்லாத லோக்கல் ஏ2ஏ அழைக்கும் வசதி அல்லது வெறும் ரூ.8க்கு 2ஜியில் அளவில்லாத இன்டர்நெட் வசதி மற்றும் பல சலுகைகளில் இருந்து பிடித்தவற்றை தேர்ந்தெடுக்கலாம் என்று அறிவித்துள்லது

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,”நீங்கள் இரவில் நண்பர்களுடன் பேசுபவர்களா? மொபைலில்பெரும்பாலும் இன்டர்நெட்டில் உலா வருபவர்களா? ஆம் என்றால் இப்போது உங்கள் ஏர்டெல் மொபைலில் அதை உச்சகட்டமாக அனுபவிக்கலாம் இல்லை என்றாலும் அந்த அனுபவத்தை பெறலாம். அதற்காகவே பார்தி ஏர்டெல் லிமிடெட் (பார்தி ஏர்டெல்) நைட் ஸ்டோரை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

வாடிக்கையாளர்கள் தமது பிரீபெய்ட் மொபைலில் இன்டர்நெட் பயன்பாடு மற்றும் இரவில் (நள்ளிரவு 12 மணி காலை 6மணி) லோக்கல் அழைப்புகளுக்கான பணச் சலுகைகளுக்கு பெற்றிராத மதிப்பை பெற உதவும்.

*129# என்று வெறுமனே டயல் செய்வதன் மூலம் அல்லது 129 என்ற எண்ணில் அழைப்பதன் மூலம் அல்லது ஏர்டெல் முகவரியில் லாகிங் செய்வதன் மூலம் 2ஜி, 3ஜி மற்றும் லோக்கல் ஏர்டெல்லில் இருந்து ஏர்டெல் அழைப்புகளுக்கான மிகக்குறைந்த கட்டணங்களில் இப்போது இந்த சேவையை அனுபவிக்க முடியும்.

வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.7க்கு அளவில்லாத லோக்கல் ஏ2ஏ அழைக்கும் வசதி அல்லது வெறும் ரூ.8க்கு 2ஜியில் அளவில்லாத இன்டர்நெட் வசதி மற்றும் பல சலுகைகளில் இருந்து பிடித்தவற்றை தேர்ந்தெடுக்கலாம்.

கோம்போ, ஸி29க்கு 3ஜி 500எம்பி, ரூ.49க்கு 3ஜி 1ஜிபி சேவையை பெறலாம். மேலும் இலவசமாக பேஸ்புக்கை அளவில்லாமல் பயன்படுத்தலாம். எனவே, இந்த சேவையை பெற 129 என்ற எண்ணை அழைக்கலாம்.

Tuesday, December 31, 2013

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

"அன்போ, கோபமோ, துரோகமோ, நாம் மற்றவர்களுக்கு என்ன வழங்குகிரோமோ அது தான் நமக்கு திரும்பி வரும் ! நமக்கு என்ன வேண்டுமோ அதையே மற்றவர்களுக்கும் வழங்க நாம் கற்று கொள்ள வேண்டும்"

பிறக்கும் புத்தாண்டில் நாம் அனைவரும் அனைத்து வளமும், இன்பமும் பெற்று நலமாக வாழ இறைவனை வேண்டுவோமாக !!!


இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 

Tuesday, October 29, 2013

மாணவர்கள் எதிர்காலம்?

தமிழ்நாட்டிலுள்ள ஐந்தாறு பொறியியல் கல்லூரிகளில் நூற்றுக்கும் அதிகமான தனியார் கல்லூரிகளில், இந்த ஆண்டு குறைந்த அளவு மாணவர்களே சேர்ந்திருக்கிறார்கள். 50 சதவிகிதம் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையே இல்லை. ஒட்டு மொத்த சேர்க்கையில் (ஞஇ) மாணவர்கள்தான் அதிக இடங்களில் விண்ணப்பித்து இடம் பெற்றுள்ளார்கள். இவர்களை ஒப்பிடும்போது நான்கில் ஒரு பங்குதான் எஸ்.சி. மாணவர்கள் இடம் பெற்றுள்ளார்கள். இந்த நிலையில் இன்னமும் ஏறத்தாழ 16,755 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த நிலை வருவதற்கு காரணம் சரியான கட்டமைப்பு இல்லாத, கல்வித் தகுதி இல்லாத ஆசிரியர்கள், பாடத்திட்டத்தை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சரியாகப் புரிய வைக்காதது இவைதான். வந்தேன், பார்த்தேன், கொடுத்தேன் என்று (அஐஇபஉ) போன்ற மைய அரசு அமைப்புகள் சகட்டுமேனிக்கு ஒப்புதல் வழங்கி வருவது இன்னொரு காரணம். இந்த ஆண்டு மட்டும் 27 பொறியியல் கல்லூரிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது. 77,505 மாணவர்கள் இடங்கள் சேர்க்கை பெறவில்லை.

மருத்துவக் கல்லூரி சேர்க்கைகளை பார்த்தால் அதிகபட்ச மாணவர்கள் சேர்க்கை பெறுகிறார்கள். இதில் பெருவாரியான கல்லூரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சதவீதத்தில் ஒரு சீட்டிற்கு அரைகோடி ரூபாய் என கொள்ளையடிக்கிறார்கள். சமீபத்தில் இந்திய மருத்துவக் கவுன்சில் ஒரு சில கல்லூரிகளுக்கு முதலாண்டு சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. அப்படியிருந்தும் மறுப்பு தேதிக்கு பின்னால் மாணவர்களிடத்தில் லட்சக்கணக்கில் நன்கொடை பெற்றிருக்கிறார்களாம். இது குறித்து ரகசிய புலன் ஆய்வு செய்ய வேண்டும்.

இப்போது கொடுத்த நன்கொடை தொகையை பெற முடியாமல் பெற்றோர்கள் சிரமப்படுகின்றார்கள். அரசு கல்லூரிகளுக்கு கூடுதல் சீட் வழங்கப்பட்டிருந்தும், இந்த மாணவர்களை அரசு ஏன் அங்கு மாற்றவில்லை? கட்டிய தொகையை ஏமாற்ற முற்படும்போது, தேர்வுகளில் (ஙஇஐ)அனுமதிக்காதபோது, மாணவர்கள் கொதிப்படைந்து கல்லூரிக்கு சேதம் விளைவிக்க முற்படுகின்றார்கள். உண்ணாவிரதம் இருக்கின்றார்கள்.

சரியான ஆய்வு செய்யாமல் மருத்துவக் கவுன்சில் உரிமம் வழங்கியதுதான் இதற்கு காரணம். ஒரு கல்லூரிக்கு ஒப்புதல் வழங்கும்போது குறிப்பாக மருத்துவக் கல்லூரிகளில் எல்லா வகை பிரிவுகளுக்கும் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். எல்லா துறைகளிலும் எல்லா உபகரணங்களும் வாங்கியிருக்க வேண்டும். நூலகங்களில் எல்லா மருத்துவப் பிரிவுகளுக்குரிய இந்திய வெளியீடு, பன்னாட்டு வெளியீடு போன்ற எல்லா வகையான புத்தகங்களும் மற்றும் மெடிக்கல் கவுன்சில் ஆராய்ச்சி புத்தகங்களும் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆய்வு நேரத்தின்போது பிற மாநில கல்லூரிகளில் வேலை செய்யும் டாக்டர்கள், சர்ஜன்கள், செவிலியர்கள் போன்றவர்கள் ஒரு சில நாள்களுக்கு மட்டும் வாடகைக்கு அமர்த்தப்படுகின்றார்கள்.

இவர்கள் எங்கு பணியாற்றி இருந்தாலும் நிரந்தரமாக பணியிலிருந்து நீக்கப்பட வேண்டும். தனியார் மருத்துவமனையில் இருந்து செயல்படும் பட்சத்தில் அவர்கள் சில ஆண்டுகள் பிராக்டிஸ் செய்ய தடை செய்யப்பட வேண்டும். இந்த நடைமுறைகளை பின்பற்றும் கல்லூரிகளுக்கு உரிமம் தடை செய்வதில் தவறில்லை. அதிகமான ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த அறிஞர்கள் வயது உச்சவரம்பு பார்க்காமல் கல்லூரியில் பணியாற்ற, விதிமுறை தடைகள் நீக்கப்பட வேண்டும். உயரிய ஆராய்ச்சி சாதனங்கள், சோதனைக்கூட உபகரணங்கள் பயன்பாட்டில் இருக்கவேண்டும். அவர்கள் கட்டியிருக்கும் மருத்துவமனையில் ஒரு நாளைக்கு எவ்வளவு நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றார்கள். எத்தனை அறுவை சிகிச்சை நடந்தேறியது நோயாளிக்கு தந்த சிகிச்சை எண்ணிக்கை அறிக்கை கணினியில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அளிக்கப்பட்ட விவரங்கள் உண்மைதானா என்பதை ஆய்வுக் குழு உறுதி செய்யவேண்டும். மாணவர்களுக்கு அளிக்கப்படும் போதனைத் திறன், செய்முறை சோதனை திறன் எங்ஙனம் உள்ளது என (ச்ங்ங்க்க்ஷஹஸ்ரீந்) மாணவர்களிடம் கேட்டறிய வேண்டும். அதன் பின்னர்தான் ஆசிரியர்கள் சேர்க்கை உறுதி செய்யப்பட வேண்டும். மருத்துவ கல்லூரிகள் நிலை இப்படி இருக்கும்போது மருத்துவம் சார் படிப்புகள் எந்த நிலையில் உள்ளது என்று பார்த்தால் அதிலும் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. 20க்கு 30 அடியில் 500 மாணவர்கள் அல்லது 600 மாணவர்கள் படிக்கின்றார்கள்.

நர்சிங் பாடம் நடத்த இந்திய நர்சிங் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழம் தவிர வேறு எவருக்கும் உரிமம் தர சட்டத்தில் இடமில்லை. அல்லது மனிதவள மேம்பாட்டு துறை அனுமதித்திருக்க வேண்டும். நிலைமை அப்படி இருக்க ட்ங்ஹப்ற்ட் ஹள்ள்ற் பயிற்சி வகுப்பு என தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் ரூ.50 ஆயிரம் செலுத்தி உரிமம் பெறுகின்றார்கள். ஆனால் மாற்று சான்றிதழ் வழங்கும்போதுட்ங்ஹப்ற்ட் ஹள்ள்ற் பக்கத்தில் சன்ழ்ள்ண்ய்ஞ் என எழுதி வழங்குகின்றார்கள். 10-வது பெயில், 10-வது பாஸ் என சேர்த்துக்கொண்டு வெள்ளை உடை அணியவைத்து ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் என வசூல் செய்கின்றனர்.

1000 மாணவிகளை ஒருசேர கொண்டு கால்நடைகளை அடைத்துவைப்பதுபோல் அடைத்து வைத்து பயிற்சி என்ற பெயரில் பல லட்சம் பணம் பார்க்கின்றனர். ள்ற்ன்க்ஹ் ஸ்ரீங்ய்ற்ழ்ங் அல்லது ஸ்ரீர்ம்ம்ன்ய்ண்ற்ஹ் ஸ்ரீர்ப்ப்ங்ஞ்ங் உரிமம் வழங்குவதற்கு முன் பல்கலைக்கழகம் ஏன் ஆய்வு மேற்கொள்வதில்லை? தொலைதூர கிராமங்களில் இருந்து வரும் மாணவியர்களுக்கு ஆய்வுக்கூடம், நூலகம், விளையாட்டுத்திடல், பஸ் வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏன் செய்துதரப்படுவதில்லை? எல்லாவற்றையும்விட அரசு வேலை தேடித் தரும் நிறுவனம் இவர்களைப் பதிவு செய்ய அனுமதிப்பதில்லை.

அது ஏன்? ஒருசில இரண்டாம் தர மருத்துவமனைகளில் ரூ.3 ஆயிரத்துக்கு வேலை செய்ய அடிமைகளைப்போல பயன்படுத்துவார்கள். நம் குழந்தைகள் எதிர்காலம் எங்கே போகிறது என பெற்றோர்கள் உணரவேண்டாமா? சேர்க்கும் கல்வி கூடத்தில் எந்த படிப்புகளுக்கு உரிமம் பெற்றிருக்கின்றார்கள் என்ற சான்றிதழை வாங்கிப் பார்க்க வேண்டும்.

÷கட்டமைப்பு, ஆசிரியர் கல்வித்தகுதி, கழிவறை வசதிகள், நூலகம், ஆய்வுக்கூடம், உரிமம், சான்றிதழ் மற்றும் இதுவரை எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தந்திருக்கிறார்கள் என்ற ஆதாரப் பட்டியலை வினவி பார்ப்பதற்கு பெற்றோர்களுக்கு உரிமை உண்டு. பார்த்தாக வேண்டும். அப்படி பார்த்தால்தான் உங்கள் குழந்தைகளுக்கு எதிர்காலம் உண்டு.

Saturday, September 14, 2013

இன்னும் கொஞ்ச நேரம் - மரியான்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் பேச கூட தொடங்கலையே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே
இபோ என்ன விட்டு போகதே என்ன விட்டு போகதே
இன்னும் பேச கூட தொடங்கலையே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே
இபோ மழை போல நீ வந்த கடல் போல நான் இருப்பேன்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

இதுவரைக்கும் தனியாக என் மனச
அலையவிட்ட அலையவிட்ட அலையவிட்டாயே
எதிர்பாரா நேரத்துல இதயத்துல
வளைய விட்டு வளைய விட்டு வலயவிட்டாய
நீ வந்து வந்து போயேன் அந்த அலைகளை போல
வந்த உன் கையுல மாட்டிக்குவேன் வலையல போல
உன் கன்னுகேத்த அழகு வர காத்திருட கொஞ்சம்
உன்ன எப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்

இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே
இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே

கடல் மாதா ஆடையாக உயிரோடு
உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்
என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே
உன்னிடம் சொல்லவே தயங்குதே
இந்த உப்பு காத்து இனிக்குது
உன்னையும் என்னையும் இழுக்குது
உன்ன இழுக்க என்ன இழுக்க
என் மனசு நேரையுமே
இந்த மீன் உடம்பு வாசனை
என்ன நீ தொட்டதும் மணக்குதே
இந்த இரவெல்லாம் நீ பேசி தலையாட்டி நான் ரசிப்பேன்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

நீ என் கண்ணு போல இருக்கனும்
என் புள்ளைக்கு தகப்பன் ஆவணும்
அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும்
நீ சொந்தமாக கிடைக்கணும்
நீ சொன்னதெல்லாம் நடக்கணும்
நம்ம உலகம் ஊனு இன்று நாம் உருவாகணும்

தெரிந்து கொள்ளுங்கள் தமிழ்நாடு

1. தமிழக அரசு முத்திரை கோபுரம் –ஸ்ரீவில்லிபுத்த ூர் ஆண்டாள் கோபுரம்
2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர் ..
.4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்...
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம் பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் – திருவாரூர்தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)

Tuesday, August 20, 2013

துங்கும் போது சரியான நிலைகள்


நேர்மை

தனது வாழ்நாள் முழுவதும் கஞ்சனாகவே இருந்த ஒரு பணக்காரன் சாகும் தருவாயில், தான் வாழ்க்கையை வீணடித்துவிட்டதை உணர்ந்து வருந்தினான். பணத்தையே பிரதானமாகக் கருதிய அவனுக்கு இப்போது பணம் எந்த வகையிலும் உதவி செய்யாது என்பதை உணர்ந்தவுடன் அதை வெறுத்தான்.

தனது மூன்று மகன்களையும் அழைத்து, ''நான் இதுவரை பணப்பித்து பிடித்திருந்து இப்போது தான் தெளிந்துள்ளேன். நீங்களாவது பணத்துக்கு முக்கியம் கொடுக்காமல் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நான் இதுவரை சேர்த்த பணத்தை மூன்று பைகளில் வைத்துள்ளேன். ஒவ்வொன்றிலும் ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது. நான் இறந்தவுடன் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பையை எடுத்து என் பிணத்துடன் வைத்து எரித்து விடுங்கள்,'' என்றார். பிள்ளைகளும் உறுதியளிக்க அவரும் நிம்மதியுடன் மரணத்தைத் தழுவினார். அவர் கூறியபடியே மூன்று பிள்ளைகளும் ஆளுக்கு ஒரு பையை பிணத்துடன் வைத்து எரித்தனர்.

வீட்டுக்கு வந்தவுடன் மூத்தவன் சொன்னான், ''தம்பிகளே,நான் அப்பா சொன்னபடி நடக்க முடியவில்லை. எனக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் கடன் இருந்ததால் அதை எடுத்துக் கொண்டு மீதியைத்தான் எரித்தேன்,'' என்றான்.

இரண்டாமவன் உடனே சொன்னான், ''நீ பரவாயில்லை. எனக்குக் கடன் கூடுதலாக இருந்ததால் நான் இருபதினாயிரம் ரூபாயை மட்டும் பையில் வைத்துப் போட்டேன்" என்றான்.

கடைக்குட்டிக்கு பயங்கரக் கோபம் வந்து, ''அப்பா சொல்லைக் கேளாத நீங்கள் உருப்படுவீர்களா? அவர் நம்பிக்கையை சிதைத்து விட்டீர்களே,'' என்று கன்னாபின்னாவெனத் திட்டினான். அண்ணன்கள் இருவரும், ''பரவாயில்லை, நீயாவது அப்பா சொன்னபடி முழுப் பணத்தையும் போட்டு விட்டாயா?'' என்று கேட்டனர்.

கடைக்குட்டி சொன்னான், ''நான் நேர்மையானவன். அப்பா கொடுத்த பணத்தை என் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு அப்பா பெயருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு செக் எழுதி பையில் வைத்து அவர் பிணத்துடன் வைத்துவிட்டேன்.'' என்றானே பார்க்கலாம்

Sunday, August 18, 2013

உழைத்து வாழ்க்கையில் முன்னேறு !!!

ஒரு ஏழை ஒருவன் ஜென் துறவியைப் பார்க்கச் சென்றான்.

அவரைப் பார்த்து,

"குருவே! நான் பெரும் ஏழை.

என்னிடம் என் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை.

நான் ஒரு நல்ல வசதியுடன் வாழ வழி சொல்லுங்கள்" என்று கேட்டான்.

அதற்கு குரு அவனிடம்,

"நான் 5000 தருகிறேன், உன் கைகளை

என்னிடம் வெட்டிக் கொடு" என்று சொன்னார்.

அவன் என்னால் 5000 ரூபாய்க்காக என் கைகளை இழக்க முடியாது என்று கூறினான்.

"சரி, நான் உனக்கு 15,000 ரூபாய் தருகிறேன்,

உன் கால்களை கொடு" என்றார்.

அதற்கும் அவன் ஒப்புக் கொள்ளவில்லை.

"வேண்டுமென்றால் 50,000 ரூபாய் தருகிறேன்,

உன் கண்களையாவது கொடு" என்று கேட்டார்.

அதற்கும் அவன் முடியாது என்றான்.

உனக்கு இருபது லட்சம் வேண்டுமென்றாலும் தருகிறேன்,

உன் உயிரைக் கொடு என்றார்.

அதற்கு அந்த ஏழை, என்னால் நிச்சயம் நீங்கள்

சொல்வதை செய்ய முடியாது என்று கூறினான்.

அதைக் கேட்ட அந்த குரு அவனிடம்,

"உன்னிடம் உன் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும்
இல்லை, மேலும் எவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தாலும் கொடுக்க விரும்பாத விலை மதிப்பற்ற உயிரை கொண்டுள்ள நீ எவ்வாறு ஏழை ஆக முடியும். ஆகவே உழைத்து வாழ்க்கையில் முன்னேறு" என்று கூறினார்.

Monday, June 24, 2013

பலம் தரும் பலாக்கொட்டை!

பழங்களைவிட ஒரு மரத்தையே உருவாக்கும் பழக்கொட்டையில் உளள மரபணு கூறுகள் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகம் பெற்றிருப்பதுடன், செல்களை அழிவிலிருந்து காக்கும் ஆற்றலையும் உடையது. இவற்றை உண்பதற்கு ஏற்றவாறு ருசியாக சமைத்து சாப்பிட்டால் உணவே மருந்தாகும். அதுபோன்ற அற்புத ஆற்றல் தரும், ஆண்களின் வலிமையைப் பெருக்கும்.”அர்டோகார்பஸ் இன்டிகிரிபோலியா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட மொரேசியே குடும்பத்தைச் சார்ந்த பலாப்பழத்தின் கொட்டை மருத்துவ ரீதியாக உட்கொள்ள ஏற்றது.

100 கிராம் பலாக்கொட்டையில் 135 கிலோ கலோரி சத்து உள்ளது. இவற்றில் உள்ள கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் ஏ, பி, சி போன்ற வைட்டமின்கள், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற தனிமங்கள் உள்ளன. இவற்றில் காணப்படும் லிக்னான்கள், ஐசோபிளேவோன்கள், சப்போனின்கள் புற்றுநோய், செல் முதிர்ச்சி, செல் அழிவு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் தன்மை உடையவை. இவற்றிலுள்ள பிளேவனாய்டுகள், ஆர்டோகார்பெசின் மற்றும் நார்ஆர்டோ கார்பெடின் போன்றவை வீக்கத்தைக் கரைக்கக்கூடியவை. அதிக ரத்த அழுத்தம் மற்றும் குடற்புண்களை ஆற்றும் தன்மையும் பலாக்கொட்டைக்கு உண்டு. இவற்றை நன்கு வேகவைத்து உருளைக் கிழங்கிற்கு பதில் உட்கொள்ளலாம்.

பலாக்கொட்டையை வறுத்தோ, வேகவைத்தோ உட்கொள்ளலாம். விதைகளை நன்கு உலர்த்தி, மைய அரைத்து, கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தியாகவோ, ரொட்டியாகவோ செய்தும் சாப்பிடலாம். தோலுரித்து கழுவி, ஒன்றிரண்டாக இடித்த பலாக்கொட்டை-10, பட்டர்பீன்ஸ்-20,
உருளைக்கிழங்கு-1, பச்சைப்பயறு-100 கிராம் ஆகியவற்றை நீரில் ஊறவைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ள வேண்டும். தேங்காய், மிளகாய்தூள், மஞ்சள்தூள், பூண்டு, புளிச்சாறு ஆகியவற்றை நீர்விட்டு மைய அரைத்து, வெந்த பலாக்கொட்டை கலவையுடன் சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்கவைத்து, கறிவேப்பிலை, கடுகு, மிளகாய் சேர்த்து தாளித்து குழம்பு பதத்தில் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட உடலுக்கு வலிமையும் குளிர்ச்சியும் உண்டாகும். பலம் உண்டாகும். பலாக்கொட்டையை மட்டும் தனியாக அதிகம் உட்கொண்டால் உஷ்ணம் அதிகரித்து, மார்பு மற்றும் வயிற்றில் கடும் வலி, முதுகுப்பிடிப்பு ஏற்படும் என சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இதனை உணவாக சமைத்து உட்கொள்வதே நல்லது

முக நூலில் நண்பர் பகிர்த்து கொண்டது 

Friday, May 31, 2013

தண்ணீரும் காற்றும் காசுக்கு விற்கும் நிலையை ஒழிப்போம்...!


திருட்டு விசிடி ரெய்டு நடத்தினால் சினிமாக்காரர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள், போலி மருத்துவர்கள் மீது நடவடிகை எடுத்தால் ஒரிஜினல் மருத்துவர்கள் மகிழ்வார்கள் ஆனால் அனுமதி பெறாத மினரல் வாட்டர் நிறுவனங்களை மூடினால் ஏன் அனுமதி பெற்ற மினரல் வாட்டர் நிறுவனங்கள் ஏன் ஸ்ட்ரைக் செய்கின்றன..? அப்படி என்றால் இதில் இவர்களின் பங்கு என்ன..?

Photo: Like here first -->> இன்று ஒரு தகவல். Today A Message.
திருட்டு விசிடி ரெய்டு நடத்தினால் சினிமாக்காரர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள், போலி மருத்துவர்கள் மீது நடவடிகை எடுத்தால் ஒரிஜினல் மருத்துவர்கள் மகிழ்வார்கள் ஆனால் அனுமதி பெறாத மினரல் வாட்டர் நிறுவனங்களை மூடினால் ஏன் அனுமதி பெற்ற மினரல் வாட்டர் நிறுவனங்கள் ஏன் ஸ்ட்ரைக் செய்கின்றன..? அப்படி என்றால் இதில் இவர்களின் பங்கு என்ன..?

ஏற்கனவே சென்னையில் கேன் வாட்டர்களில் 30%க்கும் மேலும் பாக்கெட் வாட்டரில் 70%க்கும் மேலான தண்ணீரும் குடிப்பதற்கு கூட தகுதியில்லாத தண்ணீர்கள் என்று சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன, இந்நிலையில் கேன் வாட்டரை வாங்கி அதை கொதிக்க வைத்து குடிக்கும் நிலையில் உள்ளது. மேலும் கேன் வாட்டரை வீட்டில் புழங்குவது தற்போது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் ஆகவும் போய்விட்டது. 

சாதாரண க்ளோரினேட்டட் மெட்ரோ வாட்டரை கொதிக்க வைத்து, துண்டால் வடிகட்டினாலே போதும்.. இதுவேமிக ஆரோக்கியமான குடிநீர்தான்.. இதை விடுத்து கேன் வாட்டர் மட்டும் குடித்தால்தான் உயிருடன் இருக்க முடியும் என்பது மிகப்போலியான அபத்தமான வியாபார உத்தி..என டாக்டர் அருணாசலம். இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளார்.

மினரல் வாட்டர் நிறுவனங்களின் இந்த ஸ்ட்ரைக்கை பயன்படுத்தி அனைவரும் தண்ணீரை கொதிக்க வைத்து குடித்து பயன்படுத்தி அதனால் தீங்கு எதுவும் ஏற்படுவதில்லை என்பதை உணர்ந்து இந்த மினரல் வாட்டர் நிறுவனங்களை ஊத்தி மூட வையுங்கள்.

தண்ணீரும் காற்றும் காசுக்கு விற்கும் நிலையை ஒழிப்போம்...!

இந்த செய்தியை அனைவருக்கும் சேர்க்க ஷேர் செய்யுங்கள்...!

ஏற்கனவே சென்னையில் கேன் வாட்டர்களில் 30%க்கும் மேலும் பாக்கெட் வாட்டரில் 70%க்கும் மேலான தண்ணீரும் குடிப்பதற்கு கூட தகுதியில்லாத தண்ணீர்கள் என்று சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன, இந்நிலையில் கேன் வாட்டரை வாங்கி அதை கொதிக்க வைத்து குடிக்கும் நிலையில் உள்ளது. மேலும் கேன் வாட்டரை வீட்டில் புழங்குவது தற்போது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் ஆகவும் போய்விட்டது. 

சாதாரண க்ளோரினேட்டட் மெட்ரோ வாட்டரை கொதிக்க வைத்து, துண்டால் வடிகட்டினாலே போதும்.. இதுவேமிக ஆரோக்கியமான குடிநீர்தான்.. இதை விடுத்து கேன் வாட்டர் மட்டும் குடித்தால்தான் உயிருடன் இருக்க முடியும் என்பது மிகப்போலியான அபத்தமான வியாபார உத்தி..என டாக்டர் அருணாசலம். இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளார்.

மினரல் வாட்டர் நிறுவனங்களின் இந்த ஸ்ட்ரைக்கை பயன்படுத்தி அனைவரும் தண்ணீரை கொதிக்க வைத்து குடித்து பயன்படுத்தி அதனால் தீங்கு எதுவும் ஏற்படுவதில்லை என்பதை உணர்ந்து இந்த மினரல் வாட்டர் நிறுவனங்களை ஊத்தி மூட வையுங்கள்.

தண்ணீரும் காற்றும் காசுக்கு விற்கும் நிலையை ஒழிப்போம்...!

Wednesday, April 24, 2013

பிறந்த நாள் வாழ்த்து

பிறரின் உணர்ச்சிகளை
பட்டப்பகலாய்   
தெள்ளத் தெளிவுடன்
தெரிந்து கொள்கிறாய்!! 
தன் உணர்வுபோல்
உணர்ந்தும் கொள்கிறாய்!!!
 
உற்றாரிடமும் ,உறவினரிடமும்,
சக பணியாளர்
தோழர்களிடத்திலும்
உன்னைச் சுற்றியள்ள
அனைவரிடமும் அன்புடன்
பார்த்து பதமாகப்
பழகுகிறாய் மிகவும் பண்புடன்
பிறரை பிஞ்சுக் கன்றுகளாய்
என்றெண்ணி
எவ்வித
இடையூறுமின்றி
இன்னிசையாய் வந்து
செல்கிறாய்!!!
 


வேண்டியதை வேண்டியதற்கு
எந்தவித பாடத்திலும்
எவ்வித ஐயவினா
எவர் தொடுத்தாலும்
என்ற ஆரம்ப எழுத்தில் `
தொடங்கி
ஆயுத எழுத்து என்ற இறுதி
எழுத்து வரை நீடித்து
விளக்குகிறாய்!!!
 
இவையனைத்தும் மிகவும்
அரிதான நற்குணங்களே ஆனால்
அளவுக்கு மீறினால்
அமிர்தமும் நஞ்சு அன்றோ
இந்த தமிழ்பழமொழியை
நீ அறியாயோ !!! 
 
வளர்ச்சி என்பது
வயதில் அல்ல
அறிவின் ஆழத்தில்
அன்பான இதயத்தில்
அழகிய உள்ளத்தில்
இவையனைத்திலும் நீ
உயர்ந்து நிற்கின்றாய்
வளர்ச்சியடைந்துள்ளாய்!!!
 
இன்று பிறந்தோம்
புதிதாய் என்றெண்ணி
தினம்தோறும்
தித்திப்பு நாட்களுடன்
நீ நித்தம் ஒரு
நல்ல மனப்பாங்குடன்
ஆயிரமாயிரம் காலஙகள்
ஆரோக்கியமுடன்
மலர்ச்சிப் பூக்களாய்
புன்னகை பூத்து
குடும்பத்துடன்
சந்தோசமாக குளைத்து
இனிதே வாழ வாழ்த்தும் சகோதரன் 

Monday, April 8, 2013

தானியங்கி "டஸ்டர்' : மதுரையில் கல்லூரி மாணவர்கள் சாதனை


கரும்பலகையில் உள்ள எழுத்துக்களை தானே அழிக்கும் இயந்திரத்தை (டஸ்டர்) மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.பள்ளி, கல்லூரிகளில் கரும்பலையில் ஆசிரியர்கள் எழுதியதை அழிக்கும் பழக்கம், பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. இதில் எழும் தூசி, ஆசிரியர்கள், முதல் வரிசையில் உள்ள மாணவர்களின் நாசி, வாயில் புகுந்து, கண்களையும் "பதம்' பார்க்கின்றன. காற்றில் தூசி பறப்பதால் மூச்சு குழாயில் படிந்து திணறல், இரப்பை பாதிப்பு, ஆஸ்துமா பிரச்னைகளும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு கிடைக்கும் வகையில், இக்கல்லூரி இயந்திரவியல் துறை தலைவர் மணிகண்டன் வழிகாட்டுதலில், தூசிகளை தானாக உள்வாங்கும் வகையிலான இயந்திரத்தை, மாணவர்கள் சுதர்சன், ஜான் பேட்ரிக், லக்ஷ்மண பாண்டியன் கண்டுபிடித்துள்ளனர்.

இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து மாணவர்கள் கூறியதாவது:இக்கருவி மிக சிறிய "டி.சி.', பேட்டரிகள் உதவியுடன், சுழலக்கூடிய உருளையும், கரும்பலகையின் மேற்பரப்பினை துடைக்கும் வகையில் "ஸ்பான்ச்' அடைப்பையும், தூசியை உறிஞ்சி உள்வாங்கும் வகையில் வெற்றிடத்தையும் கொண்டுள்ளது. "ஸ்பான்ச்' பரப்பு மூலம் கரும்பலகையை துடைக்கும்போது எழும் தூசியை, இயந்திரத்தில் உள்ள "இம்பெல்லரின்' உதவியுடன், காற்று அழுத்த வேறுபாட்டால் உள்வாங்கப்படுகிறது. பின், இத்தூசி, இயந்திரத்தின் பின்புறம் உள்ள மூடியினை சுற்றி எளிதாக அப்புறப்படுத்த முடியும். "டி.சி.', மோட்டாரினை 6 வோல்ட் ரீ சார்ஜர் பேட்டரி மூலம் இயக்கலாம். இக்கண்டுபிடிப்புக்கு மத்திய, மாநில அரசுகளின் விருதுகள் கிடைத்துள்ளன. காப்புரிமைக்கும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது, என்றனர்

Friday, April 5, 2013

15 வயதில் வெப்டிசைன் கம்பனி ஆரம்பித்த சிறுமி

10-ஆம் வகுப்பு பயின்றுவரும் இவர் வெப்டிசைன் துறையில் சிறந்த அறிவைக்கொண்டவர்.
ஸ்ரீலக்ஷ்மி சுரேஷ்...இது தான் இந்தச் சிறுமியின் பெயர். இவர்தான் 7 வருடங்களுக்கு முன்பே தனது பள்ளியின் வெப்சைட்டை வடிவமைத்து தலைப்புச் செய்திகளில் தென்பட்டவர். இப்பொழுது மீண்டுமொரு அவதாரம். இம்முறை உலகையே நிமிர்ந்துபார்க்கவைத்துள்ளார். காரணம் இவர் கேரளாவில் உள்ள யு.எல் சைபர் பார்க்கில் ஐடி நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

10-ஆம் வகுப்பு பயின்றுவரும் இவர் வெப்டிசைன் துறையில் சிறந்த அறிவைக்கொண்டவர். இவருடன் மேலும் 5 மாணவமாணவியர் இனைந்து மொத்தம் 6 பேர் இந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் அடக்கம். அனைவருக்கும் ஸ்ரீலக்ஷ்மி தான் CEO. பார்க்கப்போனால் உலகிலேயே 15 வயதில் CEO அந்தஸ்த்தைப் பெற்ற பெருமையும் முதல் பெண்ணும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் கூறுகையில், "வரும் ஜூலை மாதம் முதல் கோழிக்கோட்டில் உள்ள சைபர் பார்க் என்ற இடத்தில் எங்களது அலுவலகம் செயல்படும், வெப்டிசைன் மட்டுமல்லாமல், டொமைன் ரிஜிஸ்ட்ரேசன், ஹோஸ்டிங், அதுசார்ந்த அனைத்து வசதிகளையும் வழங்கவுள்ளோம். முதலில் 20 பணியாளர்களுடன் நிறுவனத்தை ஆரம்பிக்கவுள்ளோம். இதற்காக ரூ.50 லட்சம் இன்வெஸ்ட் செய்துள்ளோம்." என்றார்.
கேட்கவே பிரமிப்பாகவுள்ளது. வாழ்த்துக்கள்...

Thanks MINNEL by Arafath Aik