Blogger Widgets

Total Page visits

Showing posts with label இன்ஜினியரிங் கல்லூரி. Show all posts
Showing posts with label இன்ஜினியரிங் கல்லூரி. Show all posts

Tuesday, July 31, 2018

இன்ஜி., கவுன்சிலிங்கில் 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' ஆதிக்கம் : கொங்கு மண்டல கல்லூரிகளுக்கு அதிக மவுசு!


சென்னை : அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், கணினி அறிவியல் பாடப்பிரிவை, அதிக மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். முதல் சுற்றில், பெரும்பாலானோர், கொங்கு மண்டல கல்லுாரிகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர்.



அண்ணா பல்கலை சார்பில், 509 கல்லுாரிகளில் உள்ள, 1.70 லட்சத்து, 628 இடங்களுக்கு, பொதுப் பிரிவு ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. முதல் சுற்றில், 190 வரையில், 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்ற, 10 ஆயிரத்து, 734 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில், 7,347 பேர் மட்டும், கட்டணம் செலுத்தினர். அதிலும், 7,303 பேர், விருப்ப பாடப்பிரிவை பதிவு செய்தனர். இவர்களில், 6,768 பேர் மட்டும், இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.

இட ஒதுக்கீட்டை பொறுத்தவரை, அண்ணா பல்கலையின் நேரடி கல்லுாரிகளான, கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி, குரோம்பேட்டை, எம்..டி., மற்றும் அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரிகளுக்கு, மாணவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். திருநெல்வேலி, நாகர்கோவில், ஆரணியில் உள்ள, பல்கலையின் உறுப்பு கல்லுாரிகளிலும், அதிக இடங்கள் நிரம்பின.

மேலும், கோவை, பி.எஸ்.ஜி., - மதுரை தியாகராஜர் கல்லுாரி, கோவை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோவை, அரசு தொழில்நுட்ப கல்லுாரி, கோவை குமரகுரு,ஈரோடு கொங்கு இன்ஜினியரிங் கல்லுாரி, கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்லுாரி ஆகியவற்றிற்கு, மாணவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டத்தைச் சேர்ந்த கல்லுாரிகளை பொறுத்தவரை, எஸ்.எஸ்.என்., கல்லுாரி, திருவள்ளூர், ஆர்.எம்.கே., கல்லுாரி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா இன்ஜினியரிங் கல்லுாரி, சோழிங்கநல்லுாரில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் கல்லுாரி ஆகியவற்றை, அதிகம் தேர்வு செய்துஉள்ளனர். மாணவர்கள் இடங்கள் பெற்றுள்ள பல கல்லுாரிகள், தன்னாட்சி கல்லுாரிகள்.

பாடப்பிரிவு வாரியாக, கணினி அறிவியலை, 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு செய்துஉள்ளனர். அரசு ஒதுக்கீட்டு கட்டணத்தில், கணினி அறிவியல் கிடைக்காதோர், சுயநிதி கல்லுாரிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவை தேர்வு செய்துள்ளனர்.சுயநிதி கல்லுாரிகளிலும், கணினி அறிவியல் இடம் கிடைக்காதோர், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவான, இன்பர்மேஷன் டெக்னாலஜி பாடப்பிரிவை உறுதி செய்துள்ளனர். மெக்கானிக்கல் உட்பட மற்ற பாடப்பிரிவுகள், மெதுவாகவே நிரம்புகின்றன.

விருப்ப பட்டியல் முக்கியம்

ஆன்லைனில் விருப்ப பதிவு செய்த மாணவர்களில் முதல் 3,000 இடங்கள் வரை தரவரிசை பெற்றவர்களுக்கு அவர்கள் விருப்பம் தெரிவித்தமுதல் 10 பாடப்பிரிவுகளுக்குள் கிடைத்துள்ளது. தரவரிசையில் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக 59வது விருப்ப பதிவு வரை இடங்கள் கிடைக்கவில்லை.ஒரு மாணவருக்கு அவர் பதிவு செய்த 60வது விருப்ப பாடமேகிடைத்துள்ளது. இதேபோல் 1,000 மாணவர்கள் வரை 30 முதல் 60வது விருப்பம் வரை பதிவு செய்த இடங்களை தேர்வு செய்துள்ளனர்.

இரண்டாவது சுற்று கவுன்சிலிங்கில் 175 முதல் 190 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு விருப்ப பதிவு நேற்று துவங்கியது. நாளை மாலை 5:00 மணிக்கு பதிவு முடிகிறது. இதில் மாணவர்கள் தங்கள் விருப்ப கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவை அதிகம் பதிவு செய்வது நல்லது.அதேநேரம் தங்களின் கட் ஆப் மதிப்பெண் நிலவரத்துக்கு எந்த கல்லுாரி கிடைக்கும் என்பதை சரியாக கணித்து பதிவுகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும் என அண்ணா பல்கலை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
'ஹவுஸ் புல்' கல்லுாரி

முதல் சுற்றில் அண்ணா பல்கலையின் நேரடி மற்றும் உறுப்பு கல்லுாரிகளில் 2,080; அரசு மற்றும் அரசு உதவி கல்லுாரிகளில் 2,430 மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் 2,258 இடங்கள் நிரம்பியுள்ளன. சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரியில் 18 பாடப்பிரிவுகளில் 241 இடங்கள் மட்டுமே மீதம் உள்ளன. அதிலும் சிவில் இன்ஜி., மற்றும் மெக்கானிக்கல் இன்ஜி., பாடப்பிரிவில் தமிழ் வழியில் தலா 60 இடங்கள் வீதம் 120 இடங்கள் உள்ளன.

Click here for source link


Thursday, October 8, 2015

எத்திக்கல் ஹேக்கிங் - படிப்பது தப்பில்லையே!

குறை கண்டு பிடிக்காமல் இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழணும் என்று பெற்றோர் சொல்லி வளர்ப்பது வழக்கம். ஆனால் ஆன்லைனில் பல சமூக வலைத்தளங்களில் இருக்கும் கோளாறுகளை, கண்டுபிடித்து  தருகிறார்  “ஆனந்த பிரகாஷ்”, இதனை வெற்றிகரமான ஒரு தொழிலாகவும் செய்து வருகிறார்.


குறுக்கு வழி வேண்டாம், நேர்மையான  வழி தான் சரி எல்லாம் பழைய லாஜிக்.



“களவும் கற்று மற” னு சொல்லியிருப்பது போல இன்று எப்படி எல்லாம்  இணையத்தை தவறாகப் பயன்படுத்தினால், பிரச்னை வரக்கூடும் என்று யோசித்து அதனை, முன்னாடியே  தடுக்கத் தான் ஆனந்த் போன்றவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.




முதன் முதலில்  வீட்டில் இணைய வசதி கிடைத்ததும்,  சில சாமர்த்தியமான வழிகளை பயன்படுத்தி செலவே இல்லாமல் இணையத்தை பயன்படுத்த கற்றுக் கொண்டார்.  (அடடே நமக்கும் சொல்லி கொடுக்கலாமே ! நெட்பேக் போட்டு கட்டுபடியாகல ) சில மாதங்களில் இந்த பிரச்னை சரி செய்யப்பட்டது, அப்போது தான் அவருக்கு புரிந்தது இணையத்தை எவ்வளவு பேர் தவறாக பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர் என்று.

என்ஜினியரிங்  படிப்பின்  போதும் காலேஜ் வட்டாரத்தில் இவர் மிக பிரபலம். நன்றாகப் படிப்பதனால் அல்ல, வை ஃபை கட்டுப்பாடு பிரச்சனைகளை தீர்த்து வைப்பதால். இப்படி ஆன்லைனில் வல்லவனாக இருந்தாலும், பாடங்களில் கவனம் செலுத்த வில்லை. கண்டிப்பாக கேம்பஸ் பிளேஸ்மெண்ட்டில் வேலை கிடைக்காது என்றாயிற்று. 


ஃபேஸ்புக்கில் இருக்கும் கோளாறுகளை கண்டுபிடிப்போருக்கு அந்த நிறுவனம் பரிசு அறிவித்தது. முதன் முதலாக இவர் கண்டுபிடித்தது ஆன்லைனில் இருப்பவர்களை கண்டுபிடிக்கும் யுக்தி . சேட் ஆஃப் செய்து வைத்திருந்தாலும் கண்டுபிடிக்க முடியும் என்பதை சுட்டி காட்டினார். 500 டாலர்கள் பரிசு தொகையாக பெற்றார். அன்று தொடங்கியது இந்த குறை காணும் படலம். 80 பக்கங்களை  ஃபேஸ்புக்கில் கண்டுபிடித்திருக்கிறார்.




தன்னிடம் உள்ள திறமையை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தி வருகிறார். கர்கான் நகர சைபர் க்ரைம் துறையுடன் இணைந்து பல ஆன்லைன் கிரிமினல்களை பிடிக்க உதவியுள்ளார்.



சமீபத்தில் பிரபல உணவகம் சார்ந்த ஆப் சொமேடோ வில் 62 மில்லியன் நபர்களின் கணக்குகள் பாதுகாப்பில்லாமல் இருப்பதை சுட்டி காட்டினார். ஆனால் இந்திய நிறுவனங்கள் பலவும் சைபர் பாதுகாப்பை தீவிரமாக எடுத்து கொள்வதில்லை.

ஹேக்கர்ஸ் அனைவரும் தவறான செயல்களுக்காக ஹேக் செய்வதில்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் பரிசு தொகையும் வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தி கொடுக்க தயாராக இருக்கும் போது, இந்தியா நிறுவனங்களான   'ஓலா' போன்றவை இவர்களை குற்றவாளியாகவே பார்க்கிறது.


`ஓலா` வில் இருக்கும் பெரும் பாதுகாப்பு பிரச்சனையை சுட்டி காட்டிய  ஷுபம் பரமஹம்சா எனும் இளைஞர்களுக்கு மிக கடுமையாகவே அந்த நிறுவனம் பதிலளித்திருந்தது.

கிரெடிட் கார்ட் விவரங்கள்,  வவுச்சர் எண்களும் மிக எளிமையாக பெற முடியும் என காண்பித்துள்ளனர். மூன்றே நிமிடங்களில் இதனை செய்து முடித்ததாக கூறி அந்த வீடியோவை பதிவு செய்தனர்.
ஹேக்கர் என்பதையே திருட்டு கும்பல் போல சித்தரிக்கும் சினிமாவிற்கும் இதனில் பங்கு உண்டு. த்திக்கல் ஹேக்கிங்  என்ற படிப்பே உண்டு என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உலகமே இணையத்தில் இயங்கும் காலத்தில் இது போன்ற படிப்புகளை தேர்ந்தெடுப்போருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


 ஐ.மா.கிருத்திகா
விகடனில் வெளியிடப்பட்ட செய்தி, நண்பர்கள் தெரிந்து கொள்ள பகிர்கிறேன்.