Blogger Widgets

Total Page visits

Showing posts with label cricket. Show all posts
Showing posts with label cricket. Show all posts

Thursday, November 27, 2014

கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை சிட்னி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

  
அதிவேக பவுன்சர் தாக்கியதில் தலையில் படுகாயமடைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை சிட்னி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இவருடைய ஆத்துமா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.





Wednesday, November 20, 2013

மனம் ஒப்பவில்லை!

தனது 200ஆவது டெஸ்ட் பந்தய விளையாட்டை முடித்த கையோடு ஓய்வு பெறும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு, அவரது சாதனைகளைப் பாராட்டும் விதத்தில் இந்தியாவின் தலைசிறந்த விருதான "பாரத ரத்னா' விருது வழங்கி கௌரவித்திருக்கிறது மத்திய அரசு.

இந்திய கிரிக்கெட் சரித்திரத்தில் மட்டுமல்ல, உலக கிரிக்கெட் சரித்திரத்திலும் அழியாப் பெயரும் பெருமையும் சச்சின் டெண்டுல்கருக்கு உண்டு என்பதில் சந்தேகமே இல்லை. முதன் முதலாக, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த பெருமை சச்சினுடையது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நூறு முறை சதம் அடித்த பெருமை சச்சினுடையது. 17 தடவை டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ஆட்டக்காரராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை சச்சினுடையது. 62 முறை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறந்த ஆட்டக்காரராகத் தேர்வு செய்யப்பட்ட பெருமை சச்சினுடையது. டெஸ்ட் பந்தயங்களில் உலகிலேயே மிக அதிகமான ரன்களை (15,921) எடுத்த பெருமை சச்சினுடையது. ஒருநாள் கிரிக்கெட் பந்தயங்களில் மிக அதிகமான ரன்களை (18,426) எடுத்த பெருமை சச்சினுடையது. டெஸ்ட் போட்டிகளிலும் (51), ஒருநாள் போட்டிகளிலும் (49) மிக அதிகமாக சதமடித்த பெருமை சச்சினுடையது. சச்சினின் கிரிக்கெட் சாதனைகளைப் பட்டியலிடுவதாக இருந்தால் ஒரு புத்தகம்தான் எழுத வேண்டும்.

24 ஆண்டுகள் தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த சச்சின் டெண்டுல்கர், தனது 200ஆவது டெஸ்ட் ஆட்டத்தை முடித்த கையோடு, ஓய்வு பெறுவதாக அறிவித்தது பாராட்டுக்குரியது. இந்த சாதனையை எட்ட வேண்டும் என்பதற்காகவே, கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியபிறகும் சௌரவ் கங்குலி, ராகுல் திராவிட், வீரேந்தர் சேவாக், அனில் கும்ப்ளே, மகேந்திரசிங் தோனி ஆகியோரின் குழுவில் அவர் தொடர்ந்து ஆடி வந்தார். நினைத்ததை சாதிக்கவும் செய்திருக்கிறார்.

கிரிக்கெட் வீரர் என்கிற முறையில் சச்சினின் விடாமுயற்சி, சாதனை புரிய வேண்டும் என்கிற முனைப்பு, அற்புதமான விளையாட்டு ஆகியவற்றிற்காக அவர் பாராட்டப்பட வேண்டியவர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அதற்காக, அவருக்கு 1994இல் அவரது கிரிக்கெட் சாதனைகளுக்காக அர்ஜுனா விருது வழங்கப்பட்டபோதும், 1998இல் தலைசிறந்த விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் ராஜீவ்காந்தி "கேல் ரத்னா' விருது வழங்கப்பட்டபோதும், 1999இல் பத்மஸ்ரீ விருது தரப்பட்ட போதும், 2008இல் பத்ம விபூஷண் கொடுக்கப்பட்டபோதும், ஏன், அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட போதும் கரவொலி எழுப்பி மகிழ்ந்ததுபோல, "பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டிருக்கும் வேளையில் பாராட்டி மகிழ மனம் ஒப்பவில்லை.

"பாரத ரத்னா' விருது என்பது சாதனைகளுக்காக வழங்கப்படும் விருது அல்ல. சாதனையாளர்களின் சமுதாயப் பங்களிப்புக்காக வழங்கப்படும் விருது. அன்னை தெரசாவுடையது சாதனையல்ல, சேவை. "இசைக் குயில்' எம்.எஸ். சுப்புலட்சுமி தலைசிறந்த கர்நாடக இசைக்கலைஞர் என்பதற்காக விருது வழங்கப்படவில்லை. எத்தனை எத்தனையோ சமுதாய நல, மக்கள் நல்வாழ்வு முயற்சிகளுக்குத் தனது இசையின் மூலம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும், அரசுக்கும் நிதி வசூலித்துக் கொடுத்த சேவைக்கு வழங்கப்பட்ட விருது. காமராஜுக்கும், எம்.ஜி.ராமச்சந்திரனுக்கும் அரசியல் காரணங்களுக்காக விருது வழங்கப்பட்டது என்று சிலர் குறை கூறினாலும், அவர்கள் இறந்தும் பலரது மனதில் வாழ்கிறார்கள் என்பதால், அவர்களுக்குத் தரப்பட்ட விருதில் நியாயம் இருக்கிறது. அவர்களது சமுதாயப் பங்களிப்பை காலம் வழி மொழிந்திருக்கிறது.

சர்தார் வல்லபபாய் படேல் மறைந்து 41 ஆண்டுகளுக்குப் பிறகும், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் காலமாகி 34 ஆண்டுகளுக்குப் பிறகும்தான் நிஜமாகவே சமுதாயப் பங்களிப்பு நல்கிய அந்தப் பெருந்தகைகளுக்கு உயரிய விருதான "பாரத ரத்னா' வழங்கப்பட்டது. சச்சின் டெண்டுல்கருக்கு அவரது 200ஆவது டெஸ்ட் சாதனை முடிந்ததும் இந்த விருதை 40 வயதிலேயே வழங்கி கௌரவிக்க வேண்டும் என்பதற்காக, விருதுக்கான நிபந்தனைகளே தளர்த்தப்பட்டிருக்கிறதே, அதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சச்சின் டெண்டுல்கர் பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதராக இருந்து சம்பாதித்தார். கிரிக்கெட் விளையாடி சம்பாதித்தார். உலக அரங்கில் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக இருந்தார். அதெல்லாம் சரி, இவரது சமுதாயப் பங்களிப்பு என்ன? இவரால் பல இளைஞர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது என்பது "பாரத ரத்னா' விருது அளித்து கௌரவிக்கப்பட வேண்டிய தகுதியா, என்ன?

தகுதியற்றவர்களுக்காகத் தேவையற்ற கோரிக்கைகளுக்கு மத்திய அரசின் இந்த முடிவு வழிவகுக்கப் போகிறது. "பாரத ரத்னா'வின் மரியாதை குறையப் போகிறது. சச்சினின் விளையாட்டு சாதனைகளைப் பாராட்டும் அதே நேரத்தில், "பாரத ரத்னா' விருதுக்காக அவரை பாராட்ட மனம் ஒப்பவில்லை.

Saturday, November 16, 2013

இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கண்ணீருடன் விடைபெற்றார்

 


 

  

 


கரகோஷத்தின் மத்தியில் நன்றி தெரிவித்தார் சச்சின்

மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களின் நீண்ட கரகோஷத்துக்கு மத்தியில் தனது நன்றி உரையை ஆற்றினார்.

சச்சின் பேச வந்ததும், ரசிகர்களின் கரகோஷம் நீண்ட நேரத்துக்கு நிற்கவேயில்லை. கரகோஷம் தொடர்ந்த நிலையிலேயே சச்சின் பேசத் துவங்கினார்.

நன்றி தெரிவிக்க வேண்டியவர்களின் பட்டியல் அவர் கையில் வைத்திருந்தார். முதல் முறையாக தான் இந்த பட்டியலை தயாரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

நா தழுதழுத்த குரலில் அவர் உணர்ச்சிப் பொங்க பேசியதாவது, "1999ஆம் ஆண்டு எனது தந்தையை இழந்தது எனக்கு மிகப்பெரிய பின்னடைவு. அவருடைய வழிகாட்டல் இல்லாமல் நான் இந்த அளவுக்கு முன்னேறி இங்கு நிற்கிறேன் என்றால், அது அவரது வளர்ப்புதான். அவர் எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். எனது 11 வயதில் நான் எந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் எனக்கு சுதந்திரம் அளித்தார்.

கனவு  காண வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். அதுவும் குறுகிய கனவுகளைக் காணக் கூடாது என்றும் கூறுவார். பாதை கடினமாக இருக்கும். அதனால் துவண்டு போகக் கூடாது என்று எப்போதும் கூறிக் கொண்டே இருப்பார். என்னை ஒரு நல்ல மனிதனாக உருவாக்கினார் எனது தந்தை. அவர் இல்லாததது, இந்த நேரத்தில் என்னை மிகவும் வருத்தமடையச் செய்கிறது.

அடுத்து எனது தாய், என்னைப் போன்ற மிகவும் சுட்டித்தனமான குழந்தையை வளர்க்க அவர் அதிகம் சிரமப்பட்டார். எனக்காக அவர் ஏராளமான தியாகங்களை செய்துள்ளார். எனது ஆரோக்கியம், எனது நலனை மட்டுமே அவர் நினைத்து வாழ்ந்துள்ளார். உங்களது வாழ்த்துக்களும், தியாகமுமே என்னை இந்த அளவுக்குக் கொண்டு வந்துள்ளது என்று கூறினார் சச்சின்.

1991ஆம் ஆண்டு அஞ்சலியை திருமணம் செய்தது எனது வாழக்கையில் நடந்த மிக அருமையான விஷயம். அஞ்சலி எனது குடும்பத்தை அழகாக கவனித்துக் கொண்டார். நான் கிரிக்கெட்டை கவனித்தேன். அவர் எனது குடும்பத்தை, எனது அனைத்து சுமைகளையும் அவரே தாங்கிக் கொண்டார் என்று தழுதழுத்த குரலில் கூறினார். அப்போது அஞ்சலி அதைக் கேட்டு கண் கலங்கினார்.

நான் காயம் அடைந்து விளையாடாமல் இருந்த போதெல்லாம், என்னை அடிக்கடி தொடர்பு கொண்டும், என்னுடன் நேரத்தை செலவிட்டும், இதோடு கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விடாது என்று கூறி எனக்கு உற்சாகம் அளித்த நண்பர்களுக்கும் நன்றி.

ஆனந்த் மேத்தா.. எனது கிரிக்கெட் பயிற்சியாளர். அவர் தான் எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருந்தவர். இங்கு நான் நிற்க அவரே முக்கியக் காரணம். இவர்கள் இல்லாமல் என் வாழ்க்கை முழுமை அடைந்திருக்காது.

எனது கிரிக்கெட் வாழ்க்கை 11  வயதில் துவங்கியது. எனது சகோதரர் அர்ஜூன், சகோதரி சாரா எல்லாரும் எனக்கு பல வகையில் உறுதுணையாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் இருந்துள்ளனர்.

எனது சகோதரிதான், முதல் முறையாக எனக்கு கிரிக்கெட் பேட் வாங்கி பரிசளித்தார். அது என் வாழ்க்கையில் கிடைத்த மிகச் சிறந்த பரிசாக இன்று வரை கருதுகிறேன்.

கிரிக்கெட் வீரர்கள் ராகுல் டிராவிட், கும்ளே, சௌரவ், லஷ்மண் ஆகியோர் எனது குடும்பத்தினராகவே நான் கருதுகிறேன். அனைத்து பயிற்சியாளர்கள், எனது உடலை பிட்டாக வைத்துக் கொள்ள உதவிய உடற்பயிற்சியாளர், மருத்துவர்கள் என அனைவருக்கும் எனது நன்றிகள்.

இந்திய அணியில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு இந்தியாவுக்காக விளையாடும் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. அடுத்த தலைமுறையினருக்கும் இது கிடைக்கும். நாட்டுக்கு சேவையாற்ற உங்களுக்கு கிடைத்திருக்கும் அதிர்ஷ்டத்தை அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எனக்கு இது நாள் வரை துணையாக இருந்த அனைத்து மீடியாக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது பிள்ளைகளுக்காக இதுவரை நான் நேரம் செலவிட்டதே இல்லை. இதுவரை உங்களுக்கு எதை எல்லாம் செய்ய முடியாமல் போனதோ.. அதை எல்லாம் இனி உங்களுக்காக நான் செய்வேன். இனி எனது நேரம் முழுமையாக உங்களுக்காகவே செலவிடுவேன்.

எனது பேச்சு நீண்டு கொண்டிருக்கிறது. எனினும், இதுவே உங்களிடம் நான் கடைசியாக பேசுவது என்பதால் மன்னித்துக் கொள்ளுங்கள்..

எனது இதயத்தில் எப்போதும் கிரிக்கெட் நீங்கா இடம்பெற்றிருக்கும்.

இவை எல்லாவற்றையும் விட கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவும், உற்சாகமும் தான் என்னை இந்த அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது.

நீங்கள் எனக்காக விரதம் இருந்து இருக்கிறீர்கள், பிரார்த்தனை செய்திருக்கிறீர்கள். பல விஷயங்கள் கடந்துவிடும். ஆனால், உங்களைப் பற்றிய நினைவுகள் எப்போதும் என்னை விட்டு நீங்காது.. உங்களது சச்சின் சச்சின் என்ற வார்த்தைகள் என் காதுகளில் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும்.

(அந்த நேரத்தில் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அனைவரும் ஒரு சேர சச்சின் சச்சின் என்று கோஷமெழுப்பினர். அனைத்து வீரர்கள் மற்றும் ரசிகர்களின் கண்களிலும் கண்ணீர் தளும்பியது)

அந்த கோஷத்தின் மத்தியில் கண்ணீர் மல்க சச்சின் கூறினார்.... குட்பாய்...

Sunday, November 3, 2013

ICC Player Rankings T20 Rankings

Twenty20 Batsmen

ICC Player Rankings
RankNameCountryRating
ENG 842
NZ 818
IND 749
NZ 738
SL 731
AUS 729
AUS 728
IND 712
IND 705
AUS 702

 

Twenty 20 Bowlers

ICC Player Rankings
RankNameCountryRating
WI 817
PAK 721
PAK 689
SL 686
BAN 668
ENG 667
ENG 664
BAN 660
ZIM 659
SL 655

 

Twenty20 Allrounders

ICC Player Rankings
RankNameCountryRating
AUS 446
PAK 440
IND 363
BAN 350
PAK 304
WI 273
WI 253
WI 252
SL 247
ENG 204

ICC Player Rankings ODI rankings

ODI Batsmen

ICC Player Rankings
RankNameCountryRating
IND 857
SA 844
AUS 835
SL 829
SA 826
IND 780
ENG 754
SL 746
PAK 720
AUS 708

 ODI Bowlers

ICC Player Rankings
RankNameCountryRating
PAK 768
WI 733
IND 716
ENG 708
SL 699
ENG 696
SA 672
AUS 670
SA 667
PAK 666

ODI Allrounders

ICC Player Rankings
RankNameCountryRating
PAK 399
BAN 380
SL 371
AUS 370
IND 359
SL 344
PAK 315
WI 282
IRE 266
SA 256

ICC Player Rankings Test Matches

Test Batsmen

ICC Player Rankings
RankNameCountryRating
SA 909
SA 898
WI 880
SL 866
AUS 853
PAK 783
IND 777
SA 771
PAK 769
ENG 748


Test Bowlers

ICC Player Rankings
RankNameCountryRating
SA 903
SA 899
SL 831
PAK 824
AUS 782
AUS 760
ENG 760
IND 757
ENG 741
ENG 740

Test Allrounders

 

ICC Player Rankings
RankNameCountryRating
BAN 362
SA 332
IND 321
ENG 288
SA 283
ENG 280
AUS 247
NZ 247
WI 227
AUS 208

Saturday, November 2, 2013

கோப்பையை வெல்லப் போவது யார்? ஆஸ்திரேலியா ? இந்தியா ?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் வெற்றி பெற்று கோப்பையை இந்தியா கைப்பற்றுமா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது. ஆஸ்திரேலியா-இந்தியாவுக்கு இடையேயான 7 ஒருநாள் ஆட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இப்போது 2-2 என்ற சமநிலையை எட்டியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதால், கடைசி ஒருநாள் ஆட்டம் பைனலாக மாறியுள்ளது. தீபாவளி பண்டிகை தினத்தில் நடைபெற உள்ள 7-வது ஒருநாள் ஆட்டம் பெங்களூருவில் மதியம் 1.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

முன்னதாக, 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வந்த ஆஸ்திரேலிய அணியை, கடந்த ஆட்டத்தில் இந்திய அணி பின்னுக்குத் தள்ளியது. இந்திய அணியின் 2 வெற்றிகளும் 2-வதாக பேட்டிங் செய்து கிடைத்தவையாகும். பேட்டிங்கில் யுவராஜ், ரெய்னாவை தவிர மற்ற அனைவரும் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர்.

இத்தொடரில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஜான்சனிடம் இவர்கள் இருவரும் சிக்கித் தவிக்கின்றனர். கடைசி ஆட்டத்தில் ஓரளவுக்கு ரன்கள் சேர்த்து ரசிகர்களை அவர்கள் ஏமாற்ற மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் களமிறங்கிய அமித் மிஸ்ரா விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை. மாறாக 10 ஓவர்கள் வீசி 78 ரன்கள் விட்டுக் கொடுத்ததுதான் மிச்சம். புவனேஷ்வர் குமார், கடந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசினாலும் விக்கெட்டுகளைக் கைப்பற்ற திணறினார். ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை, கேப்டன் பெய்லி, வாட்சன், பிஃஞ்ச் என பலமான பேட்டிங் படையே உள்ளது. 

ஜான்சன் கேள்விக்குறி? 

முக்கிய வேகப் பந்துவீச்சாளரான ஜான்சன் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் பங்கேற்பது கேள்விக்குறிதான்.  இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாட உள்ளது. அத்தொடருக்கு ஜான்சனை தயார்படுத்த ஆஸ்திரேலிய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்காக அவர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அவருக்கு பதிலாக கோல்டர் நீல் பங்கேற்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாக உள்ளன.

மழைக்கு வாய்ப்பு: இந்த ஆட்டத்திலும் மழை இடையூறு இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. மழை பெய்ய 40 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இறுதி ஆட்டத்திலும் அதிரடி தொடரும்: கோலி

7-வது ஒருநாள் ஆட்டம் குறித்து இந்திய அணி வீரர் விராட் கோலி கூறியது:

சேஸ் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். நாங்கள் பல்வேறு சூழ்நிலைகளை ஆராய்ந்து நன்கு திட்டமிட்டு விளையாடி வருகிறோம். என்னை பொறுத்தவரை, எந்த பந்து வீச்சாளரின் பந்தை அடித்து ஆட வேண்டும் என்பதை நன்கு கணித்து, பின்பு ஆடுவேன்.

பயிற்சியின்போது நல்ல ஷாட்களை அடித்து பழகிக் கொள்வேன். அது, எனக்கு ஆட்டத்தின்போது நம்பிக்கை அளிக்கிறது. இந்தப் போட்டித் தொடரில் என்னுடைய ஆட்டம் திருப்தி அளிக்கும் விதமாக உள்ளதாக நினைக்கிறேன். கடைசி ஒருநாள் ஆட்டத்திலும் என் திறமையை வெளிப்படுத்துவேன். 

இருப்பினும், எந்த ஒரு வீரருக்கும் தனிப்பட்ட சாதனைகளை விட அணியின் வெற்றிதான் முக்கியமாக இருக்க வேண்டும். அதைத் தான் நானும் எதிர்நோக்கியுள்ளேன். இப்போது ஐசிசி அமல்படுத்தியுள்ள புதிய விதிகள் பந்துவீச்சாளர்களுக்கு மிகக் கடினமாக உள்ளன. இதனால், ரன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுகிறது. எனினும், இந்த விதிகளை ஐசிசி அறிவித்துள்ளதால் அவை குறித்து பேசுவது சரியல்ல.

முதலில் பேட் செய்தாலும் அல்லது இரண்டாவதாக பேட் செய்தாலும் ஓர் அணிக்கு நல்ல பார்ட்னர்ஷிப் அமைவது மிகவும் அவசியம். இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கான திட்டத்தை நாங்கள் வகுத்துள்ளோம். அவற்றை வெளிப்படுத்தி தொடரை வெல்வோம்.

சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறுவது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தித் தரும். அதன்மூலம், சச்சினுக்கு வெற்றியுடன் விடைபெறும் வாய்ப்பை நாங்கள் ஏற்படுத்தித் தருவோம் என்று கோலி தெரிவித்தார்.

Friday, September 27, 2013

குறுஞ்செய்தியால் குழம்பும் மொழியறிவு

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு துறைகளில் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம் பெற ஆய்வு மேற்கொண்டுள்ள ஐம்பது மாணவ - மாணவியர்களிடம் வார நாள்களையும், மாதங்களையும் ஆங்கிலத்தில் எழுதித்தரும்படி நான் கேட்டுக்கொண்டேன்.

இரண்டு மாணவர்கள் மட்டுமே சரியாக எழுதியிருந்தனர். அடிப்படையான ஒரு விஷயத்தில் இவர்கள் இவ்வளவு கவனக்குறைவாக இருந்தால் இவர்களது ஆய்வு எப்படி இருக்கும் என்று எண்ணினேன். நம்முடைய பிரதமரும், ஜனாதிபதியும் உயர்கல்வியின் தரம் குறைந்து வருவதைக் குறித்து கவலைப்பட்டு கருத்துகளை வெளியிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே நேரத்தில் பள்ளியில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவியர் சிலரிடம் வார நாள்களையும், மாதங்களையும் ஆங்கிலத்தில் எழுதிக் கேட்டேன். அவர்களில் பெரும்பாலோர் பிழையின்றி எழுதியிருந்தனர்.
ஆய்வாளர்கள் இவ்வாறு தவறாக எழுதியதன் காரணம் என்னவாக இருக்கும் என ஆராய்ந்தேன். இவர்களிடம் எழுதி வாங்கும்போது கவனிக்க முடிந்த விஷயம் ஒன்று உண்டு. இவர்கள் அனைவரிடமும் கைப்பேசி உள்ளது. மாணவர்களுக்காகவே பல்வேறு சலுகைகளையும் கைப்பேசி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இவர்களையும் கைப்பேசிகளையும் பிரிக்க முடியாத அளவு பின்னிப் பிணைந்து வாழ்கின்றனர். அதன் காரணமாகவே இவர்கள் இப்படி மாறிப்போயுள்ளதாக முடிவுக்கு வந்தேன்.

மாணவர்கள் அனைவரும் குறுஞ்செய்தியை விரைவாக டைப் செய்து அனுப்பும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். அப்படி குறுஞ்செய்தி அனுப்பும்போது பிழைபடவே டைப் செய்து அனுப்புவதை வழக்கமாக வைத்துக்கொண்டுள்ளனர். மொழிநடை, இலக்கணம், வார்த்தைகள் இவற்றைப் பற்றிய புரிதலோ, அக்கறையோ இல்லாமல் மனதில் தோன்றியதை அடித்து அனுப்பும் பழக்கத்தை இவர்கள் கொண்டுள்ளனர்.

இம்மாணவர்கள் தவறாக எழுதியுள்ளது குறித்து எந்த ஒரு வருத்தமும்படாமல், தவறாக எழுதுவதெல்லாம் ஒரு விஷயமா என்று கேள்விகளை வேறு முன்வைக்கின்றனர்.

குறுஞ்செய்தி அனுப்பும் மாணவர்கள் மொழிநடை குறித்துக் கவலைப்படுவதுமில்லை. பிழைகளைக் குறித்தும் அறிந்திருக்கவுமில்லை. இதன் காரணமாக தவறான ஒரு நடை தமிழகத்தில் மாணவர்களிடத்தில் பழக்கத்தில் வேரூன்றியுள்ளது.

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் குறுஞ்செய்தி அனுப்பும் பழக்கத்தைக் கொண்டிருப்பதால் ஆங்கிலத்தில் பிழைபட எழுதும் பழக்கத்திற்கு ஆட்பட்டு விட்டனர். இதிலிருந்து இவர்களை மீட்க வேண்டியது கல்வியாளர்களின் கடமையாக உள்ளது.

இந்த ஆய்வாளர்களே வருங்கால ஆசிரியர்கள் - பேராசிரியர்கள். இவர்கள் அனைவரும் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு வேலைக்குச் செல்ல ஆயத்தமாகி வருபவர்கள்.

இவ்வாறு பிழைபட பயிலும், பிழையாக எழுதுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் இந்த ஆய்வாளர்கள் ஆசிரியர்களாக மாறும்போது கல்வியின் தரம் இன்னும் குறைந்துவிடும் அபாயமும் உள்ளது. ஆகவே, இதனை ஆரம்பத்திலேயே தடுக்க வேணடிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

குறுஞ்செய்தி அனுப்ப வேண்டிய தேவை இப்போது இல்லை. ஏனெனில் கைப்பேசி நிறுவனங்கள் பேசுவதற்குக்கூட குறைந்த கட்டணங்களையே நிர்ணயித்துள்ளன. அனைவரையும் எளிதில் தொடர்புகொள்ளும் வகையில் தொலைத்தொடர்பு நம்மிடையே உள்ளது. மின்னஞ்சல் சர்வ சாதாரணமாக பழக்கத்தில் உள்ளது. அதில் இலக்கண முறைப்படி அனுப்ப பழகிக் கொள்வோம்.

ஆகவே, குறுஞ்செய்தி அனுப்பும் வழக்கத்தைப் படிப்படியாகக் குறைத்து, நாம் பின்பற்றும் பிரிட்டிஷ் ஆங்கிலத்தைப் பிழையின்றி, இலக்கண முறைப்படி எழுதப் பழகி நாமும் முன்னேறி நாட்டின் கல்வித்தரத்தையும் முன்னேற்றுவோம்.

அறிவியல் வளர்ந்து வரும் இன்றைய காலச்சூழலில் மொழித்தூய்மை பேணப்பட வேண்டும். 20 வருடங்களுக்கு மேலாக பேசிய எழுதிய வார்த்தைகளை தவறாக எழுதும் பழக்கத்தை இந்த குறுஞ்செய்தி கலாசாரம் கொண்டு வந்துவிட்டது.

இதிலிருந்து மாணவ சமுதாயத்தை மீட்டெடுத்து சரியான மொழிநடையில் எழுதும் பழக்கத்தை ஊக்குவித்து கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தல தோனியின் புதிய அவதாரம்

தோனியின் புதிய "ஹேர்-ஸ்டைல்' ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்திய அணி கேப்டன் தோனி, 32. "ஹெலிகாப்டர் ஷாட்' உட்பட பல புதிய முறைகளை பேட்டிங்கில் அறிமுகப்படுத்தினார். இங்கிலாந்து முன்னாள் கேப்டன் பெக்காம் போல "ஹேர் ஸ்டைலையும்' அடிக்கடி மாற்றுவார். கடந்த 2004ல் அறிமுகம் ஆன போது கழுத்து வரை கூந்தல் வைத்திருந்தார். இதனை அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷ்ரப் பாராட்டினார். பின் "கிராப்' வெட்டிய தோனி, 2011ல் உலக கோப்பை வென்ற போது, மொட்டை அடித்துக் கொண்டார். 

இவர் ஒவ்வொரு முறை ராஞ்சிக்கும் வரும் போது, இங்குள்ள கயா சலூனில் தான் முடி வெட்டுவார். அப்போது, நூற்றுக்கணக்கான ரசிகர்கள், கடைக்கு வெளியே கூட, இவர்களை கட்டுப்படுத்துவது, பெரும் சிரமமாகி விடும். 

கடந்த 2006ல் இங்கு இருந்த போலீஸ் அதிகாரி அகிலேஷ் குமார், " தயவு செய்து முடிவெட்ட செல்லும் போது, எங்களிடம் சொல்லுங்கள், அப்போது தான் பாதுகாப்பு தரமுடியும்,' என்றாராம்.

தற்போது, சாம்பியன்ஸ் லீக் தொடரின் முதல் போட்டியில், "மொஹாக்' பாணியில்(கீரிப்புள்ள தலை) இருபக்கம் தலைமுடியை எடுத்து விட்டு, நடுவில் மட்டும் நீளமாக முடி வைத்துள்ளார். 

தோனியின் பயிற்சியாளர்களில் ஒருவரான சஞ்சால் பட்டாச்சார்யா கூறுகையில்,"" தோனியை பள்ளி நாட்களில் இருந்தே கவனித்து வருகிறேன். அப்போதே, மற்றவர்களை விட வித்தியாசமாகத் தான் தலைமுடி வைத்திருப்பார். புதிய "மொஹாக்' முறை, தோனியின் நான்காவது "ஸ்டைல்' ஆக உள்ளது,'' என்றார்.

தல தோனி சூப்பர்: அதிவேக அரைசதம் விளாசினார்: சென்னை அணி அசத்தல் வெற்றி

சாம்பியன்ஸ் லீக் போட்டியில், கேப்டன் தோனியின் அதிவேக அரைசதம் கைகொடுக்க, சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. டேரன் சமியின் அரைசதம் வீணானது.

ராஞ்சியில் நேற்று இரவு நடந்த சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடருக்கான "பி' பிரிவு லீக் போட்டியில், இந்தியாவை சேர்ந்த சென்னை, ஐதராபாத் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற ஐதராபாத் கேப்டன் ஷிகர் தவான், "பீல்டிங்' தேர்வு செய்தார்.

ரெய்னா அபாரம்: சென்னை அணிக்கு முதல் ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்டைன் "வேகத்தில்' முரளி விஜய் "டக்-அவுட்' ஆனார். மைக்கேல் ஹசி (23) பெரிய அளவில் சோபிக்கவில்லை. அடுத்து வந்த பத்ரிநாத் (13) ஏமாற்றினார். பின் இணைந்த சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. பவுண்டரி அடித்து ரன் கணக்கை துவக்கிய ரெய்னா, 38வது பந்தில் அரைசதம் அடித்தார். நான்காவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த போது, ஸ்டைன் பந்தில் ரெய்னா (84 ரன், 57 பந்து, ஒரு சிக்சர், 9 பவுண்டரி) வெளியேறினார்.

தோனி அதிரடி: மறுமுனையில் அதிரடி காட்டிய தோனி, பெரேரா வீசிய 18வது ஓவரில் 5 சிக்சர் உட்பட 34 ரன்கள் எடுத்து, 16 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அசத்திய இவர், டேரன் சமி வீசிய கடைசி ஓவரில் இரண்டு சிக்சர் விளாசினார்.

சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. தோனி (63 ரன், 19 பந்து, 8 சிக்சர், ஒரு பவுண்டரி), டுவைன் பிராவோ (6) அவுட்டாகாமல் இருந்தனர். ஐதராபாத் சார்பில் ஸ்டைன், டுமினி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

நல்ல துவக்கம்: சவாலான இலக்கை விரட்டிய ஐதராபாத் அணிக்கு பார்த்திவ் படேல், கேப்டன் ஷிகர் தவான் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்த போது, பார்த்திவ் படேல் (38) "ரன்-அவுட்' ஆனார். அடுத்து வந்த டுமினி, ரெய்னா பந்தில் "டக்-அவுட்' ஆனார். பொறுப்பாக ஆடிய ஷிகர் தவான் (48), அஷ்வின் "சுழலில்' அரைசத வாய்ப்பை இழந்தார். டுவைன் பிராவோ "வேகத்தில்' திசாரா பெரேரா (12), ஆஷிஸ் ரெட்டி (3) நடையை கட்டினர்.

அபாரமாக ஆடிய டேரன் சமி, ரவிந்திர ஜடேஜா வீசிய 15வது ஓவரில் மூன்று சிக்சர் விளாசினார். இரண்டு முறை கண்டம் தப்பிய கரண் சர்மா (11), ஜாசன் ஹோல்டர் பந்தில் சிக்கினார். ஹோல்டர் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட சமி, 24வது பந்தில் அரைசதம் அடித்தார். இவர், 50 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

கடைசி ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டன. மோகித் சர்மா வீசிய 20வது ஓவரில், 11 ரன்கள் மட்டுமே கிடைத்தது. ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ஹனுமா விஹாரி (5), ஸ்டைன் (10) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை அணி சார்பில் ஹோல்டர், பிராவோ தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

ரெய்னா "500'

அபாரமாக ஆடிய சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா, 84 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இவர், சாம்பியன்ஸ் லீக் அரங்கில் 500 ரன்களை கடந்த மூன்றாவது வீரரானார். இதுவரை இவர், 16 போட்டியில் 4 அரைசதம் உட்பட 518 ரன்கள் எடுத்துள்ளார். முதலிரண்டு இடங்களில் டில்லி, நியூ சவுத் வேல்ஸ் அணிகளுக்காக விளையாடிய டேவிட் வார்னர் (13 போட்டி, 556 ரன்கள், 2 சதம், ஒரு அரைசதம்) மற்றும் மும்பை, டிரினிடாட் அணிகளுக்காக விளையாடிய போலார்டு (21 போட்டி, 521 ரன்கள், 3 அரைசதம்) உள்ளனர்.


16 பந்தில்

அதிரடியாக ஆடிய சென்னை அணி கேப்டன் தோனி, 16 பந்தில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக டிரினிடாட் அன்டு டுபாகோ அணியின் போலார்டு, 2009ல் ஐதராபாத்தில் நடந்த நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு எதிராக 18 பந்தில் அரைசதம் அடித்தார்.

இரண்டாவது முறை

மொத்தம் 202 ரன்கள் குவித்த சென்னை அணி, சாம்பியன்ஸ் லீக் அரங்கில், இரண்டாவது முறையாக 200 அல்லது அதற்கு மேல் ரன் எடுத்தது. முன்னதாக 2010ல் செஞ்சுரியனில் நடந்த வயம்பா அணிக்கு (200 ரன்கள்) எதிராக இந்த இலக்கை எட்டியது. தவிர இம்முறை, 200 அல்லது அதற்கு மேல் ரன் எடுத்த இரண்டாவது அணி என்ற பெருமை பெற்றது. முன்னதாக, ஒடாகோ வோல்ட்ஸ் அணி 242 ரன்கள் (எதிர்-பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்) எடுத்தது.

பீல்டிங் சொதப்பல்

நேற்று சென்னை அணியின் பீல்டிங் படுமோசமாக அமைந்தது. சுலப கேட்ச் வாய்ப்புகளை சுரேஷ் ரெய்னா, மைக்கேல் ஹசி, ஜாசன் ஹோல்டர், டுவைன் பிராவோ உள்ளிட்டோர் கோட்டைவிட்டனர்.

Wednesday, September 18, 2013

ஒருநாள் ரேங்கிங்: ஜடேஜா நம்பர்-1

ஒருநாள் பவுலர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

இங்கிலாந்து சென்ற ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது. இதை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நேற்று வெளியிட்டது. 

இதில் பேட்ஸ்மேன்களுக்கான் பட்டியலில், இந்திய வீரர் விராத் கோஹ்லி (819 புள்ளி) நான்காவது இடம் பிடித்தார். இந்திய கேப்டன் தோனி (741) தனது 7வது இடத்தை தக்கவைத்துக்கொண்டார். இவர்களை தவிர, மற்ற இந்திய வீரர் யாரும் "டாப்-10ல்' இடம் பெறவில்லை. இந்திய வீரர் ரெய்னா (654) 16வது இடத்தை பாகிஸ்தான் வீரர் உமர் அக்மலுடன் (654) பகிர்ந்து கொண்டுள்ளார். மற்றொரு இந்திய வீரர் ஷிகர் தவான் (628) 23வது இடம் பிடித்தார்.

தென் ஆப்ரிக்காவின் ஆம்லா (853), டிவிலியர்ஸ் (845), இலங்கையின் சங்ககரா (829) ஆகியோர் இப்பட்டியலில் முதல் மூன்று இடத்தில் உள்ளனர்.

பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (733), முதலிடத்தை வெஸ்ட் இண்டீசின் சுனில் நரைனுடன் (733) பகிர்ந்து கொண்டுள்ளார். மற்ற இந்திய வீரர்களான அஷ்வின் (621) 18வது இடத்திலும், புவனேஷ்வர் குமார் (608) 20 இடத்திலும் உள்ளனர். இவரை தவிர, இந்திய வீரர் அமித் மிஸ்ரா (570) 30 இடத்தில் உள்ளார். 

பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் (723), இங்கிலாந்தின் ஸ்டீவன் பின் (708) ஆகியோர் இப்பட்டியலில் 3வது, 4வது இடத்தை பிடித்தனர். 

சிறந்த "ஆல் ரவுண்டர்களுக்கான' பட்டியலில், இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜாவை (377) பின்னுக்கு தள்ளி, ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் (384) மூன்றாவது இடம் பிடித்தார். இப்பட்டியலில், பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் (438), வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் (387) ஆகியோர் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர்.

Monday, September 16, 2013

யுவராஜ் ராஜ்யம்: அசத்தல் சதம் விளாசினார் : இந்தியா ஏ அணி வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் "ஏ' அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை, இளம் இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது. நேற்று நடந்த முதல் போட்டியில், கேப்டன் யுவராஜ் சிங் சதம் அடித்து கைகொடுக்க, 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் "ஏ' அணி, மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்தது.

மழையால் ஆடுகளத்தில் ஏற்பட்ட ஈரப்பதம் காரணமாக போட்டி துவங்குவதில் இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. "டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பாவெல், "பீல்டிங்' தேர்வு செய்தார்.

மன்தீப் அரைசதம்:

இந்திய அணிக்கு உன்முக்த் சந்த் (1), ராபின் உத்தப்பா (23) நிலைக்கவில்லை. பின் இணைந்த மன்தீப் சிங், கேப்டன் யுவராஜ் சிங் ஜோடி பொறுப்பாக ஆடியது. மில்லர் பந்தில் மன்தீப் சிங் (67) போல்டானார்.

யுவராஜ் அபாரம்:

அடுத்து வந்த யூசுப் பதானுடன் ஜோடி சேர்ந்த யுவராஜ் சிங், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இவர், சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். மில்லர் வீசிய 35வது ஓவரில் மூன்று சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த இவர், "ஏ' பிரிவு போட்டியில் தனது 18வது சதத்தை பதிவு செய்தார். 89 பந்தில் 123 ரன்கள் (7 சிக்சர், 8 பவுண்டரி) எடுத்த யுவராஜ், பானர் பந்தில் வெளியேறினார்.

யூசுப் அதிரடி:

பின் யூசுப் பதான் தன்பங்கிற்கு அதிரடி காட்டினார். ஆஷ்லே நர்ஸ் வீசிய 37வது ஓவரில் இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரி அடித்த இவர், 27 பந்தில் அரைசதம் அடித்தார். பானர் வீசிய 42வது ஓவரில் மூன்று சிக்சர் விளாசிய இவர், அணியின் ஸ்கோரை வலுவாக்கினார். இந்திய "ஏ' அணி நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 312 ரன்கள் குவித்தது. யூசுப் பதான் (70 ரன்கள், 32 பந்து, 6 சிக்சர், 4 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார். 

டியோனரின் ஆறுதல்:

சவாலான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய பந்துவீச்சில் திணறியது. பானர் (16), கேப்டன் பாவெல் (17), கிர்க் எட்வர்ட்ஸ் (19) நிலைக்கவில்லை. யூசுப் பதான் "சுழலில்' பிளட்சர் (29) சிக்கினார். பொறுப்பாக ஆடிய டியோனரின் அரைசதம்(57) அடித்தார். 

நர்ஸ் அரைசதம்:

சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஆஷ்லே நர்ஸ்(57) அரைசதம் கடந்து ஆறுதல் தந்தார். வெஸ்ட் இண்டீஸ் "ஏ' அணி 39.1 ஓவரில் 235 ரன்களுக்கு "ஆல்-அவுட்டாகி' தோல்வி அடைந்தது. 

இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி பெங்களூருவில் நாளை நடக்கிறது.


SunRisers Hyderabad Practice Session




https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-frc3/1185528_525531307517335_638717742_n.jpg 

 

 
 

Sunday, September 15, 2013

Champions League Twenty20, 2013 2014 - Match Schedule

Tue Sep 17          


1st Match, Qualifying Group - Faisalabad Wolves v Otago
Punjab Cricket Association Stadium, Mohali, Chandigarh
 

Tue Sep 17          


2nd Match, Qualifying Group - Kandurata Maroons v Sunrisers Hyderabad
Punjab Cricket Association Stadium, Mohali, Chandigarh
 

Wed Sep 18          


3rd Match, Qualifying Group - Kandurata Maroons v Otago
Punjab Cricket Association Stadium, Mohali, Chandigarh
 

Wed Sep 18          


4th Match, Qualifying Group - Faisalabad Wolves v Sunrisers Hyderabad
Punjab Cricket Association Stadium, Mohali, Chandigarh
 

Fri Sep 20          


5th Match, Qualifying Group - Faisalabad Wolves v Kandurata Maroons
Punjab Cricket Association Stadium, Mohali, Chandigarh
 

Fri Sep 20          
6th Match, Qualifying Group - Otago v Sunrisers Hyderabad
Punjab Cricket Association Stadium, Mohali, Chandigarh
 

Sat Sep 21          


1st Match, Group A - Rajasthan Royals v Mumbai Indians
Sawai Mansingh Stadium, Jaipur


Sun Sep 22          

2nd Match, Group B - Brisbane Heat v Trinidad & Tobago
JSCA International Stadium Complex, Ranchi


Sun Sep 22          


3rd Match, Group B - Chennai Super Kings v Titans
JSCA International Stadium Complex, Ranchi


Mon Sep 23          


4th Match, Group A - Lions v Perth Scorchers
Sardar Patel Stadium, Motera, Ahmedabad


Mon Sep 23          


5th Match, Group A - Mumbai Indians v TBC
Sardar Patel Stadium, Motera, Ahmedabad


Tue Sep 24          


6th Match, Group B - Brisbane Heat v Titans
Punjab Cricket Association Stadium, Mohali, Chandigarh


Tue Sep 24          


7th Match, Group B - Trinidad & Tobago v TBC
Punjab Cricket Association Stadium, Mohali, Chandigarh


Wed Sep 25          


8th Match, Group A - Perth Scorchers v TBC
Sawai Mansingh Stadium, Jaipur


Wed Sep 25          
9th Match, Group A - Lions v Rajasthan Royals
Sawai Mansingh Stadium, Jaipur


Thu Sep 26          


10th Match, Group B - Chennai Super Kings v TBC
JSCA International Stadium Complex, Ranchi


Fri Sep 27          


11th Match, Group A - Lions v Mumbai Indians
Sardar Patel Stadium, Motera, Ahmedabad


Sat Sep 28          


12th Match, Group B - Titans v TBC
JSCA International Stadium Complex, Ranchi


Sat Sep 28          


13th Match, Group B - Brisbane Heat v Chennai Super Kings
JSCA International Stadium Complex, Ranchi


Sun Sep 29          


14th Match, Group A - Lions v TBC
Sawai Mansingh Stadium, Jaipur


Sun Sep 29          


15th Match, Group A - Rajasthan Royals v Perth Scorchers
Sawai Mansingh Stadium, Jaipur


Mon Sep 30          


16th Match, Group B - Titans v Trinidad & Tobago
Sardar Patel Stadium, Motera, Ahmedabad


Mon Sep 30          
17th Match, Group B - Brisbane Heat v TBC
Sardar Patel Stadium, Motera, Ahmedabad


Tue Oct 1          


18th Match, Group A - Rajasthan Royals v TBC
Sawai Mansingh Stadium, Jaipur


Wed Oct 2          

19th Match, Group A - Mumbai Indians v Perth Scorchers
Feroz Shah Kotla, Delhi


Wed Oct 2

20th Match, Group B - Chennai Super Kings v Trinidad & Tobago
Feroz Shah Kotla, Delhi


Fri Oct 4          

1st Semi-Final - TBC v TBC (A1 v B2)
Sawai Mansingh Stadium, Jaipur


Sat Oct 5          


2nd Semi-Final - TBC v TBC (A2 v B1)
Feroz Shah Kotla, Delhi


Sun Oct 6          


Final - TBC v TBC
Feroz Shah Kotla, Delhi

Dhawan to captain Sunrisers in CLT20

India opener Shikhar Dhawan has been named captain of the IPL side Sunrisers Hyderabad for the upcoming Champions League Twenty20. 

In the IPL this season, Sunrisers were initially led by Sri Lanka's Kumar Sangakkara but he was later replaced by Australia's Cameron White. While Sangakkara has chosen to play for Sri Lankan outfit Kandurata Maroons in the Champions League, White remains in the Sunrisers squad for the tournament.
"Having excelled in the Indian team over the recent past, Shikhar has dominated as a batsman and has been more than consistent," Tom Moody, the coach of the Sunrisers, said. "He is a complete package as a player and is considered a real team man. That's why we have decided to elevate him and make him our new captain." 

Dhawan heads into the three-week long tournament on the back of a series of consistent performances including a Man-of-the-Series display in the Champions Trophy where he scored a tournament-leading 363 runs, and a record-breaking 248 for the A team against South Africa A in Pretoria. 

"Shikhar is ready to take on this honour and has shown great leadership qualities in the past," Moody said. "His recent experiences on the international stage and now the captaincy role will only enhance his reputation as a top-grade cricketer." 

Sunrisers will begin their CLT20 campaign with their first qualifying match on Tuesday, incidentally against Kandurata. 

Shikhar Dhawan plays to the off side, Sunrisers Hyderabad v Mumbai Indians, IPL, Hyderabad, May 1, 2013

Shikhar Dhawan stunned all observers, and Australia, when he stroked his way to the fastest Test century by a debutant. That debut, in Mohali in 2012-13, came to Dhawan in his ninth year of first-class cricket after he had been written off by almost everybody, not least because India's opening combination had been fixed to the most prolific combination in their Test history: Virender Sehwag and Gautam Gambhir. 


Champions League Twenty20 / Trinidad & Tobago Squad

Denesh Ramdin
captain/keeper
Age: 28 years 170 days
Playing role: Wicketkeeper
Batting: Right-hand bat


Samuel Badree
Age: 32 years 174 days
Playing role: Bowler
Batting: Right-hand bat
Bowling: Legbreak


Adrian Barath
Age: 23 years 138 days
Playing role: Opening batsman
Batting: Right-hand bat
Bowling: Right-arm offbreak


Darren Bravo
Age: 24 years 205 days
Batting: Left-hand bat
Bowling: Right-arm medium-fast


Rayad Emrit
Age: 32 years 175 days
Playing role: Allrounder
Batting: Right-hand bat
Bowling: Right-arm medium-fast


Shannon Gabriel
Age: 25 years 124 days
Batting: Right-hand bat
Bowling: Right-arm fast-medium


Sherwin Ganga
Age: 31 years 198 days
Batting: Left-hand bat
Bowling: Right-arm offbreak


Evin Lewis
Age: 21 years 246 days
Playing role: Opening batsman
Batting: Left-hand bat


Jason Mohammed
Age: 26 years 341 days
Batting: Right-hand bat
Bowling: Right-arm offbreak


Sunil Narine
Age: 25 years 96 days
Batting: Left-hand bat
Bowling: Right-arm offbreak


Yannick Ottley
Age: 21 years 357 days
Batting: Right-hand bat
Bowling: Slow left-arm orthodox


Age: 17 years days
Batting: Left-hand bat


Ravi Rampaul
Age: 28 years 319 days
Batting: Left-hand bat
Bowling: Right-arm fast-medium


Lendl Simmons
Age: 28 years 217 days
Batting: Right-hand bat
Bowling: Right-arm medium-fast


Navin Stewart
Age: 30 years 78 days
Batting: