Blogger Widgets

Total Page visits

Wednesday, January 2, 2013

நீ நாட்டை ஆளப் பிறந்தவன்




இளைஞனே ! 

நீ வீட்டில் வாழப் பிறந்தவனல்ல 
நீ நாட்டை ஆளப் பிறந்தவன்.

நீ கற்கும் கல்வி முகவரி கொடுக்கும் 
நீ செய்யும் செயல் சரித்திரம் பதிக்கட்டும் 

நீ ஏட்டுக் கல்வியோடு நின்று விடாதே 
நீ அரசியல் அறிவும் தெரிந்து கொள் 

நீ மக்களையும் புரிந்து கொள் 
நீ உன்னை மலையென நம்பு 

நீ காண்பது உண்மையென நம்பிடாதே 
நீ கேட்பது எல்லாம் சத்தியவாக்கல்ல 

நீ கொடுத்தால் வள்ளல் என்று சொல்லும்  
நீ எடுத்தால் திருடன் என்று சொல்லும்  

நீ உழைத்தால் ஏமாளி என்று சொல்லும்  
நீ சிரித்தால் திமிரு என்று சொல்லும்  

நீ பசியென்றால் பாவம் என்று சொல்லும்  
நீ வெற்றி பெற்றால் தலைக்கனம் என்று சொல்லும்  

நீ தோல்வியுற்றால் 'இன்னும் வேண்டும் 'என்று சொல்லும்  
நீ அழுதால் நடிப்பு என்று சொல்லும்  

நீ ஓடினால் கேவலம் என்று சொல்லும்  
நீ எழுதினால் கிறுக்கல் என்று சொல்லும்  

நீ பாடினால் முட்டாள் என்று சொல்லும்  
நீ படித்தால் மடையன் என்று சொல்லும்  

நீ பேசினால் உளர்வதாய்ச்  சொல்லும்  
நீ வணங்கினால் வேஷம் என்று சொல்லும்  

நீ நிமிர்ந்தால் வீராப்பு என்று சொல்லும்  
நீ உதவினால் பைத்தியம் என்று சொல்லும்  

நீ பார்த்தால் குருடன் என்று சொல்லும்  
நீ நடந்தால் கொழுப்பு என்று சொல்லும்  

நீ தூங்கினால் சோம்பேறி என்று சொல்லும்  
நீ நேர்மையாய் இருந்தால் 'கூடாது' என்று சொல்லும்  

நீ உண்மை சொன்னால் அரிச்சந்திரன் என்று சொல்லும் 
நீ பொய் சொன்னால் தலைவன் என்று சொல்லும் 

நீ ஏமாற்றினால் 'கடவுள் இருக்கிறார்'என்று சொல்லும் 
நீ தவறு செய்தால் 'காலம் தண்டிக்கும் 'என்று சொல்லும் 


ஆக 

நீ எதைச் செய்தாலும் ஏதாவது ஒன்று சொல்லும் 


உன்னைச் சுற்றியிருப்பவர்கள் எதிர்மறை சொற்களால் (Negative thinking) அபிஷேகம் செய்யட்டும். அர்ச்சனை செய்யட்டும். நிந்தனை செய்யட்டும். அதனால் நீ துவண்டு விடாதே. எப்பொழுதும் நேர்மறை  (Positive Thinking) எண்ணங்களோடு வீர நடைபோடு. எத்தனை இடர்கள் வந்தாலும் அனைத்தையும் தகர்த்தெறிந்து துணிந்து செயல்பாடு. உனது நன்மை செயல்கள் மக்களுக்கு நல்வாழ்வு அளிக்கட்டும். ஏழைகள் நலம் பெறட்டும். பசி, வறுமை ஒழிக்கட்டும்.  வெற்றி உனதே! இப்போதே புறப்படு. 

from EASY HAPPY LIFE MAKER

புகையில்லா இந்தியா செய்வோம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXzhnVcyCWvbDrQmAwzjzuzJJFOqf-YGjUZiP9OIID39KAipPOrkEAUe-VtmM2v_YxKLa6yk-p9uqdsqyDqM9hSNpPoTk8g8KuduxnKHbsqOj7tktt0vBZuK93SZ6JUIDcLrPVH8yGtE-6/s1600/Rajinikanth_2010_-_still_113555_crop.jpg
புத்தாண்டையொட்டி புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட ரசிகர்களையும் உடல் உறுப்பு தானம் செய்தவர்களையும் ரஜினி சந்தித்து பேசினார். கோடம்பாக்கத்தில் உள்ள ராகேவந்திரா திருமண மண்டபத்தில் இச்சந்திப்பு நடந்தது.

கடந்த மாதம் 12-ந்தேதி தனது பிறந்த நாளையொட்டி ரசிகர்களை ரஜினி சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது, புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததால் தனது உடல் நலம் பாதித்தது என்றும் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ள ரசிகர்கள் அதனை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் சிகரெட் பழக்கத்தை கைவிட்டனர்.


சைதாப்பேட்டையில் சைதை ரவி தலைமையில் ரசிகர்கள் சிகரெட் பாக்கெட்டுகளை எரித்தனர். பொன்னேரி பகுதியில் பொன்னேரி சேகர் தலைமையில் ரசிகர்கள் சிகரெட் பழக்கத்தை கைவிட வற்புறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினார்கள்.

இதை தொடர்ந்து ரசிகர்களை நேற்று சந்தித்து புகை பழக்கத்தை விட்டதற்காக பாராட்டு தெரிவித்தார். அவருக்கு ரசிகர்கள் புத்தாண்டு வாழ்த்து கூறினர். ரஜினியிடம் ரசிகர்கள் கூறும்போது, தினமும் ஆறு பாக்கெட் சிகரெட் பிடிப்போம். உங்கள் அறிவுரையை ஏற்று அப்பழக்கத்தை விட்டுவிட்டோம். இதனால் தினமும் ரூ. 300 வரை மிச்சமாகிறது. குடும்பத்தினர் சந்தோஷப்படுகிறார்கள் என்றனர்.


இதற்கு ரஜினி மகிழ்ச்சி தெரிவித்தார். பின்னர் 20 ரசிகர்கள் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்து பத்திரங்களை ரஜினியிடம் வழங்கினார்கள். அதை அவர் பெற்றுக் கொண்டார்.

புத்தாண்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் மேலும் நூற்றுக்கணக்கான ரஜினி ரசிகர்கள் இன்று முதல் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டனர்.
 
 

உண்மையில் கொண்டாட வேண்டிய செய்திதான் இது. இன்னும் இருக்கும் அனைத்து பிரபலங்களும் சமூதாயத்தில் சில தீய பழக்கங்களை மக்களிடம் இருந்து அறவே ஒழிக்க முன்வரவேண்டும்.

ரஜினிகாந்த் அவர்களுக்கு தெரியும் புகைப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள். இவரே மரணத்தின் தருவாய்வரை சென்று வந்தவர். இவருடைய அறிவுரை என்பது அனுபவத்தினால் வந்தது. 


கோடிகோடியாய் பணம்பார்த்துக் கொண்டிருக்கும் ரஜினியே இந்தபழக்கத்தை விட்டுவிட்டார் என்றால் சாமானியர்களுக்கு இந்த பழக்கம் எதற்கு...

புகையில்லா இந்தியா செய்வோம்...!

from கவிதை வீதி...

Tuesday, January 1, 2013

பட்ஜெட் விலையில் சாம்சங் போன்



பட்ஜெட் விலையில், இரண்டு சிம் இயக்கத்தில் இயங்கும் சாம்சங் நிறுவன மொபைல் சாம்சங் இ 1207. இரண்டு அலைவரிசைகளில் இயங்கும் இந்த மொபைல் போன், 108x45x13.5 மிமீ என்ற அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

எடை 65 கிராம். பார் டைப் வடிவில் எண், எழுத்து கொண்ட வழக்கமான கீ போர்டுடன் உள்ளது. 

இதன் திரை 1.52 அங்குல அகலத்தில் வண்ணத்திரையாக உள்ளது. லவுட் ஸ்பீக்கர் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன. 

உள் நினைவகம் 8 எம்பி திறன் கொண்டுள்ளது. கேமரா தரப்படவில்லை. நெட்வொர்க் கிடைக்காது. எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். வசதி உண்டு. 800 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தரப்பட்டுள்ளது. 

ஒருமுறை சார்ஜ் செய்தால், 430 மணி நேரம் தாக்குப் பிடிக்கும். தொடர்ந்து 8 மணி நேரம் பேசலாம். இதன் அதிக பட்ச விலை ரூ. 1,280.

சாம்சங் இ 1282:

இரண்டு அலைவரிசையில், இரண்டு சிம் இயக்கத்தில் செயல்படும் சாம்சங் இ 1282 மொபைல் போனின் அதிக பட்ச விலை ரூ. 1,750. இதன் பரிமாணம் 109.2 x 45.5 x 14.5 மிமீ. இதன் எடை 74.5 கிராம். பார் டைப் வடிவில் எண், எழுத்து கொண்ட வழக்கமான கீ போர்டுடன் உள்ளது. 
இதன் திரை 1.7 அங்குல அகலத்தில் வண்ணத்திரையாக உள்ளது. 128x160 பிக்ஸெல் திறன் கொண்ட டிஸ்பிளே கிடைக்கிறது. லவுட் ஸ்பீக்கர் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன. 
இதன் ஸ்டோரேஜ் மெமரியை, மைக்ரோ எஸ்.டி.கார்ட் மூலம் 4 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம். இன்டர்னல் மெமரி இல்லை என்பதால், இதனையே மெமரியாகப் பயன்படுத்த வேண்டும். 
ஆனால், புளுடூத் வசதி தரப்பட்டுள்ளது. மைக்ரோ யு.எஸ்.பி. கார்ட் பயன்படுத்தலாம். எப்.எம். ரேடியோ, எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில் வசதிகள் கிடைக்கின்றன. ஆப்பரா மினி பிரவுசர் தரப்பட்டுள்ளது. 
பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களுக்கு இணைப்புநேரடியாகக் கிடைக்கிறது. 1,000 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தரப்பட்டுள்ளது. 
ஒருமுறை சார்ஜ் செய்தால், 660 மணி நேரம் தாக்குப் பிடிக்கும். தொடர்ந்து 12 மணி நேரம் பேசலாம்.

2013-ஆம் வருடத்தை வெற்றி வருடமாக்குவோம்.






‌இந்தப்படங்களுக்கு கருத்தோ, கவிதையோ, செய்தியோ, சொல்லதேவையில்லை என்று நினைக்கிறேன்....


ஒற்றுமையோடு இருப்போம்... இணைந்து செயல்படுவோம்
2013-ஆம் வருடத்தை  வெற்றி வருடமாக்குவோம்....