Blogger Widgets

Total Page visits

163743

Thursday, December 25, 2014

திறமையும் தகுதியும் நாம் என்றும் இடைவிடாது கூர் தீட்டி கொண்டே இருக்க வேண்டும்


அண்மையில் இணையத்தில் படித்த செய்தி, TCS நிறுவனம் வரலாறு காணாத வகையில் தன் ஊழியர்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டு உள்ளதாக தகவல் கசிந்து உள்ளது.



தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களை A ,B ,C , D மற்றும் E என்று தரம் பிரித்து வைத்து உள்ளது எனவும், A என்பது சிறந்த ஊழியர் என்றும் E என்பது போதிய அல்லது திறன் குறைந்த அல்லது திறனை வளர்த்து கொள்ள எந்த முயற்சியும் எடுக்காத ஊழியர் எனவும் வகைபடுத்தி வைத்து உள்ளதாக தகவல் கூரப்படுகிறது. 

அப்படி வகைபடுத்தி உள்ள ஊழியர்களில் கடைசி இரண்டு பிரிவில் உள்ள D மற்றும் E பிரிவு ஊழியர்களை, எந்த ஒரு பணியும் ஒதுக்க படாமல் காத்து இருப்பு பட்டியலில் இருக்கும் ஊழியர்களையும் விடுவித்துக்கொள்ள இருபதாக தகவல் கசிந்து உள்ளது. 

இந்த தகவல் மென்பொருள் ஊழியர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் மிக பெரிய சஞ்சலத்தை ஏற்படுத்தி உள்ளது. மென்பொருள் நிறுவனங்களில் TCS நிறுவனம் வேலை பாதுகாப்பு உள்ள நிறுவனம் என்ற எண்ணம் இது வரை இருந்து வந்தது என்பது குறிப்பிடதக்கது.

TCS நிறுவனம் வரும் காலகட்டத்தில் (2014-2015) 55000+ புதிய ஊழியர்களை வேலைக்கு தேர்ந்து எடுக்க போவதாகவும் அறிவித்து உள்ளது குறிப்பிடதக்கது.. 

திறமையும் தகுதியும் நாம் என்றும் இடைவிடாது கூர் தீட்டி கொண்டே இருக்க வேண்டும் என்பது நன்கு புலப்படுகிறது. நாளைய பொறியாளர்கள் இதை மனதில் கொண்டு சவால்களை சமாளித்து வாழ்கையில் சிகரத்தை தொட தன அறிவு கூர்மையை நாளும் வளர்த்து கொள்ள முயற்சி எடுப்பார்கள் என்று நம்பிக்கை கொள்வோம். 


No comments: