கலை பாடப்பிரிவு என்பது தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், தத்துவவியல் போன்ற பாடங்கள் மட்டுமே என மாணவர்கள் நினைக்கின்றனர்.
இதையும் தாண்டி 
பேஷன், சுற்றுலா, இன்டீரியர் டிசைன், வெளிநாட்டு மொழிகள், ஆர்க்கியாலஜி, 
கம்யூனிகேஷன் போன்ற பல படிப்புகள் உள்ளன. இவை ஹியுமானிட்டிஸ் படிப்புகள் 
என அழைக்கப்படுகிறது. தற்போது இப்படிப்புகள் மீது தற்போது மாணவர்களின் 
கவனம் திரும்பியுள்ளது.
பெரும்பாலான மாணவர்கள் பிளஸ் 2 படிப்பை முடித்த பின், 
இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை தேர்வு 
செய்கின்றனர். இதனால் இத்துறைகளில் அதிகளவில் போட்டி நிலவுகிறது. ஆனால் 
அதே நேரத்தில் "ஹியுமானிட்டிஸ்" படிப்புகளுக்கு போட்டிகளும் குறைவு; 
வேலைவாய்ப்பும் அதிகம்.
இப்படிப்புகள் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் கலாசார 
இடைவெளிக்கு பாலமாக விளங்குகின்றன. வேகமாக வளரும் டூரிஸம், பேஷன் மற்றும் 
மீடியா போன்ற படிப்புகள், மனிதவியல் மற்றும் வரலாறு போன்ற பாரம்பரியமிக்க
 படிப்புகளுடன் ஒப்பிடும் போது முற்றிலும் வேறுபடுகின்றன.
மதம் மற்றும் பண்பாடு தொடர்புடைய படிப்புகள் தற்போது 
பிரமலமடைந்துள்ளன. பல பெரு நிறுவனங்களில் ஆங்கிலம், ஜெர்மன், பிரஞ்ச், 
ஜாப்பனிஸ் போன்ற மொழிகளுக்கு, மொழிபெயர்ப்புத் துறையில் வேலை 
வாய்ப்புகள் இருப்பதால், இந்த மொழிகளைக் கற்பதில் மாணவர்களுக்கு ஆர்வம் 
பெருகியுள்ளது.
டூரிஸம், மீடியாவுக்கு எப்போதும் கிராக்கி அதிகம். இசை, 
நாடக, நடனப் பயிற்சி படிப்புகளும் கவனத்தில் கொள்ள வேண்டிய படிப்புகளாக 
உள்ளது. காலமாற்றத்தில் புதிய படிப்புகளை தேர்வு செய்வதன் மூலம் எதிர்கால 
வாழ்க்கை சிறப்பானதாக அமையும்.
"ஹியுமானிட்டிஸ்" படிப்புகள் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு மற்றும் கலைக் கல்லூரிகளில் வழங்கப்படுகின்றன.
 
No comments:
Post a Comment