Blogger Widgets

Total Page visits

Tuesday, August 5, 2014

நிறுவனங்கள் எதிர்பார்ப்பது இவைதான்!

திரும்பிய பக்கம் எல்லாம் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கான கலந்தாய்வு, தமிழகத்தில் ஒரு திருவிழாவைப் போல கொண்டாடப்படுவதை நாம் பார்க்க முடிகிறது.
இன்றைய நிலையில் தமிழகத்தில் மட்டும் 550க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் உள்ளனஆந்திரா மற்றும் தமிழகத்தில் தான் அதிகளவில் பொறியியல் கல்லூரிகள் உள்ளனஅதேசமயம்கவுன்சிலிங் நிறைவில் 9ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகவே இருக்கின்றனஇது எதிர்மறையான தோற்றத்தை ஏற்படுத்தவும் அதிக வாய்ப்பு உள்ளதுபொறியியல் கல்லூரிகளில் ஏராளமான மாணவர்கள் படித்து முடித்த பிறகுபடிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை என்பது ஒரு பெரிய குற்றச்சாட்டாக உள்ளது.
இந்த நிலையில்தொழில்நிறுவனங்களின் எதிர்ப்பார்ப்புகளை பொறியியல் கல்லூரிகள் பூர்த்தி செய்கின்றனவாஎன்பதே இன்றைய பிரதான கேள்வி.
பெரும்பாலான கல்லூரி விளம்பரங்களில் 100 சதவீத வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.மற்றொரு பக்கம் தொழில் நிறுவனங்களின் ஆய்வின்படி, 25 முதல் 30 சதவிதம் பொறியியல் பட்டதாரிகள் மட்டுமே வேலைக்கான திறன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதுஇந்த இரண்டிற்கும் ஏதோ இடைவெளி இருப்பதை உணர முடிகிறதுபடித்த படிப்பிற்கு சம்பந்தமே இல்லாத வேலை செய்வது என்பது சரியானஎம்பிளாயபிலிட்டி ஸ்டேன்டர்டு’ ஆக கருதமுடியாது.
கடந்த 10 ஆண்டுகளில் தொழில் நிறுவனங்களின் எதிர்ப்பார்ப்பில் ஏதாவது மாற்றம் இருக்கிறதாஎன்றால், ‘இல்லை’ என்பது தான் பதில்அதே எதிர்ப்பார்ப்புகள் தான் பொதுவாக அனைத்து துறைகளிலும் காணப்படுகின்றனஉற்பத்தி துறைக்கும்தகவல் தொழில்நுட்ப துறைக்குமான வேறுபாடு பார்த்தோமேயானால்அடிப்படை சாராம்சத்தில் எந்தவித வேறுபாடும் இல்லை.
பாசிட்டிவ் எனர்ஜி
எந்த ஒரு நிறுவனமும் நேர்காணலில் Attitudeக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனஎந்தளவுக்கு நிறுவனத்திற்கு பாசிட்டிவ்ஆக இருப்பார் என்பதை சில கேள்விகள் மூலம் சோதிப்பார்கள்உதாரணமாக,வேலைக்கான நேர்காணலில் வெளியூர்களில் வேலை செய்யத்தயாராஎன்ற கேட்கப்படலாம்அந்த நிறுவனத்திற்கு சென்னையில் தேவை இல்லாமல் இருக்கலாம்உண்மையில்பெங்களூருவில் ஆட்கள் தேவைப்படலாம்அப்போது நான் சென்னையில் மட்டும்தான் வேலை செய்வேன்’ என்று கூறும்பட்சத்தில்,அவர் தனக்கான வாய்ப்பை குறைத்துக்கொள்கிறார்அதேநபரிடம்வெளிநாடுகளில் வேலை செய்யத் தயாராஎன்றால்உடனடியாக, ‘தயார்’ என்று சொல்லக்கூடும்இதைத்தான்ஆங்கிலத்தில் குளோபலி பிளக்சிபில்லோக்கலி இம்மொபைல்’ என்று சொல்வார்கள்.
நிலைத்து நிற்பாரா?
ஒருவர் எத்தனை நாட்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வார் என்பதும் எதிர்பார்க்கப்படுகிறதுமுன்பு,பெரும்பாலானோர் ஓய்வு பெறும்வரை ஒரே நிறுவனத்தில் வேலை செய்தனர்அரசுத் துறைகளில் இந்தநிலை மிக அதிகம் என்றாலும்தனியார் துறையிலும் அதிகமாக காணப்பட்டதுகடந்த 10ஆண்டுகளுக்கு முந்தைய ஆய்வின்படிசராசரியாக முதல் ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறப்பட்டது.
அதே தற்போதைய ஆய்வின்படிஒருவர் முதல் ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை செய்வது பெரிய விஷயமாக இருக்கிறதுஎனவேகுறைந்த ஆண்டுகளே வேலை செய்வார் என்று தோன்றும் பட்சத்தில் அவரை தேர்வு செய்ய நிறுவனங்கள் யோசிக்கும்கிரிக்கெட்டில் ‘20-20’க்கும் டெஸ்ட் மேட்ச்க்கும் உள்ள வித்தியாசத்தை இங்கே உதாரணமாக கூறலாம். ‘டெஸ்ட் மேட்ச்’ போன்று நிரந்தரமாக நின்று வேலை செய்பவர்களையே இன்றைய நிறுவனங்கள் அதிகம் எதிர்பார்க்கின்றன.
தீர்வு காணும் திறன்
பொறியியலில் சிவில்மெக்கானிக்கல்.டி., .சி.., ..., என எந்த பிரிவை படித்தவராக இருந்தாலும்சிறந்த Problem Solving Skills’, ‘Logical and Analytical Thinking’ திறனை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றனநேர்முகத் தேர்வில் ஒரு தர்க்கத்தை கொடுத்துஅதை சரியாக பிரித்துமுன்னுரிமை அடிப்படையில் வரிசையாக அதற்கு தீர்வு அளிக்க முடிகிறதாஎன்பது பரிசோதிக்கப்படுகிறதுஎனவே இவற்றை மாணவர்களிடையே வளர்க்கும் வகையில் பள்ளிகல்லூரிகள் பயிற்சி அளிக்க வேண்டும்;மாணவர்களும் முயற்சி செய்ய வேண்டும்.
துறை சார்ந்த அறிவு
கல்லூரியில் எந்த பிரிவு படித்திருந்தாலும்அந்த துறையில் உங்களுக்கு ஆழ்ந்த அறிவு உள்ளதாஎன்பதை நிறுவனங்கள் எதிர்பார்க்கும்புரிதல் இல்லாமல் மனப்பாடம் செய்து முதல் மதிப்பெண் பெற பள்ளிக் கல்வியில் முடியும்ஆனால்கல்லூரியில் அதற்கான வாய்ப்புகள் குறைவுஅப்படியே தேர்வாகினாலும்,எந்த ஒரு வேலைக்கான நேர்காணலிலும்புத்தகத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவதில்லை.செயல்முறைத் திறன் அடிப்படையிலேயே உங்களுக்கு வேலை கிடைக்கும்.
குழுவாக செயல்பட முடியுமா?
மாணவர்களுக்கு குழுவாக செயல்பட சில கல்லூரிகள் மட்டுமே போதிய பயிற்சி அளிக்கின்றன. ‘மாணவிகளிடம் பேசக்கூடாது’ என்று கூறும் கல்லூரிகள் இன்றளவும் உள்ளனஆனால்பொதுவாக நிறுவனங்களில் இருபாலரும் இணைந்து ஒரு குழுவாக செயல்பட வேண்டியது அவசியம். ‘தனிமனிதாக வெற்றி பெற்றுவிட்டேன்ஆனால் குழு தோற்றுவிட்டது’ என்றாலும்உங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்காதுஎனவேகுழுவாக இணைந்து செயல்படும் திறன் உங்களிடம் உள்ளதா?அனைவரிடமும் சகஜமாக பழக முடிகிறதாஎன்பதை நிறுவனங்கள் தெளிவாக பரிசோதிக்கும்.
தொடர் கற்றல்
ஒரு மருத்துவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய அதே தொழில்நுட்பத்தை இன்றும் பயன்படுத்தி சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தால் அவர் ஒதுக்கப்படுவார்எந்த துறையாக இருந்தாலும் துறை சார்ந்த தொடர் கற்றல்நவீன அறிவு ஆகியவை அவசியம்இவையும் நேர்முகத் தேர்வில் பரிசோதிக்கப்படும்.
தகவல் தொடர்புத் திறன்
இன்றும் இந்திய மாணவர்கள் சந்திக்கும் மிகப் பெரிய சவால் கம்யுனிகேஷன் ஸ்கில்ஸ்’. அனைத்து திறன்களும் உங்களுக்கு இருந்தாலும்அவற்றை மற்றவருக்கு அழகாக வெளிப்படுத்த பேச்சுத் திறமை அவசியம்தகவல் தொடர்பில் ஆங்கிலத்திற்கு முக்கிய பங்கு உண்டு.

-சுஜித் குமார்மனிதவள மேம்பாட்டு ஆர்வலர்

No comments: