Blogger Widgets

Total Page visits

Thursday, October 8, 2015

எத்திக்கல் ஹேக்கிங் - படிப்பது தப்பில்லையே!

குறை கண்டு பிடிக்காமல் இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழணும் என்று பெற்றோர் சொல்லி வளர்ப்பது வழக்கம். ஆனால் ஆன்லைனில் பல சமூக வலைத்தளங்களில் இருக்கும் கோளாறுகளை, கண்டுபிடித்து  தருகிறார்  “ஆனந்த பிரகாஷ்”, இதனை வெற்றிகரமான ஒரு தொழிலாகவும் செய்து வருகிறார்.


குறுக்கு வழி வேண்டாம், நேர்மையான  வழி தான் சரி எல்லாம் பழைய லாஜிக்.



“களவும் கற்று மற” னு சொல்லியிருப்பது போல இன்று எப்படி எல்லாம்  இணையத்தை தவறாகப் பயன்படுத்தினால், பிரச்னை வரக்கூடும் என்று யோசித்து அதனை, முன்னாடியே  தடுக்கத் தான் ஆனந்த் போன்றவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.




முதன் முதலில்  வீட்டில் இணைய வசதி கிடைத்ததும்,  சில சாமர்த்தியமான வழிகளை பயன்படுத்தி செலவே இல்லாமல் இணையத்தை பயன்படுத்த கற்றுக் கொண்டார்.  (அடடே நமக்கும் சொல்லி கொடுக்கலாமே ! நெட்பேக் போட்டு கட்டுபடியாகல ) சில மாதங்களில் இந்த பிரச்னை சரி செய்யப்பட்டது, அப்போது தான் அவருக்கு புரிந்தது இணையத்தை எவ்வளவு பேர் தவறாக பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர் என்று.

என்ஜினியரிங்  படிப்பின்  போதும் காலேஜ் வட்டாரத்தில் இவர் மிக பிரபலம். நன்றாகப் படிப்பதனால் அல்ல, வை ஃபை கட்டுப்பாடு பிரச்சனைகளை தீர்த்து வைப்பதால். இப்படி ஆன்லைனில் வல்லவனாக இருந்தாலும், பாடங்களில் கவனம் செலுத்த வில்லை. கண்டிப்பாக கேம்பஸ் பிளேஸ்மெண்ட்டில் வேலை கிடைக்காது என்றாயிற்று. 


ஃபேஸ்புக்கில் இருக்கும் கோளாறுகளை கண்டுபிடிப்போருக்கு அந்த நிறுவனம் பரிசு அறிவித்தது. முதன் முதலாக இவர் கண்டுபிடித்தது ஆன்லைனில் இருப்பவர்களை கண்டுபிடிக்கும் யுக்தி . சேட் ஆஃப் செய்து வைத்திருந்தாலும் கண்டுபிடிக்க முடியும் என்பதை சுட்டி காட்டினார். 500 டாலர்கள் பரிசு தொகையாக பெற்றார். அன்று தொடங்கியது இந்த குறை காணும் படலம். 80 பக்கங்களை  ஃபேஸ்புக்கில் கண்டுபிடித்திருக்கிறார்.




தன்னிடம் உள்ள திறமையை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தி வருகிறார். கர்கான் நகர சைபர் க்ரைம் துறையுடன் இணைந்து பல ஆன்லைன் கிரிமினல்களை பிடிக்க உதவியுள்ளார்.



சமீபத்தில் பிரபல உணவகம் சார்ந்த ஆப் சொமேடோ வில் 62 மில்லியன் நபர்களின் கணக்குகள் பாதுகாப்பில்லாமல் இருப்பதை சுட்டி காட்டினார். ஆனால் இந்திய நிறுவனங்கள் பலவும் சைபர் பாதுகாப்பை தீவிரமாக எடுத்து கொள்வதில்லை.

ஹேக்கர்ஸ் அனைவரும் தவறான செயல்களுக்காக ஹேக் செய்வதில்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் பரிசு தொகையும் வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தி கொடுக்க தயாராக இருக்கும் போது, இந்தியா நிறுவனங்களான   'ஓலா' போன்றவை இவர்களை குற்றவாளியாகவே பார்க்கிறது.


`ஓலா` வில் இருக்கும் பெரும் பாதுகாப்பு பிரச்சனையை சுட்டி காட்டிய  ஷுபம் பரமஹம்சா எனும் இளைஞர்களுக்கு மிக கடுமையாகவே அந்த நிறுவனம் பதிலளித்திருந்தது.

கிரெடிட் கார்ட் விவரங்கள்,  வவுச்சர் எண்களும் மிக எளிமையாக பெற முடியும் என காண்பித்துள்ளனர். மூன்றே நிமிடங்களில் இதனை செய்து முடித்ததாக கூறி அந்த வீடியோவை பதிவு செய்தனர்.
ஹேக்கர் என்பதையே திருட்டு கும்பல் போல சித்தரிக்கும் சினிமாவிற்கும் இதனில் பங்கு உண்டு. த்திக்கல் ஹேக்கிங்  என்ற படிப்பே உண்டு என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உலகமே இணையத்தில் இயங்கும் காலத்தில் இது போன்ற படிப்புகளை தேர்ந்தெடுப்போருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


 ஐ.மா.கிருத்திகா
விகடனில் வெளியிடப்பட்ட செய்தி, நண்பர்கள் தெரிந்து கொள்ள பகிர்கிறேன்.  

No comments: