Blogger Widgets

Total Page visits

Sunday, June 30, 2013

CRYPTOGRAPHY AND NETWORK SECURITY QUESTION BANK



B.E CSE STUDENTS CAN DOWNLOAD IT USING THE LINK  CLICK HERE

International Conference on Computational Intelligence, Cyber Security and Computational Models

International Conference on Computational Intelligence, Cyber Security and Computational Models is a major conference to bring together researchers, engineers, developers and practitioners from academia and industry working in all areas of computational intelligence, cyber security and computational models. These research areas have witnessed an explosion of interest in recent years and are being successfully applied across an extraordinary range of problem domains.

This conference encomposes theory and applications, to provide design, analysis and modeling of the aforementioned key areas. The conference will also provide opportunities for the researchers to exchange innovative ideas and establish research relations worldwide.

Important Dates
Fest dates: 19 - 12 - 2013 to 21 - 12 - 2013
Last Dates for Registration: Submission of full paper: 30 - 06 – 2013
Notification: 31 - 07 - 2013
Camera Ready: 14 - 08 - 2013
Organized By :
PSG College of Technology
Conference Date :
19/12/2013
Conference Address :
PSG College of Technology
Coimbatore
Tamil Nadu
India
Conference City :
Coimbatore
Conference Contact :
Phone No: 0422 - 2572 177, 2572 477, 2580 455, 2578 455, 4344 777
Organization Website :

The International Conference on Advanced Computing & Communication Systems

The International Conference on Advanced Computing & Communication Systems (ICACCS 2013) addresses the rapid strides and technological advancements currently witnessed in the fields of Computer Science, Information Technology, Electrical, Electronics and Communication Engineering. The conference aspires to exhibit the technical excellence of budding technocrats, research scholars, representatives from the academia and industry. This conference aims to bring together the best of globally renowned research professionals and explore the interface between the industry and real time environment with state-of-the-art techniques.

Events
Pre Conference Workshop : Android/Ethical Hacking

Important Dates
Fest Date: 19 - 12 - 2013 to 21 - 12 - 2013
Last Dates for Registration: Abstract Submission: 01 - 07 - 2013
Notification of Acceptance: 10 - 08 - 2013
Final paper submission: 10 - 09 - 2013
Organized By :
Sri Eshwar College Of Engineering
Conference Date :
19/12/2013
Conference Address :
Sri Eshwar College Of Engineering
Coimbatore
Tamil Nadu
India
Conference City :Coimbatore
Conference Contact :
Name: Selvan.C,
Phone No: 88833 77444
Organization Website : 

Call For Papers, RICIE - 2013,Thirumalai Engineering College,Kanchipuram

RICIE - 2013, Computers are a boon today in every field of engineering. The most promising research directions in any area of study are implemented by computers. Consistent themes emerge from this conference. The aim of the conference is to provide an opportunity for experts from academic Institutions and Industries to discuss and share their experiences in the field of Information Technology.

Call For PapersThe technical sessions of the conference will consist of invited talks and original contributory papers reporting theoretical and experimental research, development, design, testing and measurement work. The topics include but not limited to
Artificial Intelligence
Data mining and Warehousing
Advanced Database and Information Retrival
Ontology and Semantic Web
Bioinformatics and Biometrics
Image Processing & Pattern recognition
Computer Networks and Security
Mobile pervasive Computing
Web applications
Embedded and Real Time systems
Grid & Distributed Computing
Cloud Computing

Also emerging research ideas in Engineering Science.

Important Dates
Fest Date: 30 - 08 – 2013
First announcement : 01 - 07 - 2013
Receipt of contributed papers : 01 - 08 - 2013
Intimation of accepted papers : 15 - 08 - 2013
Receipt of camera ready papers : 20 - 08 - 2013
Deadline for registration : 30 - 08 - 2013

Organized By :
Thirumalai Engineering College
Conference Date :
30/08/2013
Conference Address :
Thirumalai Engineering College
Kilambi
Kanchipuram(dt)
Tamilnadu- 631 551
India
Conference City :
Kanchipuram
Conference Contact :
name: B.Prasanalakshmi
Organization Website :

மாணவர்களிடையே ஆர்வம் குறைந்த ஏரோநாட்டிக்கல் படிப்பு

பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இக்கலந்தாய்வு ஜூன் 21ம் தேதி துவங்கி ஜூலை 30ம் தேதி வரை   நடைபெறுகிறது. 

  

இக்கலந்தாய்வில் ஜூன் 28ம் தேதி நிலவரப்படி, பெரும்பாலான மாணவர்கள் இசிஇ மற்றும் மெக்கானிக்கல் பிரிவை தேர்ந்தெடுத்துள்ளனர். ஏரோநாட்டிக்கல் படிப்பில் 238 பேர் மட்டுமே தேர்வு செய்துள்ளனர். எனவே இப்படிப்பில் மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FACULTY WANTED Dr. Mahalingam College of Engineering and Technology

PROFESSORS / ASSOCIATE PROFESSORS / ASST. PROFESSORS
for
    * Mech * Auto * Civil * ECE * EEE * IT * CSE * ICE * EIE * MCA
* Mathematics * English * Physics * Chemistry

* Eligibility : M.E. / Ph.D. in relevant field.
* Salary as per 6th pay commission norms.
* Candidates with high experience and highly qualified will be considered for Higher Salary.
* Sponsorship for part-time Ph.D.,
* Candidates from Industry are also preferred.
* Higher starting pay for deserving candidates.
* Bus Facilities from coimbatore and nearby towns.
* Staff Quarters near campus.
* Retired Professors are also welcome.
 
 

Saturday, June 29, 2013

Anna University 2nd sem,4th sem,6th sem Results May/June 2013

Anna University 2nd sem,4th sem,6th sem Results May/June 2013
 
Anna university Conducted the II,IV,VI,VIII Semester Examination for B.E/B.Tech Students on May/June 2013. Anna University was Published the 8th Semester Results last week.
Anna University
 
 Now the Second and Third year Students are waiting for 4th and 6th Semester Examination Results. Anna University Controller of Examinations(COE) Planed to Release Results on July 2nd or 3rd Week. Students Keep Watching the university official website. Students can get the Results and Grade Details from given websites below.

Anna University 2nd,4th,6th Sem Results May/June 2013:

Official Website : www.annauniv.edu
Official Website : http://coe1.annauniv.edu/

Thursday, June 27, 2013

PGP Group of Colleges wanted Professors/ Associate Professors/Assistant Professors

PGP Educational institutions founded by Dr. Palani G. Periasamy, M.A., M.A., Ph.D. is a dream that has come true these institutions owe their origin to the munificence and Philanthropic motives of the founder to serve the social needs, to uplift the living standards of villagers by imparting higher education, adhering not only to the national but also to international standards and to lead a disciplined life.

Job Position: Professors/ Associate Professors/Assistant Professors

Departments:

For Engineering College

  • Electronics and communication Engineering
  • Computer Science and Engineering
  • Electrical and Electrical Engineering
  • Electronics and Instrumentation Engineering
  • Mechanical Engineering
  • Civil Engineering
  • Maths
  • English
For Arts and Science College
  • English 
  • Maths
  • Statistics
  • Electronics
  • Physics
  • Computer Science
For Polytechnic college
  • Mechanical
  • Computer Science and Engineering
  • Maths
  • Physics
Qualification: M.E/M.A/M.Sc/M.Ed/M.Phil/Ph.D

Candidate Profile :
  • Candidate should completed their PG /Ph.D in relavent discipline
  • Candidate should have Good Communication Skill
  • Commitment towards work
  • Candidate should have good soft skills
Interview Process
  • All the Candidate must Perform 5-10 Minutes Board Presentation
  • Personal Interview
Job Location: Namakkal

Last Date:  With in 7 days

Scale Of Pay: As per norms

Apply Mode: On-line/Off-line

To View Advertisement : Clickhere

Website : Click here

Send your resume along with scanned  copies of relevant documents and photographs to the following  Email-id or Postal Address (Mention the post on the cover of envelope)

Email-id : president@pgpews.com

Postal Address:
The President,
PGP Educational and Welfare Society
Namakkal-637207

For more details Contact at  : +91 4286 267592

தேர்வுக்கு படித்தல் - ஒரு திட்டமிட்ட கலை

மூன்று மணி நேரம்தான். அதற்குள் கேட்பவற்றை சிறப்பாக எழுதி முடித்துவிட வேண்டும். புத்தகத்தில் உள்ளதையே எழுத வேண்டும். முழு மதிப்பெண்ணை எடுத்தால்தான், நினைத்த மேற்படிப்பை படிக்க முடியும்.

இந்த கல்விமுறையால், மாணவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தங்களுக்கு அளவேயில்லை. வெறுமனே அரசு தேர்வுகளுக்கு தயாராகும் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மன அழுத்தம் ஏற்படுவதில்லை. கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு படிப்பவர்கள், தொலைநிலைக் கல்வி முறையில் படிப்பவர்கள் உள்பட, அனைத்து தரப்பாருக்குமே, படிப்பு தொடர்பான மன அழுத்தங்கள் உண்டு.

எனவே, இங்கே படிப்பது என்பதுதான் முக்கிய அம்சம். அது பள்ளியா, கல்லூரியா, தொலைநிலைக் கல்வியா அல்லது போட்டித் தேர்வுக்கு படிப்பதா என்பது விஷயமல்ல. தேர்வுக்கு படிக்கும் டென்ஷனிலிருந்து விடுபடுவதற்கு பல மாணவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

இக்கட்டுரை, சிறப்பான முறையில் எப்படியெல்லாம் படிக்கலாம் என்று அலசுகிறது.

பொருத்தமான நேரம்

படிப்பதற்கென்று, இதுதான் பொருத்தமான நேரம் என்பதெல்லாம் இல்லை. நமக்கு எந்த நேரம் வசதியாகவும், உற்சாகமாகவும் படுகிறதோ, அந்த நேரத்தையே, படிப்பதற்கு தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பொதுவாக, இரவு 10.30 மணிக்குமேல் உலகம் அமைதியாக இருக்கும். சிலருக்கு அந்த நேரம் மிகவும் பிடிக்கும்.

சிலருக்கு அதிகாலை 3 மணி அல்லது 4 மணிக்கு எழுந்து படிப்பது பிடிக்கும். சிலருக்கு, நண்பகல் வேளையில் படிப்பது பிடிக்கும். எனவே, இது அவரவர் உடல்நிலையையும், விருப்பத்தையும் பொறுத்தது. இதுதான் சிறந்த நேரம் என்றெல்லாம் எதுவும் இல்லை.

ஆரம்பத்திலிருந்தே படிக்கத் தொடங்குதல்

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, தினந்தோறும் தங்களின் பாடங்கள் வகுப்பறைகளில் அறிமுகப்படுத்தப்படுவதால், அவர்களுக்கு பெரியளவில் பிரச்சினையில்லை. ஆனால், தொலைநிலைக் கல்வி முறையில் படிப்பவர்கள், தேர்வு நெருங்கும் நேரம்வரை அலட்சியமாக விட்டுவிடுவார்கள். தங்களின் புத்தகங்களையே தொட மாட்டார்கள். தேர்வுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன எனும் நிலை வரும்போதுதான், அவர்களின் பலர் படிக்கவே தொடங்குகின்றனர்.

இதனால், பலர், மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். தொலைநிலைத் தேர்வை வெறுமனே நிறைவுசெய்ய வேண்டும் என்று எழுதுகிறவர்களைவிட, அதில் அதிக மதிப்பெண்கள் பெற்று மேல்நிலைப் படிப்பிற்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதிக மனஅழுத்தம் ஏற்படுகிறது. எனவே, ஆரம்பத்திலிருந்தே வழங்கப்பட்ட பாடப்புத்தகங்களை படிக்கத் தொடங்கிவிட வேண்டும். அப்போதுதான் இறுதி நேரத்தில் திருப்புதலை மேற்கொண்டு, சிறப்பாக எழுதி, அதிக மதிப்பெண்களைப் பெற முடியும்.

போட்டித் தேர்வுகளைப் பொறுத்தவரை சொல்லவே வேண்டாம். ஆரம்பம் முதலே கடினமாக படித்தால் மட்டுமே, அவற்றில் வெற்றிபெற முடியும்.

திட்டம் வகுத்தல்

என்னதான் கடினமாக உழைத்தாலும், திட்டமிட்டு உழைப்பவனே வெற்றியடைவான் என்பது பிரபலமான அறிவுரை மொழி. அதற்கேற்ப, என்னதான் அதிகநேரம் படித்தாலும், திட்டமிட்டு, தெளிவான புரிதலுடன் படித்தால்தான் பயன் கிடைக்கும். இந்த நாளுக்குள் இந்தப் பாடத்தை முடித்துவிட வேண்டும் மற்றும் இதை இத்தனைமுறை திரும்ப திரும்ப படிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.

இல்லையெனில், எதற்கு எதைப் படித்தோம் என்று குழம்பி, தேர்வை எழுதுகையில், பலவற்றை மறந்து, சொதப்பி விடுவோம். எனவே, திட்டமிட்டு சிறப்பாக படித்துக்கொள்ள வேண்டும்.

முக்கியமானவற்றை குறிப்பிடல்

படிக்கும்போது முக்கியமான பாயின்டுகள் என்று தோன்றுபவைகளை பென்சிலின் மூலம் அடிக்கோடிட்டுக் கொண்டால், அவற்றை திரும்ப படிக்கும்போது எளிமையாக இருக்கும். மேலும், ஆங்கிலம் போன்ற வேற்றுமொழிகளில் பாடங்களைப் படிக்கையில், பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் இருக்கும். எனவே, அதற்கான அர்த்தங்களை, அந்தந்த பக்கங்களிலேயே எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம், நன்றாக புரிந்து படிக்க முடியும்.

போதுமான இடைவெளி

படிக்கையில், தொடர்ந்து பல மணிநேரங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து படிக்கையில், சோர்வு ஏற்படுவதை தவிர்ப்பது கடினம். எனவே, தேவைப்படும் நேரத்தில், சிறிய சிறிய இடைவெளிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து உட்கார்ந்தே படித்தால், சிறிதுநேரம் நடந்துகொண்டு படிக்கலாம். சிறிதுநேரம் கீழே அமர்ந்துகொண்டோ, எழுத்து மேசை பயன்படுத்தியோ அல்லது மேசை பயன்படுத்தியோ, இவ்வாறு மாறி மாறி செயல்பட்டு, நமது சோர்வை விரட்டலாம்.

வழக்கமாக படுக்கும் கட்டிலின் மீது, இரவில் அமர்ந்து படிப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், பலருக்கு, இரவில் அதன்மீது அமர்ந்து படிக்கையில், விரைவில் தூக்க உணர்வு ஏற்படும்.

எவ்வளவு மதிப்பெண்?

தேர்வுக்கு படிக்கும்போதே, குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் எடுத்தால்போதும், 60 எடுத்தால்போதும் அல்லது 80 எடுத்தால்போதும் என்று நினைத்துப் படிப்பது பெரும் தவறு.

முடிந்தவரை, அனைத்து விஷயங்களையும் படிக்க வேண்டும். முழு மதிப்பெண்களுக்கு குறிவைத்து எழுத வேண்டும். அதேசமயம், Objective type தேர்வுகளில் நெகடிவ் மதிப்பெண் உள்ள தேர்வுகளை எழுதுகையில் கவனமாக செயல்பட வேண்டும். மற்றபடி, இதர விரிவான எழுத்துத் தேர்வுகளில், முழு மதிப்பெண்களுக்கும் எழுத வேண்டும்.

அடுத்தவரை பின்பற்ற முயல வேண்டாம்

உங்களின் நண்பர் படிக்கும் முறை உங்களுக்கு ஒத்துவரலாம் அல்லது ஒத்துவராமல் போகலாம். உங்களின் நண்பர் அதிக மதிப்பெண்களைப் பெறுபவராகவும் இருக்கலாம். ஆனால், அதற்காக அவரையேப் பின்பற்ற வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. உங்களுக்கு ஒத்துவராத முறையினால், உங்கள் படித்தல் செயல்பாட்டில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படவும் வாய்ப்புண்டு.

எனவே, எந்தமுறையில் படித்தால் உங்களுக்கு விரைவில் சோர்வு ஏற்படாதோ, எளிதில் கிரகிக்க முடியுமோ, அதிகளவு படிக்க முடியுமோ, அந்த முறையையே பின்பற்றி, வெற்றிபெற முயற்சிக்க வேண்டும்..
 

Tuesday, June 25, 2013

Suki Sivam - வாழ்ந்து பார்க்கலாம் வா

தீயா வேலை செய்யணும் குமாரு விமர்சனம்


சமீபத்தில் வெளிவந்த "கலகலப்பு" படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் சுந்தர்.சியும், யு.டி.வி மோஷன் பிக்சர்ஸீம் உடனடியாக இணைந்து உருவாக்கியிருக்கும் படம் தான் "தீயா வேலை செய்யணும் குமாரு..."

கதைப்படி ஹீரோ சித்தார்த்தின் குடும்பம், பாட்டன், பூட்டன் காலத்திலிருந்தே பரம்பரை பரம்பரையாக காதல் திருமணம் செய்து கொண்டு புரட்சி பண்ணி வரும் குடும்பம். சித்தார்த்தின் அக்காக்கள் இருவரும் கூட காதல் திருமணம் புரிந்தவர்கள் தான். ஆனால் ஐ.டி. கம்பெனியில் கைநிறைய சம்பளம் வாங்கும் சித்தார்த்துக்கு மட்டும் காதல், எட்டிக்காயாக கசக்கிறது. காரணம் சின்ன வயதிலும், பள்ளி கல்லூரி பருவங்களிலும் அவர் சக மாணவிகளிடம் வாங்கிய லவ்-பல்புகள் தான்! இந்நிலையில் தம்பிக்கு ஒரு லவ் மேரேஜை செய்து பார்த்துவிட வேண்டும் எனும் அக்காக்களின் பேராசையாலும், அத்தான்களின் ஒத்தாசையாலும், தன் அலுவலகத்திற்கு புதிதாக பேரழகியாக வந்து சேரும் சஞ்சனா எனும் ஹன்சிகா மோத்வானியை காதலியாக அடையத்துடிக்கிறார் குமார் எனும் சித்தார்த்! அதற்காக காசுக்கு காதல் டிப்ஸ்களை வாரி வழங்கி பலரது காதல் கைகூட காரணமாக இருக்கும் மோக்கியா சந்தானத்தின் உதவியை நாடுகிறார் சித்தார்த்!

கண்டபடி காசை வாங்கிக் கொண்டு சித்தார்த்தை, காதலில் தீயா வேலை செய்ய சொல்கிறார் சந்தானம்... சந்தானத்தின் ஐடியாபடி சித்தார்த் பண்ணும் காதல் கலாட்டாக்களும், அதற்கு ஹன்சிகா அசைந்து கொடுத்தாரா? இல்லையா? என்பதுடன், இன்னும் சில கலர்புல் திருப்பங்களை கலந்து கட்டி தந்திருப்பதும் தான் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!

நாயகர் சித்தார்த், ஆரம்பத்தில் அசமந்தமாக காத‌லில் பிடிப்பில்லாமல் கொஞ்சம் ‌சோகமே உருவாக திரிவதும், பின் சந்தானத்தின் ஐடியாபடி லவ்வர் பாயாக மாறி ஹன்சிகாவை சுற்றி சுற்றி வந்து காதலில் கலக்குவதும், தன் காதலுக்கு வில்லனாக வரும் கணேஷ் வெங்கட்ராமை வெறும் வதந்தி மூலம் கட்டம் கட்டி தூக்குவதுமாக செம காதல் கலாட்டாக்கள் புரிந்திருக்கிறார். சித்தார்த்திற்குள் இப்படி தீயா வேலை செய்யும் ஒரு குமாரா.?! எனும் ஆச்சர்யத்தை கிளப்புகிறார் மனிதர்!!

நாயகி ஹன்சிகா, முந்தைய படங்களைக் காட்டிலும் நிறையவே ஸ்லிம் ஆகி செம செக்ஸி லுக்கில் சித்தார்த்தை மட்டுமல்ல, படம் பார்க்கும் ரசிகர்களையும் காதலிக்க தூண்டுவது மாதிரி நடித்திருப்பது "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது!

சித்தார்த், ஹன்சிகா இருவரையும் காட்டிலும் காசுக்கு, காதலுக்கு உதவும் கேரக்டரில் காமெடியனாக வரும் மோக்கியா எனும் சந்தானம் தான் இப்படத்தின் ஹீரோ, ஹீரோயின், வில்லன், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் எனும் அளவிற்கு எல்லோரது பாத்திரத்திலும் புகுந்து புறப்பட்டு கலாய்த்திருக்கிறார். கணேஷ் வெங்கட்ராமை பார்த்து,  "அது யாருடா அது செல்வராகவன் பட செகண்ட் ஹீரோ மாதிரி செம அழகா இருப்பது..", "ஆர்யாவுக்கு 6 லட்சம் ரூபாய்க்கு காதல் டிப்ஸ் தந்தவன் நான்...." என்பதில் தொடங்கி சித்தார்த்தின் காதலுக்கு அவரது அக்கா-தங்கை, அத்தான்கள் என அனைவரும் உதவுவதை பார்த்து, "இது குடும்பம் அல்ல விக்ரமன் படம்..." என்று கமெண்ட் அடிப்பது வரை சந்தானத்தின் ‌ஒவ்வொரு டயலாக்களும் தியேட்டரே சிரிப்பிலும், விசில் சப்தத்திலும் அதிர்கிறது! பேஷ், பேஷ்!!

செகண்ட் ஹீரோ கணேஷ் வெங்கட்ராம், மொட்டை பாஸ்கி, எப்.எம்.பாலாஜி, டீம் லீடர் விச்சு, சித்ராலட்சுமணன், டெல்லி கணேஷ், ஸ்ரீரஞ்சனி, ஜான் விஜய் உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

குஷ்பு சுந்தரின் உடையலங்காரம், கோபி அமர்நாத்தின் அழகிய ஒளிப்பதிவு, சத்யாவின் இனிய இசை எல்லாம் சேர்ந்து, சுந்தர்.சி.யின் எழுத்து இயக்கத்தில், "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தை "தியேட்டரில் போய் பார்க்கணும் ரசிகரு..." எனும் ஆவலை ஏ, பி, சி எல்லா சென்டரிலும் ஏற்படுத்தி விடும் என்றால் மிகையல்ல!

மொத்தத்தில், "தீயா வேலை செய்யணும் குமாரு" - "செம திருப்திப்படுத்தும் எல்லோரையும் பாரு"

ராஞ்சனா (இந்தி) விமர்சனம்


லெதர் ஜாக்கெட் அணிந்து, கிடாருடன் ரயிலிலிருந்து இறங்கி, காதல் வசனங்கள் பேசி,  கதாநாயகியை கவர்ந்து செல்லும் கதாநாயகன் தான் வழக்கமான பாலிவுட் காதல் படங்களின் ஹீரோ. அமைதியாக அல்லது அமர்க்களமாக, சுட்டியாக அல்லது சாந்தமாக சித்தரிக்கப்பட்டவர்கள் தான் இந்தக் காதல் படங்களின் கதாநாயகிகள். ‘ மாடர்ன் டிரஸ் அணிந்து உலக நாடுகள் சுற்றி பாட்டுப் பாடினால் தான் அது காதல் படம் ‘ என்று பாலிவுட்டில் வரையறுக்கப்பட்டது போல்,  கடந்த சில வருடங்களில் வெளிவந்த படங்கள் அமைந்திருந்தன. இந்த எல்லைக் கோட்டைத் தாண்டி சாதாரண ஏழைக் குடும்பத்தை சேர்ந்த கதாநாயகனும் எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் தன்மையாக முடிவெடுக்கும் கதாநாயகியை வைத்து ஒரு அழகிய காதல் படம் உருவாக்கலாம் என்று ராஞ்சனா மெய்ப்பித்துள்ளது. 

பனாரஸில் கதைக்களம்,  கோவில் புரோகிதரின் மகன் குந்தனாக தனுஷ், கல்லூரி ஆசிரியர் மகள் ஜோயாவாக சோனம் கபூர். சிறு வயதில் தனுஷுக்கு சோனம் மீதிருந்த பிடிப்பு, டீனேஜில் காதலாக மாறுகிறது. தனுஷின் மீது சோனமும் காதலில் விழ பின் பெற்றோர்களால் அறிவுறுத்தப்பட்டு டில்லிக்கு அனுப்பப்படுகிறார். 

பலவருடம் கழித்து பனாரஸிர்க்கு தன் காதலி சோனமை பார்க்க வரும் தனுஷிடம், நம் காதல் வெரும் ஈர்ப்புதான் அது அறியாமையின் பிரதிபலிப்பு என்கிறார் சோனம். காதலில்லாத போதும் சோனம், தனுஷிடம் சினேகமாகப் பழகுகிறார். இவர் விருப்பமின்றி நடக்கவிருந்த திருமணத்தை தனுஷ் நிறுத்த உதவ, நன்றியுடன் தான் அபை டியோல் மீது கொண்டிருந்த காதலைப் பற்றி கூறுகிறார். இதைக் கேட்டு மனமுடைந்து வெறுப்படைகிறார் தனுஷ். இதன்பின் இக்கதாபாத்திரங்கள் வாழ்க்கையில் அடையும் மாற்றங்களென்?? சோனம் தனுஷ் இணைந்தார்களா என்பது தான் மீதி கதை. 

முதல் பாதி முழுவதும் காதல், இசை என்று பயணிக்கும் படம், இரண்டாம் பாதியில் அரசியலில் தடம் மாறப்பட்டு கொஞ்சம் குண்டு குழிகளை ஏறிக் கடக்கிறது. படத்தின் கதையை ‘லேசா லேசா’ படத்துடன் ஒப்பிடலாம்.  ஆனால் ராஞ்சனா வேறுபடுவதென்னவோ ஏ.ஆர் ரஹ்மானின் அற்புத இசையிலும், நடிகர்களின் யதார்த்த நடிப்பிலும் தான்.  

கவர்ச்சிக்கு மட்டும் அழகுப்பதுமையாக வரும் நாயகியாக இல்லாமல் அரசியல் மீதும் முரண்பட்ட சிந்தனை மீதும் பற்று கொண்ட ஜோயாவாக சோனம் கபூர் கனகச்சிதமாக பொருந்தியுள்ளார்.  பள்ளி காலத்து பெண்ணாக இவர் குட்டி படத்து ஜெயாபச்சனை நினைவு கூறுகிறார். வித்தியாசமான கதாபாத்திரத்தில் அபை டியோல் ஈர்க்கிறார். 

ஆங்காங்கே எதிர்பாரா மாற்றங்களுடன் தடம் மாறும் ஹிமான்ஷு ஷர்மாவின் திரைக்கதை பிழையற்றது எனக் கூற அரிதாயினும் ரசிக்கத்தக்கதாய் அமைந்துள்ளது. படம் முழுக்க இசைப்புயலின் இசை ஆஹா ஓஹோ ரகம்தான்.  ஹோலிப்பண்டிகையில் படமாக்கப்பட்டுள்ள ராஞ்சனா பாடலிலும் பனாரஸியா பாடலிலும் நட்ராஜ் சுப்பிரமணியன் ஒளிப்பதிவு சபாஷ் போட வைக்கிறது.  

விக்ரம், சூர்யா, அஜித்திற்கு கிடைக்காத ஒரு அரங்கேற்றம் தனுஷிற்கு பாலிவுட்டில் கிடைத்துள்ளது.  சரியான கதைக்களத்தால் பாலிவுட்டில் உரிய ஆடுகளத்தை தனுஷ் கண்டுள்ளார் என்றால் அது மிகையல்ல.  

மொத்தத்தில்: முதல்பாதியில் யதார்த்தமாகச் செல்லும் படம், இரண்டாம் பாதியில் சில நம்பத்தகாத அரசியல் மாற்றங்களையும் காண்கிறது. மேடு பள்ளங்களைக் கடந்தாலும் ஏ.ஆர். ரஹ்மானின் இசையினால் மிகைப்படுத்தப் படாத கதாபாத்திரங்களின் நடிப்பினால் இனிய பயணத்தை மேற்கொண்ட அனுபவம் தருகிறது

பொறியியல் கல்லூரி ரேங்க் பட்டியல்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்


"பொறியியல் படிப்பில் சேரும் மாணவ, மாணவியரின் நலன் கருதி, கல்லூரிகளின், ரேங்க் பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட வேண்டும். இதற்கு மறுத்தால், மாணவர்களும், பெற்றோரும், தர்ணா நடத்த வேண்டும்; வேறு வழியில்லை" என கல்வியாளரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான ஆனந்த கிருஷ்ணன் தெரிவித்தார்.


பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு, அண்ணா பல்கலையில் நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும், 560 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், எத்தனை கல்லூரிகள், தரமான கல்லூரிகள்; எத்தனை கல்லூரிகளில், நல்ல உள் கட்டமைப்பு வசதிகள் உள்ளன; தரமான ஆசிரியர்கள் இருக்கின்றனர்; வேலை வாய்ப்பு நன்றாக இருக்கிறதா என, எந்த தகவலும் தெரியாத நிலையில், மாணவ, மாணவியர், கலந்தாய்வுக்கு வருகின்றனர்.

ஒரே நிறுவனம், பல்வேறு பெயர்களில், பல கல்லூரிகளை நடத்துகிறது. இதில், ஏதாவது ஒரு கல்லூரி மட்டும், தரமானதாக இருக்கும். ஆனால், பெயரில், சிறிய மாற்றங்களை செய்வதால், அது தெரியாமல், மாணவர்கள் சிக்கிக் கொள்கின்றனர்.

கல்லூரிகளின் நிதர்சனமான உண்மைகளை, செயல்பாடுகளை, புதிதாக வரும் மாணவ, மாணவியருக்கு தெரியப்படுத்துவது, அண்ணா பல்கலையின் கடமை என்றும், தமிழக அரசு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

இந்த விவகாரம் குறித்து, பிரபல கல்வியாளரும், அண்ணா பல்கலையில், நீண்ட காலம் துணைவேந்தர் பதவியை வகித்தவருமான, ஆனந்த கிருஷ்ணன் கூறியதாவது:

பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் மாணவர்களுக்கு, மாநிலத்தில் உள்ள கல்லூரிகளின் நிலையை, வெட்டவெளிச்சமாக தெரியப்படுத்த வேண்டியது, அண்ணா பல்கலையின் கடமை. கல்லூரிகளின் ஒட்டுமொத்த அளவுகோல்களை உள்ளடக்கிய, ரேங்க் பட்டியலை தயாரித்து, அதை வெளியிடுவதில், பல்கலைக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை.

மாணவர்களின் நலனை விட, வேறு ஒன்றும் பெரியது கிடையாது. எனவே, ரேங்க் பட்டியலை வெளியிட, பல்கலை நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளியிடாத பட்சத்தில், மாணவர்களும், பெற்றோரும், தர்ணா போராட்டம் தான் நடத்த வேண்டும்; வேறு வழியில்லை.

அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தரும், கல்வியின், மாநில திட்டக்குழுவின், முன்னாள் உறுப்பினருமான பாலகுருசாமி கூறியதாவது:

பெரும்பாலான கல்லூரிகள், கிராமப்புறங்களில் உள்ளன. தற்போதைய புள்ளி விவரப்படி, 10 சதவீத கல்லூரிகள், மிகச் சிறந்த கல்லூரிகளாக இருக்கின்றன; 20 சதவீத கல்லூரிகள், அடுத்த கட்டத்தில் உள்ளன; சராசரி நிலையில், 30 சதவீத கல்லூரிகள் உள்ளன; சரியில்லாத கல்லூரிகள் வரிசையில், 30 சதவீதமும், மிக மோசமான கல்லூரிகள் வரிசையில், 10 சதவீதமும் உள்ளன.
இந்த நிலையில், கல்லூரியை தேர்வு செய்வது, மாணவர்களுக்கு, சவாலான விஷயமாகவே இருக்கும். சிறந்த கல்லூரியை கண்டுபிடிக்க, சில யுக்திகளை, மாணவர்கள் கையாளலாம்.

தங்களுடைய பலம், பலவீனம், ஆர்வம், திறனறிதல் ஆகியவற்றில், தங்களுடைய நிலையை, மாணவர்கள், முதலில் சுயபரிசோதனை செய்ய வேண்டும். கணிதம், அறிவியலில், 50 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண்களை பெறும் மாணவர்கள், பொறியியல் படிப்பில் சேரக் கூடாது. இந்த வகை மாணவர்கள், கலை, அறிவியல் கல்லூரிகளில், தங்களுக்கு பிடித்தமான பாடப் பிரிவில் சேரலாம்.


பொறியியல் சேர முடிவு செய்துவிட்டால், பாடப்பிரிவையும், கல்லூரியையும், முதலில் தேர்வு செய்ய வேண்டும். இதை, மாணவர்கள், தங்களின் ஆர்வம், திறமைக்கு ஏற்ப, தேர்வு செய்யலாம். பெற்றோர் அழுத்தத்திற்கு துணைபோகாமல், சுயமாக, மாணவர்கள் முடிவெடுக்க வேண்டும்.


இதன்பின், பொருளாதார நிலை, கட்-ஆப் மதிப்பெண் ஆகியவற்றிற்கு ஏற்ப, ஐந்து கல்லூரிகளை, மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். கல்லூரியை தேர்வு செய்யும் முன், கல்லூரியைப் பற்றி, கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் நிலை, தேர்ச்சி சதவீதம் உள்ளிட்ட விவரங்களை, கல்லூரி இணையதளம் மூலமாகவும், நேரில் சென்றும் விசாரித்து அறியலாம்.

கல்லூரிகள் தரும் துண்டு பிரசுரங்களை நம்பக் கூடாது. அதில், முக்கியமான பல அம்சங்கள், மிகைப்படுத்தப்பட்டு இருக்கும். இதில், மாணவர்கள், கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள், தேர்வு செய்ய விரும்பும் கல்லூரிக்கு, நேரில் சென்று, ஆய்வகம், நூலகம், வகுப்பறை, விடுதிகள், ஒட்டுமொத்த கல்லூரி வளாக சூழ்நிலை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.

சம்பந்தப்பட்ட கல்லூரியின் முன்னாள் மாணவர், அவர்களின் பெற்றோர், முன்னாள் ஆசிரியர் ஆகியோரை சந்தித்து, கல்லூரியைப் பற்றி அறிய வேண்டும். இறுதியாக, கல்லூரியின் நிர்வாகிகளையும், அவர்கள் பின்னணியையும், அறிந்து கொள்ள வேண்டும்.

பலர், பொறியியல் கல்லூரிகளை, ஒரு வியாபார நிறுவனமாகவே நடத்துகின்றனர். அவர்கள் பேச்சும், செயல்பாடுகளும், ஒன்றாக இருக்காது. பலர், குற்ற பின்னணியை கொண்டவர்களாகக் கூட இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் நடத்தும் கல்லூரிகளில், மாணவர்கள். சிக்கிக் கொள்ளக் கூடாது.

முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன்: வெறும் தேர்ச்சி சதவீதத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, ரேங்க் பட்டியல் வெளியிடக் கூடாது. கல்லூரியின் ஒட்டுமொத்த அம்சங்களையும் உள்ளடக்கி, ஆய்வு செய்து, ரேங்க் பட்டியலை வெளியிட வேண்டும்.

ஒவ்வொரு கல்லூரியும், கல்லூரி வசதிகள் உள்ளிட்ட விவரங்களை, ஒவ்வொரு ஆண்டும், "அப்டேட்&' செய்து, அதன் விவரங்களை, இணையதளத்தில் வெளியிட வேண்டும். இதுபோன்ற விவரங்களை தொகுத்து, ஒவ்வொரு ஆண்டும், ரேங்க் பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிடலாம்.

முன்னாள் துணைவேந்தர்கள் கருத்து குறித்து, அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம் கூறியதாவது: மாணவர்களின் நலன் தான், எங்களுக்கு முக்கியம். அதனால், ஒட்டு மொத்த விவரங்கள் அடங்கிய, ரேங்க் பட்டியலை வெளியிடுவதில், எங்களுக்கு, எந்த பிரச்னையும் கிடையாது.

சமீபத்தில், "ஒரு ஆண்டு தேர்ச்சி சதவீத விவரங்களை வெளியிட வேண்டும்" என சென்னை, ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, அந்த விவரங்களை வெளியிட்டுள்ளோம். ஒரு ஆண்டு தேர்ச்சி சதவீத விவரங்கள், மாணவர்களுக்கு பலன் தராது. குறைந்தது, ஒரு மாணவரின், நான்கு ஆண்டு செயல்பாடு விவரங்களையும் வெளியிட வேண்டும்.

தற்போது, கலந்தாய்வு துவங்கி, 10 நாட்கள் ஆகிவிட்டன. இன்னும், 20 நாட்கள் தான் உள்ளன. இதுபோன்ற நிலையில், திடீரென, விவரமான பட்டியலை தயாரிக்க முடியாது.கல்லூரியின் தரத்திற்கு, ஒவ்வொரு பிரிவு வாரியாக, ஒரு விதிமுறைகளை உருவாக்கி, அதற்கென, ஒரு மதிப்பெண் நிர்ணயித்து, பின், கல்லூரியில் உள்ள வசதிக்கு தகுந்தாற்போல், மதிப்பெண் வழங்கி, அதனடிப்படையில், ரேங்க் உருவாக்க வேண்டும்.

இந்தப் பணிகளை, ஓரிரு நாளில் செய்ய முடியாது. வரும் ஆண்டுகளில், முழுமையான விவரங்களின் அடிப்படையில், பொறியியல் கல்லூரிகளின் ரேங்க் பட்டியலை, கண்டிப்பாக வெளியிடுவோம். இவ்வாறு ராஜாராம் தெரிவித்தார்.


தலைமைத்துவம்: உங்களுக்கு வேண்டியவற்றைச் செய்விப்பது எப்படி?


வீட்டிலும் சரி பணிமனையிலும் சரி உங்களுக்கு வேண்டியவற்றை மற்றவர்களைக் கொண்டு செய்விக்க வேண்டியது அவசியமாகிறது. உங்கள் சொற்படி மற்றவர்கள் கேட்டு உரிய பணிகளை அவர்களைக் கொண்டு செய்விக்க சில பண்புகள் உங்களுக்கு அவசியமாகின்றன. அப்பண்புகள் சில:


1. செவி கொடுத்தல்: மற்றவர்கள் பேசும்போது காது கொடுத்து அக்கறையுடன் கேளுங்கள். அவர்கள் பேசும் போது நீங்கள் என்ன பேசலாம என்பதில் அக்கறை செலுத்துவதைக் குறைத்து மற்றவர் உங்களுக்கு என்ன சொல்ல வருகிறார் என்பதை சரியாகக் கேட்டு அவர்களின் உள்கிடக்கையை அறிந்து கொள்ளுங்கள். மற்றவர்கள் சொல்பவற்றைக் கேட்டல் ஐந்து முக்கிய அம்சங்களை உள்ளடக்கியது. 1. கேட்டல், 2. புரிதல்,  3. மதிப்பிடல், 4. நினைவிற் கொள்ளல், 5. பதில் கூறல்/பதில் நடவடிக்கை எடுத்தல். தேவை ஏற்படும் போது நீங்கள் கேட்டவற்றை குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செவி மடுப்பது மற்றவர்களுக்கு அவர்களின் முக்கியத்துவத்தையும் அவர்களின் கடமையின் முக்கியத்துவத்தையும் உணர வைக்கும்.

2. மற்றவர்களுக்கு உதவுங்கள்: நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுக்கும் பணியில் உள்ள சிரமங்களைப் புரிந்து அதைச் சமாளிக்க நீங்கள் இட்ட பணியைச் செய்பவர்களுக்கு உதவி செய்யுங்கள். உங்களிடமிருந்து தங்களுக்கு உதவி கிடைக்கும் என நம்புபவர்களே உங்கள் தலைமையை ஏற்றுக் கொள்வார்கள். 

3. சொல்லுங்கள் கட்டளையிடாதீர்கள்: செய்ய வேண்டிய பணியின் முக்கியத்துவத்தையும் அதனால் செய்பவரும் நீங்களும் அடையும் நன்மைகளையும் சரியாக பணி கொடுப்பவருக்குப் புரிய வையுங்கள். கட்டளையிட்டால் அவர் யாருக்காகவோ தான் செய்வது போல உணர்வார். 

4. விருப்பங்களை உணர வையுங்கள்: செய்ய வேண்டிய பணியில் உங்களுக்கு உள்ள விருப்பத்தையும், பணி செய்பவர் மீது உங்களுக்கு இருக்கும் விருப்பத்தையும் சொல்லுவதுடன் பணி செய்பவருக்கு பணி மீது விருப்பம் வரச்செய்யுங்கள்.   

5. அடிக்கடி ஆச்சரியத்திற்கு உள்ளாக்குங்கள்: உங்களுக்காக பணிசெய்பவர்களை அடிக்கடி எதிர்பாராத மகிழ்ச்சியைக் கொடுத்து ஆச்சரியப் படுத்துங்கள். கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, மிகை ஊதியம்(போனஸ்), ஊதிய உயர்வு போன்றவற்றை பணியாளர் எதிரபார்பதற்கு முன்னர் கொடுத்து அவரை மகிழ்ச்சியில் திணறடியுங்கள். இது பணியிலும் உங்களிலும் ஒரு பிடிப்பை அவருக்கு ஏற்படுத்தும்.

6. அந்த இரண்டு மந்திரச் சொற்கள்: நன்றி, மன்னிக்கவும் இந்த இரண்டு வார்த்தைகளையும் தேவையான இடங்களில் தாராளமாகப் பயன்படுத்துங்கள். அதுவும் உங்கள் உண்மையான தூய்மையான மன நிலையில் இருந்து இந்த வார்த்தைகளை வெளிப்படுத்துங்கள்.

7. உங்கள் தன்னம்பிக்கையும் தீர்மானம் எடுக்கும் திறனும்: உங்கள் தன்னம்பிக்கையும் தீர்மானம் எடுக்கும் திறனும் உங்கள் பால் மற்றவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். இந்த இரண்டு திறனையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

8. திருக்குறளை மறவாதே: இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். இந்தக் குறலில் முக்கியமான சொல் இதனால் என்பதாகும் இந்தத் திருக்குறளுக்கு மூவர் விளக்கமளித்துள்ளனர்:

கலைஞர் உரை: ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

மு.வ உரை: இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும். 

சாலமன் பாப்பையா உரை:இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.

இதனால் என்ற சொல்லிற்கு கலைஞர் உரையில் பொருள் கொடுக்கப்படவில்லை. மு. வரதராசனார் உரையில் இக்கருவியால் எனப்படுகிறது, பாப்பையா உரையில் ஆள்பலம். பொருள் பலம் இரண்டும் சொல்லப்பட்டுள்ளது. பணியை முடிக்கத் தேவையானவை பணி செய்பவருக்கு கொடுக்கப்படவேண்டும்

இந்த பதிவு ஒரு கவிஜனின்  உணர்வுகள் வேல் தர்மா  எனும் வலை பக்கத்தில் இருந்து பலரும் படித்து பயன் பெற இங்கு பகிரப்படுகிறது. வலைபக்கதிற்கான இணைப்பு தரப்பட்டு உள்ளது.     

Monday, June 24, 2013

கூகுளின் புரட்சிகரத் திட்டம் !

பலூன்களை வானில் பறக்கவிட்டு அதனூடாக இணைய வசதியை வழங்கும் திட்டமொன்றை கூகுள் ஆரம்பித்துள்ளது. இத்திட்டத்திற்கு ' புரொஜெக்ட் லூன்' என கூகுள் பெயரிட்டுள்ளது. சுமார் 18 மாத கால முயற்சியின் பலனே இதுவென கூகுள் தெரிவிக்கின்றது. உலகில் இணைய வசதியற்றோருக்கு அதனை பெற்றுக்கொடுக்கும் பொருட்டே இம்முன்னோடித் திட்டத்தை கூகுள் ஆரம்பித்துள்ளது.

பலூன்களின் இதற்கு தேவையான உபகரணங்களைப் பொருத்தி வானத்தில் பறக்கவிடுவதன் மூலம் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இவ் உபகரணங்கள் மூலமாக 3ஜி வேக இணைய வசதியை கூகுள் வழங்க எதிர்ப்பார்த்துள்ளது. ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படுவதுடன் நிலத்திலிருந்து 20 கிலோமீற்றர் உயரத்தில் இவை பறக்கவிடப்பட்டுள்ளன. தற்போது பரீட்சாத்த நிலையில் உள்ள இத்திட்டத்தை நியூசிலாந்தில் கூகுள் ஆரம்பித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக 30 பலூன்களை கூகுள் நியூசிலாந்தின் தெற்கிலுள்ள தீவொன்றிலிருந்து அனுப்பியுள்ளது. தற்போது அனுப்பப்பட்டுள்ள ஒவ்வொரு பலூனும் சுமார் 1200 சதுர கிலோமீற்றர் பிரதேசத்திற்கு இணைய வசதியை வழங்கக்கூடியது. ஈலியம் நிரப்பப்பட்ட இப்பலூன்கள் இவ்வசதியை வழங்குவதற்கு தேவையான சக்தியை ஒளியிலிருந்து பெற்றுக்கொள்கின்றன.

இதன் மூலம் இணைய வசதியற்றோருக்கு அதனை வழங்குவது மட்டுமன்றி, அனர்த்த நிலைகளின் போது தொடர்பாடல் சாதனங்கள் துண்டிக்கப்படும் போது இதன் மூலம் சிறந்த பயனை பெற்றுக்கொள்ள முடியுமென கூகுள் தெரிவிக்கின்றது. கூகுள் கிளாஸ், ஓட்டுநர் அற்ற கார் போன்ற புரட்சிகர தயாரிப்புகளை உருவாக்கும் கூகுளின் 'லெப் x' இலேயே இப் புரட்சிகர திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டமானது வெற்றியளிக்கும் பட்சத்தில் இதனூடாக இணையக் கேபிள்களை உருவாக்குதல், அவற்றை பொருத்துதல், பராமரித்தல் போன்ற செலவுகள் கட்டுப்படுத்தப்படுமென நம்பப்படுகின்றது. உலக சனத்தொகையில் 4.8 பில்லியன் பேர் இணைய வசதியற்றவர்களாக இருப்பதுடன் , 2.2 பில்லியன் பேர் அவ்வசதியை பெற்றுள்ளதாக புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

எனினும் இத்திட்டத்தின் ஊடாக அனைவருக்கும் இணையவசதியை வழங்க கூகுள் எதிர்ப்பார்த்துள்ளது ஆனாலும் பல நடைமுறைச் சிக்கல்களும் இதில் உள்ளன. குறிப்பாக காற்றின் வேகத்திற்கு பலூன்களால் ஈடுகொடுக்க முடியாமல் போதல், இதனால் இணைப்பு இடை நடுவே துண்டிக்கப்படுதல் போன்ற பல காரணிகளையும் கூகுள் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது.

எந்தவொரு புது முயற்சியைப் போல இதிலும் சவால்கள் இருக்கவே செய்கின்றன. இதிலிருந்து கூகுள் மீளுமா? இத்திட்டத்தில் வெற்றி பெறுமா? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நன்றி  கம்ப்யூட்டர் தகவல்கள்

பலம் தரும் பலாக்கொட்டை!

பழங்களைவிட ஒரு மரத்தையே உருவாக்கும் பழக்கொட்டையில் உளள மரபணு கூறுகள் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகம் பெற்றிருப்பதுடன், செல்களை அழிவிலிருந்து காக்கும் ஆற்றலையும் உடையது. இவற்றை உண்பதற்கு ஏற்றவாறு ருசியாக சமைத்து சாப்பிட்டால் உணவே மருந்தாகும். அதுபோன்ற அற்புத ஆற்றல் தரும், ஆண்களின் வலிமையைப் பெருக்கும்.”அர்டோகார்பஸ் இன்டிகிரிபோலியா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட மொரேசியே குடும்பத்தைச் சார்ந்த பலாப்பழத்தின் கொட்டை மருத்துவ ரீதியாக உட்கொள்ள ஏற்றது.

100 கிராம் பலாக்கொட்டையில் 135 கிலோ கலோரி சத்து உள்ளது. இவற்றில் உள்ள கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் ஏ, பி, சி போன்ற வைட்டமின்கள், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற தனிமங்கள் உள்ளன. இவற்றில் காணப்படும் லிக்னான்கள், ஐசோபிளேவோன்கள், சப்போனின்கள் புற்றுநோய், செல் முதிர்ச்சி, செல் அழிவு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் தன்மை உடையவை. இவற்றிலுள்ள பிளேவனாய்டுகள், ஆர்டோகார்பெசின் மற்றும் நார்ஆர்டோ கார்பெடின் போன்றவை வீக்கத்தைக் கரைக்கக்கூடியவை. அதிக ரத்த அழுத்தம் மற்றும் குடற்புண்களை ஆற்றும் தன்மையும் பலாக்கொட்டைக்கு உண்டு. இவற்றை நன்கு வேகவைத்து உருளைக் கிழங்கிற்கு பதில் உட்கொள்ளலாம்.

பலாக்கொட்டையை வறுத்தோ, வேகவைத்தோ உட்கொள்ளலாம். விதைகளை நன்கு உலர்த்தி, மைய அரைத்து, கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தியாகவோ, ரொட்டியாகவோ செய்தும் சாப்பிடலாம். தோலுரித்து கழுவி, ஒன்றிரண்டாக இடித்த பலாக்கொட்டை-10, பட்டர்பீன்ஸ்-20,
உருளைக்கிழங்கு-1, பச்சைப்பயறு-100 கிராம் ஆகியவற்றை நீரில் ஊறவைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ள வேண்டும். தேங்காய், மிளகாய்தூள், மஞ்சள்தூள், பூண்டு, புளிச்சாறு ஆகியவற்றை நீர்விட்டு மைய அரைத்து, வெந்த பலாக்கொட்டை கலவையுடன் சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்கவைத்து, கறிவேப்பிலை, கடுகு, மிளகாய் சேர்த்து தாளித்து குழம்பு பதத்தில் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட உடலுக்கு வலிமையும் குளிர்ச்சியும் உண்டாகும். பலம் உண்டாகும். பலாக்கொட்டையை மட்டும் தனியாக அதிகம் உட்கொண்டால் உஷ்ணம் அதிகரித்து, மார்பு மற்றும் வயிற்றில் கடும் வலி, முதுகுப்பிடிப்பு ஏற்படும் என சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இதனை உணவாக சமைத்து உட்கொள்வதே நல்லது

முக நூலில் நண்பர் பகிர்த்து கொண்டது 

பொறியியல் கல்லூரியை எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம்?

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு துவங்கியுள்ள நிலையில், மாணவர்களுக்கு எந்த கல்லூரியை தேர்ந்தெடுப்பது? எந்த கல்லூரியில் படிப்பதற்கு அனைத்து வசதிகளும் இருக்கும்? ஏதேனும் ஒரு கல்லூரி தேர்ந்தெடுத்தால், கேம்பஸ் இன்டர்வியூ இருக்குமா? என்றெல்லாம் பல சந்தேகங்கள் எழுவது உண்மை தான். கல்லூரியை தேர்ந்தெடுக்கும் முன்பு முதலில் தெளிவாக இருக்க வேண்டும்.

பொறியியல் கல்லூரியை தேர்ந்தெடுப்பதற்கு சில யோசனைகள்:

* கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அங்குள்ள ஆசிரியர்கள், வகுப்பறைகள் ஆய்வகங்கள் உள்ளிட்ட வசதிகளைப் பார்க்க வேண்டும். விடுதி வசதிகள், மொத்தக் கட்டணம், ஆராய்ச்சி மற்றும் விளையாட்டுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் போன்றவற்றைப் பார்க்க வேண்டும். அவற்றை அடிப்படையாக வைத்து கல்லூரியைத் தேர்ந்தெடுக்கலாம்.

* அந்தக் கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகள் என்.பி.ஏ.,வால் (NBA - National Board Accredition) அங்கீகரிக்கப்பட்வையா என்று பார்க்க வேண்டும்.

* கடந்த ஆண்டு அந்தக் கல்லூரியில் மொத்த தேர்ச்சி விகிதம் படிக்கும்போதே வேலைவாய்ப்பைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

* அந்தக் கல்லூரி எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது. அங்குள்ள கலாசாரம், வளாகத்தில் கல்விக்கு ஏற்ற சூழல் நிலவுகிறதா உள்ளிட்ட விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற விஷயங்களைப் பரிசீலிக்கும் போது பல கேள்விகள் உங்களுக்குள் வரும். நமது விருப்பத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதா? அல்லது வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதா? பாடப்பிரிவுக்கு முக்கியத்துவம் அளிப்பதா? அல்லது கல்லூரிக்கு முக்கியத்துவம் அளிப்பதா? உள்ளிட்ட கேள்விகள் எழும்.

அந்தக் கேள்வியை ஒவ்வொருவரும் தங்களுக்குள் கேட்டுக்கொண்டால் அதற்கு ஒவ்வொரு விடை கிடைக்கும். சிலர் பாடப்பிரிவுகளில் விருப்பம் இல்லையென்றால் கல்லூரிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பார்கள். அது மிகவும் சரியானதே. வேலைவாய்ப்பா, விருப்பமா என்ற கேள்வி எழும்போது, மதிப்பெண்ணுக்கு ஏற்றவாறு எந்தப் பாடப்பிரிவு கிடைக்கிறதோ அதில் விருப்பத்தை ஏற்படுத்திக் கொள்வது சிறந்தது. அதே நேரத்தில் விருப்பமே இல்லாத துறையைத் தேர்ந்தெடுத்து விடவும் கூடாது.

 இந்த பதிவு தினமணி  நாளேட்டில் இருந்து பகிரப்படுகிறது

பொறியியல் கவுன்சிலிங் - இ.சி.இ., பிரிவே அதிகமானோரின் தேர்வு-24-06-2013

பொறியியல் அகடமிக் பிரிவு கவுன்சிலிங் தொடங்கி 3 நாட்கள் நிறைவடைந்த நிலையில், வழக்கம்போலவே, இ.சி.இ., பிரிவையே அதிக மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். 1,612 மாணவர்கள் இப்பிரிவை தேர்வு செய்துள்ளனர்.

இரண்டாம் இடத்தை, 1,317 மாணவர்களுடன், மெக்கானிக்கல் பிரிவு பெற்றுள்ளது. மூன்றாமிடத்தை, கணிப்பொறி அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவு பெற்றுள்ளது. 884 மாணவர்கள் இப்பிரிவை தேர்வு செய்துள்ளனர். ஆட்டோமொபைல் துறையை 103 பேர் தேர்வு செய்துள்ளனர்.

சிவில் பிரிவை 608 மாணவர்களும், ஐ.டி., பிரிவை 476 பேர் தேர்வு செய்துள்ளனர். பாரம்பரிய பிரிவுகள் சாராத, இதர பொறியியல் பிரிவுகளை மொத்தமாக 824 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

சிவில் மற்றும் மெக்கானிக்கல் ஆகிய பிரிவுகளில் தமிழ் வழிக் கல்வி பிரிவுகளில், சிவில் பிரிவை 1 மாணவர் மட்டுமே தேர்வு செய்துள்ளார். மெக்கானிக்கல் பிரிவை இதுவரை யாரும் தேர்வு செய்யவில்லை.

அண்ணா பல்கலையில், அகடமிக் பிரிவு பொறியியல் கலந்தாய்வு துவங்கி, 3 நாட்கள் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 6,940 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.

ஜுன் 23ம் தேதி முடிவடைந்த நிலவரப்படி,  அண்ணா பல்கலை மற்றும் பல்கலை துறைகளில் மொத்தம் 1,602 மாணவர்கள் சேர்க்கைப் பெற்றுள்ளனர். அண்ணா பல்கலை உறுப்பு கல்லூரி மற்றும் மண்டல மையத்தில் 66 மாணவர்கள் சேர்க்கைப் பெற்றுள்ளனர்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில், 2,633 மாணவர்களும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில், 2,639 மாணவர்களும் சேர்க்கைப் பெற்றுள்ளனர்.

காலியிடங்கள் என்று பார்த்தால், 3 நாட்கள் கவுன்சிலிங் முடிவடைந்த நிலையில், அனைத்து பிரிவினரையும் சேர்த்து, மொத்தமாக 1 லட்சத்து 87 ஆயிரத்து 291 காலியிடங்கள் உள்ளன.


Wanted: Assistant Professors

Wanted: Assistant Professors in
Civil,
Mechanical,
EEE,
ECE,
CSE,
IT,
Mathematics.

Lecturers in
civil and Mechanical.

Walk in Interview at  

Maharaja Institute of Technology,
Arasur(PO),
Coimbatore - 641407,
Phone: 0422-2360128, 2360873, 9865405629

எப்போதும் நிலைக்கும் வேலைகள்

இருபதாம் நூற்றாண்டு முடிந்து அடுத்த நூற்றாண்டில் நுழைந்த பின்னர் தகவல் தொழில் நுட்ப துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் உலகையே தலைகீழாக புரட்டி போட்டுள்ளன. ஏற்கெனவே வெற்றிகரமாக செயல்பட்டு வந்த பல்வேறு துறைகள் அறிவியல் தொழில் நுட்ப மற்றும் சமூக காரணங்களுக்காக இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டன. உதாரணமாக வீடியோ காசட் தொழிலை சொல்லலாம். 

ஆக இந்த மாற்றங்களின் வீச்சு அதிகரிக்கும் போது பல்வேறு வேலை இழப்பு இருந்தாலும், புதிய புதிய துறைகளின் தோற்றமும், ஏற்கெனவே இருக்கும் குறிப்பிட்ட தொழில்களில் அசுர வளர்ச்சியும் இருக்கத்தான் செய்கிறது. இந்தியாவைப் பொறுத்த வரை ஒரு ஊழியர் ஒரே நிறுவனத்தில் பணி புரியும் காலம் சராசரியாக 5 ஆண்டுகளாக உள்ளது. இது இனியும் குறைவதற்கான வாய்ப்புகள்தான் உள்ளன. 

தொழிலின் தன்மையே மாறும் நிலையில் இதன் தாக்கம் அதிகரிக்கும் என்ற போதும் ஒரே துறையில் பணியில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.  மாற்றங்கள் எவ்வளவு வந்தாலும், சந்தைப் பொருளாதார சிக்கல்களை தாண்டி சில வேலை வாய்ப்புகளுக்கு என்றென்றும் கிராக்கி இருக்கும் என்று இத்துறை சார்ந்த வல்லுனர்கள் கருதுகிறார்கள். அப்படிப்பட்ட சில வேலைகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

பினான்சியல் பிளானர்
 
நம்மில் பலராலும் நமது நிதி தொடர்பான பணிகளை முழுமையாக நாமே செய்து கொள்வதில் சிரமங்கள் உள்ளன. எவ்வளவு வருவாய் உள்ளது, எவ்வளவு சொத்துக்கள் மற்றும் கடன் உள்ளது, எவ்வளவை சேமிக்க வேண்டும், எவ்வளவை வரியாக செலுத்த வேண்டும், எவ்வளவு இன்ஸ்யூரன்ஸ் எடுக்க வேண்டும் என்பது போன்ற நமது வாழ்க்கைக்கு அத்தியாவசியமாய் இருக்கும் நிதி குறித்த முடிவுகளை உரிய திட்டமிடலுடனும், தெளிவுடனும், சரியாகவும் செய்பவரே பினான்சியல் பிளானர் எனப்படும் நிதித் திட்டமிடுபவர் ஆவார். இது காலத்தால் அழிக்க முடியாத ஒரு வேலை என்று கூறப்படுகிறது.

எழுத்தாளர்

எழுத்தாளர் என்பது கேட்பதற்கு எளிதாக இருப்பது போல் வாழ்வதற்கு அவ்வளவு எளிதானதல்ல. எழுதுவதற்கான விருப்பம் மட்டும் இருப்பதே ஒரு வெற்றிகரமான எழுத்தாளரை உருவாக்குவதில்லை. முழுமையான அர்ப்பணிப்பு, விருப்பு மற்றும் வேட்கை, மறுதலிப்புகளை பக்குவமாக ஏற்கும் தன்மை, விமர்சனங்களைத் தாங்குதல் போன்ற பல்வேறு குணங்களின் தொகுப்பாக இந்த பணி இருக்கிறது. 

எவ்வளவுதான் இடர்பாடுகள் வந்தாலும் அவற்றை ஏற்று எதிர் நடை போடும் எழுத்தாளர்களே சிறந்த வெற்றியாளர்களாக இருக்கிறார்கள். டெக்னிகல் ரைட்டர், கண்டெண்ட் ரைட்டர், ஆதர், கோஸ்ட் ரைட்டர் போன்ற பல்வேறு எழுத்தாளர் பணிகள் காலத்துக்கு ஏற்றபடி மாறினாலும் எழுத்தாளர்களுக்கான கிராக்கி எப்போதுமே இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

கம்ப்யூட்டர் புரொகிராமர்

பொருளாதார மந்த நிலை, பொருளாதார வளர்ச்சி நிலை என்ற இரண்டு நிலைகளிலும் பெரிதும் தேடப்படும் பணிகளில் ஒன்றாக கம்ப்யூட்டர் புரொகிராமர் பதவி இருந்து வந்துள்ளது. நிறுவனங்கள் மற்றும் வணிக அரங்கின் செயல்பாடுகளில் கம்ப்யூட்டர் உள்ளவரை பொருளாதார நிலை எப்படி இருந்தாலும் கம்ப்யூட்டர் புரொகிராமர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரிக்கத்தான் செய்யும் என்பது இத்துறை சார்ந்த வல்லுனர்கள் கருத்தாகும்.

ஆசிரியர்

மனிதர்களுக்குத் தெரியாத விஷயங்கள் இருக்கும் வரை அவற்றைத் தெளிவுபடுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. எனவே தெளிவுபடுத்தும் பணியான ஆசிரியர் வேலைக்கு உலகம் உள்ளவரை நிச்சயமான தேவைகள் இருக்கும் என்பதே வல்லுனர்கள் கருத்தாகும். இந்தப் பணியும் பொருளாதாரத்தின் ஏற்ற இறக்கங்களின் தாக்குதல்களிலிருந்து விடுபட்டு நிரந்தர தேவைக்குரியதாக உள்ளது.

கெமிக்கல் இன்ஜினியர்

கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்கள் அந்த துறை மட்டுமன்றி மருத்துவம், எரிதி, தொழில் நுட்பம், காஸ்மெடிக்ஸ், பானங்கள் மற்றும் உணவுப் பதார்த்தங்கள் போன்ற மாறுபட்ட துறைகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இத்துறை அதிகம் விரும்பப்படாத துறையாக தற்சமயம் தெரிந்தாலும் சிறந்த ஊதிய விகிதங்கள், ஸ்திரத்தன்மை, வேலைவாய்ப்பு சாத்தியங்கள் ஆகியவற்றால் நிலையான ஒரு பதவியாக மாறும் என்று கணிக்கப்படுகிறது. 

சமையற்கலை வல்லுனர்

நல்ல உணவை உண்பதற்காக பசியோடு காத்திருப்பவர்கள் இருக்கும் வரை சமையற்கலைக்கு அழிவே இல்லை. உலகின் பெரும்பான்மையானோர் உண்பதில் காட்டும் ஆர்வத்தை அவற்றை சமைப்பதில் காட்டுவதில்லை. உணவை சமைப்பதற்கான பொறுமை மற்றும் விருப்பமும் பெரும்பான்மையானவர்களிடம் இருப்பதில்லை. எனவேதான் சமையற்கலை என்பது எக்காலத்திலும் அழிக்க முடியாத மற்றும் சிறந்த வாய்ப்புகளை உள்ளடக்கிய பணியாக கணிக்கப்படுகிறது.

கணிதவியலாளர்

பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வந்த மனிதனுடன் சேர்ந்தே வளர்ந்து வந்ததுதான் கணிதவியல் துறையாகும். கணிதத்தின் வளர்ச்சியே மனித சமூகத்தின் வளர்ச்சியாக மாறியது என்பதும் வரலாறு காட்டும் உண்மையாகும். வெறும் கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்குதல் என்பனவற்றைத் தாண்டிய விரிவான கணித வளர்ச்சிக்கு காலத்தால் அழிவில்லை.

மருந்தியலாளர்

உடல் நிலை குறித்த ஆராய்ச்சி தேவைப்படும் போது எல்லாம் ஓய்வுடன் சில முக்கிய மருந்துகளும் மனிதனுக்கு தேவைப்படுகின்றன. ஊட்டச் சத்து, விட்டமின்கள், ஆன்டிபயாடிக், வலி மருந்து போன்ற பல்வேறு வகையிலான மருந்துப் பொருட்களை நோயுறும் காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மருத்துவம் இருக்கும் வரை மருந்து பொருட்களும் இருக்கும் என்பதில் சந்தேகத்துக்கே இடமில்லை. அதே போல் மனிதன் இருக்கும் வரை நோயுறுவதும் நிச்சயம் என்பதால் காலத்தால் அழியாத மற்றுமொறு துறையாக இந்தத் துறை கணிக்கப்படுகிறது.

இந்த பதிவு தினமலர் நாளேட்டில் இருந்து பகிரப்படுகிறது 

நீங்கள் ஐ.டி., துறையை சேர்ந்தவரா? - இவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

சந்தையில் குவிந்திருக்கும் வேலைகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால் தகுதியான ஆட்கள்தான் கிடைப்பதில்லை. தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பெரிய பிரச்சினைகளே இதுதான். சாப்ட்வேர், பி.பி.ஓ., மற்றும் பார்மா துறைகளில் அதிகளவிலான வேலைகள் நிறைந்துள்ளன.

எனவே, எவ்வளவு வேலைகள் காலியாக உள்ளன என்பது பிரச்சினையல்ல. ஆனால், அந்த வேலைகளுக்கான தகுதிபெற்ற ஆட்கள் இருக்கிறார்களா? என்பதுதான் பிரச்சினை. எனவே, சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு, அதற்கேற்ப தனது அனைத்துவிதமான திறன்களையும் வளர்த்துக்கொள்ளும் திறன் பெற்றவர்களையே, தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. மேலும், நாள்தோறும் புதுப்புது தொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதால், அவற்றை கையாளும் வகையில், தனது திறன்களை வளர்த்துக்கொள்ளும் திறன்பெற்றவர்களாகவும் அந்த நபர்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

இன்றைய நிலையில், ஐ.டி., நிறுவனங்களைப் பொறுத்தவரை, சூழலுக்கேற்ப தன்னை தகவமைத்து, புதிய திறன்களை கற்றுக்கொள்ளும் நபருக்கே முதல் முன்னுரிமை தரப்படுகிறது. அவர்களே, முதல் தரமான ஆட்களாக கருதப்படுகிறார்கள். ஏனெனில், வாடிக்கையாளர்கள், தாங்கள் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனமானது, தினந்தோறும் பெருகிவரும் தொழில்நுட்பங்களின் அடிப்படையிலான புதிய தீர்வுகளின் மூலமான சேவையை வழங்க வேண்டும் என்பதையே எதிர்பார்க்கின்றனர்.

இப்படி எதிர்பார்க்கும் நிறுவன வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பிரயத்தனப்பட வேண்டியுள்ளது. நிறுவனப் பணியாளர்கள் தங்களின் சிறப்புத்திறன்களை, வாடிக்கையாளர் தரும் பணத்தில் மேம்படுத்திக்கொள்ள முடியாது என்ற நிலை உள்ளது. வாடிக்கையாளர்கள், அடிக்கடி புதிதுபுதிதாக எதிர்பார்ப்பதால், அனுபவம் வாய்ந்த பணியாளர்களே, தங்களின் திறன்களை அடிக்கடி மேம்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது.

எனவே, சிறந்த மனிதவளமாக திகழ விரும்பும் ஒவ்வொருவரும், விஷயங்களை புதிதாக கற்றுக்கொள்ளும் திறனைப் பெற்றிருப்பதோடு, வலிமையான சிக்கல் தீர்க்கும் திறன், சிறந்த தகவல்தொடர்பு திறன்கள் மற்றும் விரைவாக கற்றுக்கொள்ளும் திறன் ஆகியவற்றைப் பெற்றிருக்க வேண்டும்.

எனவே, ஒரு நிறுவனம் புதிதாக படித்து வெளிவரும் பட்டதாரிகளை பணிக்கு எடுக்கையில், அவர் ஒரு விஷயத்தை எந்தளவு விரைவாக கற்றுக்கொள்வார் என்பதில் கவனம் செலுத்தியே, அவரை பணிக்கு எடுக்கிறது. மேலும், அவரிடம் அதிக விஷயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. சில வருட அனுபவத்துடன் ஒரு நிறுவனத்தில் பணியில் சேரும் நபரிடம், அவர் தன் துறைசார்ந்து எந்தளவிற்கு திறனும், அனுபவமும், பகுப்பாய்வு திறனும் பெற்றுள்ளார் என்று பார்க்கப்படுகிறது.

அடுத்த முக்கிய விஷயம்

தற்போதைய நிலவரப்படி, ஒவ்வொரு நிறுவனமும், கீழ்கண்ட 3 விஷயங்களில் அதிக முதலீடு செய்கின்றன. Network Security, Cloud & Mobility infrastructure and Big Data போன்றவையே அவை. இந்த மூன்று துறைகளில், ஆட்களை பணியமர்த்துவது அதிகமாக இருக்கிறது. எனவே, ஒரு Developer -ஆக சில வருட அனுபவம் உங்களுக்கு இருந்தால், மேற்கூறிய விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

உங்களை உயர்த்துவது எது?

தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் அறிவைத் தவிர, ஒரு பணியாளரை வேலைக்கு அமர்த்துகையில், ஆழ்ந்த அறிவு, துறை நிபுணத்துவம், படைப்பாக்க சிந்தனை மற்றும் சிறந்த தகவல்தொடர்பு திறன் ஆகிய விஷயங்களுக்கும், ஒரு நிறுவனம் சமமான முக்கியத்துவம் கொடுக்கிறது. சில வருட பணி அனுபவம் உடையவர்கள், தொழில்நுட்ப திறன்களுடன், ஆழமான துறை அறிவையும் கொண்டிருந்தால் அவர் பெறக்கூடிய முக்கியத்துவம் அதிகம்.

ஒருவர் தனது துறையில் ஆழ்ந்த அறிவைப் பெறுவதில் கவனம் செலுத்தி, அதிலேயே ஸ்பெஷலைஸ் செய்யும் ஒருவர், ஒரு வெற்றிகரமான கன்சல்டன்டாக(consultant) மாற முடியும்.ஏனெனில், கன்சல்டன்ட் பணிக்கு நிறைய தகுதியான நபர்கள் தேவைப்படுகிறார்கள். வணிகம் சார்ந்த முடிவெடுக்கும் திறன் பெற்றவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு. தொழில்நுட்பத்தைப் பற்றி படிப்பதென்பது, வெறுமனே அந்த தொழில்நுட்பத்திற்காக மட்டுமல்ல. அதன்மூலமாக, வேறு பல விஷயங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தொழில்நுட்ப அறிவுடன் சேர்த்து, வணிக செயல்பாட்டு அறிவையும் கொண்டிருக்க வேண்டும்.

இதுதொடர்பாக நிறுவனங்கள் சொல்வது என்னவென்றால், தொழில்நுட்ப அறிவு என்பது முக்கியமானது. ஆனால், அதேசமயம், அதனுடன் சேர்த்து, நிதி அல்லது பார்மசூடிகல் ஆகிய துறைகளின் அறிவும் இருந்தால், அது கூடுதல் தகுதியாக கொள்ளப்படும். சம்பந்தப்பட்ட துறைகளைப் பற்றிய கூடுதல் அறிவு இருக்கையில், ஒரு ஐ.டி., நிபுணர் தனது தொழில்நுட்பத் திறனை மிக சரியான முறையில் பயன்படுத்த முடியும்.

ஆனால், இன்றைய நிலையில், பல இளைஞர்களிடம் ஆழ்ந்த அறிவு என்பது இருப்பதில்லை. இந்த போக்கு, அவர்களின் நீடித்த வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கிறது. படித்த நபர்களுக்கு, முறையான பயிற்சிகள் இருப்பதில்லை. ஒருவர், சிறந்த தொழில்முறை மேம்பாட்டை அடைய வேண்டுமெனில், அவர் ஆழமாக சென்று படிக்க வேண்டும்.

ஒரு நிறுவனத்தில் பணியில் சேரும் இளைஞர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, அவர்களை பணிக்கு சேர்க்கும் நிறுவனத்தால் அனைத்து வாய்ப்புகளையும் வழங்க முடியாது. தமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை, பயனுள்ள முறையில் தாங்கள்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைய இளைய சமூகம், பலவிதமான கவனச் சிதறல்களால் பாதிக்கப்படுகிறது. சிற்றின்பம் சம்பந்தமான விஷயங்களுக்குத்தான் அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், பணியில் சேர்ந்த சில ஆண்டுகளுக்கு, ஊன்றி கவனித்து, துறை சம்பந்தமான ஆழமான அறிவை அவர்கள் பெற்றுக்கொண்டால், அடுத்த பல ஆண்டுகள் அவர்கள் கவலையின்றி கோலோச்ச முடியும். கற்பதற்கு ஆர்வமும், அதற்கான திறனும் இருப்பது அவசியம்.

பல முன்னணி ஐ.டி., நிறுவனங்கள், தங்களின் பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கும் வசதிகளைக் கொண்டுள்ளன மற்றும் தொழில் திறனை மேம்படுத்தும் வகையிலான கூடுதல் படிப்புகளை மேற்கொள்ள, தங்களின் பணியாளர்களை ஊக்கப்படுத்துகின்றன. இதுபோன்ற லாபக் கூறுகளை பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்வது ஒருவரின் புத்திசாலித்தனமான செயலாகும்.

கூடுதல் திறன்களை வளர்த்துக்கொள்ளும் ஒருவர், தனது சக பணியாளர்களைவிட, அதிக முக்கியத்துவம் பெறுவார். உங்களின் பணியை செய்துகொண்டே, புதிய ப்ரோகிராமிங் மொழிகளைக் கற்றுக்கொள்வது அல்லது புதிய திறன்களை வளர்த்துக்கொள்வது என்பது, உங்களின் பேரம் பேசும் திறனை அதிகப்படுத்தும். இதன்பொருட்டு, பல ஆன்லைன் வளங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், ஐ.டி., துறையில் பணியாற்றும் ஊழியர்கள், தங்களின் கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில், பல பயிற்சி நிறுவனங்கள், பல படிப்புகளை வழங்குகின்றன. உதாரணம், NIIT நிறுவனம், Cisco, Microsoft and Oracle போன்ற பிரிவுகளில் சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது.

மொழித்திறன்

மேற்கூறிய அனைத்து அம்சங்களுடன், இன்னொரு முக்கிய அம்சத்தை கணக்கில் எடுக்க வேண்டியுள்ளது. ஏனெனில், ஐ.டி., துறையில் பணிபுரியும் ஒரு நிபுணர், வெளிமாநிலத்தை சேர்ந்தவருடனோ அல்லது வெளிநாட்டை சேர்ந்தவருடனோ பேச வேண்டியிருக்கும். அப்போது, அவரின் மொழி மற்றும தகவல் தொடர்பு திறன் இன்றியமையாத ஒன்று. எனவே, ஒருவரை பணிக்கு எடுக்கையில், அவரின் தொழில்நுட்பத் திறன், ஆழ்ந்த அறிவு, கூடுதல் தகுதிகள் ஆகிய பலவற்றுடன், மொழித்திறனுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நல்ல மொழித்திறன் பெற்ற ஒருவரை, எளிதில் இழக்க எந்த நிறுவனமும் விரும்புவதில்லை.

மேற்கூறிய அலசல்களின் மூலம், ஐ.டி., துறை ஊழியர்கள் பல்வேறான தகுதிகளையும், திறன்களையும் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான், அவர்கள் சிறந்த பணி வாய்ப்புகளையும், நல்ல சம்பளத்தையும் பெற்று, தங்களின் துறையில் கோலோச்ச முடியும் என்பது புலனாகிறது.

இந்த பதிவு தினமலர் நாளேட்டில் இருந்து பகிரப்படுகிறது

VSB Group of Institutions

Wanted
Assistant Professor , Lecturer
CIVIL
MECHANICAL
CHEMISTRY
ENGLISH
PHYSICS

VSB Group of Institutions
Coimbatore & Karur
Email: jobs@vsbec.com 

For More Details READ:
June 19, 2013 The Hindu empower Pg.1 Madurai

Sree Sastha Institute of Engg. & Tech.

Wanted
Professor, Associate Professor, Assistant Professor
CIVIL
MECHANICAL

Sree Sastha Institute of Engg. & Tech.
Chembarambakkam,
Chennai-600123.
Phone: 044-26810114, 26810115, 26810117 
Email: ssiet@sasthaenggcollege.com
Website: www.sasthaenggcollege.com

For More Details READ:
June 19, 2013 The Hindu empower Pg.1 Madurai

VSB Group of Institutions wanted Assistant Professor


Assistant Professor jobs in VSB Engineering College

Post Date: 20th June 2013

College Name: VSB Group of Institutions

About College:
                       Our College was established by V.S.B. Educational Trust in the year 2002. It is an ISO 9001:2008  Certified, self-financing co-educational institution with an objective to afford value-based technical education and mould the students for industry requirements.

Job Title: Assistant Professors and Lecturers

Departments:
  • Civil Engineering
  • Mechanical Engineering
  • Physics
  • Chemistry
  • English
Qualification: M.E/M.Tech/Ph.D/M.Sc/M.A with first class

Job Location: Karur and Coimbatore

Last Date: With in 9 days

Scale Of Pay: As per AICTE Norms

Apply Mode: Offline/Online

Website: Clickhere

Send your Application along with Passport Size Photo to following Email ID or Postal Address
(Write Application for the post _______________ in _______ Department in Cover envelope)

Email ID: jobs@vsbec.com

Postal Address
The Secretary,
VSB Engineering College
NH-67, Coimbatore Road,
Karur-639111

K.Ramakrishnan College of Engineering

Wanted
Professor, Associate Professor, Assistant Professor
MECH
CIVIL
ENGLISH
PHYSICS
CHEMISTRY

K.Ramakrishnan College of Engineering
Samayapuram,
Trichy-621112.
Phone: 0431-2670699
Cell: 9865220477, 9842472577, 9842111377

For More Details READ:
June 20, 2013 Dinamalar Pg.5 Coimbatore

Excel Engineering Colleges

Wanted
Assistant Professors, Lecturers (For Engg & Poly Colleges)
MECH
CIVIL
ENGLISH
MATHS
PHYSICS
CHEMISTRY

Assistant Professors (Architecture College)
ARCHITECTURE

PHYSICAL DIRECTORS

Excel Engineering Colleges
NH-47, Salem Main Road,
Pallakapalayam,
Komarapalaym-637303
Namakkal District
Cell: 9865522899
Email: hrsretexcel@gmail.com
Website: www.excelinstitutions.com

For More Details READ:
June 24, 2013 Dailythanthi Pg.1 Erode & Salem

Saturday, June 15, 2013

தில்லு முல்லு


கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து, 32 வருடங்களுக்கு முன் 1981-ம் வருடம் வெளி வந்த ‘‘தில்லுமுல்லு’’ திரைப்படம், நீண்ட, நெடிய இடைவெளிக்குப்பின் தமிழ் சினிமா ரசிகர்கள் 32 பற்களும் தெரிய சிரித்து மகிழ, பத்ரி இயக்கத்தில் ‘மிர்சி’ சிவா நடிக்க, மீண்டும் வெளிவந்திருக்கிறது    ‘கோல்மால்’ என்னும் இந்திப்பட ரீமேக்கான ரஜினி நடித்த ‘தில்லுமுல்லு’ சூப்பர் என்றால் ‘மிர்சி’ சிவாவின் ‘தில்லுமுல்லு’ சூப்பரோ சூப்பர் என்பது ஹைலைட்!

முருக பக்தரான பிரகாஷ்ராஜின் பிரபல மினரல் வாட்டர் கம்பெனியின் மூத்த வக்கீல் இளவரசு. ‘மிர்சி’ சிவாவின் தாய்மாமா. ஒரு கேசில் இளவரசின் வ(வா)த திறமையால் தனக்கும் தன் தங்கைக்கும் சேரவேண்டிய 5 கோடி மதிப்பிலான பூர்வீக வீட்டை இடிக்கிறார் சிவா. அதனால் சிவாவிற்கும், அவரது தங்கைக்கும் ஏதாவது நல்லது செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இளவரசு. சிபாரிசு பிடிக்காத பிரகாஷ்ராஜின் வாட்டர் கம்பெனி முக்கிய பொறுப்பு நேர்காணலுக்கு, சிவாவை தன் உறவு என காட்டிக்கொள்ளாமல் அனுப்பி வைக்கிறார்.

முருக பக்தரான பிரகாஷ்ராஜை அவரது ரூட்டிலேயே போய் கவிழ்த்து, கவர்ந்து... நாற்பதாயிரம் சம்பளத்துடன் கூடிய அந்த வேலையை கைப்பற்றும் சிவா, அதை தக்க வைத்துக்கொள்ள போடும்‌ டபுள் ஆக்டிங்கும், நான்வெஜ் பார்ட்டியான தற்காப்பு கலை தெரிந்த தம்பி ‘கங்கு-லீ’ என்னும் டிராமாவும் அவர்மீது பிரகாஷ்ராஜின் மகளும் நாயகியுமான இஷா தல்வாருக்கு ஏற்படும் காதலும் கலாட்டாவும்தான் ‘தில்லுமுல்லு’ படத்தின் லொள்ளு ஜொல்லு கதை மொத்தமும்.

முருகபக்தர் பசுபதி - கராத்தே கங்கு-லீ என இருவேறு கெட்-அப்புகளில் மிர்சி சிவா செம பில்டப் காட்டி நடித்திருக்கிறார். பலே, பலே! அதிலும் தீவிர முருகபக்தரான உங்களுக்கு பசுபதிங்கற பெயர் தமிழ் சினிமா வில்லன் மாதிரி இருக்கிறதே...?! என பிரகாஷ்ராஜ் இன்டர்வியூவுக்கு வந்த சிவாவிடம்  திடீரென  கேட்குமிடத்தில், விக்கித்துப்போகும் சிவா, ஒரு சில நொடிகளில் சமாளித்துக்கொண்டு பசுபதிங்கற பெயருக்குள்ளே முருகனின் ஆறுபடை வீடும் அடங்கியிருக்குன்னுதான் எனக்கு அந்தப்பெயரே வச்சாங்க... என்று ‘‘ப-பழனி, சு-சுவாமிமலை, மீண்டும் ப-பழமுதிர்சோலை, கடைசி தி-யில் திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி’’ன்னு 3 படை வீடுகளும் ஒட்டு மொத்தமா அடங்கியிருக்கு. உங்களுக்கு எது பிடிக்குமோ அதை பீல் - பீல் பண்ணிக்குங்கன்னு கொடுப்பாரு பாருங்க ஒரு விளக்கம். தியேட்டரில் அதில் ஆரம்பிக்கும் சிரிப்பு சப்தமும் விசில் சப்தமும் சீன் பை சீன் தொடர்ந்து க்ளைமாக்சிலும் தொற்றிக்கொள்வது ‘தில்லுமுல்லு’ படத்திற்கு மட்டுமல்ல, சிவாவிற்கும் பிளஸ்!

பழைய ‘தில்லுமுல்லு’வில் தேங்காய் சீனிவாசனின் பாத்திரத்தை இதில் பிரகாஷ்ராஜ் ஏற்றிருக்கிறார். சவாலான பாத்திரம் என்றாலும் சபாஷ் வாங்கிவிடுகிறார் மனிதர். சிவா வீட்டில் வேலைபார்க்கும் குப்பத்து மனுஷி கோவை சரளாவை, சிவாவின் அம்மா, முருக அடிமை என நம்பி அவர் காலில் விழும் இடங்களில் பிரகாஷ்ராஜ், சிவாவை மட்டுமல்ல, தேங்காய் சீனிவாசனையே தூக்கி சாப்பிட்டுவிடுகிறார் என்றால் மிகையல்ல!

கோவை சரளா, அலகும் பேசமுடியாத வாயுமாக கிளப்பி இருக்கிறார். கதாநாயகி இஷாதல்வார் கொஞ்சகாலம் தமிழ் சினிமாவில் கிளாமராக காலம் தள்ளுவார். சத்யன், சூரி, இளவரசு, மோனிஷா எல்லாரும் படம் முழுக்க இருந்தாலும் க்ளைமாக்சில் வரும் சந்தானம் இவர்களை பின்னுக்கு தள்ளிவிடுகிறார்.

லக்ஷ்மணனின் ஒளிப்பதிவு அழகு அருமை! எம்.எஸ்.விஸ்வநாதன், யுவன் சங்கர் ராஜாவின் இசையும் ‘தில்லுமுல்லு’ பாடலுக்கு அவர்கள் போடும் ஆட்டமும் இளமை புதுமை! படத்தின் வசனம் மற்றும் காட்சி அமைப்புகளில் பழைய தில்லுமுல்லுவில் இருந்து முற்றிலும் புதுமையாக நிறைய யோசித்து ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்திருந்தாலும் பழைய ‘ராகங்கள்-16’ பாடலை அப்படியே வைத்திருக்கும் இடத்தில் இயக்குநர் பத்ரி நின்றிருக்கிறார் - ‘வென்றிருக்கிறார்’.

வேந்தர் மூவிஸ் எஸ்.மதனின் நேரடி முதல் தயாரிப்பு ‘‘தில்லுமுல்லு’’ என்றாலும், வசூல் -  ‘‘அள்ளு... தள்ளு...’’ என்றளவில் சூப்பர் டூப்பர் ஹிட்!

Friday, June 14, 2013

Anna university - 8th Semester result - 2013

Anna university students can check the 8th semester in Schools9 or annauniv.edu site.

(faster) - http://www.schools9.com/anna-univers...rade140613.htm

(slower) - http://coe1.annauniv.edu/aucoe/forms/index.php

If you have any arrear, your result will be delayed and will come along 2nd and 3 years results.

Thursday, June 13, 2013

தலைமுறை இடைவெளியைக் குறைக்கலாம்...

இப்போதெல்லாம் வீடுதோறும் முதியவர்களின் தனிமையும் இளைய தலைமுறையின் புறக்கணிப்பும் குடும்ப வாழ்க்கையின் அம்சங்களாகிவிட்டன. தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக முதியோரும், அனாவசியமாகத் தங்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டு எந்த முடிவையும் எடுக்க முடியாமல் (முதியோர்) தடுப்பதாக இளைய தலைமுறையும் கருதுகின்றன. இந்த இரண்டுமே சரியல்ல.

மூத்தோர் சொல்லும், முதுநெல்லிக் கனியும் முன்னால் கசக்கும், பின்னால் இனிக்கும் என்பர். இன்றைய தலைமுறையினருக்கு வீடுகளில் முதியவர்கள் பேச ஆரம்பித்தாலே கசக்கிறது. ""உங்கள் காலம் வேறு; எங்கள் காலம் வேறு'' என வியாக்கியானம் செய்து வாயை அடைத்து விடுகின்றனர்.

பல விஷயங்களில் தமது பிள்ளைகள் தெரிந்தே போய் படுகுழியில் விழுகிறார்களே என பெற்றோர்களுக்கு ஆதங்கம். ஆனால், யார் காது கொடுத்து கேட்கிறார்கள்? முதுமைக்கும், இளமைக்கும் தலைமுறை இடைவெளி இருந்தாலும், அது ஒன்று மட்டுமே அவர்கள் புறக்கணிக்கப்படுவதற்குக் காரணம் இல்லை. 

அனுபவமிக்க முதியவர்களின் கருத்துகளால் குடும்ப விவகாரங்களில் சில பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கிறது. ஆனால், பொருளாதார விஷயங்களில் தற்போதைய நடைமுறைக்கு ஒவ்வாத சில ஆலோசனைகளால் பலருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதையும் மறுக்க முடியாது.

தெரிந்த நண்பர் ஒருவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்களது மூதாதையரின் சொத்துகளை விற்று, அதன் மூலம் நகருக்கு அருகில் சில மனைகளை வாங்கிப் போட முடிவெடுத்தார். ஆனால், அவரது தந்தை வலுக்கட்டாயமாகத் தடுத்து, சொத்துகளை விற்றுக் கிடைக்கும் பணத்தை, அரசு வங்கியில் பாதுகாப்பாக "டெபாசிட்' செய்யும்படி வற்புறுத்தினார். கடைசியில், தந்தையின் பேச்சைக் கேட்டு மகனும் அப்படியே செய்தார். 

ஆனால், தற்போது அவர் வாங்க நினைத்திருந்த மனைகளின் சந்தை மதிப்பு எங்கேயோ போய்விட்டது. வங்கியில் போட்டு வைத்திருந்த பணத்தின் மதிப்போ அதல பாதாளத்தில். எப்படியிருக்கும் அவரது மகனுக்கு? இந்தப் பிரச்னையால் ஏற்பட்ட மன உளைச்சலால், ஒரே வீட்டில் இருந்தாலும் தந்தையும், மகனும் சரிவரப் பேசிக் கொள்வதேயில்லை..!

இப்படி எந்த விஷயத்தில் தலையிட வேண்டும்; எதில் தலையிடக்கூடாது எனத் தெரியாமல் முதியவர்கள் பலர் வீடுகளில் அவமானப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை.

மூத்தோரின் மேலான ஆலோசனைகளை நடைமுறைப்படுத்திவிட்டு, பொருந்தாத ஆலோசனைகளை, தான் ஏன் செயல்படுத்தவில்லை என்பதை விவரமாக விளக்கிக் கூறும் பொறுமையும், பக்குவமும் இளையவர்களுக்கு கைகூட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் கூட்டுக் குடும்பங்களும் சிதையாது.

நாம் சொல்வதையே கேட்க மாட்டேன் என்கிறார்களே, என முதியவர்கள் புலம்ப வேண்டிய நிலையும் ஏற்படாது.

அலுவலகம் செல்லும் வழியில் ஒரு பள்ளியை ஒட்டிய மரத்தடி திண்ணை. அதன் அருகே, மாலை வேளைகளில் ஆறேழு முதியவர்கள் எப்போதும் அமர்ந்து மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார்கள். அப்படி, அவர்கள் என்னதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் எனக் கேட்கும் வாய்ப்பு ஒருநாள் கிடைத்தது. பெரும்பாலும் அவர்களது உரையாடலில் தங்களது மகன், மருமகளைப் பற்றிய குற்றங்குறைகளே அதிகம் இருந்தன. அதில், ஒருவர் கூட தங்கள் வாரிசுகளைப் பற்றி நல்லவிதமாகப் பேசவில்லை. என்னதான் வீடுகளில் பிரச்னை என்றாலும், அதை மூன்றாம் மனிதர்களிடம் சொல்லிப் புலம்புவதால் என்ன பயன்?

இதனால், அவர்களுக்கு ஓரளவுக்கு மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைத்தாலும், என்றாவது ஒருநாள், அந்த மூன்றாம் மனிதர் மூலம் அவர்கள் கூறியது பிள்ளைகளுக்குத் தெரியவந்தால் என்ன ஆவது? ஆண்கள்தான் இப்படியென்றால், பெரும்பாலான வயதான பெண்களின் செயல்களும் அவ்வாறே இருப்பது வேதனை அளிக்கிறது.

முதுமைக் காலத்தைப் பற்றிய எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல் பலர் அவஸ்தைப்பட்டு வருவதற்கு, இதுபோன்ற பல காரணங்கள் உண்டு. மகனோ, மகளோ புறக்கணிக்கிறார்கள் என எந்தவொரு முதியவராவது புலம்பினால் அவர்களது குடும்ப உறவுகளைத் தவிர்த்து, மூன்றாம் மனிதர்களால் என்ன செய்து விட முடியும்? அப்படி, அவர்களால் சட்டத்தின் மூலமோ அல்லது ஏதாவதொரு விதத்திலோ நியாயம் கிடைக்க வழி ஏற்பட்டாலும், பின்னாளில் வம்பு, வழக்கு என ஏதாவது வந்து விடுமோ என அஞ்சியே பலரும் ஒதுங்கிப் போய்விடுவது கண்கூடு. சரி, பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

"பயாலஜிக்கல் கிளாக்' (உயிரியல் கடிகாரம்) என்பார்கள்..! அந்த கிளாக் ஒவ்வொருவரின் மூளைக்குள்ளும் இருந்துகொண்டு, காலச்சக்கரச் சுழற்சியில் நம்மை நேர, நியதிப்படி இயங்க வைத்துக் கொண்டிருக்கும். ஐம்பது வயதைக் கடந்தவுடன் அந்த கிளாக்கில் முதல் அலாரம் அடிக்கும்..! அப்போதே உஷாராகிவிட வேண்டும். அறுபது வயதைக் கடந்து விட்டாலோ இன்னும் உஷாராகி விடவேண்டும். தாமரை இலைத் தண்ணீர் போல வாழலாம்.

ஒருவேளை வாரிசுகளால் தனிமைப்படுத்தப்படும்போது, சுயமாக இயங்கும் நிலையில் உள்ள ஒவ்வொருவரும் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு உதவிகளை (பண உதவி மட்டுமல்ல) உண்மையிலேயே சிரமப்படும் பிறருக்குச் செய்ய முன்வர வேண்டும்.

இதன்மூலம் கிடைக்கின்ற புதிய உறவுகளால், நமது நம்பிக்கைகள் பலப்பட்டு முதுமையில் உற்சாகமாக இயங்கத் தெம்பும் கிடைக்கும். அதைவிடுத்து ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம் என எஞ்சிய காலத்தை புலம்பிக் கொண்டு கழிப்பதால், எந்தவொரு நன்மையும் விளையப் போவதில்லை.
 
 இந்த பதிவு தினமணி நாளிதழில் இருந்து பகிரப்படுகிறது.

Wednesday, June 12, 2013

Mail sent by Narayan Murthy to all Infosys staff:

1-If you are working more than 9 hr then dont need to join Infosys.

2-If you are working on saturday and sunday dont join infosys (for IT).

3-Whatever time define in your task complete within time.

Fire all people who fall in criteria 1,2,3.

It’s half past 8 in the office but the lights are still on… PCs still running, coffee machines still buzzing… And who’s at work? Most of them ??? Take a closer look…

All or most specimens are ?? Something male species of the human race…

Look closer… again all or most of them are bachelors…

And why are they sitting late? Working hard? No way!!! Any guesses??? Let’s ask one of them… Here’s what he says… ‘What’s there 2 do after going home…Here we get to surf, AC, phone, food, coffee that is why I am working late…Importantly no bossssssss!!!!!!!!!!!’

This is the scene in most research centers and software companies and other off-shore offices.

Bachelors ‘Passing-Time’ during late hours in the office just bcoz they say they’ve nothing else to do… Now what r the consequences…

‘Working’ (for the record only) late hours soon becomes part of the institute or company culture.

With bosses more than eager to provide support to those ‘working’ late in the form of taxi vouchers, food vouchers and of course good feedback, (oh, he’s a hard worker….. goes home only to change..!!). They aren’t helping things too…

To hell with bosses who don’t understand the difference between ‘sitting’ late and ‘working’ late!!!

Very soon, the boss start expecting all employees to put in extra working hours.

So, My dear Bachelors let me tell you, life changes when u get married and start having a family… office is no longer a priority, family is… and That’s when the problem starts… b’coz u start having commitments at home too.

For your boss, the earlier ‘hardworking’ guy suddenly seems to become a ‘early leaver’ even if u leave an hour after regular time… after doing the same amount of work.

People leaving on time after doing their tasks for the day are labelled as work-shirkers…

Girls who thankfully always (its changing nowadays… though) leave on time are labelled as ‘not up to it’. All the while, the bachelors pat their own backs and carry on ‘working’ not realizing that they r spoiling the work culture at their own place and never realize that they would have to regret at one point of time.

So what’s the moral of the story??
* Very clear, LEAVE ON TIME!!!
* Never put in extra time ‘ unless really needed ‘
* Don’t stay back unnecessarily and spoil your company work culture which will in turn cause inconvenience to you and your colleagues.

There are hundred other things to do in the evening..

Learn music…..

Learn a foreign language…

Try a sport… TT, cricket………..

Importantly,get a girl friend or boy friend, take him/her around town…

* And for heaven’s sake, net cafe rates have dropped to an all-time low (plus, no fire-walls) and try cooking for a change.

Take a tip from the Smirnoff ad: *’Life’s calling, where are you??’*

Please pass on this message to all those colleagues and please do it before leaving time, don’t stay back till midnight to forward this!!!

IT’S A TYPICAL INDIAN MENTALITY THAT WORKING FOR LONG HOURS MEANS VERY HARD WORKING & 100% COMMITMENT ETC.

PEOPLE WHO REGULARLY SIT LATE IN THE OFFICE DON’T KNOW TO MANAGE THEIR TIME. SIMPLE !

Regards, NARAYAN MURTHY