Blogger Widgets

Total Page visits

Tuesday, April 30, 2013

கரூர் ஸ்பெஷல் ’கரம்’.

 

ரம் என்ற சிற்றுண்டி மாலை வேளையில் கரூரில் அநேக இடங்களில் தள்ளு வண்டி கடைகளில் கிடைக்கும் ஒரு காரமாண உணவுப்பொருள்.

ஒரு கப் பொரியுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தேங்காய் சட்னி(காரம் அதிகமாக),கார சட்னி,மல்லி சட்னி,சிறிதளவு பீட்ருட் துருவல், முறுக்கு,மிச்சர் சேர்ந்த கலவையே கரம் எனப்படும்,

இது மிகவும் காரமாகவும் சுவை மிகுந்ததாகவும் உள்ள உணவுப்பொருள்.நாள் முழுவதும் உழைத்து களைத்து பசியுடன் வீட்டிற்கு செல்லும் நேரத்தில் வாங்கி சாப்பிடும் சுகமே தனி.

இதனுடன் அவித்த முட்டையை பொடியாக நறுக்கி சேர்த்தால் ’’முட்டை கரம்’’ என்றும்,பொரிக்கு பதிலாக குடல் அப்பளம் சேர்த்தால் ’’அப்பள கரம்’’ என்றும்,பொரிக்கு பதில் சமோசா சேர்த்தால் ‘’சமோசா கரம்’’ என்று பல விதங்களில் கிடைக்கிறது.

அத்துடன் அந்த தள்ளுவண்டி கடைகளில் இரண்டு தட்டுவடைகளுக்கு(சீடை) நடுவில் கொஞ்சம் வெங்காயம் கார சட்னி,தேங்காய் சட்னி வைத்து தருவார்கள்.இதற்கு ’’செட்’’ என்று பெயர்.இதை அப்படியே வாங்கி மொறுக் மொறுக்கென்று சாப்பிடும் சுவையே சுவைதான்.

இவற்றின் விலையும் ஒன்றும் அதிகம் இருக்காது கரம் விலை ரூ.12-15க்குள் தான் இருக்கும்.’’செட்’’ ஒன்றின் விலை ஒன்று 2 ரூபாய்தான்.

மேலும் இது சரக்கிற்கு ஏற்ற சிறந்த சைட்-டிஷ் ஆக விளங்குவதால் இங்கு உள்ள ஹை-க்ளாஸ் பார்களில் கரம் சைட்-டிஷ் ஆக தரப்படுகிறது(அது உனக்கு எப்பிடி ராசா தெரியும்னு கேக்காம மேல படிங்க).

கரூரில் மையப்பகுதியில் சுமாராக அரை கிலோ மீட்டருக்கு ஒன்றிலிருந்து மூன்று தள்ளுவண்டி கடைகளாவது இருக்கும்.

இதன் ருசிக்கு அடிமையாகி தினமும் வாங்கி சாப்பிட்டால் வயிற்றுப் பிரச்சனைதான் வரும்.வாரம் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிடலாம்.

இந்த கரம் சேலம் ஈரோடு மற்றும் கோபியில் ஒரு சில இடங்களில் விற்பனை செய்யப்பட்டாலும் கரூரே இதற்கு ஃபேமஸ் ஆக விளங்குகிறது.

பார்த்தவுடன் நாக்கில் எச்சில் ஊற வைக்கும் உணவுப்பொருள்களில் இதுவும் ஒன்று.!!

Poto Credits:கோவை நேரம், Received via facebook

Monday, April 29, 2013

உலகமே விலகினாலும் உன்னுடன் இருப்பவனே உண்மையான நண்பன்

ஒரு மனிதன் உயர்வதற்கும், தாழ்வதற்கும் நட்பு ஒரு காரணம் ஆகின்றது. நட்பு மிக சிறந்த பண்பு ஆனால் அதிலும் நாம் சிறிது கவனம் செலுத்த வேண்டும். திருக்குறள் மிக தெளிவாக நட்பை பற்றி சொல்லிவிட்டது.

நகுதல் பொருட்டன்று நட்டல்: மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு
 
நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று; நண்பர் நெறி கடந்து சொல்லும்போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும். நட்பு என்ற உயர்ந்த தத்துவத்தை நாம் இன்று சரியாக புரிந்துகொள்ளவில்லை. இதன் காரணமாக நட்பினால் நாம் இன்று பல துன்பங்களுக்கும் ஆளாகிறோம்.
மிகச்சிறந்த நட்பிற்கு பலர் உதாரணமாக உள்ளனர். நமது இதிகாசங்கள் நட்பை பற்றி அற்புதமாக கூறியுள்ளன. கர்ணன் தனக்கு திறமை இருந்தும் அவன் சத்ரியன் இல்லை என்று கூறி அதைவெளிகாட்ட விடாமல் தடுத்த பலருக்கு மத்தியில் துரியோதனன் அவனுக்கு ஒரு நாட்டை பரிசளித்து ஒரு அரசன் ஆக்கி அந்த போட்டியில் கலந்திட செய்தான். 

அதற்கு பிறகும் துரியோதனன் பல முறை தன் நட்பை கர்ணனுக்கு அற்புதமான முறையில் கட்டியுள்ளான். மகாபாரதத்தில் இவர்கள் நட்பு மிக அற்புதமாக சொல்லப்பட்டிருக்கிறது. இறுதியில் பாண்டவர்கள் தங்கள் சகோதரர்கள் என்று தெரிந்த பிறகும் நட்பிற்காக தீமையின் பக்கம் போராடினான். தன் உயிரை விட்டான். ஆனால் அவனுக்குத்தான் பகவான் கிருஷ்ணர் விஸ்வரூபத்தை முதலில் காட்டினார்.

இன்று சமூகத்தில் மிக சிறந்து விளங்குபவர்கள் பலர் தங்கள் நண்பனின் உதவியால் தான் இவ்வாறு வந்தோம் என்பதை மறக்காமல் நினைவு கூறும்போது நட்பின் வலிமை நமக்கு அற்புதமாக புரியும். இதை திரை துறையில் நீங்கள் அதிகமாக பார்க்கலாம். இன்று உலகம் முழுவதிலும் உள்ள கணினிகளை இயக்கும் சிறந்த ஷிழஜீவறயசலீ மென்பொருளான விண்டோஸ் என்னும் ஒபரேடிங் சிஸ்டம் வடிவமைத்த மைக்ரோசொப்ட(Microsoft)என்னும் உலகின் முன்னணி நிறுவனத்தின் ஸ்தாபகர் ஆன பில்கேட்ஸ் தன்னுடைய நண்பனான பால் ஆலென் ஆரம்ப காலத்தில் செய்த உதவிகளால் தான் உலகின் தலை சிறந்த மென்பொருள் (Software ) நிறுவனத்தை உருவாக்க முடிந்தது.

இன்று உலகின் தலை சிறந்த ERP Software என்னும் அனைத்து விதமான தொழிற்சாலைகளையும் நிர்வகிக்கும் மிக சிறந்த மென்பொருளை வடிமைத்து உலக அளவில் முதன்மையாக விளங்கும் SAP (சேப்) என்னும் ஜெர்மனியை சேர்ந்த மென்பொருள் நிறுவனம் ஐந்து நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்டது தான். இன்று உலகின் அனைத்து ரக பெரிய நிறுவனங்களையும் சரியான முறையில் நிர்வகிப்பது இந்த மென்பொருள் தான். இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களையும் இயக்குவது SAP என்னும் மென்பொருள் தான்.

இந்தியாவில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தனது படிப்பு மற்றும் அயராத உழைப்பு காரணமாக முன்னேறி ஒரு இளைஞன் தனது அலுவலகத்தில் தன்னைப் போல் சிந்திக்கக் கூடிய எழு நண்பர்களை அரவணைத்து அனைவரது உழைப்பாலும் முயற்சியாலும் ஒரு மென்பொருள் நிறுவனத்தை தொடங்கினான். அந்த நிறுவனம் இன்று உலக பிரசித்தி பெற்ற நிறுவனம் ஆகும். கல்லூரியில் நன்றாக படிக்கும் ஒவ்வொரு மாணவ மாணவிக்கும் இன்போசிஸ் என்னும் நிறுவனத்திற்குள் நுழைவது ஒரு கனவாகும். இத்தகைய ஒரு சாதனை சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஏழு நண்பர்களால் முடிந்தது.

இது தான் நட்பின் வலிமை.

இவ்வாறு நட்பினால் உயர்த்த எத்தனயோபேரை நாம் உதாரணம் சொல்ல முடியும். ஆனால் அவை அனைத்தையும் நீங்கள் உற்று பார்த்தால் உண்மையான நட்பு என்றால் என்ன என்பது புரியும். இந்த திருக்குறளை படியுங்கள்.

அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவிண்கண்
அல்லல் உழப்பதாம்நட்பு.

அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி நல்ல வழியில் நடக்கச் செய்து அழிவு வந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.

நண்பன் என்பவன் உங்களை தீமையான பாதைக்கு எப்போதும் அழைத்துச் செல்லமாட்டான். நீங்கள் அவனை எதாவது தீயதான செயல் செய்யலாம் என்று சொல்லி அழைத்தாலும் அவன் உங்களுக்கு அவ்வாறு செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கி நல்லவழி படுத்துவான். இவ்வாறு இன்றி நீங்கள் விரும்பாவிட்டாலும் தீய பாதைக்கு அழைத்துச் செல்லும் ஒருவன் ஒரு காலமும் உங்கள் நண்பனாக இருக்க முடியாது.

பத்தாம் வகுப்பில் நன்றாக மதிப்பெண் எடுத்த ஒரு மாணவன் பன்னிரெண்டாம் வகுப்பில் மிக மோசமாக மதிப்பெண் எடுத்து சில சமயம் தோல்வி அடைவதையும் நாம் இப்போது காண்கின்றோம். இதற்கு 90 சதவீதம் காரணம் மோசமான நட்பாகத்தான் இருக்கும். அதாவது பத்தாம் வகுப்பு வரை மிக நன்றாக பள்ளியில் படித்த ஒரு மாணவன் புதிய பள்ளிக்கு செல்லும்போது அங்கு புதிய நண்பர்கள் கிடைக்கின்றனர். அவர்களிடம் அந்த நல்ல மாணவன் நட்பு பாராட்டுகின்றான். அந்த நண்பர்கள் அவன் மீது ஏற்படுத்தும் தாக்கம் அவன் இரண்டு வருட பள்ளி படிப்பை நிர்ணயம் செய்கிறது. 

அதாவது அதுவரை கல்வியின் மேல் நாட்டம் கொண்ட ஒரு நல்ல மாணவனை மோசமான நட்பு வீண் பொழுதுபோக்கிலும், திரைப்படத்திலும் நாட்டம் ஏற்பட வைக்கிறது. அந்த வயதில் நட்பு மீது தான் அதிக மரியாதை இருக்கும் எனவே பல மாணவர்கள் கூடாத நட்பினால் தங்கள் வாழ்க்கையை இழக்கின்றனர். இரண்டு வருட தவறான நட்பு ஒரு நல்ல மாணவனின் முழு எதிர்காலத்தையும் வீணாக்கி விடும். ஒரு மருத்துவராகவோ அல்லது பொறியியளாளராகவோ வர வேண்டிய ஒரு மாணவனை தவறான நட்பு கடைசியில் மிக மோசமான நிலைமையில் கொண்டு சேர்த்து விடும்.

ஆனால் அதே நேரத்தில் நல்ல நண்பர்களை சேர்த்துக்கொண்டு அனைவரும் சேர்ந்து படித்து எல்லோரும் சந்தேகங்களை பரிமாறி படித்து மிக நல்ல மதிப்பெண் பெற்று மிக நல்ல கல்லூரியில் சேரும் பல நல்ல மாணவர்களை இப்போது நாம் பார்க்கலாம். மாணவர்களே உங்கள் நண்பனை தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருங்கள் உங்கள் நல்ல உயர்ந்த இலட்சியத்தை ஊக்கப்படுத்தும் அதற்கு துணைப்புரியும் ஒருவனை நண்பனாக தேர்ந்தெடுங்கள். 

உங்களை ஊர் சுற்ற வைத்து, மது, புகைப்பிடித்தல் பழக்கத்திற்கு அடிமை ஆக்க வைக்கும் ஒருவனை மறந்தும் கூட உங்கள் நண்பனாக ஆக்கிவிடாதீர்கள்.உண்மையான நண்பன் யார் என்பதை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வது எளிது. சிரிக்கும்போது மட்டும் உடன் இராமல் நீங்கள் அழும்போதும் ஆறுதல் கூறும் ஒருவனே உண்மையான நண்பன். ஒரு அழகிய ஆங்கில வழிச் சொல்லை பாருங்கள்.

‘A real friend is one who walks in when the rest of the world walks out’

அதாவது உலகம் உங்களை விட்டு விலகும்போது எவன் ஒருவன் உங்களை விலகாமல் இருக்கிறானோ அவனே உண்மையான நண்பன்.அரிஸ்டோடில் என்னும் உலகின் சிறந்த கிரேக்க தத்துவ ஞானி நட்பைப் பற்றி ஒற்றை வரியில் சொல்லிவிட்டார்.

‘துன்பங்களின்போது பொய்யான நண்பர்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்’.கார் என்னும் ஊர்தியை கண்டுபிடித்த ஹென்றி போர்ட் இவ்வாறு நட்பை பற்றி அழகாக கூறியுள்ளார்.

‘My best friend is the one who brings out the best in me’

எனது சிறந்த நண்பன் யார் என்றால் எவன் என்னுள் உள்ள சிறந்தவைகளை வெளியில்கொண்டு வருகின்றானோ அவனேயாவான்.இப்போது நாம் நட்பை தவறாக புரிந்துகொள்வதால் எவ்வாறு அவதியுருகிறோம் என்று பார்ப்போம்.நம்மை சுற்றி இருப்பவர்கள் அல்லது நமக்கு தெரிந்தவர்கள் எல்லாம் நம் நண்பர்கள் ஆகிவிடமாட்டார்கள். இதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

நம் அலுவலகத்தில் இருப்பவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் அதில் சிலர் மட்டும் தான் நம் நண்பர்களாக இருக்க முடியும். இங்கே மிக முக்கியமான ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன். இப்போதெல்லாம் முக்கியமாக மிக சிறந்த கல்லூரியில் படித்து துறைக்கு வரும் நல்ல மாணவர்கள் பலர் மது பழக்கம் இன்றி வந்து பிறகு அலுவலகத்தில் இவைகளுக்கு அடிமை ஆகின்றனர். 

அதற்கு காரணம் அவர்களுடன் பணிபுரியும் சிலரே. அதாவது இப்போது விருந்துகளில் மட்டும் குடிப்பதை என்று பெயர் வைத்து அழைக்கின்றனர். ஆனால் மது ஒரு போதைபொருள். அதை ஒரு முறை நீங்கள் சுவைத்துவிட்டால் அது தன் வேலையை காட்டிவிடும் எனவே நீங்கள் சிறிது காலம் விருந்துகளில் மட்டும் குடிக்கும் சோசியல் ட்ரின்கர் என்று சொல்லி கொண்டாலும் பின் ஒரு காலத்தில் நீங்கள் ஒரு குடிகாரர் ஆகபோகின்றீர்கள் என்பது உண்மையே. கசப்பாக இருந்தாலும் இது தான் நிஜம்.

மீண்டும் சொல்கிறேன் தெரிந்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை மிகச் சரியாக புரிந்துகொள்ளுங்கள். உங்களை யாரிடமும் பழகவேண்டாம் என்று நான் சொல்லவில்லை.ஆனால் உங்கள் நலம் விரும்புவோர்களையும், நல்லோர்களையும் நண்பர்களாக ஏற்று கொள்ளுங்கள். மீதம் உள்ள அனைவரையும் தெரிந்தவர்கள், உறவினர்கள், சக ஊழியர் என்று பாகுபடுத்துங்கள்.

பணத்துக்காக, சொத்துக்காக உங்களுடன் சுற்றும் இழிவானவர்களை உங்கள் நண்பர் என்று தலை மேல் தூக்கி வைத்து ஆடாதீர்கள். உங்கள் பணம், பதவி, சொத்து போகும் போது அவர்களும் சென்றிருப்பார்கள். உண்மையை சொல்லப்போனால் அவ்வாறான மோசமான நண்பனே கூட உங்கள் பணத்தை எல்லாம் சுருட்டி சென்றிருப்பான். ஆக உங்களிடம் பணம் அதிகம் இருந்தால் நீங்கள் உங்கள் நண்பர்களை தேர்வு செய்வதில் மிக மிகக் கவனமாக இருங்கள். பணத்துக்காக நண்பனையும் கொலை செய்யும் மோசமான நபர்கள் இன்று நிறையவே உண்டு. நண்பர்கள் தேர்வில் நிதானம் தேவை. 

உலகின் தலை சிறந்த மனிதர்கள் உருவாவதற்கு நட்பு மிக முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அது நூற்றில் பத்து, மிகுதி தொண்ணூறு சதவீதம் நட்பினால் என்ன ஆகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. மீண்டும் சொல்கிறேன் யாரையும் விலக்காதீர்கள். ஆனால் சரியான நண்பனை விட்டு விடாதீர்கள் அவனை அடையாளம் காண்பது எளிதல்ல.

எல்லோருமே எனக்கு நண்பர்கள் தான் என்பவனுக்கு உண்மையில் யாரும் நெருகிய நண்பர்களாக இருக்க முடியாது. அவனுக்கு எல்லாரையும் தெரியும் அவ்வளவுதான். நெருங்கிய நண்பர்கள் என்றால் ஒருவனுக்கு மிக சிலர் தான் இருக்க முடியும் காரணம் ஒரு நண்பன் என்ற நிலையில் இருந்து நெருங்கிய நண்பன் என்ற நிலை வர பல நாட்கள் ஆகும். 

ஆனால் எல்லா துன்பங்களிலும் தோள் கொடுத்து, இன்பங்களில் பங்குபற்றி, தோல்வியில் தேற்றி விட்டு, வெற்றியை உற்சாகப்படுத்தி, சந்தோஷத்தை அதிகப்படுத்தும் ஒருவனே உண்மையான நெருங்கிய நண்பன். பணம் வரும் போது வருபவனும், பதவிக்காக உடன் இருப்பவனும் நண்பன் இல்லை. உண்மையான நட்பு உங்கள் வாழ்கையை உயர்த்தும், பொய் மற்றும் தவறான நட்பு உங்களை அழித்து விடும்.

நட்பு தத்துவங்கள்







Source Google images

அறிஞ்சர்களின் தத்துவங்கள்













  

Source Google Images

தள்ளிப்போடும் பழக்கத்தை தள்ளிப் போடுங்கள்...

வெற்றிக்கு தடைக்கல்லாக இருக்கும் தள்ளிப்போடும் பழக்கத்தை கொஞ்சம் தள்ளி வைக்கலாமே.....

தேர்வு தான் முடிந்து விட்டதே, அதோடு அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் படிக்க துவங்கினால் போதும் தேர்வை வெற்றிகரமாக எழுதி விடலாம் என்ற எண்ணம் மாணவர்களிடையே தோன்றுவது இயல்பு தான். ஆனால் அந்த எண்ணத்தை இன்றோடு கைவிடுங்கள். இதனால் இழக்கக்கூடிய விஷயங்கள் என்ன என்று சிந்தித்து பாருங்கள்.

தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேறி கொண்டிருக்கும் உலகத்தில், மாணவர்கள் படித்து பட்டம் பெற்றால் போதும், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை தானாகவே கிடைத்து விடும் என்று கண்முடித்தனமாக நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அது தவறான எண்ணமாகும்.

பள்ளி பருவத்தில் இருந்தே மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். படிப்பு, பொது அறிவு, கணினி அறிவு, சரளமாக ஆங்கிலம் பேசும் திறமை என்று அனைத்திலும் சிறந்து விளங்கினால் தான், ஒரு துறை இல்லையென்றால் வேறு துறைகளில் கால் பதிக்க முடியும்.

தற்போது எந்த துறைக்கு சென்றாலும் போட்டி தான். படிக்கும் மாணவர்கள் அதிகமாகி விட்டதால் போட்டியும் அதிகமாகி விட்டது. போட்டியில்லாமல் ஏதேனும்  துறை உண்டா? என்றால் இல்லையென்று தான் கூற முடியும். போட்டி நிறைந்த உலகத்தில் மாணவர்கள்  எந்த எந்த வகையில்  முன்னேறலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்க வேண்டும். தன்னுடைய திறமை என்ன? எந்த துறையில் நுழைந்தால் ஜெயிக்க முடியும் என்று நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

உங்களின் வெற்றி உங்களின் விருப்பப்படி தான் அமைய வேண்டுமே தவிர மற்றவர்களின் ஆலோசனையோ, கட்டாயமோ இருக்க கூடாது. எந்த செயலை  எடுத்தாலும் நாளை பார்த்துக் கொள்ளலாம், நாளை பார்த்துக் கொள்ளலாம்...என்று தள்ளிப் போடுவதை விட இன்றைக்கு முடித்து விட்டு, நாளைக்கு புதிதாக என்ன செய்யலாம் என்று நினைக்க வேண்டும்.

நாளை என்று தள்ளிப்போடுவதினால், உங்களின் வெற்றியும் உங்களை விட்டு ஒதுக்கி தள்ளிப் போய் கொண்டே இருக்கும். எனவே மாணவர்கள் பள்ளியில் நடத்தும் பாடங்களை அன்றைய தினமே படித்து முடிக்கலாம். படிப்பதென்றால் அரை குரையாக படித்துவிட்டு, மறந்து போவது அல்ல. முழு மனதுடன் புரிந்து படிப்பதாகும். ஒரே நாளில் ஒரு வருடப் பாடத்தை மூளை சுமக்காது. எனவே அன்றைய தினமே முடித்து விடுவது நல்லது. படித்ததை எழுதி பார்த்தால் எளிதில் மறந்து போகமாகல் இருக்கும். தேர்வு நேரத்தில் சுமை குறைவதோடு, சுலபமாக மதிப்பெண்களை அல்ல முடியும்.

தள்ளிப்போடும் மனப்பான்மையேத் தவிர்ப்போம், வெற்றி பெறுவோம்.
 
Thanks Dinamani

பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியும் வேலை வாய்ப்பும்....

நாம் நான்கு ஆண்டுகள் பொறியியல் துறையில் எதைப் படித்தோம் என்பதை விட நாம் எதை வெளிப்படுத்துகின்றோம் என்பதில் நம் வெற்றி அடங்கியுள்ளது. வளாக வேலை வாய்ப்பில் பல நிறுவனங்கள் 75% மதிப்பெண்கள் 10வது, 12வது, பட்ட வகுப்பில் பெற்று இருக்க வேண்டும். படிக்கின்ற காலக் கட்டத்தில் எந்தவொரு பருவ நிலையிலும் (Semester ) தேக்கநிலை (Failure ) அறவே இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து இருக்க வேண்டும். 

வளாக வேலை வாய்ப்பின் முதல்நிலை ‘எழுத்துத் தேர்வு’ என்பது அனைத்து நிறுவனங்களுடன் மேற்கொள்ளும் ஓர் முதல்நிலை பகுதியாகும். ஆகவே மாணவ / மாணவியர்கள் நிறுவனங்கள் நடத்தும் தேர்வு எப்படிப்பட்டது என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும். சில புத்தக கடைகளில் விற்கும் மூன்றாம் தர புத்தகங்களை வாங்கிப் படிக்கும் சமயம் உங்களுடைய திறமை தரம் இழக்கும் வாய்ப்பு உள்ளது. 

பல நிறுவனங்கள் நடத்தும் தேர்வு முறையில் கேள்விகள் கீழ்கண்டவாறு வருகின்றன. அதே முறையில் உங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். 

+2 நிலை: பல நிறுவனங்கள் நடத்தும் கேள்வித் தாள்களை ஆராய்ந்து பார்க்கும் சமயம், சராசரியாக 20 மதிப்பெண்கள் +2 நிலையில் உள்ள வேதியியல், இயற்பியல், கணிதம், கணிப்பொறி அறிவியல் சார்ந்து உள்ளது. மாணவ / மாணவியர்கள் சற்றே வியப்புடன் பார்க்கலாம். நாங்கள் அனைவரும் பொறியியலின் நான்காம் வருடத்தில் படித்துக் கொண்டு இருக்கின்றோம்; இந்த நிலையில் +2 கேள்விகள் தேவையா என்ற அதிர்ச்சி தோன்றலாம். ஆனால், ஆராய்ச்சியாளர்கள் (Item wise analysis) என்ற நிலைப்பாட்டில், இந்தியா முழுவதிலும் தேர்வு முறையைக் கண்காணித்துக் கொண்டும், அதில் கேட்கப்படும் கேள்விகளை ஆராய்ந்து, அதில் எத்தனை மாணவ / மாணவியர்கள் சரியான பதிலை எழுதுகின்றனர் என்று கணக்கிட்டுப் பார்த்தால், நமக்கு அதிர்ச்சி தரும் உண்மைகள் பல வெளியாகின்றது. 

+2 நிலைச்சார்ந்த வேதியியல், இயற்பியல், கணிதம், கணிப்பொறி அறிவியல் சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்கும் சமயம் 73% சதவீத மாணவ / மாணவியர்கள் ‘0’ மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்

என்று நாம் பார்க்கும் சமயம், நம்மை எல்லாம் அது அச்சுறுத்தும் உண்மையாகப் புலப்படுகின்றது. ஏன் இதை குறிப்பிட்டுக் காட்டுகின்றோம் என்றால், இதுப் போன்ற கேள்விகளுக்கு இவர்களுக்கு விடைத் தெரியவில்லை என்று நாம் கருதி விடக் கூடாது. மாறாக படித்த பலத் தகவல்களை, கல்வி அறிவை, அடிப்படை அறிவை நாம் கவனத்தில் நிறுத்த மறந்து விடுகின்றோம். எந்த காரணத்தினாலும் அடிப்படைகளை மனதில் நிறுத்தாமல் மேலே சென்றால், அடித்தளம் என்றைக்கும், எப்பொழுதும் வலுவாக இருக்கும். 

வளாக வேலை வாய்ப்பு தேர்வு என்பது எப்பொழுதும் பல வியக்கத்தகு கேள்விகளை உருவாக்கும். புதிய புதிய சிந்தனைகளுக்கு வழி வகுக்கும். கேள்விகளை உருவாக்குபவர்கள் தங்களது அறிவு நிலையான உச்சத்தில் இருப்பவர்கள். மாணவ / மாணவியர்களே தரத்தில் தாழ்ந்த புத்தகங்களையோ அல்லது அனைவரும் பயன் படுத்தும் ஒரே மாதிரியான புத்தகங்களை படித்தோ, பயிற்சி என்ற பெயரில் ஒரு சில அவசர அறிவாளிகள் தரும் உண்மைக்கு புறம்பான தகவல்களையோ, செய்திகளையோ கேட்டு தோல்வியை தழுவி விடாதீர்கள். 

தயார் செய்து கொள்ளுங்கள்! மாணவ / மாணவியர்களே. ஒவ்வொரு தொகுதியிலும் கேட்கப்படும் கேள்விகளை சார்ந்து நம்மை நாமே தயார் செய்து கொள்ள வேண்டும். எவ்வாறு :

1. உங்களை அறிவுள்ள +2 பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு மேற்கூறிய பாடத்தில் அவர்களுக்கு உதவுங்கள்: உதவும் நேரத்தில் நீங்களும் பலத் தகவல்களை மறக்காமல் இருக்க உதவும்.

2. கல்லூரிகளுக்கும் ஆசிரியர்களின் உதவியோடு நேரம் கிடைக்கும் சமயத்தில் எல்லாம் ‘வினாடி வினா’ நிகழ்ச்சிகளை நடத்தி, பல்வேறுச் செய்திகளை அன்றாடம் நினைவிற்கு கொண்டு வாருங்கள்.

3. பத்திரிக்கைகள், செய்தித் தாள்கள், ஊடகங்களில் வரும் தகவல்களை எல்லாம் தினசரிப் படித்து குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள். 

4. தொலைக் காட்சிகள், ஒரு சில சேனல்களில் ஒளிப்பரப்படும் அறிவியல் துறைச் சார்ந்த 26 நிகழ்ச்சிகளைப் பார்த்து அறிவியல் உண்மைகளை பல்வேறு பரிமானங்களை அறிந்துக் கொள்ளுங்கள்.

5. +2 தேர்வில் கேட்கப்படும் வினாத்தாள் தேர்ந்து எடுத்து அதற்கு விடை எழுதி சரி பார்த்து. கொண்டே வாருங்கள். 

6. ‘அறிவியல் அறிவோம்’ போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள்.  இவ்வாறு நீங்கள் முயற்சி எடுக்கும் சமயம், அடிப்படையில் நீங்கள் மிக வலுவாக இருக்கின்றீர்கள் என்று பொருள்படும். மற்றவர்கள் எதை எல்லாம் சாதாரணம், எளிது என்று கருதுகின்றார்களோ அவைகள் தான் தேர்வு நேரத்தில் நம்மை கீழே தள்ளி விடும். நேர மேலாண்மை என்பது மிகமிக முக்கியம் என்பதை உணர வேண்டும். 

பலர் இப்பகுதியில் 0 மதிப்பெண்கள் வாங்கும் சமயம், சரியான திட்டமிடுதலால் 20 மதிப்பெண்கள் வாங்கினால் வெற்றியின் முதல் படிக்கட்டு உனக்கு வசப்படும்.
 
Thanks Dinamani

விடுமுறையை வீணாக்க வேண்டாம்

ஓய்வு என்றால் என்ன? எந்த வேலையும் செய்யாமல் "சும்மா' உட்கார்ந்திருப்பது தான் ஓய்வு என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஓய்வு என்பது நாம் செய்து கொண்டிருக்கும் வேலையில் தவறு மற்றும் சலிப்பு ஏற்படாமல் இருக்க, தாற்காலிகமாக வேறு பணியைச் செய்து நம் உடலையும், மனதையும் உற்சாகப்படுத்திக் கொள்வதாகும். 

காலம் பொன் போன்றது; மனிதன் தன் வாழ்க்கையில் பணம், பதவி, பொன், பொருள் என எதை இழந்தாலும் மீண்டும் பெற்று விடலாம். ஆனால், காலம் என்ற ஒன்றை மட்டும் மீண்டும் பெறவே முடியாது.

ஓய்வு என்ற பெயரால் காலத்தை வீணடிக்கும் சோம்பேறித்தனமே நம் முன்னேற்றங்களுக்கெல்லாம் முட்டுக்கட்டையாக இருக்கிறது.

ஓய்வுபற்றிய இந்த சோம்பேறிக் கோட்பாடு, நமது குழந்தைகள் இதயத்திலும் வேரூன்றத் தொடங்கியுள்ளன. ஆண்டு முழுவதும் படித்துக் களைத்து, தேர்வுகளும் முடிந்துவிட்டதால், வரும் மே மாதம் முழுவதும் ஓய்வு எடுக்கப் போவதாகக் கூறி, காலை பொழுது விடிந்தது முதல், இரவு உறங்கச் செல்லும் வரை தொலைக்காட்சி பெட்டியே கதியெனக் கிடந்து தங்கள் உடலையும், மனதையும் கெடுத்துக் கொள்கின்றனர் அல்லது கொளுத்தும் கோடை வெயில் முழுவதும் என் தலையில் தான் என கையில் கிரிக்கெட் மட்டையைத் தூக்கிக் கொண்டு மைதானத்துக்கு ஓடிவிடுகின்றனர்.

மாணவர்களின் இதுபோன்ற விடுமுறைக் காலங்களைப் பயனுள்ளதாக மாற்றுவது பெற்றோரின் கைகளில் தான் உள்ளது. ஒவ்வொரு விடுமுறையிலும் மாணவன் கற்றுக் கொள்ளும் ஏதேனும் ஒரு விஷயம், அவன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பயனளிக்குமாறு அவர்களின் விடுமுறைக் காலத்தைப் பயனுள்ள வழியில் கழிக்க நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.

உதாரணமாக, இப்போதெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் அப்பாவுக்கு, அம்மாவுக்கு, அண்ணனுக்கு என நான்கைந்து செல்போன்கள் உள்ளன. அவற்றில் பழுது ஏற்பட்டால் சரி செய்ய உதவும் செல்போன் சர்வீஸிங் பயிற்சிக்கு ஆண் பிள்ளைகளை அனுப்பலாம். இதன் மூலம் தங்கள் வீட்டு செல்போன் மட்டுமின்றி, நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்திலுள்ளவர்களின் செல்போன்களைப் பழுது நீக்கி, பகுதிநேர தொழிலாகக் கூட செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் இயற்கையாகவே அவருக்கு அத்துறையில் ஆர்வம் எற்பட்டு, எதிர்காலத்தில் மிகச் சிறந்த பொறியாளராகவோ அல்லது விஞ்ஞானியாகவோ கூட வர வாய்ப்புள்ளது.

பெண் குழந்தைகளைத் தையல் பயிற்சிக்கு அனுப்புவதன் மூலம்  தங்களுக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் தேவையான ஆடைகளை அவர்களே தைத்துக் கொள்வதோடு மட்டுமின்றி, அக்கம்பக்கத்தினருக்கும் தைத்துக் கொடுக்க வாய்ப்பளிக்கலாம்.

தன்னுயிரை மட்டுமின்றி, ஆபத்துக் காலங்களில் பிற உயிர்களையும் காக்க உதவும் நீச்சல் பயிற்சி, வீட்டு உபயோகப் பொருள் பழுது நீக்கும் பயிற்சி, தற்காப்பு கலைப் பயிற்சி மற்றும் மகளிருக்கான சமையல், கணிப்பொறி, தட்டச்சுப் பயிற்சி என கோடை காலப் பயிற்சிகள் ஏராளமாக உள்ளன.  சிறு குழந்தைகளுக்கு ஓவியப் பயிற்சி, கணிதம், கையெழுத்துப் பயிற்சி என தினசரி 2 மணி நேரம் ஒதுக்கினாலே போதும், அவை அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நற்பயனை அளிக்கும். இவ்வாறு பல துறைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்கள் எத்துறையில் ஆர்வத்துடன் செயல்படுகிறார்கள் எனக் கண்டறிந்து, அவர்களை அத்துறையிலேயே ஈடுபடுத்தி வாழ்வை வளமாக்க முடியும்.

ஆனால், நாமோ நம் நேரத்தையெல்லாம், டி.வி. மற்றும் கணிப்பொறி முன் பலி  கொடுத்துவிட்டு, ஓய்வு என்ற பெயரில் சோம்பேறியாக வாழவே நம் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்கிறோம்.

நமது தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் கூறியபடி, ஒரு மாணவன் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் புத்தகப் படிப்பையும், 4 மணி நேரம் தொழில் படிப்பையும் பயில வேண்டும், அதுவே அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்.

இல்லையில்லை! நாங்கள் கோடை விடுமுறைக்கு சுற்றுலா தான் செல்வோம் என்றாலும் தவறில்லை. ஆனால், அந்தச் சுற்றுலாவும் குழந்தைகளுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

சுற்றுலா செல்லுமிடத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பற்றியோ, பழமையான கோவில்களைப் பற்றியோ குழந்தைகளுக்கு அக்கறையுடன் விவரியுங்கள். நமது நாட்டின் பாரம்பரியக் கலாசாரப் பெருமைகளை உணர்த்தும் இடங்களுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லுங்கள்.
  
மேற்கூறிய எதையும் செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை, முடிந்தால் உங்கள் உறவினர்களின் வீடுகளுக்காவது விடுமுறைக்குச் சென்று வாருங்கள். அப்போது தான் மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா, தாத்தா, பாட்டி என உறவுகளின் மகத்துவத்தைக் குழந்தைகள் உணர்வார்கள். வீணாக தொலைக்காட்சி, கணினி முன் அமர்ந்து மனதையும், வெயிலில் அலைந்து உடலையும் கெடுத்துக் கொள்ளாமல் விடுமுறைக் காலத்தை பயனுள்ளதாகப் பயன்படுத்திய திருப்தி நமக்குக் கிடைக்கும்.
 
Thanks Dinamani

மாறிவரும் உலகில் எப்படி வெற்றியடைவது?

அகப்பார்வை, நுணுக்க சிந்தனை, மீளும் திறன், குழுப் பணி, வலுவான தகவல்தொடர்பு, நேர மேலாண்மை மற்றும் படைப்புத்திறன் ஆகிய அம்சங்கள், ஒருவரின் வெற்றிக்கான அடிப்படை அச்சாரங்கள்.

இன்றைய நிலையில், மாற்றமானது மிக விரைவாக நிகழ்ந்து வருகிறது. டிஜிட்டல் புரட்சியால், தகவல்கள், விரைவாகவும் எளிதாகவும் கிடைப்பதால், விதிமுறைகள் மாறிவிட்டன. ஐ.பி.எம்., விளம்பரம் ஒன்று இவ்வாறு கூறுகிறது, "அமெரிக்காவிலுள்ள அனைத்து நூலகங்களிலுமுள்ள தகவல்களைக் காட்டிலும், அதிகமான தகவல்கள் ஒரு நாளில் உருவாக்கப்படுகின்றன" என்பது தான் அது. இத்தகவல்களை பெறுவது மிகவும் எளிதான ஒன்றாகவும் இருக்கிறது. மொபைலில் இண்டர்நெட் போன்றவை இவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

விரைந்த மாற்றத்திற்கான சில உதாரணங்களை இங்கே பார்க்கலாம்;

கடந்த 2006ம் ஆண்டில், ஒவ்வொரு மாதமும், 2.5 பில்லியன் கூகுள் தேடல்கள் இருந்தன. ஆனால், 2008ல் அந்த எண்ணிக்கை 30 பில்லியனை தொட்டது. தற்போது, அது 100 பில்லியனாக உள்ளது.

இண்டர்நெட் வசதியுள்ள சாதனங்களின் எண்ணிக்கை, கடந்த 1984ம் ஆண்டில், 1000 என்ற அளவில் இருந்தது. 1992ம் ஆண்டில் 1 மில்லியன் என்ற அளவிற்கு வந்தது. அதேசமயம், 2008ம் ஆண்டில் 1 பில்லியனாக உயர்ந்தது. அந்த எண்ணிக்கை இந்த 2013ம் ஆண்டில் அந்த அளவு 1 டிரில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்ப தகவல்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு 2 வருடத்திலும் இரு மடங்காக அதிகரிக்கின்றன. எனவே, பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், தங்களின் முதலாமாண்டில் படித்த விஷயங்கள், அவர்கள் மூன்றாமாண்டு செல்லும்போது காலாவதியாகி விடுகின்றன. எதிர்கால பணி செய்யும் உலகம், விரைவாக மாறிக்கொண்டிருக்கும் ஒன்றாக உள்ளது. எனவே, தற்போதைய மாணவர்கள், எதிர்காலத்தில், தங்களின் வாழ்க்கை முழுவதும் ஒரே மாதிரியான பணியை பெறுவார்களா? என்பதை நம்மால் கூற முடியாது.

ஒரு சராசரி பணியாளர், தனது 40 வது வயதை அடையும்போது, குறைந்தபட்சம் 10 பணிகளுக்கு மாறியிருப்பார் என்று அமெரிக்க தொழிலாளர் துறை கூறுகிறது. இதுபோன்ற நிலை இந்தியாவிற்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது. எதிர்கால வேலைவாய்ப்பு சந்தையைப் பற்றி ஒரு சமீபத்திய வீடியோ கிளிப் இவ்வாறு கூறுகிறது, "இப்போது நடைமுறையில் இல்லாத பணிகளுக்காகவும், இதுவரை கண்டுபிடிக்கப்படாத தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்காகவும், இதுவரை அறியப்படாத சிக்கல்களை தீர்ப்பதற்காகவும் நாங்கள் மாணவர்களை தயார்படுத்துகிறோம்" என்பதுதான் அது.

தற்போது பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கும் மாணவர்கள், தாங்கள் படிக்கும் அம்சங்கள், எதிர்காலத்தில் தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் பணிக்கு தொடர்பற்றதாக இருப்பதை உணர்வர். ஏனெனில், உலகம் அந்தளவு வேகமாக மாறிக்கொண்டுள்ளது. இங்கேதான், வெற்றிக்கான உண்மை தேவைகளை புரிந்துகொள்ள வேண்டிய தேவை எழுகிறது. இக்கட்டுரையின் முதலில் சொல்லப்பட்ட அம்சங்கள் தான் அவை. பல்வேறான துறைகளை சார்ந்த தொழில் நிபுணர்களுடன் விரிவான கருத்துப் பரிமாற்றம் செய்த பின்னரே, மேற்கூறிய வெற்றிக்கான அம்சங்கள் அடையாளம் காணப்பட்டன. ஒருவர், எந்த துறையில் நுழைந்தாலும், அதில் அவர் வெற்றிக்கொடி நாட்ட, மேற்கூறப்பட்ட 7 பண்புகளும் இன்றியமையாதவை.

வெற்றிக்கான அம்சங்கள்

நுணுக்க சிந்தனை

மிகவும் சிக்கலான பிரச்சினைகளை தீர்க்க, அதிநுட்பமாக சிந்திக்க வேண்டும். அப்போதுதான், செயல்படுத்தும் வகையிலான பரிந்துரைகளைப் பெற முடியும்.

படைப்பாக்கம்

தற்போதைக்கு நடைமுறையில் இருக்கும் விஷயங்களை தாண்டிச் சென்று சிந்தித்து, புதிய முறைகளையும், புதிய எண்ணங்களையும் உருவாக்க வேண்டும்.

வலுவான தகவல்தொடர்பு

பல்வேறான பின்னணிகளைக் கொண்ட நபர்களை, ஆர்வமூட்டி உற்சாகப்படுத்த, அந்த புதிய எண்ணங்களை, சிறப்பான வகையில் தெரிவிக்க வேண்டும்.

குழுப் பணி

நிர்ணயிக்கப்பட்ட கருத்தாக்கங்களின்படி, லட்சியத்தை அடைய, குழுவுடன் சேர்ந்து, ஒற்றுமையுடன் பணிபுரிய வேண்டும்.

மீளும் திறன்

பாதிப்பு ஏற்பட்டால், அந்த நிலையிலிருந்து விரைவில் மீண்டு, பழைய நிலையை அடையும் திறனைப் பெற்றிருக்க வேண்டும்.

நேர மேலாண்மை

விஷயங்களின் முக்கியத்துவம் அறிந்து, அதற்கேற்றவாறு, ஒவ்வொன்றுக்கும் நேரத்தை ஒதுக்க வேண்டும்.

அகப்பார்வை மற்றும் பதிலீடு

உங்களைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்களையும் தாங்கிக் கொண்டு, அதற்கேற்ப நம்மை மாற்றிக்கொள்ளும் திறனைப் பெற்றிருக்க வேண்டும்.

பெற்றோர்களும், நமது கல்வித் திட்டமும், இத்தகைய தன்மைகளை குழந்தைகள் பெறும் வகையில், அவர்களுக்கு உதவ வேண்டும். வெறுமனே ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு, மாணவர்களுக்கு கற்பித்தலைப் போல், இந்த செயல்பாடு அவ்வளவு எளிதானதல்ல.

தொடர்ந்த அனுபவங்கள், பல்வேறான பின்னணிகளைக் கொண்ட மக்களிடத்தில் பணிசெய்தல் மற்றும் வாழ்வின் பல்வேறான கட்டங்களில், நம் உடன் பணிபுரிவோர் மற்றும் வாழ்பவர்களுடனான பரிமாற்றங்கள் ஆகியவற்றின் மூலமே அந்த தகுதிகளை அடைய முடியும். மேற்கூறப்பட்ட 7 பண்புகளைப் பெற்ற ஒருவர், வாழ்க்கையில் பெறும் வெற்றிகளுக்கு அளவேயிருக்காது.

இத்தகைய பண்புகளைப் பெற்றிருக்கும் ஒருவர், ஒரு குறிப்பிட்ட பணியிலோ அல்லது நாட்டிலோ மட்டும் வெற்றியடைவதில்லை. மாறாக, அவர் எந்த துறைக்கு மாறினாலும் அல்லது எந்த நாட்டிற்கு சென்றாலும், வெற்றி அவரைத் தேடிவரும். ஏனெனில், தினந்தோறும் பெரியளவிலான மாற்றங்களை சந்தித்துவரும் இந்த உலகில், வெற்றிக்கான பண்புகளைப் பெற்றால்தான், இளையதலைமுறை சாதித்து, நிலைத்து நிற்க முடியும்.

Thanks Dinamalar 

பயின்றதை பயிற்சி செய்வதன் மூலம் மட்டுமே இலக்கை அடைய முடியும்

இந்தியாவின் கல்வி முறை ஒரு தனி நபரின் ஆளுமைத் தன்மையை மேம்படுத்துவதற்கென்று எந்தவித பிரத்யேக முயற்சியையும் செய்யும் விதத்தில் வடிவமைக்கப்படவில்லை. எனவே, மென்திறன்கள் குறித்த விழிப்புணர்வை பெறுவதுதான் நிறுவனத்தில் அடுத்த நிலைகளை எட்டுவதற்கு உதவும் என்பது வல்லுனர்களின் கருத்தாகும்.

மென்திறன் பயிற்சிகள் இது குறித்த புரிதலை ஓரளவு ஏற்படுத்த உதவும் என்பதால் முறையான பயிற்சி நிறுவனங்களின் மூலமாக அவற்றை மேற்கொள்வது நமது பணி எதிர்காலத்திற்கான உத்திரவாதத்தை தர முடியும். ஆனால் பயின்றதை பயிற்சி செய்வதன் மூலம் மட்டுமே நமது இலக்கை அடைய முடியும் என்பதை மறந்து விடக்கூடாது.

உங்களுக்கு நீங்களே பயிற்சியாளராக மாறுங்கள்!

நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் திறன்களை வளர்ப்பதற்கு என்று பல லட்சம் ரூபாய்களை மூலதனமாக இடுகின்றன. பயிற்சி, திறன் மேம்பாடு என்று பல்வேறு முயற்சிகளை இந்த நிறுவனங்கள் மேற்கொண்ட போதும் தனி நபரின் புரிதல் மட்டுமே நிறுவனம் மற்றும் ஊழியரின் எதிர்கால வளர்ச்சிக்கு முழுமையாக உதவ முடியும். எனவே தனி நபராக ஒருவர் வளர்த்துக் கொள்ள வேண்டியவற்றை இங்கே தருகிறோம் :

குழுவின் அங்கமாக மாறுங்கள்

நாம் ஒரு சர்ச்சின் பாடல் குழுவின் ஒரு பகுதியாக இருந்தாலும் சரி, ஒரு என்.ஜி.ஓ., அமைப்பில் இருந்தாலும் சரி, பெரிய நிறுவனத்தில் பணி புரிந்தாலும் சரி  நாம் இணைந்திருக்கும் குழுவின் அங்கமாக மாறுவது முதல் தேவையாகும். இந்தக் குழுவின் தன்மைகளை முழுமையாக ஒத்திருக்கிறோமா என்ற சுய பரிசீலனையை மேற்கொள்ள வேண்டும்.

உங்கள் குணங்களை பட்டியலிடுங்கள்

உங்களை நன்றாகத் தெரிந்த நான்கு அல்லது ஐந்து பேரிடம் உங்களின் சிறந்த மற்றும் மோசமான குணாதிசயங்களை பாரபட்சமின்றி பட்டியலிடச் சொல்லுங்கள். அவர்கள் உங்கள் குடும்பத்தினராகவோ அல்லது உங்கள் நெருங்கிய நண்பராகவோ இருக்கலாம். 

இந்தப் பட்டியலில் ஒத்திருக்கும் விஷயங்களில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். முக்கியமாக உங்கள் எதிர்மறை குணாதிசயம் என்ற கோணத்தில் ஒத்துப் போகும் அம்சங்கள்தான் உங்கள் குறைபாடுகள் என்பதால் அவற்றைக் களைவதில் கவனம் செலுத்துங்கள்.

உங்கள் நேரத்தை நீங்கள் எப்படி நிர்வகிக்கிறீர்கள் என்பதை அறியுங்கள்

ஒரு நாளில் நீங்கள் எவ்வளவு சாதிக்கிறீர்கள் என்று யோசியுங்கள். உங்களின் நாள் அதிகபட்ச செயல்களுடன் தட்டித் தடுமாறுகின்றனவா அல்லது நீங்கள் சாதிப்பதற்கு போதுமான கால அவகாசம் உள்ளதா என்று பாருங்கள். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் பணி புரிவதற்கு நேர மேலாண்மை என்பது முக்கியத் தேவையாகும்.

பரிசீலனைகளை எப்படி ஏற்கிறோம்?
 
நிறுவனங்களில் ஒரு முயற்சியின் போது நமது செயல்களுக்கு வரும் கருத்துகளை நாம் ஏற்றுக் கொள்கிறோமா அல்லது முடங்கிவிடுகிறோமா என்று பாருங்கள். அதே போல் நம்மைப் பற்றிய விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறோமா என்று யோசியுங்கள்.

விமர்சிப்பதில் நீங்கள் எப்படி?

எப்படி நம்மைப் பற்றிய விமர்சனங்களை எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் போன்றே நாம் மற்றவர்களை எப்படி விமர்சிக்கிறோம் என்பதும் முக்கியம்தான். நாம் கடுமையாக விமர்சிக்கிறோமா, எதிர்மறையாக விமர்சிக்கிறோமா, நல்ல முறையில் விமர்சிக்கிறோமா அல்லது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறோமா என்ற பரிசீலனையில் ஈடுபடுங்கள்.

விழிப்புடன் வாழுங்கள்

ஒரு நிறுவனம் என்பது மனிதர்களால் நிறைந்தது. எனவே இந்த மனிதர்களிடம் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் மற்றும் உங்களை எப்படி இவர்களிடம் காட்டிக் கொள்கிறீர்கள் என்பது குறித்ததுதான் மென்திறன்கள்.
இவற்றைப் பற்றி எழுதுவதோ, சொல்வதோ எளிதான ஒன்று என்ற போதும் மென்திறன் குறித்த விழிப்புணர்வுதான் அவற்றை மேம்படுத்த உதவும் என்பதை மனதில் வையுங்கள்.

Thanks Dinamalar

ஏ.ஐ.சி.டி.இ.,யின் பணி என்ன? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

"பல்கலைக்கழகங்களுக்கு ஆலோசனை கூறுவது தான், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் பணி. பல்கலைகளால் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள், எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., பாடங்களுக்கான அங்கீகாரம் பெறுவதற்கு, தொழில்நுட்பக் கவுன்சிலின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை" என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஏ.ஐ.சி.டி.இ., ஒப்புதல் பெறுவது தொடர்பாக, சென்னை ஐகோர்ட், ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. அதில், "எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., போன்ற படிப்புகளுக்கு, பல்கலைக்கழகங்கள், ஏ.ஐ.சி.டி.இ.,யின் ஒப்புதல் பெற வேண்டியதில்லை என்றாலும், பல்கலைகளின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள், ஒப்புதல் பெற வேண்டும்" என, தெரிவிக்கப்பட்டிருந்தது.இதை எதிர்த்து, தமிழகத்தைச் சேர்ந்த, சில தனியார் கல்லூரிகள், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தன. இந்த மனுக்கள், பி.எஸ்.சவுகான், கோபால கவுடா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் பல்கலை மானியக் குழு சட்டங்களின் படி, கல்லூரிகளுக்கு எந்தவிதமான தடை மற்றும் உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரம், தொழில்நுட்பக் கவுன்சிலுக்கு இல்லை. வழி காட்டும் குறிப்புகள், பரிந்துரைகள் உள்ளிட்ட ஆலோசனைகளைத் தான், பல்கலை மற்றும் கல்லூரிகளுக்கு, தொழில்நுட்பக் கவுன்சில் வழங்க முடியும்.
பல்கலைகளின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள், எம்.சி.ஏ., மற்றும் எம்.பி.ஏ., பாடங்களுக்காக, தொழில்நுட்பக் கவுன்சிலின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை. தொழில்நுட்பக் கவுன்சில் விதிமுறைப்படி எம்.சி.ஏ., பாடம் தான், தொழில்நுட்பக் கல்வி வரம்பிற்குள் வருகிறது; எம்.சி.ஏ., இந்த வரம்பிற்குள் வரவில்லை. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Thanks dinamalar

K.Ramakrishnan College of Engineering

Wanted
Professor, Associate Professor, Assistant Professor
MECH
ECE
CSE
EEE
CIVIL
MATHS
PHYSICS
CHEMISTRY
ENGLISH 

K.Ramakrishnan College of Engineering
Samayapuram,
Trichy-621112.
Phone: 0431-2670699
Cell: 9865220477, 9842472577, 9842111377
Email: krce.trichy@gmail.com 

For More Details READ:
April 28, 2013 Dinamalar Pg.13 Dindigul
April 28, 2013 Dinamalar Pg.14 Theni

Sunday, April 28, 2013

ஐடி துறையில் பணிபுரிவோர்களுக்கு சுகி.சிவம் கூறும் அறிவுரை


நீங்கள் கூடுதல் புத்திசாலிகள்- கெட்டிக்காரர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பளிச்சென்று பிடித்துக் கொள்ளும் கூர்மதி உங்களுடை யது. வெற்றி என்பது உங்களுக்கு ஒரு விளையாட்டுப் பொருள். வாழ்க!

பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல! உங்களின் பெற்றோர் தங்களது பணிக் காலத்தின் இறுதியில் வாங்கும் ஊதியத் தொகையை, நீங்கள் முதல் மாதமே வாங்கி விடலாம். அதற்காக, அவர்களை விடவும் நீங்கள் அதிபுத்திசாலி என்றோ, திறமையாளர் என்றோ, பெரிய மனிதராகவோ எண்ண வேண்டாம்.

உறவினர்களை அற்ப ஜந்துக்கள் போல நினைக்க வேண்டாம். தம்பி- தங்கைகளைப் படிக்க வைக்க நிறைய செலவு செய்யுங்கள். குடும்பத்தின் பந்த- பாசத்தை, இணைய தளத்தில் டௌன் லோட் செய்ய முடியாது! வெளிநாட்டுப் பணம் வரலாம்... வெளிநாட்டுப் பண்பாடு வரலாமா? பிற மனிதர்கள் எல்லோருமே நாம் பயன்படுத்திக் கொள்ள மட்டும் அல்ல!

பத்து ரூபாய் கூடுதல் சம்பளம் என்றதும் கம்பெனியைக் கைகழுவுவது கொஞ்ச காலம் பெருமையாகத் தெரியலாம். ஆனால், ஒரு நாள்... இந்தத் துறையின் செயல்பாடே இதனால் ஸ்தம்பிக்க வாய்ப்பிருக்கிறது.

உணவு, உறக்கம், ஓய்வு, காலா காலத்தில் இல்லாதபடி உடம்பை- மன தைச் சீர்குலைத்தால், 40 வயதுக்குப் பிறகு உயிர் வாழ்வதே பிரச்னை யாகி விடும். யோசியுங்கள்.

எப்போதும் ஏ.ஸி-யில் இருப்பதால், உங்களுக்கு வியர்வையே வருவதில்லை. அது, உடலுக்குக் கெடுதல். உடலை வியர்க்க விடுங்கள். தண்ணீர்த் தாகம் எடுக்காத போதும் நீர் அருந்துங்கள். கண்ட கண்ட குளிர்பானங்கள் குடிப்பதை விட்டு விட்டு, எலுமிச்சை, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை சாறு அருந்துங்கள். பார்லியும் சேர்த்துக் கொள்ளுங்கள். தினந்தோறும் நிகழ வேண்டிய காலைக் கடனை முடிக்க மாத்திரைகள் சாப்பிடுவதும் நல்லதல்ல. கண்களிலும் கவனம் வையுங்கள்.

உட்கார்ந்தே இருப்பதால் எடை கூடும்; சர்க்கரை அதிகரிக்கும். கொலஸ்ட்ராலும் பழுத்துக் கிடக்கும். மூளைக்கு வேலை என்பதால் ரத்த அழுத்தமும், சக்கைப் போடு போடும். எல்லாவற்றையும் எதிர்பார்த்து வெற்றி கொள்ளுங்கள்.

காதலிக்கும்போது அல்லது திருமணத்துக்குப் பெண் தேடும் போது... சம்பளம், வேலைவாய்ப்பு, செலவழிக்கும் இயல்பு போன்றவற்றை இரண்டாம்பட்சமாக வைத்துக் கொண்டு, ஒழுக்கம், குணம், பண்பாடான குடும்பம் ஆகிய விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

'இன்று போலவே என்றும் சம்பளம் வரும்' என்று கனவு காணாதீர்கள். சிக்கனமாக செலவழிக்கப் பழகுங்கள். உங்களால் அதிகம் செலவழிக்க முடியும் என்பதற்காக, சிரமப்பட்டு சம்பாதிப்பவர்களது மனம் புண்படும்படி ஜம்பம் அடிக்காதீர்கள். அந்நிய நாட்டின் தயவில் அதிகம் சம்பாதிப்பவர்களாகிய பலரும் இந்த நாட்டு வெற்றிக்கு உழைப்பவரை இளக்காரமாக நினைக்காதீர்கள்.

வெளிநாடுகளில் வேலை பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பும் போது, ஓட்டல்களில் தங்கிக் கொண்டு... உறவினர்களை- அம்மா- அப்பாவை, ''என்னால் வர முடியாது. இங்கு வந்து பார்... ஆட்டோவுக்கு வேண்டு மானால் காசு தருகிறேன்!'' என்று கூறி அசிங்கப்படுத்தாதீர்கள். பணத்தை விட ரத்தம் கனமானது.

வெளிநாடுகளில் பிறந்து வளரும் குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி குறைவு என்பது உண்மைதான். என்றாலும் சிறிது நேரமாவது தாத்தா- பாட்டி... அதாவது உங்களின் பெற்றோர், உங்கள் பிள்ளையைக் கொஞ்சு வதற்கு- உணவு ஊட்டுவதற்கு அனுமதி கொடுங்கள்.

உங்களை காயப்படுத்துவதாக இந்த பதில் அமைந்தால், என்னை மன்னியுங்கள்! உங்களை நோகடிப்பது எனது நோக்கம் அல்ல. இவை யாவும், உங்களைப் போன்றோரின் பெற்றோர்கள், உங்களிடம் சொல்ல முடியாமல் என்னிடம் புலம்பிய புலம்பல்கள்.

இணையத்தில் படித்ததில் பிடித்தது இங்கு பகிர்கிறேன்.  

படுவேகத்தில் பைக்கை பறக்க விடுபவரா நீங்கள் : உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்!


படுவேகத்தில் டூவீலர்களை ஓட்டுவோருக்கு மதுரையில் நடந்த விபத்து ஒரு பாடம்.இப்போதெல்லாம், டூவீலரை 'ஸ்டார்ட்' செய்து விட்டாலே, பலருக்கு ராக்கெட்டில் பறக்கும் நினைப்பு வந்து விடுகிறது. 'கட்' அடித்து, பஸ்களுக்கு இடையேயும், பிளாட் பாரத்திற்கு மேலேயும் பாய்ந்து சென்று, மற்றவர்களை கவர அல்லது மிரட்ட நினைக்கின்றனர். 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தான், இதை சாகசமாக நினைத்து, இப்படி ஓட்டுகின்றனர்.'பெண்கள் நம்மை பார்க்க வேண்டும். ஹீரோவாக நினைக்க வேண்டும்' என்பது இந்த இளைஞர்களின் எதிர்பார்ப்பு. அதிலும், வாகனத்தின் பின்னால் காதலி அமர்ந்தி ருந் தால், இளைஞர்களுக்கு இன்னும் கொஞ்சம் வீரம் 'பொத்துக்கொண்டு' வந்து விடும். வண்டியின் வேகம் அதிகரிக்கும். தரையில் படுமாறு வண்டியை சாய்த்து, ரொம்ப அதிகமாகவே 'கட்' அடித்து, ஹீரோத்தனத்தை வெளிப்படுத்துவர்.எப்போதுமே இந்த 'ஹீரோத்தனம்' வெற்றி பெறாது என்பதை இவர்கள் புரிந்து கொள்வதில்லை. சில நேரங்களில் விபத்துகளுக்கு 'ஓவர் ஸ்பீடு' காரணமாகி, வாழ்க்கையையே தொலைக்க வேண்டி வரும் என நினைப்பதில்லை.

இதற்கு உதாரணம், மதுரை பை-பாஸ் ரோட்டில் நடந்த விபத்து.ஆரப்பாளையத்தில் இருந்து ஒரு அரசு டவுன் பஸ், திருமங்கலத்திற்கு புறப்பட்டது. பை-பாஸ் ரோடு ராம் நகர் காலனி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருந்தது. அப்போது அதே திசையில் ஒரு டூவீலரில் இருவர் (ஹெல்மெட் அணியவில்லை), படுவேகத்தில் பறந்து வந்தனர். பஸ்சை முந்த நினைத்த பைக்கை ஓட்டி வந்தவர், பஸ்சிற்கும் ரோடு மீடியனுக்கும் இடையே புக முயன்றார்.இவர் வருவதை எதிர்பாராத டிரைவர், பஸ்சை லேசாக நகர்த்தினார். அவ்வளவு தான், வந்த வேகத்தில் பஸ்சின் பின்பக்க ஓரத்தில் பைக்காரர் மோதி, கீழே உருண்டார். 'ஐயோ, அம்மா' என கத்தியபடி மயங்கினார். முழங்காலுக்கு கீழ், இடது கால் எலும்பு உடைந்து கால் வளைந்தது. பைக்கின் பின்னால் அமர்ந்திருந்தவரும் கீழே விழுந்து, எழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் இல்லை. இருப்பினும், அவரால் எழுந்து, பைக் ஓட்டி வந்தவரை தூக்க முடியவில்லை.

ஏனென்றால் பரிதாபம்... அவர் கால்கள் ஊனமுற்றவர். அவரது ஊன்றுகோல்கள் விழுந்து கிடந்தன. பைக்கின் பின்னால் அமர வைத்து, ஓட்டி வந்தவரை தன்னால் காப்பாற்ற முடியவில்லையே என்ற ஆதங்கத்தில், ரோட்டில் அமர்ந்தபடி, தரையை அடித்து, அடித்து அழுதுகொண்டு இருந்தார். பார்த்தவர்கள் கண்கள் கலங்கின. அங்கிருந்தவர்கள், விபத்தில் சிக்கியவரை, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கால்களை இழந்தவரை அமர வைத்து ஓட்டும்போது கூட, உடல் உறுப்புகளின் அருமை தெரியாமல் இருந்திருக்கிறாரே அந்த இளைஞர் என்பது தான் கொடுமையிலும் கொடுமை. இளைஞர்களே... பைக்கின் வேகத்தை 'முறுக்கும்' முன், 'இந்த வேகம் தேவையா' என சிந்தியுங்கள். உங்களை நம்பி பெற்றோர், உடன்பிறந்தோர், மனைவி, குழந்தைகள் உள்ளனர் என்பதை மறக்காதீர்கள்.

நன்றி : தினமலர்

கணினி சூப்பர் மென் பொருள் வைரசுக்கு ஆப்பு

இன்று பல்வேறு நிறுவனக்களில் இருந்து கணினியை பாதுகாக்க அண்டி வைரஸ் மென் பொருள்கள் வந்தாலும் .இதை எல்லாம் உடைத்து விட்டு வைரஸ் எப்படியோ நமது கணினி யை பதம் பார்த்து விடுகின்றது .இவற்றுக்கெல்லாம் முற்று புள்ளி வைக்கும் விதத்தில் ஒரு மென்பொருள் உண்டு அவற்றை பற்றி தான் இப்போ பார்க்க போகிறோம் .
 
                        இந்த மென்பொருளை நான் நமது கணினி இல் நிறுவியதும் task பார் இல் வந்து இது உட்காந்து கொள்ளும்   அந்த icon இல்  நாம் shift key ஐ அழுத்தி கொண்டு இரண்டு முறை click பண்ண வேண்டும் .அப்போது ஒரு சாரளம் திறக்கும்.
                      

" Deep Freeze மென்பொருளை கணினியில் Install செய்யும் போது எந்த எந்த Drive களுக்கு பதியப்பட வேண்டும் என கேட்கப்படும் இடத்தில் C:\ இனை மாத்திரம் தெரிவு செய்து Install செய்து விட்டு Deep Freeze மென்பொருளுக்கு Password ம் கொடுத்து விட்டால் இனியாராலும் C:\ இனுள் மாற்றங்கள் செய்ய முடியாது. எந்தஒரு வைரசும் உங்கள் கணினியை பாதிக்காது. அப்படி ஏதாவது வைரஸ் வந்தால் கவலைப்பட வேண்டியதில்லை ஒருமுறை கண்னியை Restart செய்தால் போதும் C:\ பழைய நிலைக்கு வந்துவிடும்.
C:\ இனுள் மாற்றங்கள் செய்ய வேண்டுமாயின் அல்லது புதிய மெண்பொருள் ஏதாவது Install செய்ய வேண்டுமாயின் System Tray இல் உள்ள Deep Freeze Icon மீது Shift Key உடன் சேர்த்து இரட்டை Click செய்யவும் Status on next boot எனும் இடத்தில் Boot Thawed என்பதை Click செய்து OK செய்து Restart செய்தபின் C:\ இனுள் தேவையான மாற்றங்களை செய்யலாம். C:\ இனுள் தேவையான மாற்றங்களை முடித்தபின் Status on next boot எனும் இடத்தில் Boot Frozen என்பதை Click செய்து OK செய்து Restart செய்யவும்."

இந்த மென்பொருளையே Net Cafe களிலும், கல்வி நிலையங்களிலும், பொது இடங்களில் உள்ள கணினிகளிலும் பயன்படுத்துகின்றனர்.
சுட்டி http://www.mediafire.com/?loitzyljyjv
 
இந்த பதிவு http://tamilthrones.blogspot.in என்னும் வலை பதிவில் இருந்து அனைவரும் அறிய இங்கு பகிரபடுகிறது .

Screenshot எடுக்க ஒரு சூப்பர் மென்பொருள்...

நாம் அன்றாடம் பயன்படுத்தும் கணினியிலிருந்து ஒரு சில தேவைகளுக்காக அப்படியே திரையில் உள்ளதை படமாக எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். உதாரணமாக, ஒரு விளக்க குறிப்பு கொடுக்க வேண்டுமெனில் கணினியில் உள்ளதை அப்படியே படம்பிடித்து, அவற்றை அம்புகுறியிட்டு விளக்க முடியும். 

இணையத்தில் உள்ள இணையப் பக்கங்களை ஒரு படமாக சேமிக்கவும் இந்த Screen Shot முறை பயன்படும். தரவிறக்கம் செய்ய முடியாத படங்களை இந்த ஸ்கீரீன் ஷாட் முறையில் காப்பி செய்து பிறகு, போட்டோ எடிட்டர் போன்ற மென்பொருள்களின் மூலம் தேவையான முறையில் மாற்றம் செய்துகொள்ள முடியும். 

சாதாரணமாக கணினிகளில் Screenshot எடுப்பது எப்படி என்பதைப் பார்ப்போம். 
 கணினி விசைப்பலகையில்  Print Screen அழுத்தி, திரையை காப்பி செய்துகொண்டு, Paint, Photoshop, Photo Editing Software போன்ற ஏதாவது ஒன்றில் புதிய கோப்பைத் திறந்து அதில் அப்படத்தை பேஸ்ட் செய்து பிறகு வேண்டிய மாற்றங்களைச் செய்து தேவையான பார்மட்டில் படமாக சேமிக்கலாம்.
இவ்வாறு செய்வதற்கு சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். ஒவ்வொரு முறையும் இவ்வாறு செய்துகொண்டிருப்பது ஒரு வித சலிப்பை ஏற்படுத்திவிடும். வீணாகும் நேரத்தை தவிர்க்க, உடனடியாக ஸ்கிரீன் ஷாட் எடுத்து படங்களாக சேமிக்க  பயன்படும் மென்பொருள் ரேப்பிகேப்வின் - RapiCapWin. 
RapiCapWin மென்பொருளின் சிறப்புகள்: 
  • இது இரண்டு வகைகளில் கிடைக்கிறது. கணினியில் நிறுவி பயன்படுத்தும் முறையிலும், போர்ட்டபிள் வெர்சனாகவும் கிடைக்கிறது. 
  • இம்மென்பொருள் மூலம் கணினிதிரையை முழுவதுமாக படம் பிடிக்கலாம். (full screenshot)
  • கணினித்திரையிலுள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் படம் பிடிக்கலாம். (Specific area screenshot)
  • காட்சிக்குத் தெரியும் கணினித் திரையை (Active Window Screenshot) படம்பிடிக்கலாம். 
  • எடுக்கப்பட்ட ஸ்கீரான்சாட்டை தொடர்புடைய மென்பொருளில் திறந்துகொள்ளும் வசதி,
  • படம் தேவையில்லை எனில் உடனடியாக டெலீட் செய்யும் வசதி
  • ஆன்லைனில் பகிர்ந்துகொள்ள வசதி
  • இமெயில் அனுப்பும் வசதி
636kb அளவுகொண்ட இச்சிறிய மென்பொருள் முற்றிலும் இலவசமானது மட்டுமின்றி பாதுகாப்பானதும் கூட.
 
மென்பொருளைத் தரவிறக்கம் செய்யவும், மென்பொருளைப் பற்றிய மேலதிக தகவல்கள், வசதிகளைத் தெரிந்துகொள்ளவும் நீங்கள் சொடுக்க வேண்டிய

Hi friends,
This post explained about the screenshot software named RapiCapWin.  This is free software to take screenshots. It is free software; it presents three classical modes of capture.
1. Full Screenshot
2. The active window
3. A rectangular area
Software File size is 636 KB. Version 1.0.9, Free License, No spyware, No ad-ware

இந்த பதிவு தங்கம்பழனி  என்னும் வலை பதிவில் இருந்து அனைவரும் அறிய இங்கு பகிரபடுகிறது .

யாருடா மகேஷ் - சினிமா விமர்சனம்


கல்லூரி படிப்பையே முழுமையாக முடிக்காத ஒருவன் காதல்வயப்பட்டு திருமணம் செய்து கொண்டு, பிள்ளையையும் பெற்றுவிட்ட பின்பும் பொறுப்பு வராமல் தேமே என்று திரிகிறான். அவனுக்கு புத்தி வருவதற்காக மனைவியின் சகோதரரான ஒரு மனநல மருத்துவர் போடும் நாடகம்.. கடைசியில் அந்தக் குடும்பத்தையே பிரிக்க நினைக்கிறது.. அவனது குழந்தை அவனுக்குப் பிறக்கவில்லை.. யாரோ ஒரு மகேஷ் என்பவனுக்கு பிறந்திருக்கிறது என்று மனைவியே சொல்வது போல டிராமா போட.. கணவன் அதை நம்பி ரொம்ப சீரியஸாக அந்த மகேஷை தேடி, தேடி அலைவதுதான் படம்..! ம்ஹும்.. புதிய சிந்தனைகள் தேவைதான்.. ஆனால் அதற்காக இந்த அளவுக்கு இறங்கணுமா என்ன..?

அத்தோடு படம் முழுவதும் விரவியிருக்கும் டபிள், டிரிபிள் மீனிங் டயலாக்குகளை நினைத்தால் இதன் இயக்குநரை உச்சி முகிர்ந்து பாராட்ட தோன்றுகிறது.. எப்படியும் ஏ சர்டிபிகேட்டுதான்.. டிவியில் காட்ட முடியாது.. குழந்தைகளுடன் வர மாட்டார்கள்.. வரிவிலக்கு கிடைக்காது.. எல்லாம் தெரிந்தும் ஏ படம்தான் எடுத்திருக்கிறேன் என்று தைரியமாக இதன் இயக்குநர் சொல்கிறார்.. இதன் பாதிப்பு சத்தியமாக இவருக்கு இல்லை. ஆனால் சினிமாவுலகத்துக்கு நிச்சயமாக கிடைக்கும்..! ஏற்கெனவே சேட்டை படம் பார்த்து பேஸ்த்தடித்துப் போன குடும்பஸ்தர்கள் இன்னும் 3 மாதங்களுக்கு தியேட்டர் பக்கம் வரப் போவதில்லை.. இப்போது இந்தப் படம்.. இதையும் பார்த்துவிட்டு ஓடுபவர்களால் அடுத்து வரவிருக்கும் சின்ன பட்ஜெட் படங்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும்..! இது எங்கே இவர்களுக்குப் புரியப் போகிறது..? 

அப்பாவும், மகனும் ஆபாச படம் பார்க்க அலைவது.. ஹீரோ, ஹீரோயினில் துவங்கி படத்தின் அனைத்து கேரக்டர்களும் ஆளுக்கொரு வசனமாக டபுள் மீனிங்கை அள்ளி வீசியிருக்கிறார்கள்..! வழக்கம்போல கல்லூரி ஆசிரியர், ஆசிரியைகளை சம்பந்தப்படுத்தி ஒரு ஆபாச திரைக்கதை..! கல்லூரி ஆசிரியரும் அப்படியே வசனங்களை பேசுகிறாராம்..! ரோபா சங்கர்-அரவாணி சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுவதும் தேவைதானா..? யாரைத் திருப்திப்படுத்த இப்படியெல்லாம் சீன் வைக்கிறார்கள்..? இப்படி எடுத்தால் இளைஞர் கூட்டம் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வரும் என்று நினைத்துவிட்டார்கள் போலும்..! நல்ல நினைப்புதான்..!

ஹீரோ சந்தீப்.. திரும்பிப் பார்க்க வைக்காத முகம்.. இது மாதிரியான சப்பையான கேரக்டர்களுக்கு தோதானவர்.. உண்மையாகவே நடித்திருக்கிறார் இடைவேளைக்கு பின்பான காட்சிகளில் மட்டும்..! மச்சி மச்சி என்று அலையும் ஜெகனின் பல கமெண்ட்டுகள் ஆபாசமாகவே இருந்தாலும் தியேட்டரில் கை தட்டல்கள் ஒலிக்கின்றன. ஆச்சரியமாக இருக்கிறது.. எப்படி ரசிக்கிறார்கள் இதையெல்லாம்..? இவரும், இவரது மனைவியும் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிஜமாகவே நடப்பது போல அழகாக எடுக்கப்பட்டிருக்கிறது..! 

அதேபோல் அந்த டிரெம் செட் மகேஷின் ட்ரூப் ஸாங் சீனும் ரசிக்கும்படியிருந்தது..! சிங்கமுத்து காமெடி வழக்கம்போல வழவழவென்றாலும் அந்த இரவு நேர கல்யாணத்தின்போது தியேட்டரே அதிர்ந்தது..!   சிற்சில இடங்களில் நகைச்சுவையை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதால் இந்த மாதிரியான வசனங்களையும் மீறி ரசிக்க முடிகிறது..!

ஹீரோவுக்கு நேரெதிராக ஹீரோயின் டிம்பிள்.. அழகோ அழகு.. சின்னப் பொண்ணு.. பாடல் காட்சிகளிலும் நெருக்கமான படுக்கையறை காட்சிகளிலும் வஞ்சகமில்லாமல் நடித்திருக்கிறார்.. காட்டியிருக்கிறார்.. இப்போது வாரத்திற்கு 4 ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள் என்பதால், இப்படி எல்லாவற்றுக்கும் முந்தினால்தான் நிலைக்க முடியுமென்று யாரோ சொல்லிக் கொடுத்திருப்பார்கள் போலும்..! 

கோபிசந்தரின் இசையில் பாடல்கள் ஒலித்தன. எதுவும் காதில் விழுகவில்லை.. ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடிய அம்மணியை வலைவீசித் தேட வேண்டும்.. என்னவொரு ஸ்டிரெச்சர்..? எங்கேயிருந்து பிடித்தார்கள் என்று தெரியலையே..? டூயட் பாடல்களைத் தவிர சோகப் பாடல்களில் இசை மட்டுமே பிரதானமாக இருக்க.. பாவம் ஹீரோ.. கத்தி, கத்தி பாடி தன் தொண்டைத் தண்ணியை வற்ற வைத்திருக்கிறார்..!

நான் ராஜாவாகப் போகிறேன் படத்தில் ஹீரோயின் சுய இன்பம் அனுபவிப்பதை நுட்பமாண காட்சியாக திணித்திருந்தார்கள். அடுத்தது இந்தப் படம்.. ஏற்கெனவே தெலுங்கில் இதேபோல பல சின்ன ஹீரோக்களும் நடித்துக் காட்டிவிட்டார்கள். இதில் இந்த ஹீரோ..! இது இப்படியே எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை..!

அந்த டிரெயின் காட்சிகள்.. சுவாமிநாதனும், பெண் ஆசிரியையும் சம்பந்தப்பட்ட காட்சிகள்.. டிரெயினில் முதல் இரவு செட்டப்பு.. காண்டம் வாங்கி தயாராவது.. என்றெல்லாம் இன்றைய யூத்துகளுக்கான காட்சிகளாக நினைத்து வைத்திருந்தால்.. ஸாரி.. இதன் இயக்குநர் ரொம்பவே பின்னாளில் கண்டிப்பாக ஃபீல் செய்ய வேண்டி வரும்..!  

கல்லூரி, படிப்பு, காதல், கல்யாணம் என்று வரிசையாக வந்திருக்க வேண்டியதற்கு முன்பேயே காதல், உடல்சுகம், கல்யாணம் என்று மாற்றியெடுத்து கல்லூரியையும், படிப்பையும் அப்படியே அந்தரத்தில் தொங்க விட்டதில் படத்தின் தன்மையே மாறிவிட்டது.. 

காதல், கல்யாணம், சந்தேகம் என்றாவது வந்திருந்தால் ஒரு வழக்கமான சினிமாவாக வந்திருக்கும்.. இப்படி ரெண்டுங்கெட்டானாக எடுத்துத் தொலைத்திருப்பதால் இதனை பிட்டு படமாகவும் பார்க்க முடியவில்லை. தியேட்டரில் தைரியமாக முகத்தைக் காட்டி பார்க்க வேண்டிய சினிமாவாகவும் நினைக்க முடியவில்லை..!  இதன் இயக்குநர் மதன்குமார், அடுத்த படத்தில் தன்னைத் திருத்திக் கொண்டால் திரையுலகத்துக்கு பெரிதும் நல்லது.

Saturday, April 27, 2013

என்று தணியும் இந்த ஐ.பி.எல். மோகம்?

கிரிக்கெட் என்றாலே ரசிகர்கள் அதிகம்; அதுவும் விவரம் தெரிந்த ரசிகர்கள்! கிரிக்கெட் ரசிகர்களைப் பைத்தியங்கள் என்று அழைப்பதில் மற்றவர்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் மற்றெந்த விளையாட்டுகளில் இல்லாத சில தனித்துவம் கிரிக்கெட்டுக்கு இருப்பதுதான் அதன் கவர்ச்சி.

கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மட்டுமே தொடர்ந்து சிந்தித்து அந்த விளையாட்டில் புதுமைகளைப் புகுத்திக்கொண்டே வருகிறார்கள். 5 நாள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஆதரவு குறைகிறது என்றதும் ""ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்'' என்ற பெயரில் தலா 50 ஓவர்கள் பந்து வீசும் ஆட்டத்தைக் கொண்டுவந்தார்கள். அந்த 50 ஓவர்கள் போட்டிக்கும் ஈர்ப்பு குறைகிறது என்றதும் இப்போது தலா 20 ஓவர்கள் வீசும் ஐ.பி.எல். போட்டிகளைக் கொண்டுவந்துவிட்டார்கள். 

கிரிக்கெட்டில் மட்டும்தான் ஓய்வும் - பரபரப்பும் ஒருசேரத் தொடரும் புதுமையான அமைப்பு அமைந்திருக்கிறது. பந்து வீசப்பட்டு அதை பேட்ஸ்மன் தடுத்துவிட்டாலோ அடித்து எல்லைக்கோட்டுக்கு அப்பால் அனுப்பிவிட்டாலோ அத்துடன் அந்த செயல் முடிகிறது. அடுத்த பந்து வீசப்படும்வரை ரசிகர்களுக்கு மைதானத்தில் நடப்பதைப் பார்க்கவும் ரசிக்கவும் நேரம் இருக்கிறது. கால்பந்து, வாலிபால், பூப்பந்து, வளைபந்து என்று எல்லா போட்டிகளிலும் ஆட்டம் தொடங்கியது முதல் முடிவுவரை பந்தின்மீதுதான் ரசிகர்கள் கவனம் செலுத்த முடியும்.

கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மன் ஆட்டம் இழந்து அடுத்தவர் வரும் வரையிலும், ஓவர்கள் மாறும்போதும், பந்து திரட்டப்படும் வரையிலும், பந்து மாற்றும்போதும் என்று பல இடைவேளைகள் வந்துகொண்டே இருப்பதால் தொலைக்காட்சியில் விளம்பர ஒளிபரப்பாளர்களுக்கு வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. அதிலும் ரன் அவுட்டா, கேட்சா, எல்பிடபிள்யூவா என்ற கேள்விகள் வரும்போதெல்லாம் தனி விளம்பரங்கள். இந்தக் காரணங்களால்தான் கிரிக்கெட் போட்டிகளை தொழில் நிறுவனங்கள் பெரிதும் ஊக்குவிக்கின்றன.

கடைசி பந்தில்தான் ஆட்டத்தின் முடிவே தீர்மானிக்கப்படுகிறது என்பது பல போட்டிகளுக்கு விறுவிறுப்பைக் கூட்டிவிடுகின்றன என்பதை மறுக்க முடியாது.

கிரிக்கெட் போட்டியை நடத்துவதால், ஒளிபரப்புவதால், பத்திரிகைகளில் பிரசுரிப்பதால் பணம் கிடைக்கிறது என்பதால் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், செய்தி ஊடகங்கள் என்று அனைவருமே ஆர்வம் செலுத்துகின்றனர். இவ்வளவு இருக்கும்போது ஐ.பி.எல். மோகம் தணியும் என்று நம்புவதோ தணியவேண்டும் என்று விரும்புவதோ கூட பைத்தியக்காரத்தனமாகவே பார்க்கப்படும்.

இருந்தாலும், ஐ.பி.எல். போட்டிகளால் கிரிக்கெட்டுக்கே சில தீமைகள் வந்து சேரும் என்ற எண்ணத்தையும் தெரிவிக்காமல் இருக்க முடியவில்லை. டெஸ்ட் கிரிக்கெட், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைவிட ஐ.பி.எல்.லுக்கு அதிகப்பணம் தரப்படுவதால் ஆட்டக்காரர்கள் தங்களுடைய உடல் நலனைக்கூடப் பொருள்படுத்தாமல் அல்லது உடலில் காயம்படும் அளவுக்கு விளையாடுகிறார்கள். இதில் நிரந்தர ஊனமோ காயமோ ஏற்பட்டால் கிரிக்கெட் போட்டியிலிருந்தே அவர்கள் விலக நேரிடலாம்.  ஐ.பி.எல். அணிகளின் பெயர்களில் வேண்டுமானால் சென்னை, தில்லி, மும்பை, புணே, கொல்கத்தா என்று இருக்கலாம். எந்த அணியிலுமே அந்த நகர அல்லது மாநில வீரர்கள் மட்டுமே கிடையாது. அணித்தலைவர் வேறு ஊரை அல்லது நாட்டைச் சேர்ந்தவராகக்கூட இருக்கிறார்கள். எதற்கு இந்த ஊர் பெயர்? ஊர் விசுவாசம்?

தேசிய அணியில் இடம்பெறாவிட்டாலும் பரவாயில்லை, ஐ.பி.எல்.லில் இடம் கிடைத்தால் போதும் என்ற எண்ணம் பல கிரிக்கெட் வீரர்களுக்கு வரத் தொடங்கிவிட்டது.

ஐ.பி.எல். போட்டிகள் ஆண்டுத் தேர்வுகள் நடைபெறும் சமயத்தில் நடக்கிறது. இது பள்ளிக்கூட, கல்லூரி மாணவர்களின் கவனத்தைச் சிதைக்கிறது. பலருடைய படிப்பு பாழாகி ஓராண்டு படிப்பே வீணாகிறது.

ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் நட்சத்திர ஹோட்டல்களில் நடக்கும் ஆட்ட - பாட்ட நிகழ்ச்சிகள் விளையாட்டு வீரர்களுக்கு நல்லதல்ல. கலாசார சீர்கேடு என்று நாசூக்காக இதைக் குறிப்பிடுவதே போதுமானது.

 விவசாயத்துக்கும் வீட்டுத் தேவைக்கும் தொழிற்சாலைகளுக்கும் கிடைக்க வேண்டிய மின்சாரத்தை, பணம் தருகிறார்கள் என்பதற்காக கிரிக்கெட் ஆட்டகளத்துக்கு வழங்கி இரவைப் பகலாக்கும் விரயம் அவசியம் தவிர்க்கப்பட வேண்டும்.

 எத்தனை முறை சொன்னாலும் ஐ.பி.எல். போட்டிகளை இப்போதைக்கு தடுக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாதுதான். ஆனால் இதை ஆதரிக்கக் கூடாது என்ற உணர்வு பரவினால் அதுவே இப்போதைக்கு போதும்.

Thanks dinamani

கணவன் - மனைவி' தத்துவங்கள் !

தினேஷ் கார்த்திக், அமித் மிஸ்ரா - இரண்டு ஃபீனிக்ஸ்கள்!

ஐ.பி.எல்.லில், பல கிரிக்கெட் வீரர்களின் நிலைமை பரிதாபமானது. ஒவ்வொரு வருடமும் அணி மாறிக் கொண்டே இருக்க வேண்டும். இதனால் சரியான வாய்ப்புகளும் கிடைக்காது. மரியாதையும் காற்றில் பறந்துவிடும். இப்படிப்பட்ட சூழலிலும் 2013 ஐ.பி.எல்.லில், தினேஷ் கார்த்திக், அமித் மிஸ்ரா ஆகிய இருவரும் தங்களை வலுவாக நிரூபித்திருக்கிறார்கள். 

தினேஷ் கார்த்திக்:

கார்த்திக்கின் திறமையை சென்னை சூப்பர் கிங்ஸ் கூட உணரவில்லை. முதலில் தில்லி அணிக்காக ஆடினார். மூன்று வருடங்களுக்குப் பிறகு அணியிலிருந்து நீக்கப்பட்டார். 2011ல் நடந்த ஏலத்தில் ரூ. 4.77 கோடிக்கு கார்த்திக்கை விலைக்கு வாங்கியது பஞ்சாப். ஆனால், அடுத்த வருடமே மும்பை அணிக்கு டிரான்ஸ்ஃபர் செய்துவிட்டது. (ரூ. 12.4 கோடிக்கு என்று சொல்லப்படுகிறது.) அப்போது, மும்பை அணி சரியான விக்கெட் கீப்பர் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தது. கார்த்திக் உள்ளே நுழைந்தவுடன் மும்பை அணி பீமபலம் கொண்டதாகிவிட்டது. சச்சின் அணியில் கார்த்திக் மிக மரியாதையுடன் நடத்தப்பட்டார். இந்த ஐ.பி.எல்.லில் மூன்றாவதாகக் களம் இறங்க அனுமதியளிக்கப்பட்டது. அவ்வளவுதான், கிடைத்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

இவருடையது நீண்ட நெடிய பயணம். ராகுல் டிராவிட் இனி விக்கெட் கீப்பராக நீடிக்க வேண்டாம் என்று பி.சி.சி.ஐ. முடிவெடுத்தபோது இந்திய அணிக்குத் தேர்வானவர், தினேஷ் கார்த்திக். ஆனால் அந்தச் சந்தோஷம் நீண்டநாள் நீடிக்கவில்லை. புயல் மாதிரி இந்திய கிரிக்கெட்டுக்குள் நுழைந்து பல விக்கெட் கீப்பர்களின் வாழ்வை மாற்றினார் மகேந்திரசிங் தோனி. இதனால், தோனி ஓய்வு எடுக்கும் நேரத்தில்தான் கார்த்திக், பர்தீவ் படேல் போன்ற மற்ற விக்கெட் கீப்பர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், கார்த்திக் இந்தத் தோல்வியை ஏற்றுக் கொள்ளவில்லை. பேட்ஸ் மேனாக இந்திய அணிக்குள் நுழைந்தார். 2007 உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு ஷேவாக் அணியிலிருந்து நீக்கப்பட்டார். தினேஷ் கார்த்திக் அவர் இடத்தைப் பிடித்தார். கார்த்திக்கின் பெரிய சாதனை, இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் வெற்றிகரமான தொடக்க ஆட்டக்காரராக சாதித்தது. சமகால இந்திய ஓபனர்களில் யாருக்கும் இல்லாத பெருமை இது. அந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெல்ல கார்த்திக்கின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆனாலும், சிறிது சறுக்கினாலும் அணியிலிருந்து அடிக்கடி நீக்கப்பட்டதால் கார்த்திக்கின் அருமையை யாருமே உணர முடியாமல் போய்விட்டது. கூடவே கார்த்திக்கின் கீப்பிங் தொடர்பாக நிறைய விமர்சனங்கள் எழுந்தன. அதிர்ஷ்டத்துக்காக தன் பெயரில் கூடுதலாக a, c ஆகிய எழுத்துகளைச் சேர்த்துப் பார்த்தார். எதுவுமே கைகூடவில்லை. நிரூபிக்க வாய்ப்புக் கிடைத்த ஐ.பி.எல்.லிலும் நிரந்தரமாக ஓர் அணியில் நீடிக்க முடியாமல் போனது. விளைவு, இந்திய கிரிக்கெட்டின் எந்தவொரு திட்டத்திலும் இல்லாமல் போனார்.

இந்த ஐ.பி.எல்., கார்த்திக்கின் ஐ.பி.எல். கார்த்திக்கின் ஆட்டம் fearless cricket என்பதையொட்டி இருந்தது. அதாவது, தன்னுடைய அணி எந்தச் சூழலில் இருந்தாலும், எதிரணிக்கு அடுத்த வாய்ப்பை அளிக்காமல், இன்னும் சொல்லப்போனால், அவர்களுடைய ஆதிக்கத்தைத் தன் ஆட்டத்தால் நொறுக்க வேண்டும். ரிச்சர்ட்ஸின் ஆட்டம் எப்போதும் இப்படித்தான். 1996 செமி ஃபைனலில் இந்தியாவுக்கு எதிராக அர்விந்த் டிசில்வா ஆடியதும் fearless cricket தான். கடந்த ஒரு வருடத்தில், தன்னுடைய ஆட்டத்தையும் அணுகு முறையையும் வெகுவாக மாற்றியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஜாம்பவான்கள் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியில், டாப் ஸ்கோரராக இருப்பது அவ்வளவு எளிதல்ல. இப்போது, தன் கீப்பிங்கிலும் நிறைய மாற்றம் செய்திருக்கிறார். ‘ஆனால், அதை நிரூபிக்க முடியாமல் இருக்கிறேன்,’ என்கிறார் கார்த்திக். ‘விக்கெட் கீப்பிங்கில் தவறு செய்யாமல் இருப்பதற்காக நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். ஒரு பேட்ஸ்மேன் தாம் செய்த தவறுகளைத் திருத்திக் கொண்டதை நிரூபிக்க முடியும். ஆனால், விக்கெட் கீப்பிங்கில் என்னுடைய முன்னேற்றத்தைக் காண்பிப்பது சிரமம். அதை மற்றவர்கள் உணர்வது சுலபமல்ல’ என்கிறார். சச்சின், பாண்டிங், ரோஹித் சர்மா, பொலார்ட் உள்ள ஓர் அணியில் நிகரற்ற நட்சத்திரமாகத் திகழ்வது மிகக்கடினம். கார்த்திக் அதைச் சாதித்திருக்கிறார்.

அமித் மிஸ்ரா:

அடுத்த கும்ப்ளேவாக வளர்ந்திருக்க வேண்டியவர். முதல் டெஸ்டிலேயே 5 விக்கெட்டுகள் எடுத்தவர். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, எங்கே அமித் மிஸ்ரா என்று தேட வேண்டிய நிலைமை. இப்போது, மிஸ்ராவுக்கும் இந்த ஐ.பி.எல். பெரிய திருப்புமுனை.

மிஸ்ரா, முதலில் தில்லி அணியில் ஆடினார். பிறகு, டெக்கான் ஹைதராபாத் அணிக்கு மாறினார். இப்போது புதிய ஹைதராபாத் அணியான சன் ரைஸர்ஸின் மிகப்பெரிய பலமாக விளங்குகிறார். 2008, 2011ல் ஐ.பி.எல். ஹாட்ட்ரிக் எடுத்த மிஸ்ரா, இந்த ஆண்டும் இன்னொரு ஹாட்ட்ரிக் எடுத்திருக்கிறார். ஐ.பி.எல்.லில், மூன்று முறை இந்தச் சாதனையை யாரும் செய்ததில்லை. 

மிஸ்ராவுக்கு 30 வயதாகிவிட்டது. மிகக் குறைந்த டெஸ்ட் (13) மற்றும் ஒருநாள் ஆட்டங்களில்தான் (15) ஆடியிருக்கிறார். 2003ல் இந்திய அணி ஒருநாள் அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டார். அதிலிருந்து வாழ்வா சாவா நிலைமைதான். முதல் டெஸ்டிலேயே தன்னை நிரூபித்தாலும், அடிக்கடி அணியிலிருந்து வெளியேற்றப்பட்டதால் பாதிப்புக்குள்ளானார். ஆனால், ஐ.பி.எல்.லில் தொடர்ந்து தம்மை நிரூபித்துக் கொண்டிருந்தார். இந்த வருட ரஞ்சிப் போட்டியில் பேட்டிங், பௌலிங் இரண்டிலும் பிரமாதப் படுத்திவிட்டார். ஒரு டபுள் செஞ்சுரி உள்பட. இதனால், சமீபத்தில் நடந்த பாகிஸ்தானுடனான ஒரு நாள் தொடரில் தேர்வு செய்யப்பட்டார். ஐ.பி.எல். லில், கூக்ளி, டாப் ஸ்பின், ஃப்ளிப்பர் என்று விதவிதமாகப் பந்து வீசி எதிரணியினரைத் திணறடித்து வருகிறார்.

இந்திய அணியில் அஸ்வின், ஓஹா, ஜடேஜா என்கிற வலுவான ஸ்பின் கூட்டணி அமைந்த பிறகும் முட்டிமோதுகிறார் மிஸ்ரா. கும்ப்ளேவுக்குப் பிறகு இந்திய அணியில் நல்ல லெக் ஸ்பின்னர் இல்லை. இந்தக் குறையை மிஸ்ராதான் தீர்க்கவேண்டும். 

ஐ.பி.எல்.லுக்குப் பிறகு, இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தினேஷ் கார்த்திக்கும் அமித் மிஸ்ராவும் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்.

Assistant Professor jobs in Jayam College of Engineering and Technology



College Name: Jayam College of Engineering and Technology

About College: 
                     Jayam College of Engineering and Technology is providing quality education with a dedicated service to Technical Education. The College has earned a reputation for Technical expertise, commendable facilities, a track record of performance, good discipline with excellent results and enterprising students.
                     The students are provided with ample opportunities to develop their individual talents and abilities and to aspire for excellence in academic and personality development.JCET believes in creating and disseminating knowledge and skills in core and frontier disciplines through innovative education programs, industrial training, research and consultancy and developing a new cadre of professional with a high level of competence, deep sense of social commitment and ethics.

Job Title: Professor/Associate Professor/Assistant Professors

Departments: Mech/Civil/Aero/ECE/EEE/CSE/IT/MBA/MCA/Science and Humanity

Qualification: M.E/M.Tech/Ph.D/MBA/MCA/M.Sc/M.A

Job Location: Dharmapuri

Post Date: 27th April 2013

Last Date: Wth in 6 days

Scale Of Pay: As per 6th pay commission

Apply Mode: Offline

Website: http://www.jcet.ac.in/

Send your Application along with Passport Size Photo to following Email ID or Postal Address
(Write Application for the post _______________ in _______ Department in Cover envelope)

Email ID: info@jcet.ac.in ( Mention Faculty Recruitment in Subject Line )

Postal Address
The Principal,
Jayam College of Engineering and Technology
Nallanur,
Dharmapuri-636813.
Cell: 8012333338
Email: info@jcet.ac.in

Sasurie Engineering Colleges

Wanted 
Professors, Associate Professors, Assistant Professors

ENGLISH
MATHS
PHYSICS
CHEMISTRY
MECH
CIVIL 

Sasurie College of Engineering
Vijayamangalam-638056.
Tirupur Dist.
Phone: 04294-243675, 243717 
Cell: 9442593806
Email: jobs.sasurie@gmail.com

For More Details READ:
April 27, 2013 Dinamalar Pg.3 Coimbatore

Wednesday, April 24, 2013

தேடினால் எல்லாம் கிடைக்கும். தேடல்களுக்கு கூகிளின் புதிய தேடல் தளம்..!!

தேடல்களுக்கென்று தனிச்சிறப்பு பெற்றது கூகுள் தளம்(google). உலகெங்கும் பெரும்பாலானோர் பயன்படுத்தும் இத்தளத்தின் புதியதொரு அறிமுகம் இந்த www.wdyl.com தளம்.

what do you love? என்பதின் சுருக்கத்தை wdyl.காம் என்று பெயர் வைத்திருக்கின்றனர். நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்ற இணைப்பக்கத்தின் தலைப்பே நம்மை கவரும் விதமாக உள்ளது அல்லவா?
இத்தளத்தின் சிறப்பம்சங்கள்:

இந்த தளத்திற்கு சென்று நாம் எந்த ஒரு வார்த்தையைக் கொடுத்துத் தேடினாலும் உடனடி முடிவுகளை நமக்கு அள்ளி வீசுகிறது. இதென்ன புதுசு என்கறீர்களா?  ஆம். புதுசுதான் நண்பர்களே..! கூகுள் வழங்கும் சேவைகளாக கூகிள்மேப்ஸ், கூகுள் காலண்டர்(google calander), கூகுள் லேப்ஸ்(google labs), யூடியூப்(you tube), பிளாக்(blog) போன்றவைகளிலிருந்து முடிவுகளை ஒரே நேரத்தில் தேடி தருகிறது. இதற்கு நாம் கூகிளில் சர்ச் செய்தால் ஏதாவது ஒன்றை மட்டுமே அதாவது, web search மட்டுமே காட்டும். வேண்டுமானால் அதை நாம் மாற்றிக்கொள்ளலாம். ஆனால் இத்தளத்தில் தனது அனைத்து சேவை தளங்கிலிருந்தும் முடிவுகளை காட்டி நம்மை அசத்துகிறது.

இந்த முகவரியை கிளிக் www.wdyl.com செய்து நீங்களும் உங்களுக்குத் தேவையான முடிவுகளைப் பெற்று பயன்பெறுங்கள்.

PTC தளங்கள் பற்றிய ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்.

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க என்று பல பி.டி.சி. தளங்கள் உள்ளது. இந்த P.T.C இவர்கள் நேரடியாக நமக்கு பணத்தை அளிப்பதில்லை. இவர்கள் ஒரு இடைத்தரகு வேலை செய்பவர்கள்தான். அதாவது விளம்பரம் தரும் கம்பெனிகளில் விளம்பரங்களை வாங்கி, தங்களுடைய தளங்களில் போட்டு நம்மை பார்க்க வைப்பார்கள். இத்தளங்களில் நாம் கணக்கு வைத்துக்கொண்டு அவர்கள் கொடுக்கும் விளம்பரங்களைப் பார்த்தால் அதற்கு குறிப்பிட்டதொகை தருவார்கள்.

அவர்களின் ஆரம்பத் தொகையே 0.00001 $ என்று இருக்கும். குறைந்தபட்சம் 20$ டாலர்கள் வரை சேர்ந்தால்தான் நம்முடைய கணக்கிற்கு மாற்ற முடியும் என்ற நிபந்தனையோடு நமக்கு கணக்கு கொடுக்கப்படும்.


நாமும் தினமும் அந்த தளத்திற்கு சென்று ஒரு விளம்பரத்தை குறைந்த பட்சம் 30 செகண்டுகளாவது பார்க்க வேண்டும். இப்படிப் பார்க்கும் விளம்பரங்களுக்கு நமக்கு அவர்கள் தரும் தொகை 0.00001 $ லிருந்து ஆரம்பிக்கும்.

ஆனால் அவர்கள் தங்களின் விளம்பரங்களில் மாதம் 1000$ டாலர்கள் சம்பாதிக்க முடியும் என்று சொல்லயிருப்பார்கள்.. ஆனால் அது உண்மையல்ல. வெறும் 20 டாலர்கள் வருவதற்கே வருடக்கணக்காகிவிடும்.

அப்படி இருபது டாலர்களை நெருங்கினால் அவர்களே நம் கணக்கை முடக்கி அந்தத் தொகையை எடுத்துக்கொள்வார்கள்.

அதனால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட நிறுவனங்கள்(company)இந்தியா போன்ற அதிக மக்கள் தொகைகொண்ட நாடுகளையே தேர்ந்தெடுக்கிறது.ஏனெனில் அங்குதான் அதிகம் விளம்பரங்களைப் பார்க்க ஆட்கள் கிடைப்பார்கள் என்ற வியாபார நோக்கம்.

இதானல் இவர்களின் தளங்களுக்குத்தான் மதிப்பு கூடுமே தவிர நமக்கு வருமானம் ஒன்றும் வரப்போவதில்லை. நமக்கு நேரம்தான் விரயம் ஆகும்.

இப்படிப்பட்ட பல ஏமாற்றுக்கார்கள் தான் இத்தகைய தளங்களை நடத்தி வருகின்றனர். எனவே நண்பர்களே இத்தகைய தளங்களில் உங்கள் நேரத்தை வீணாக்காமல், முறையாக நிரந்தர வருமானம் தரக்கூடிய ஒரு சில தளங்களை அடையாளம் கண்டு அதில் சேர்ந்து பயன்பெறுங்கள்.

அப்படி ஏமாற்றமல் விளம்பரங்களைக் கொடுத்து நமது வருமானத்தை பெருக்க வைப்பதில் முதன்மையாக கூகுள்(google adsense) ஒன்றுதான்.

அப்படி கூகுள் ஆட்ஸ் பெற என்ன செய்ய வேண்டும்? அதற்குரிய தகுதிகள் என்ன? அடுத்த பதிவில் பார்ப்போம்.