Blogger Widgets

Total Page visits

Thursday, January 31, 2013

சிறந்த தரமான இலவச வீடியோ கட்டர் மென்பொருள் VidSplitter


நம்மிடம் இருக்கும் வீடியோப் படங்களின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுக்க வேண்டி வரும். அதை யூடியுப் தளத்தில் அல்லது வேறு ஏதேனும் தளங்களில் பகிர்வோம். அல்லது நண்பர்களுக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை வரும். சில கோப்புப் பகிரும் (File Sharing) இணையதளங்களில் கோப்புகளுக்கு அளவு நிர்ணயம் செய்திருப்பார்கள். இவ்வளவு அளவு கொண்ட கோப்புகளை மட்டும் தான் பதிவேற்ற வேண்டும் என கட்டுப்பாடுகள் இருக்கும். அதில் நாம் கோப்புகளை பல பாகங்களாக வெட்டி பதிவேற்றலாம்.

இணையத்தில் பல வீடியோ கட்டர் மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கின்றன. எளிதாகவும் விரைவாகவும் செயல்படும் இந்த மென்பொருளின் பெயர் VidSplitter. இந்த மென்பொருள் மூலம் avi, mpeg, wmv, asf போன்ற வீடியோ கோப்புகளை பல பாகங்களாகப் பிரிக்கலாம்.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால் பிளாஷ் டிரைவ், சிடி/டிவிடி போன்றவற்றின் அளவுக்கு வருகிற மாதிரியும் வெட்ட முடியும். இல்லை 100 Mb என்று கோப்பின் அளவு வைத்து விட்டால் பெரிய கோப்புகளை ஒவ்வொன்றாக பிரித்துக் கொடுத்து விடும்.
இதில் படத்தைத் தேர்வு செய்யும் முறை மற்றவற்றை விட எளிதாக இருக்கிறது. இதன் ஸ்லைடர் அமைப்பு எளிதாக தேவைப்படும் வீடியோவினை மட்டும் நகர்த்தி தேர்வு செய்து கொள்கிற மாதிரி இருக்கிறது. இதன் முக்கியமான விசயம் என்னவென்றால் வேகமாகவும் தரமான குவாலிட்டியுடன் வீடியோவினைப் பிரித்து தருகிறது.

தரவிறக்கச்சுட்டி
Source  www.dailynewstamil.com

Panda Anti Virus Pro 2013 Free Download

Panda antivirus is one the trusted antivirus protection for all the computers. Now the Panda Company is giving a promotional offer on Panda Anti Virus Pro 2013. By using this offer you can protect your system with Panda Anti Virus Pro 2013 free for 3 months.
 
This is a light weight and super fast antivirus which gives higher protection for your computer against viruses, spyware, root kits, hackers and online fraud.

System Requirements to install System Requirements.
  • OS: Windows XP, Vista, 7
  • Processor: Pentium 300 MHz or faster
  • RAM: 128 MB without TruPrevent 512 MB with TruPrevent (1 GB recommended)
  • Hard Disk: 275 MB free space
  • Browser: IE 6.0+, Firefox 2 +, Google Chrome

 
Source Honey Drop

SMS அனுப்பினால் பணம் கிடைக்கும்

வெறும் SMS அனுப்பினால் பணம் சம்பாரிக்க முடியுமா என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கும் அதற்க்கு பதில் முடியும். SMS அனுப்பினால் பணம் சம்பாரிக்க  பல இணையதளங்கள் உள்ளன அவைகளை பற்றி இன்று காண்போம் .....ஒரு நம்பருக்கு நீங்கள் SMS அனுப்பினால் அவ்வாறு நீங்கள் அனுப்புவதற்கு அத்தளங்கள் குறுப்பிட்ட பணத்தை தருகின்றன நிறைய மோசடி தளங்களும் உள்ளன, ஆனால் இன்று நான் உங்களுக்கு ஒரு உண்மையான தளத்தை பற்றி கூற உள்ளேன். அத்தளம் உண்மையிலேயே வாடிக்கையாளர்களுக்கு பணத்தை செலுத்துகின்றன ஆனால் காசோலையாக அல்ல அவர்கள் கூறும் குறிப்பிட்ட தொகையை நீங்கள் அடைந்துவிட்டால் அதை நீங்கள் உங்கள் மொபைல் நம்பருக்கு ரீச்சார்ஜ் செய்துகொள்ளலாம். அதற்காக பெரிய அமௌன்ட் எல்லாம் அடைய வேண்டியதில்லை உங்கள் கணக்கில் குறைந்தது 10ரூபாய் சேர்ந்துவிட்டால் போதும் அதை நீங்கள் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம் .
முதலில் இங்கு  சென்று ஒரு கணக்கை  உருவாக்கி கொள்ளவும் பிறகு அவர்கள் கூறும் நிபந்தனைகளை படித்து பாருங்கள். முதலில் கணக்கை உருவாக்கி ஈமெயில் confirm செய்தால் 2 ரூபாய் இலவசமாக தருகிறார்கள்.

இத்தளம் amulyam.com போன்று பொய்யான தளம் அல்ல இதில் உண்மையிலேயே பணம் ஈட்டமுடியும் SMS அனுப்பினால் மட்டுமல்ல யாரையாவது invite செய்தால் 1 ரூபாய் கிடைக்கும். நீங்கள் அனுப்பும் ஒரு SMS  க்கு அவர்கள்  2 paisa தருகிறார்கள் இது குறைந்த அளவு பணமாக இருப்பினும் கரும்பு தின்ன கூலி போன்று உள்ளது way2sms போன்ற தளங்களில் வெறும் sms மட்டுமே அனுப்ப முடியும் ஆனால் இதிலே SMS அனுப்பினாலே பணம் கிடைக்கிறது way2smsஇல் யாரையாவது சேர்த்துவிட்டால் தான் பணம் கிடைக்கும் ஆனால் இதில் அப்படி அல்ல சேர்த்துவிட்டாலும் சரி SMS அனுப்பினாலும் சரி உங்களுக்கு பணம் கிடைக்கும் நல்ல வாய்ப்பு நழுவவிடாதீர்கள் இங்கு  சென்று சீக்கிரம் ஒரு கணக்கை ஆரம்பியுங்கள் உங்கள் மொபைலுக்கு நீங்களே இலவசமாக ரீச்சார்ஜ் செய்யுங்கள்.

China Mobile PC Suite வேண்டுமா?


இப்போது சந்தையில் China Mobile காணப்படுகின்றது. அதை கணணியில் பயன்படுத்த China Mobile PC Suite நிறைய பொருக்கு தேவைப்படுகின்றது.  அதை  Download செய்யலாம்

MT 6255 Driver Download (Used for USB connectivity to your PC)
Free China Mobile PC Suite Download (China Mobile PC Suite)

PDF TO WORD கன்வெர்டர் மென்பொருள் லைசன்ஸ் கீயுடன்

மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவாக்கிய வேர்ட் பைல்களை நாம் பிடிஎப் பைல்களாக கன்வெர்ட் செய்து வைத்திருப்போம். ஒருசில நேரங்களில் வேர்ட் பைலை அழித்துவிட்டு பிடிஎப் பைலை மட்டும் வைத்திருப்போம். 

அந்த நேரத்தில் குறிப்பிட்ட வேர்ட் பைலில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் நம்முடைய பாடு திண்டாட்டம் தான். இதுபோன்ற சமயங்களில் பிடிஎப் பைலை எப்படியாவது கன்வெர்ட் செய்து வேர்ட் பைலாக மாற்றி எடிட் செய்துவிட வேண்டும் என்று நினைத்து இணையத்தில் இதற்கான உதவியை நாடி செல்வோம்.
ஆன்லைன் மூலமாக கன்வெர்ட் செய்யலாம் என்றால் சரியான முறையில் கன்வெர்ட் ஆகாது. எதாவது ஒரு மென்பொருளை தரவிறக்கி அதன் மூலம் கன்வெர்ட் செய்துவிடலாம் என்றால் அதுவும் முடியாது.

 நாம் தேடிபோகும் மென்பொருளில் எதாவது ஒருசில குறைகள் இருக்கும். குறிப்பாக அந்த மென்பொருளானது பணம் செலுத்தி பெற வேண்டியதாக இருக்கும். 

அப்படியே இலவசமாக மென்பொருள் கிடைத்தாலும் அது சரியாக வேலை செய்யாது. இதுபோன்ற குறைகள் எதுவும் இல்லாமல் ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. அதுவும் இலவச லைசன்ஸ் கீயுடன்.
 
சுட்டியில் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும். லைசன்ஸ் கீயும் தரவிறக்க பகுதியிலேயே இருக்கும். 

YCUKF-HV9HY-DGY2X-WL735 இந்த கீயை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக கணினியில் பதிந்து கொள்ளவும்.

 இந்த மென்பொருளை நீங்கள் இலவசமாக 2013 ஏப்ரல் 25 வரை மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடதக்கது. பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.

பின் எந்த பைலை கன்வெர்ட் செய்ய வேண்டும் அந்த பிடிஎப் பைலை தேர்வு செய்து நுழைக்கவும். பின் எந்த இடத்தில் கன்வெர்ட் செய்த பைலை சேமிக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு கொள்ளவும். 


பின் Convert என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்த சில மணி நேரங்களில் உங்களுடைய பைலானது வேர்ட் பைலாக கன்வெர்ட் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.

இதுபோல பைலை கன்வெர்ட் செய்யும் போது வேண்டுமானால் குறிப்பிட்ட பக்கங்களை மட்டும் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். 


இந்த மென்பொருளில் ட்ராக் அன்ட் ட்ராப் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. இவ்வாறு நாம் கன்வெர்ட் செய்யும் போது மைரோசாப் வேர்ட் தொகுப்போ பிடிஎப் ரீடரோ எதுவும் தேவையில்லை. 

கடவுச்சொல் புகுத்தப்பட்ட பைல்களையும் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். பிடிஎப் பைலில் இருக்கும் படம், எழுத்து ஆகியவை சரியான முறையில் கன்வெர்ட் செய்யப்படும். ஒரே நேரத்தில் பல்வேறு பிடிஎப் பைல்களை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். 

இந்த மென்பொருளானது விண்டோஸ் 98, ME, NT, 2000, XP, 2003, Vista மற்றும் விண்டோஸ் 7 ஆகிய இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும். 

மென்பொருளை தரவிறக்கசுட்டி. 
 
இந்த மென்பொருளுடைய சந்தைவிலை $29.95 ஆகும்.

Send Free SMS, Earn Money, Recharge Mobile – Ultoo.in


An average Indian sends 50-100 SMS in a month. Its easy to send sms from pc/laptop than mobile. Recently I got know a website named ultoo.in which can be used to send free sms and get paid of 2 ps per sms you send. But to use any message service for free is not much beneficial then using it for 2 paisa per sms.



ultoo.com provides a unique platform to these users where they can send free messages and get rewarded with a mobile recharge in return. Moreover, its incredible speed of sending SMS adds more to its beauty.
Sending SMS through ULtoo.com is absolutely free. In fact, you will earn by sending every single text. So, start sending messages which will lead to a good earning every time. You can send SMS across India for FREE and you will be rewarded with 2 paisa for every sent SMS. This is a person to person messaging site. Group sms feature is not supported.

The various activities which can help me to get a recharge are

For successful Registration Rs 2. (First time only).                                  
For email verification Rs 1(first time only).                                  
For sending sms 2 paisa/sms.
For inviting friends(through SMS)Rs 1.
For inviting friends(through email)Rs 1.

Note: The earnings for an Invite will get credited only when your friends or the receiver of the invite will register, login and send an SMS from ULtoo.com


You can recharge other mobile numbers as well. But the earning is redeemable for once only. Please make sure, you enter the correct mobile number and you are solely liable for recharge details provided by you.

Each person have to sign up from the official website page of ultoo.in. For signing up you have put all the necessary information including name, email and phone number in the registration form. After that, log in into your account and start using it.

JOIN ULTOO.IN

கமல்ஹாசனுக்கு தி.மு.க. முழு ஆதரவு! ‘அம்மா’ கோபத்துக்கு காரணம் ‘இதுவா?’ ‘அதுவா?’

விஸ்வரூபம் பிரச்னையில் கமல்ஹாசனுக்கு முழுமையான ஆதரவு தர முன்வந்துள்ளது, தி.மு.க. அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, விஸ்வரூபம் தொடர்பான நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில், “தமிழக அரசு, எதற்காக கமல்ஹாசன் மீது இவ்வளவு கடுமையாக நடந்துகொள்கிறது? என்பதற்கு, ‘வெளியே பரவலாக பேசப்படும்’ இரு தனிப்பட்ட காரணங்களையும் குறிப்பிட்டு, “ஒருவேளை இவற்றினால்தான் முதல்வருக்கு கமல் மீது கோபமோ?” என கேட்டிருக்கிறார்.

கருணாநிதியின் அறிக்கையை அப்படியே தருகிறோம், பாருங்கள். தி.மு.க., கமல்ஹாசனுக்கு முழுமையான ஆதரவு தருவதற்குரப்போகிறது என்பது, இந்த அறிக்கையில் இருந்து புரிகிறது.

கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள தடைதான், தமிழகத்திலே அனைவரது கவனத்தையும் ஈர்த்திட்ட பிரச்சினையாகும்.

29-1-2013 அன்று மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதியரசர் கே.வெங்கட்ராமன் முன்னிலையில் ஆறு மணி நேரம் இதுபற்றிய வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது. விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில் ஜனவரி 25-ம் தேதியன்று வெளியிடப்படுவதாக இருந்தது. இந்தத் திரைப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக ஒரு புகார் எழுந்தது.

இதையடுத்து ஒரு இஸ்லாமிய அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தமிழக அரசு விஸ்வரூபம் திரைப்படத்தை தமிழகத்திலே வெளியிட தடை பிறப்பித்தது.

தடை உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் படத்தைத் தயாரித்த ராஜ்கமல் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு விசாரணைதான் ஆறு மணி நேரம் நடைபெற்றுள்ளது.

இஸ்லாமிய சமுதாயத்தின்பால் நானோ, தம்பி கமல் சனோ, நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினியோ எந்த அளவிற்கு பாசமும் பற்றும் மதிப்பும் மரியாதையும் உடையவர்கள் என்பதை இந்தப் பிரச்சினை எழுந்தவுடன் 26-1-2013 நான் விடுத்த அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன்.

சூப்பர் ஸ்டார் ரஜினி விடுத்த அறிக்கையிலும், இஸ்லாமியர்களுக்கு வேண்டுகோள் விடுத்து, இந்தத் திரைப்படத்தை வெளியிட உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ஜ.க. தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவன், திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, பார்த்திபன், அமீர் போன்றவர்கள் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டுமென்று அறிக்கைகள் வாயிலாகக் கேட்டுக் கொண்டனர்.

மேலும் அவர்கள் அறிக்கையில் கமல் எப்படிப்பட்டவர் என்பதையும், யாருடைய மனதையும் புண்படுத்தும்படியாக நடந்து கொள்ளாதவர் என்பதையும் எடுத்து எழுதினார்கள். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் சுமூகமான தீர்வு ஏற்படுத்த முதலமைச்சர் கமலஹாசனை அழைத்துப் பேசவேண்டுமென்று அறிக்கை விட்டிருந்தார்.

இவ்வளவிற்கும் மேலாக, கமல் விடுத்த அறிக்கையில், தான் இஸ்லாமியர்களுக்கு எதிரானவன் அல்ல என்றும், இந்தப் படமும் முஸ்லீம்களுக்கு எதிரானது அல்ல என்றும், முஸ்லீம்கள் தனக்கு சகோதரர்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனாலும் தமிழக அரசு தான் விதித்த தடையைத் திரும்பப் பெற முன்வரவில்லை.

தமிழக அரசு இந்த அளவிற்குக் கடுமையாக இந்தத் திரைப்படத்திற்கு தடை விதிப்பதற்கு என்ன காரணமோ தெரியவில்லை.ஆனால் ஒரு சாரார், இந்தத் திரைப்படத்தை அ.தி.மு.க.விற்கு மிகவும் வேண்டிய ஒரு தொலைக்காட்சி நிறுவனம் அடிமாட்டு விலைக்கு வாங்க முயன்றதாகவும், ஆனால் படத்தைத் தயாரித்தவர்கள் தாங்கள் 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து இந்தத் திரைப்படத்தைத் தயாரித்துள்ள நிலையில் குறைந்த விலைக்கு விற்க மறுத்து விட்டு, அதிக விலைக்கு வேறொரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விற்று விட்டதுதான் காரணம் என்றும் சொல்கிறார்கள்.

அதைப் போலவே, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தைப் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் கமல் பேசும்போது, “வேட்டிக் கட்டிய ஒரு தமிழன், பிரதமராக வரவேண்டும்” என்று ப.சிதம்பரத்தைக் குறிப்பிட்டுப் பேசியதும் கோபத்திற்கு ஒரு காரணம் என்று கூறுகிறார்கள்.ஆனால் இந்தக் கருத்துக்கள் எல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்று நமக்குத் தெரியவில்லை.

இந்த வழக்கினை விசாரிக்கும் உயர்நீதி மன்ற நீதிபதியே, இந்தப் படத்தினை சிறப்புக் காட்சியின் மூலமாக நேரிலே பார்த்தார். அதன் பிறகு 28ஆ-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, உயர்நீதி மன்ற நீதிபதியே, இரு தரப்பினரும் கலந்து பேசி ஒரு நல்ல முடிவினைக் காணலாம் என்று தெரிவித்தார்.ஆனால் தமிழக அரசு அதற்கான முயற்சியிலும் ஈடுபடவில்லை
ஒரு ஆங்கில நாளிதழ் இந்தப் பிரச்சினை பற்றி ஒரு நீண்ட தலையங்கமே எழுதியுள்ளது.
அதில், “கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் நியாயமில்லாத தடையை விலக்கிக் கொள்வதில் ஏற்பட்டு வரும் தாமதம் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாததாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இந்திய உச்சநீதி மன்றம் அரக்சன் என்ற இந்தித் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த இரண்டு மாதத் தடை உத்தரவை ரத்து செய்தது.
அப்படி ரத்து செய்யும்போது மத்திய தணிக்கைக்குழு ஒரு திரைப்படத்திற்கு அனுமதி அளித்த பிறகு, அந்தப்படம் திரையிடப்படுவது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்று நினைக்கக் கூடாது. இந்திய உச்சநீதி மன்றம் மேலும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினையும் வழங்கியுள்ளது.
எஸ்.ரெங்கராஜன் என்பவருக்கும் பி.ஜெகஜீவன் ராம் என்பவருக்கும் இடையே நடைபெற்ற ஒரு வழக்கில், உச்சநீதி மன்றம் “வன்முறைக்கு வழி வகுக்கும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என்பதற்காக பேச்சுரிமையை நசுக்கக் கூடாது” என்று தீர்ப்பு அளித்துள்ளது.
விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். வெளியிடப்படும் திரையரங்குகளுக்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் தேவையான பாதுகாப்பைத் தர வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இவ்வாறு எழுதியதற்குப் பிறகும் தமிழக அரசு முன்வந்து தான் விதித்த தடையைத் திரும்பப் பெற்றிட முன்வந்ததா?தமிழக அரசு முன்வராத காரணத்தால்தான் நேற்றைய தினம் உயர் நீதிமன்றத்தில் ஆறு மணி நேரம் வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது.

அந்த வழக்கில் கமலுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர், விஸ்வரூபம் திரைப் படம் இந்திய முஸ்லீம்கள் யாரையும் அவமானப்படுத்தவில்லை என்றும், தமிழகம் முழுவதும் 31 மாவட்ட கலெக்டர்களும் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிடும் என்று ஊகித்து ஒரே நேரத்தில் தடை உத்தரவு பிறப்பிக்க முடியுமா என்றும், இந்தத் திரைப்படத்திற்கு அனுமதி சான்றிதழ் வழங்கும் போது, தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படவில்லை என்றும், தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய பிறகு, மாநில அரசு தடை விதிக்க முடியாது என்றும், இந்தப் படத்தில் தன் ஒட்டுமொத்த வாழ்க்கை சம்பாத்தியத்தையும் கமல்ஹாசன் முதலீடு செய்திருக்கிறார் என்றும் அடுக்கடுக்காக தன் வாதங்களை எடுத்து வைத்திருக்கிறார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர் வெங்கட்ராமன் தனது தீர்ப்பினை இரவு 10.15 மணிக்குத் தான் அளித்துள்ளார்.

அதில் இந்தத் திரைப்படத்திற்கு அரசு விதித்திருந்த 144 தடையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.ஆனால் இதற்குப் பிறகும் அ.தி.மு.க. அரசு மனம் இரங்கியதா?இல்லை, இரவோடு இரவாக நள்ளிரவில் 11.30 மணிக்கு தலைமை நீதிபதி பொறுப்பிலே உள்ள நீதியரசர் எலிபி தர்மாராவ் வீட்டிற்கே சென்று, தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய மனு கொடுத்திருக்கிறார்கள். தலைமை நீதிபதி அதை ஏற்றுக் கொண்டு இன்று (30-1-2013) காலை 10.30 மணிக்கு அப்பீல் செய்ய அனுமதி வழங்கியிருக்கிறார்.
எந்த அளவிற்கு ஜனநாயகமும், மனிதாபிமானமும் இந்த அரசினரிடம் இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேட வேண்டுமா என்ன?” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் அர்த்தம், விஸ்வரூபம் விவகாரம், தமிழக அரசியலுக்குள் வந்து விட்டது என்பதே!
Source viruvirupu, Wednesday 30 January 2013, 14:49 GMT

10,000 இடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளை நடத்த உள்ளது

தமிழகத்தில், பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான, தேர்வு அட்டவணையை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நேற்று வெளியிட்டது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக, போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்படுகிறது. கடந்த ஆண்டு, பல்வேறு அரசு துறைகளுக்கு, 18 ஆயிரத்து, 244 பேரை, டி.என்.பி.எஸ்.சி., தேர்ந்தெடுத்தது.இந்த ஆண்டு, 27 அரசு துறைகளில், 35 பதவிகளில், காலியாக உள்ள பணியிடங்களில், 10 ஆயிரத்து, 105 இடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளை நடத்த உள்ளது.

இதற்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டு, தேர்வாணைய தலைவர் நடராஜ் கூறியதாவது: மருத்துவத் துறையில், உதவி அறுவை மருத்துவர் - 2,800; கால்நடை உதவி அறுவை மருத்துவர் - 921; இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் - 2,716; வி.ஏ.ஓ., - 1,500 உள்ளிட்ட, 10 ஆயிரத்து, 105 பணியிடங்களுக்கு, இந்த ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.இந்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இத்தேர்வுகளுக்கான காலஅட்டவணை, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தேர்வு முறையில், 10 ஆண்டுகளுக்கு பின், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இனி, குரூப் - 1 உள்ளிட்ட அனைத்து பிரிவு தேர்வுகளிலும், 50 மதிப்பெண்களுக்கு, திறனறி கேள்விகள் (Aptitude) கேட்கப்படும்.

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வுகளில், பொது அறிவு தாள் சேர்க்கப்பட்டுள்ளது. குரூப் - 2 பிரிவில், நேர்முகம் மற்றும் நேர்முகம் அல்லாத பணியிடங்களுக்கு, தனித்தனியாக தேர்வு நடத்தப்படும்.குரூப் -1 தேர்வு, "மாநில குடிமை பணிகள் தேர்வு' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 குரூப் - 2 பிரிவில் உள்ள, நகராட்சிஆணையர், உதவி வணிக வரி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய பதவிகள், குரூப் - 1 பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, நவம்பரில் நடந்த, குரூப் - 2 தேர்வு முடிவுகள், பிப்.,1ம் தேதி வெளியிடப்படும். 

2007ம் ஆண்டு முதல், பல்வேறு காரணங்களுக்காக, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, 300க்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகள், உரியவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்.இவ்வாறு நடராஜ் தெரிவித்தார். 

Source dinamalar

Wednesday, January 30, 2013

முதலீடு இல்லாமல் நான் 5,00,000 சம்பாதிக்கிறேன் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா ?


இணையத்தில் பலர் ஏதோ ஒரு வழியில் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், அவர்கள் யாரும் யாருக்கும் இந்த ரகசியங்களை பகிர்ந்து கொள்வதில்லை. உலகில் வாழும் அனைவருக்கும் அத்தியாவசிய தேவை பணம் ஏனெனில் பணத்தை கொண்டே நாம் வாழத் தேவையான உணவு, உடை, உறைவிடம் எல்லாவற்றயும் பெற்றுகொள்ள முடியும். நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம்.

26 Sites That Pay You to Blog

Writing paid post is perhaps the most straight forward ways to earn some revenue from blogging. The way pay post works hasn’t changed much; after reaching mutual agreement with advertisers, you write about them, they pay you. And if there is a 3rd party (middle man company) involve, they take cut. Most middle man company provides marketplace for advertisers to look for publishers, vice versa.

  1. Sponsored Reviews

    sponsoredreviews 26 Sites That Pay You to Blog
    Earn cash by writing honest reviews about our advertiser’s products and services. Write reviews in your own tone and style, and gear them to your audience’s interest.
    [FAQ] [Sign Up]

COMPUTER ORGANIZATION AND ARCHITECTURE (Common to CSE & IT)

1. BASIC STRUCTURE OF COMPUTERS                          

Functional units – Basic operational concepts – Bus structures – Performance and metrics – Instructions and instruction sequencing – Hardware – Software Interface – Instruction set architecture – Addressing modes – RISC – CISC.  ALU design – Fixed point and floating point operations. 

 2.BASIC PROCESSING UNIT                                                                          
      
Fundamental concepts – Execution of a complete instruction – Multiple bus organization – Hardwired control – Micro programmed control – Nano programming.

3.PIPELINING                                                                                                           

Basic concepts – Data hazards – Instruction hazards – Influence on instruction sets – Data path and control considerations –  Performance considerations – Exception handling.

4.MEMORY SYSTEM
                                                                                             
Basic concepts – Semiconductor RAM – ROM – Speed – Size and cost – Cache memories – Improving cache performance – Virtual memory – Memory management requirements – Associative memories – Secondary storage devices.             

5.      I/O ORGANIZATION                                                                                           

Accessing I/O devices – Programmed Input/Output -Interrupts – Direct Memory Access – Buses – Interface circuits – Standard I/O Interfaces (PCI, SCSI, USB), I/O devices and processors.

Text Book:    CLICK HERE TO DOWNLOAD

  1. Carl Hamacher, Zvonko Vranesic and Safwat Zaky, “Computer Organization”, Fifth Edition, Tata McGraw Hill, 2002.
References:
  1. David A. Patterson and John L. Hennessy, “Computer Organization and Design: The Hardware/Software interface”, Third Edition, Elsevier, 2005.
  2. William Stallings, “Computer Organization and Architecture – Designing for Performance”, Sixth Edition, Pearson Education, 2003.
  3. John P. Hayes, “Computer Architecture and Organization”, Third Edition, Tata McGraw Hill, 1998.
  4. V.P. Heuring, H.F. Jordan, “Computer Systems Design and Architecture”, Second Edition, Pearson Education, 2004.